மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி : குப்பையில் கொட்டப்படும் சோகம்!!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது.

நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது.

இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். எனினும் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில்

விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன. மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

முரசுமோட்டையில் விபத்து : மூன்று பேர் காயம்!!

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (15) இரவு 9 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சீமெந்து கற்களை ஏற்றி பயணித்த உழவு இயந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

உழவு இயந்திரத்துடன் மோதிய டிப்பர் வீதியில் குறுக்காக தடம் புரண்டது. உழவு இயந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில் மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை பியுமியின் கிறீம் தொடர்பில் சீ.ஐ.டி விசாரணை!!

பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியுமான பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமான லோலியா ஸ்கின் கம்பெனி என்ற கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கிரீம் வகையின் தரம் மற்றும் ஆரோக்கிய நிலை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்க ரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு இந்த விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு பிரிவினால் பியுமியின் கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரீம் வகைகள் தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதா என்பதை நிர்ணயம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கிரீமின் தரம் குறித்தும் அது அதன் பாதுகாப்பு தன்மை குறித்தும் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிரபல நடிகை பியும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் நெருங்கி பழகி, குறுகிய காலத்தில் பெருமளவு சொத்துக்களை குவித்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!!

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அநுராதபுரத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் கம்பஹா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்!!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களிடம் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்றையதினம்(15.10.2025) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், அவர் உட்பட 6 பேர் மீது மூன்று குழுக்களை கொண்ட பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா – சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகிய 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் ஏனைய இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவவை கொலை செய்த விதம் : செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள்!!

நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழுவினர் நேபாளத்திலிருந்து நேற்று மாலை கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை விமானம் யு.எல். 182 விமானம் நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து நேற்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் பாரப்படுத்தப்பட்ட இஷாரா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கும் போதே மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார்.

செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தில், துப்பாக்கியதாரியான கமாண்டோ சமிந்து துப்பாக்கியை இடுப்பில் செருக்கிக் கொண்டு செவ்வந்தியுடன் நீதிமன்றத்திற்குள் சென்று சட்டத்தரணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியபோது கமாண்டோ சமிந்து துப்பாக்கியை எடுத்து சஞ்சீவவை நோக்கி பிரயோகித்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் சஞ்ஜீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று சத்தமிட்டவாறே வெளியில் ஓடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது : அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்!!

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி,

நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா- சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49),

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேரிடமும் மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவில் அறிமுகமாகியுள்ள புதிய சட்டம் :சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!!

பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்து வருகின்றது.

எனினும், பிரித்தானியா சட்டப்படி வருபவர்கள் மீதும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது. இந்தவகையில் பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.

சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர், பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

இந்த புதிய விதி, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

முச்சக்கரவண்டி கவிழ்ந்து தந்தை கண்முன்னே மகள் துடிதுடித்து பலி!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் ராஜ்குமார் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். அதை குழந்தைகளுக்கு காட்டி சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று குழந்தைகளுடன் புறப்பட்டார்.

சுற்றி வந்தபோது தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிரேசிகா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜ்குமாரும் அவரது மகன் லிதன் ராமும் காயங்களுடன் உயிர் தப்பினர். மகளின் துயர மரணத்தால் ராஜ்குமார் திடீரென சோகத்தில் மூழ்கி, அழுது துடித்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் நீர் வரவைத்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேசிகாவின் உடலை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய ஆட்டோவின் விபத்து உயிர்பலியாக மாறியுள்ளதால், திருச்சி பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர் : சிக்கியது எப்படி?

இந்தியாவின் பெங்களூருவில் மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவரான மருத்துவரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள். பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32).

மஹேந்திர ரெட்டியின் மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23). தம்பதியருக்கு கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு மே மாதம்தான் திருமணம் ஆனது.

இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கிருத்திகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மனைவியை பரிசோதித்த மஹேந்திர ரெட்டி, அவருக்கு குளூக்கோஸ் ஏற்றும் குழாய் (intravenous, IV) மூலம் மருந்தொன்றைக் கொடுத்துள்ளார்.

