கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

akshra

கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிக்ரகளின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கை அக்ஷரா ஹாஸனும் நடிக்க வருகிறார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கிறார் அக்ஷரா. அவருக்கு திரையில் நடிப்பதை விட திரைக்குப் பின்னால் இருப்பிதிலேயே அதிக ஆர்வம். அதனால் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இந்நிலையில் அவர் ஸ்ருதியுடன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஸ்ருதி நடனமாட சென்றபோது அவருக்கு நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கம்பெனி கொடுத்துள்ளார். இதையடுத்து நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கு படத்தில் அக்ஷரா நடிக்கப் போவதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – கன்னி

kanni

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள். அனைத்திலும் அதீதமான கௌரவத்தை எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் உங்களின் ராசியாதிபதியான புதன் ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்வதும், சூரியனின் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் துணிவு உண்டாகும். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.

புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக் காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சிலருக்கு ரியல் எஸ்டேட் துறையின் மூலம் ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு மிகவும் உதவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொல்லும் வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் பேச்சை உடனடியாக கேட்க வேண்டாம். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்:

27, 28 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம்:

முடிந்தவரை தினமும் பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 23 முறை சொல்லுங்கள்.

சிறப்புப் பரிகாரம்:

விநாயகப் பெருமானை அறுகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுபட, தடைப்பட்ட காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், புதன்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – சிம்மம்

simmam

கடமையில் கண்ணும் கருத்தாய் செயல்படும் நீங்கள் எல்லோராலேயும் நேசிக்கப்படுவீர்கள். இதுவரை தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசிநாதனான சூரியனின் சஞ்சாரம் ராசிக்கு பன்னிரெண்டில் இருப்பதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்திருப்பது மனதில் தெளிவை உண்டாக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேருவார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள்.

உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றி கொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதோடு மட்டுமல்லாமல் ஆதாயமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும் இருக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். ஆடை, ஆபரணங்கள் என்று வாங்கிக் குவிப்பீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களின் முழுமையான திறமைகள் வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களின் திறமை வெளிப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

25, 26 ஆகிய திகதிகளில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமஹாருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்,
தேய்பிறை : புதன், வியாழன்..

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – கடகம்

katakam

அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்து மகிழும் தயாள குணம் படைத்தவர்கள் நீங்கள். இனிமையாகப் பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் ராசிக்குள் புதன், சூரியன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது யோசித்துச் செய்வது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில் பொருட்களை அனுப்பும்போது கவனம் தேவை. பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும்.

நுணுக்கமான விஷயங்களையும் சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்துச் செல்லவும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.

பெண்கள், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற மாதமிது. சமுதாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற உதவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

22, 23, 24 போன்ற நாட்களில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்:

புதன் கிழமைதோறும் ஹயக்ரீவ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி, தைரியம் பிறக்கும்.

சிறப்புப் பரிகாரம்:

மல்லிகை மலரை அம்பாளுக்கு படைக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வியாழன்,
தேய்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மிதுனம்

mithunam

தனது பேச்சாற்றலால் மற்றவர்களை கவர்ந்திழுத்து எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சாதுர்யமாக முடிப்பீர்கள். இந்த மாதம் புதன் ராசிக்கு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சூரியனுடன் சேர்க்கை பெறுவதும் பொருள் வரவை கொடுக்கும். சேமிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்யம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகள் வந்து நீங்கும்.

மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் பூர்த்தியாகும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத்தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும்.

கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் திறமையைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அரசியல், சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு பரிபூரண நன்மைகள் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான காலம் இது. நிறைய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

19, 20, 21 ஆகிய திகதிகளில் பெரிய முதலீடு எதையும் செய்ய வேண்டாம்.

பரிகாரம்:

பெருமாள் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமாதவாய நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

மரிக்கொழுந்தை பெருமாளுக்கு சாத்தி வழிபட, அவரின் அருளால் அனைத்து நன்மையும் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், புதன், வியாழன்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – ரிஷபம்

rishabam

எந்த சூழ்நிலையிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் கிரக சஞ்சாரத்தினால் இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சுக ஸ்தானத்தில் ராசிநாதனின் சஞ்சாரம் இருப்பதால் எதிலுமே சாதகமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியனின் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் நிற்கும். கடினமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் சாதனைகளை செய்து புகழ் பெறுவீர்கள்.

தொழிலிலும் வியாபாரத்திலும் மேன்மை உண்டாகும். ஆனால், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையிலுள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சாதகமான முடிவை பெறுவார்கள்.

இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருந்தாலும் பல சோதனைகளையும் சந்திக்க வேண்டியது வரும். இருப்பினும் சூரியனின் சஞ்சாரத்தால் அனைத்தையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் கிடைக்கும். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சந்திராஷ்டம தினங்கள்:

17, 18 ஆகிய திகதிகளில் புதிய தொழில்களுக்கான முன்பணம் எதையும் தர வேண்டாம்.

பரிகாரம்:

அருகிலுள்ள சிவாலய அம்பாளை தரிசித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற்றால் எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் சதாசிவகுடும்பின்யை நமஹ” என்ற மந்திரத்தை 24 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

மல்லிகை மலரை அம்பாளுக்கு சாத்தி வழிபடுங்கள். அவளின் அருட்பார்வையால் உங்களது துன்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி,
தேய்பிறை : புதன், வெள்ளி.

அர்ஜென்டினாவில் ரயிலை செலுத்தும் போது தூங்கி வழிந்த, மொபைல் போனில் பேசிய டிரைவர்கள்!!

rail

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, மொபைல் போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர் பலியாகினர். அந்த ரயிலின் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் ரயில் டிரைவர்கள் வண்டியை ஓட்டும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் மற்றொன்றின் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து டிரைவர்களின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

காரணம் ரயில் ஓடும் போது டிரைவர்கள் ஹாயாக மொபைல் போனில் பேசியது, புத்தகம் வாசித்தது, தூங்கியது ஆகியவை பதிவாகியுள்ளன. ரயிலில் உள்ள பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் டிரைவர்கள் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆந்திரா பிரிவினை : அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி!!

andra

ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் மரணமடைந்துள்ளனர், 10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்த நிலையில் விஜயவாடா அஜீத் சிங் நகரில் ஒரு மாணவியின் உருக்கமான பேச்சை கேட்டு குருசாமி என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார். அனந்தபூர் சாதிபத்ரி என்ற ஊரில் சுப்பிரமணியம் என்பவரும் கிருஷ்ணா மாவட்டம் மல்லவள்ளி என்ற ஊரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பத்மநாபன் என்பவரும் டி.வி. செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

இதே போல் குண்டூர் மாவட்டத்தில் சிவாஜி என்பவரும் விஜயநகர மாவட்டத்தில் அரிபாபு என்பவரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை டி.வி யில் பார்த்து அதிர்ச்சி அடைந்து பலியானார்கள். மாரடைப்பு, தற்கொலை விஜய நகரம் தாதில் பூடியில் ஊர்க்காவல் படை வீரர் சீனிவாசராவ் என்பவர் தெலுங்கு பேசும் மக்களை பிரித்து விட்டார்களே என வேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குண்டூரில் மின்வாரிய ஊழியர் சேக் காஜா அலி அரசியல் தலைவர்களின் காலை பிடித்து கதறி அழுததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பில் உயிர் இழந்தார். 10 பேர் கவலைக்கிடம் இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கிழக்கு கோதாவரியில் பாப்ஜி என்ற வாலிபர் தொலைபேசி கோபுரத்திலிருந்து இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்கொலை முயற்சி செய்த 10 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மேஷம்

mesha

“மேட முயற்சி’’ என்பதற்கேற்ப எந்த காரியத்திலும் முதலில் சில தடைகளை சந்தித்து பின் விடாமுயற்சியால் வெற்றிகளை குவிப்பீர்கள். எதிர்பா ராத அலைச்சல், வீண் விரயங்களுக்கு மத்தியில் சிறந்த பலன்களை அடைவீர்கள். குரு, புதனின் வீட்டில் இருந்து உங்களது களத்ர ஸ்தானத்தை பார்க்கிறார். தம்பதிகளுக்குள் இருந்த மனக் கசப்புகள் குறையும். ராசியில் இருக்கும். கேது வீணான குழப்பங்களை தந்தாலும் ராசிநாதனின் சஞ்சாரத் தால் அதெல்லாம் மறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள்.

வக்ர சனியின் பார்வையால் சிற்சில விஷயங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் உங்களது மன வலிமையால் அனைத்தையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். சமுதாயத் தில் அந்தஸ்துமிக்க பதவிகளை பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து முடிவெ டுப்பீர்கள். தடைப்பட்டிருந்த விஷயங்கள் மடமடவென்று நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். பணியின் நிமித்தமாக வெளியூர்களில் இருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

அலுவலகத்தில் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்த்து வெற்றிகரமாக நிறைவேற்றி நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபத்தில் குறைவிருக்காது. போட்டிகளை சமாளிக்க முடியும். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடத்துப் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. மாணவ மணிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

14, 15, 16 போன்ற நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:

தினந்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ககாடரூபாயை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை கூறுங்கள்.

