நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை மண்டபங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் செப்டம்பர் 02 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒப்டிகல் விஞ்ஞானத்தை 1873ம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை.
அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியல் விஞ்ஞானிகள் ஒரு புது வகை வட்டை(CD) கண்டுபிடித்திருக்கின்றனர்.
இது சிடி / டிவிடி / ப்ளூரே தாண்டி ஒரு பெட்டாபைட் (10,48,576 கிகா பைட்) கொள்ளளவு கொண்டது. இந்த டிஸ்கின் மூலம் 11 லட்சம் டிவிடி திரைப்படங்களை சேமிக்கவோ (1ஜிபி குறைவாக ஒரு எம்பி 4 திரைப்பட அளவின்படி கணக்கிடபட்டது) அல்லது 10 வருடம் 6 மாத ஹெச்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அல்லது 18 வருட எஸ் டி தொலைக்காட்சியியை இந்த டிஸ்கில் அடக்கி விடலாம்.
இது போக்கல் பொயின்ட் எனப்படும் லேசரின் நுணுக்கம் ஒரு மனிதனின் முடியை பத்தாயிரமாய் வகுந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு மிக துல்லியமான போக்கல் பொ யின்ட் தொழில்நுட்பம் மூலம்தான் இந்த டிஸ்க் ரெடியாகி உள்ளது. மேலும் இது 100 X வேகம் கொண்டது.
சிம்பாவே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என வலுவான முன்னிலையில் உள்ளது.
நான்காவது ஒருநாள் போட்டி இன்று புலவாயோவில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், வினய் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு எதிர்பார்த்தது போல புஜாரா, மோகித் சர்மா ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சிம்பாவே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக சிகும்பரா 50 ஓட்டங்களும், வாலர் 35 ஓட்டங்களும், சிபண்டா 24 ஓட்டங்களும், மசகட்சா 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டும், மோகித் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 145 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 30.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோகித் ஷர்மா 64 ஓட்டங்களும், ரெய்னா 65 ஓட்டங்களும் எடுத்தனர். இதன் முலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் உள்ளது.
ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது காதல் வயப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். அவர் பேட்டி வருமாறு..
நானும் அனுஷ்காவும் காதலிப்பதாக வந்த செய்தியை பார்த்து சிரித்தேன். நாங்கள் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை. சிங்கம் 2 படத்தின் வெற்றி விழா விருந்தில் நாங்கள் ஜோடியாக பங்கேற்றதாகவும் இதற்காக ஐதராபாத்தில் இருந்து ஒன்றாக வந்ததாகவும் கூறுகின்றனர்.
நான் அந்த விருந்துக்கு போய் இருந்தேன். ஐதராபாத்தில் இருந்து அனுஷ்காவுடன் சேர்ந்து வரவில்லை. தனியாகத் தான் போனேன். அனுஷ்கா சிங்கம் 2 படத்தின் நாயகி எனவே அவரும் வந்து இருந்தார்.
நானும் அனுஷ்காவும் இரண்டாம் உலகம் படத்தில் நடித்துள்ளோம். ஒன்றரை வருடம் அந்த படத்தில் நடித்துள்ளோம். எனவே சிங்கம் 2 பட விருந்தில் பேசிக் கொண்டோம். நாங்கள் மட்டும் அந்த விருந்தில் இல்லை. வேறு நிறைய நடிகர், நடிகைகள் இருந்தனர்.
சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்த போது அனுஷ்காவை பார்க்க அடிக்கடி படப்பிடிப்பு தளத்துக்கு சென்றதாகவும் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்த போது என்னையும் டைரக்டர் செல்வராகவனையும் அனுஷ்கா அழைத்து இருந்தார்.
நாங்கள் நேரில் போய் பேசிவிட்டு வந்தோம். நயன்தாரா, உதயநிதி நடிக்கும் படத்தின் படிப்பிடிப்பு என் வீட்டின் அருகில் நடந்த போது கூட நான் நேரில் சென்று அவர்களிடம் பேசிவிட்டு வந்தேன். நான் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. யாரையேனும் காதலித்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்.
தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. படமும் நன்றாக ஓட ஆளும் அழகாக இருக்க அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார்.
ஜெய்க்கு ஜோடியாக “திருமணம் என்னும் நிக்கா” படத்தில் நடித்து முடித்து விட்டார். அதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கும் ராஜா ராணி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.
அத்துடன் தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அட்டகத்தி ரஞ்சித் இயக்குகிறார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதை, சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் ஒத்துவந்தால் ஓ.கே. என்கிறார்கள்.
ஒரு நடிகை அழகாக இருந்தால் அவரோடு சேர்ந்து நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டி போடுவார்கள். அப்படித்தான் ஹன்சிகாவைத் தொடர்ந்து நஸ்ரியாவுக்கும் போட்டி நிலவுகிறதாம்.
தற்போதைய நிலவரப்படி நஸ்ரியாவின் கொடிதான் கோடம்பாக்கத்தில் உயரப் பறக்கிறதாம்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. மேலும் டுவென்டி-20 தொடரிலும் 2-2 என முழுமையாக வென்றது.
இந்நிலையில் இதன் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்ரிடி கூறுகையில் எங்கள் அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது.
இப்போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. இப்படி கூறுவதால் எங்களது மன வலிமை ஒன்றும் குறையபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
சயீத் அஜ்மல் கூறுகையில் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் எங்களின் செயல்பாடு மோசமாக இருந்தது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற கடுமையாக போராடினோம்.
ஏனெனில் இந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல, இந்த வெற்றியை எண்ணி நாங்கள் பெருமை அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய புனே நகரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த நபர் ஒருவர் தற்போது பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார்.
புனேயில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறினான் சிறுவன் அங்குஷ் டேமேல்.
அப்போது வீட்டில் இருந்து வெளியேறியவன் நேராக குருத்வாரா கோயிலுக்குச் சென்று அங்கு கோயில் திருப்பணிகளை செய்து வந்தான். அங்கிருந்த குரு ஒருவர் அவனுக்கு குர்பன் சிங் என்று பெயரிட்டு அவனை பராமரித்து வந்தார். அந்த சிறுவனும் தலையில் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டு நீண்ட தாடியுடன் சிங்காக மாறினான்.
இதனைத் தொடர்ந்து பல வழிகளில் தனது குடும்பத்தாரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் பேஸ்புக்கின் வழியாக தன்னை விட இரண்டு வயது குறைந்த தனது சகோதரனின் சந்தோஷ் என்ற பெயரை தேடி அவனை தொடர்பு கொண்டு தன்னை பற்றி கூறியுள்ளான்.
அங்குஷ் தனது குடும்பத்தாரை சந்திப்பதற்கு குருவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தலையில் துணியுடனும் , தாடியுடனும் பார்த்த குடும்பத்தாருக்கு அங்குஷின் தோற்றம் விசித்திரமாக இருந்தாலும், அவனது நினைவுகள் அவர்களை ஒன்று சேர்த்துள்ளது.
ஹொலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜூலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
அவருடைய வருமானம் 33 மில்லியன் டொலர்கள் (500 கோடி) ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் மேல்பிசியன்ட் சினிமாப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து 2வது இடத்தில் 26 மில்லியன் டொலர் (375 கோடி) வருமானத்துடன் ஒஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லோரன்சும், 3வது இடத்தை 22 மில்லியன் டொலர் (300 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள்.
தூய உள்ளம் படைத்த நீங்கள் எதிலும் நியாயமும் நேர்மையும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். ராசிக்கு நான்கில் ராசிநாதனும் ஐந்தில் சூரியன், புதனின் சஞ்சாரம் இருக்கும்போது திடீர் கோபம் உண்டாகும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனத்தோடு படியுங்கள். அதிகாலையில் எழுந்து ஹயக்ரீவரை வணங்கி, படிக்கத் தொடங்குங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:
11, 12, 13 ஆகிய திகதிகளில் தொழில் நிமித்தமாக யாருக்கும் முன்பணம் கொடுக்க வேண்டாம்.