மறுநாள் மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்ற மஹேந்திர ரெட்டி, அன்றும் அதே மருந்தை குழாய் மூலம் ஏற்றியுள்ளார்.

23ஆம் திகதி, ஊசி குத்தப்பட்டுள்ள இடத்தில் வலி இருப்பதாக கிருத்திகா கூறியும், அன்று இரவு மீண்டும் ஒரு டோஸ் மருந்தை மனைவி உடலில் ஏற்றியுள்ளார் மஹேந்திர ரெட்டி.

மறுநாள், அதாவது, ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை, கிருத்திகா சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தும், தன் மனைவிக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை (CPR) செய்யாத மஹேந்திர ரெட்டி, மனைவியை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மரணத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை, அல்லது விவரிக்க இயலாத இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் மஹேந்திர ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில், கிருத்திகாவின் உடல் உள்ளுறுப்புகளில் மயக்க மருந்து கலந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, மஹேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருத்திகாவுக்கு நீண்ட காலமாக வயிற்று உபாதைகளும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இருந்துள்ளன. அவற்றை மறைத்து அவரது பெற்றோர் கிருத்திகாவை தனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டதை அறிந்த மஹேந்திர ரெட்டிக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.

மாதக்கணக்கில் கசப்பும் வெறுப்பும் தொடர, கவனமாக திட்டமிட்டு மனைவிக்கு விஷம் கொடுக்க முடிவு செய்துள்ளார் மஹேந்திர ரெட்டி.

மனைவிக்கு ஏற்கனவே வயிற்றுவலி இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு விஷம் கொடுத்து அதனால் ஏற்பட்ட வலியை வழக்கமான வயிற்றுவலி எனக் கூறி, அவருக்கு மருந்து கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் அவரைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் காப்பாற்றாமல் சாக விட்டிருக்கிறார் மஹேந்திர ரெட்டி.

தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, ஒரு கொலையை உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரணம் போல் மறைக்க முயன்ற மஹேந்திர ரெட்டி, தற்போது வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

மின்னல் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

நோர்வூட் பகுதியில் நேற்று (15) மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வான் மற்றும் அருகிலுள்ள வீடு மீது மின்னல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அத்துடன் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வீட்டில் இருந்த ஒருவர் தரையில் மயங்கி விழுந்து காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வான் நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தில் மின்னல் தாக்கியதாகவும், பின்னர் வான் மற்றும் வீடு மீது தாக்கியதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழையுடன் இடி மின்னல் தாக்கியதால் நோர்வுட் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

உலக சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை பதிவுசெய்த தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் குழந்தையற்ற தம்பதியினருக்கு முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் அரச வைத்தியசாலையொன்றில் முதன்முறையாக, உடலுக்கு வெளியே கருக்கட்டல் (IVF – In Vitro Fertilization) சேவையை ஆரம்பிக்க கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை தயாராகி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.

IVF செயல்முறை இந்தச் செயல்முறையின் கீழ், தாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையும், தந்தையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவும் ஆய்வகத்தில் ஒன்றிணைக்கப்பட்டு, கரு வளர்க்கப்பட்டு, பின்னர் தாயின் கருப்பையில் செலுத்தப்பட உள்ளது.

தற்போது இந்த பெறுமதிமிக்க சேவையை எதிர்பார்த்து சுமார் 1,725 தம்பதியினர் காத்திருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாட்டின் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் இந்தத் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், தனியார் துறையில் இந்தச் சிகிச்சையைப் பெற சுமார் இருபது முதல் முப்பது இலட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்டத்தில் பணிகள் இந்தத் திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், தேவையான உபகரணங்கள் மற்றும் ஆய்வக அமைப்புகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.

இருப்பினும், கட்டடத்தின் சிறிய கட்டுமான தாமதம் காரணமாகவே இந்த பணிகள் இதுவரை தாமதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம் இந்த பெறுமதிமிக்க திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை ஆரம்பிக்க கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை தயாராகி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.