சிறப்புப் பரிகாரம்:

அறுகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருக்கவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி,
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய் !!

vijay

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஏழை மாணவ- மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி வழங்கினார்.

கடந்த 10 வருடங்களாக ஏழை மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களையும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் செலவில் ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கினார்.

அது மட்டுமின்றி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வழங்கி அவர்களை கௌரவப்படுத்திய பின்பு அவர்களுக்கு அறுசுவை உணவுகளையும் அவரே பரிமாறினார்.

பின்பு மாணவர்களிடம் பேசிய விஜய், உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் தரமான கல்வியால் மட்டுமே முடியும்.

எனவே நமது நாட்டுக்காகவும், நமது ஊருக்காகவும், நமது குடும்பத்துக்காகவும் பொறுப்புடன் படித்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இலங்கை தென்னாபிரிக்க 5வது போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூவர் கைது!!

sl

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூன்று மும்பை சூதாட்டக்காரர்களை கோவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹித்தேஸ் ஜதாகியா, சுனில் சுக்லா மற்றும் ஹித்தேஸ் தேசியா ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கோவா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கணினி 16 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

ஐபோன் 5எஸ் : செப்டெம்பர் இல் அறிமுகம்!!

Apple-iPhone-5S

அப்பிள் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் இனை செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது தொடர்பில் ஜேர்மன் நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதுதொடர்பில் அப்பிள் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

வெவ்வேறு அளவிலான திரைகளைக் கொண்ட இரு ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐபோன்5 கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேபோல் ஐபோன் 5எஸ் உம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேபோல் அதே தினத்தில் குறைந்த விலை ஐபோனும் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகின்றது.

செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்!!

election

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­கான தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21ம் திகதி நடை­பெ­ற­வுள்ளதாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று தெரிவித்தார்.

வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் மற்றும் குரு­ணாகல் மாவட்டங்களிலும் மத்­திய மாகா­ணத்தில் நுவ­ரெ­லியா, கண்டி மற்றும் மாத்­தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு மொத்­த­மாக 142 உறுப்­பி­னர்­களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதிபெற்­றுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்த கூகுள் குரோம்!!

google-chrome

தற்போதைய நிலையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் உலாவிகளில் முதலிடம் பிடித்துள்ளது குரோம் உலாவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குரோம் உலாவி அறிமுகமான காலகட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால் அறிமுகமானதில் இருந்தே குரோம் உலாவியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து பல்வேறு வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் இணைய செயல்பாடுகளை கண்காணித்து வரும் StatCounter குரோம் உலாவி தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி குரோம் உலகாளவிய அளவில், 43 சதவிகித இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவிகித வாடிக்கையாளர்களையே தன்னிடத்தில் வைத்துள்ளது.
பயர்பொக்ஸ் ஏறத்தாழ 20 சதவிகிதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் சபாரி மற்றும் ஒபேரா உலாவிகள் உள்ளன.

யாழ் பல்கலை கழக வவுனியா வளாக பிரயோக பீட ஒன்றியத்தினால் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

யாழ் பல்கலை கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்களின் ஏற்பாட்டில் உயர் தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மாங்குளம் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது

கலை வர்த்தக கணித விஞ்ஞான மாணவர்களுக்கான கருத்தரங்கை யாழ் வவுனியா பிரபல ஆசிரியர்கள் நடாத்தினர் இந்து நாகரிக கருத்தரங்கினை சிவ .கஜன் அவர்களும் வணிக கருத்தரங்கினை திரு.சத்தியதாஸ் அவர்கள் நிகழ்தினார்.

v4 v3 v2 v1

கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறு : டிராவிட்!!

Rahulமைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில்,

விராட்கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறானதாகும். இருவரும் வித்தியாசமான நபர்கள். மைதானத்தில் தனது செயல்பாடு குறித்து விராட்கோலி சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். மைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

சிம்பாவேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய பிடியால் ஆட்டம் இழந்த போது விராட்கோலி உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் தவறானது. கோபத்தை குறைத்து அவர் வேறு மாதிரியாக நடந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விராட்கோலி சிறந்த வீரர் என்றாலும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.