பரிகாரம்:
சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீ ஹரிஹரபுத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
மனத்துணிவும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் உங்களிடத்தில் அதிகமுண்டு. இந்த மாதம் ராசிக்கு ஐந்தில் குரு, ஒன்பதில் ராசிநாதனான சனி என்று சஞ்சாரம் செய்வதால் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்படும் பணத் தேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால், செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின்போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். கட்சித் தலைமையிடம் உங்களுக்கு உள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்காலத்தைபற்றி கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்கான அனைத்து முயற்சிகளும் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்:
9, 10 ஆகிய திகதிகளில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்துப் போட வேண்டாம்.
பரிகாரம்:
புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் ஒன்பது முறை கூறவும்.
சிறப்புப் பரிகாரம்:
மரிக்கொழுந்து வாங்கி அம்மனுக்கு சாத்தவும். முடிந்தவர்கள் பச்சை நிறத்தில் பட்டும் வாங்கி சாத்தலாம்.
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென் பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 59 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். இந்த மாதம் ராசிக்கு ஏழாம் இடத்தில் புதனின் சஞ்சாரம் தொடங்குவதாலும் சூரியன், புதன் சேர்க்கை பெற்றிருப்பதாலும் வரவுக்கு இணையாக செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும்.
பங்குச் சந்தை போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும். குழப்பவாதிகளையும் அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்யோகத்தில் கூடுதலான வேலைச் சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியின் மேலிடத்து ஆதரவு கூடுதலாகவே கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்:
7, 8 ஆகிய திகதிகளில் யாரிடமும் தேவைக்கு அதிகமான வாக்குவாதங்கள் வேண்டாம்.
பரிகாரம்:
அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
நிதானமாகவும் செம்மையாகவும் தெய்வ பலத்தோடும் காரியமாற்றி வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் மற்றும் தன, தைரிய ஸ்தானாதிபதியின் சஞ்சாரம் நன்மையைத் தரும். புதன் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.
எந்த நோய் என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று குணமடைந்து விடுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். உஷ்ண சம்பந்தமான நோய் வந்து போகும். பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.
கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:
5, 6 ஆகிய திகதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தேவாரம், திருவாசகம் படித்து வர குருவருள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
அனைவருடனும் நல்ல முறையில் பழகி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காரியத்தை சாதித்துக் கொள்ளும் புத்திசாலிகள் நீங்கள். உங்களின் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதேசமயம் எதிர்பாராத வகையில் பணவரத்தும் இருக்கும். அரசுத் துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் சிறிது மந்தமான நிலை காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் நிறைய வரக்கூடும். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மையைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
இதனால் உங்களைத் தேடி புதிய பதவிகள் வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும் புகழும் உயரும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாக பழகுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரத்தை ஒதுக்கிப் படிப்பது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்:
3, 4, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் வெகு தூரம் சுயமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.
பரிகாரம்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தரிசித்து தீபமேற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீ ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
முருகன் கோயிலிலுள்ள நாகருக்கு நெய் தீபம் ஏற்றவும்.
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கமின்றி கடுமையாக உழைப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். இம்மாதம் லாப ஸ்தானத்தில் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருப்பதால் எடுத்த காரியங்கள் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும் விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளால் உத்யோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களைப்பற்றி புறம் பேசியவர்கள் சரணடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டம தினங்கள்:
1, 2, 29, 30 போன்ற திகதிகளில் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.
பரிகாரம்:
மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபமேற்றி வழிபட எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.
சிறப்புப் பரிகாரம்:
வெண் சுண்டல் செய்து சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமையன்று வழங்கவும்.