IVF செயல்முறை இந்தச் செயல்முறையின் கீழ், தாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையும், தந்தையிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவும் ஆய்வகத்தில் ஒன்றிணைக்கப்பட்டு, கரு வளர்க்கப்பட்டு, பின்னர் தாயின் கருப்பையில் செலுத்தப்பட உள்ளது.

20 முதல் 30 இலட்சம் செலவு சேமிப்பு தற்போது இந்த பெறுமதிமிக்க சேவையை எதிர்பார்த்து சுமார் 1,725 தம்பதியினர் காத்திருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம் இந்த பெறுமதிமிக்க திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வரதட்சனை கொடுக்க மறுத்த மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களாக பாரதியை காணவில்லை. அவர் அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் விஜய் கூறி வந்தார்.

பாரதியின் அண்ணன் மாருதி திடீரென விஜய்யின் வீட்டுக்கு வந்துள்ளதுடன் அப்போது பாரதி அங்கு வரவில்லை என்று கூறினார். இதனால் பாரதி எங்கோ மாயமாகி விட்டதாகவும், பொலிஸில் புகார் அளித்தார்.

மேலும் அவர், தனது மைத்துனர் மாருதியை அழைத்துக் கொண்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு பாரதி பத்திரமாக வீடு வந்து சேரும்படி பூஜை செய்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பலரும் வேண்டுதல் நிறைவேற வேண்டி கோவிலில் உள்ள மரத்தில் ஒரு கடிதம் எழுதி ஆணி அடித்து வைப்பது வழக்கம். அந்த மரத்தின் அருகில் சென்று பாரதியின் அண்ணன் பார்த்தார். அப்போது அவரது கண்ணில் விஜய் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் தென்பட்டது. உடனே அந்த கடிதத்தை எடுத்து மாருதி படித்தார்.

அதில் விஜய், ‘என் மனைவி தினமும் பேயாக வந்து என்னை பயமுறுத்துகிறாள். அவளால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எந்த பிரச்சினையும், தொந்தரவும் ஏற்படக்கூடாது’ என்று எழுதி இருந்தார். இதனால் பதற்றம் அடைந்த மாருதி, உடனே இதுபற்றி பொலிஸில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விஜய்யை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி பாரதியை கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசிவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

அதாவது விஜய் ஒரு கார் வாங்கி உள்ளார். அந்த காருக்கு ரூ.2 லட்சம் தவணை செலுத்த வேண்டி இருந்தது. அந்த பணத்தை வரதட்சணையாக வாங்கி வரும்படி பாரதியிடம் விஜய் கூறியுள்ளார்.

அதற்கு பாரதி மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆழ்துளை கிணற்றில் வீசியதும், பின்னர் பேயாக வந்து மனைவி பயமுறுத்துகிறாள் என்று கருதி கோவிலில் உள்ள மரத்தில் விஜய் கடிதம் எழுதி ஆணி அடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்!!

தமிழகத்தில் திருப்பூர் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ரிதன்யா மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசியைமை தொடர்பாக பெண்னின் கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் காணப்படுவதால், அவரது கையடக்கத் தொலைபேசியை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவரது கணவர் கவின்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையடக்கத் தொலைபேசிகள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2 கையடக்கத் தொலைபேசிகளையும் தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உச்சம் தொடும் தங்கம் விலை : பிரபல ஆலயங்களில் பெருந்தொகை தங்கம் மாயம்!!

உலக பிரசித்தி பெற்ற கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான முகப்பில், தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது.

துவார பாலகர் சிலை கவசங்களைப் புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுண் தங்கம் அபகரிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தற்போது வெளியாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில், கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையைப் போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பெட்டகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆலயத்தில் தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பதிவேட்டில் 3,247.900 கிராம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுண்) மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை கோவிலில் தங்கத்தை அபகரித்தது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், வைக்கும் மகாதேவர் கோவிலில் மாயமான 31½ பவுண் தங்கம் குறித்தும், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.