21 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

vavuniyaஇலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 6-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த (ஜுன்) மாதம் 6-ம் திகதி கைது செய்தனர்.

அவர்கள் சென்ற 5 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், 21 தமிழ்நாடு மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் விளக்கமறியலை 6-ம் திகதி வரை நீட்டித்து நீதவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த (ஜூலை) மாதம் 31-ம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 74 மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவேதா மேனனின் பிரசவ காட்சியை திரையிட மீண்டும் மறுப்பு..!

swethaநடிகை சுவேதா மேனன் படத்திற்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்துள்ளார்.

இயக்குனர் பிளஸ்சி படமாக்கிய தத்ரூப பிரசவ காட்சிக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதற்கு தணிக்கை குழு சம்மதம் தெரிவித்து யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதுபற்றி இயக்குனர் இயக்குனர் பிளஸ்சி கூறுகையில், பிரசவ காட்சி என்பது இப்படத்திற்கு முக்கியமான தேவை.

எனவே தான் சுவேதா மேனன் மற்றும் அவரது கணவரிடம் அனுமதி பெற்று நிஜ பிரசவ காட்சியை படமாக்கினேன்.

எந்த காட்சியையும் துண்டிக்காமல் தணிக்கை குழுவினர் சான்றிதழ் தந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த பிரசவ காட்சியை நீக்கிவிட்டு தான் திரையிடுவோம் என்று அறிவித்துள்ளது.

இதுபற்றி படக் குழுவினர் கூறுகையில், தணிக்கை குழுவை விட திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள்!!

natural-weight-loss-original

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள்.

இப்படியெல்லாம் நடந்தால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும்.

இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமாக சாப்பிட்டால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம்.

அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம். ஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்துகொள்ள கீழே படித்துப் பாருங்கள்..

காளான்

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால் இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிப்பதோடு நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

அப்பிள்

தினமும் ஒரு அப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே அப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்களானது உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு கலோரிகளையும் எரித்துவிடும்.

கோலிப்ளவர்

உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் கோலிப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த கோலிப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான விட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

கருவாப்பட்டை

கருவாப்பட்டையை உணவில் சேர்த்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மிளகாய்

அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அந்த மிளகாயில் உள்ள பொருளானது உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து டாக்ஸின்களை வெளியேற்றி உடல் எடை குறைய உதவியாக இருக்கும்

முள்ளங்கி

முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.

கருப்பு சொக்லேட்

அனைவரும் சொக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் கருப்பு சொக்லேட்டை அளவாக சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

பச்சை பயறு

அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு விட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர் உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது சமிபாட்டிற்கும் மிகவும் நல்லது.

சிக்ஸ்பேக் உடலமைப்பிற்கு ஆசை – அனுஷ்கா..!

anushkaநடிகர்கள் மட்டும்தான் சிக்ஸ்பேக் வைக்க ஆசைப்பட வேண்டுமா? அந்த ஆசை நடிகைகளுக்கு வரக்கூடாதா என்ன? அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் அனுஷ்கா.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ருத்ரம்மாதேவி, மற்றும் பஹுபாலி ஆகிய இரு படங்களிலும் வீர, தீர சாகஸக்காட்சிகளில் நடித்து வரும் அனுஷ்கா, கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.அப்போதுதான் அவருக்கு சிக்ஸ்பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை வந்ததாம். உடனே உடற்பயிற்சி ஆசிரியரிடம் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

ஏற்கனவே யோகா டீச்சராக இருக்கும் அனுஷ்காவிற்கு சிக்ஸ்பேக் வைப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதுதான் எல்லோருடைய எண்ணம். இன்னும் சில நாட்களில் சிக்ஸ்பேக் அனுஷ்காவை ரசிகர்கள் பார்க்கலாம்.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி இன்று..!

srilankaஇலங்கை, தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் T20 போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

சுற்றுலா தென்னாபிரிக்க அணி, இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதில் இலங்கை அணி 4 -1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.

கொழும்பு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும், தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இரு அணிகளுக்குமிடையில் மூன்று T20 போட்டித்தொடர் நடைபெறவுள்ளது. அதன் முதல் போட்டியில் இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

இன்றைய போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை அணியின் விபரம்
டினேஷ் சந்திமால் (தலைவர்),லசித் மலிங்க, குஷால் ஜனித் பெரேரா, திலகரட்ண டில்ஷான், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமன்ன, அஞ்சலோ பெரேரா, ஜீவன் மென்டிஸ், திஸர பெரேரா, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், சச்சித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ்.

பிரியாமணியின் இசை வெளியீட்டு விழாவில் வித்யாபாலன்..!

priyamani_vidhyaபிரியாமணி நடித்து வெளிவர இருக்கும் சண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகிறார் வித்யாபாலன்.

பிரியாமணி கதாநாயகியாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் தெலுங்கு படம் சண்டி.

இப்படத்தினை சமுத்திரா இயக்கியிருக்கிறார் மேலும் பிரியாமணிக்கு ஜோடியாக கிருஷ்ணம் ராஜீ நடிக்கிறார்.

படப்பிடிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 12ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.

பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பாலிவுட்டின் பிரபல நடிகை வித்யா பாலனுக்கு பிரியாமணி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட வித்யா பாலனும் இவ்விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல் – கலைப்பீட மாணவர்கள் உட்செல்லத் தடை..!

jaffnaயாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்செல்லத் தடை விதிக்கப்பட்டது.

மாணவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தில் சில கட்டடங்களுக்கும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி மதியத்துடன் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருவோர நாய்குட்டிகளை பிடித்து திரிஷா தத்து கொடுத்தார்!!

trisha-dog

நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் தீவிரம் காட்டுகிறார். ஏற்கனவே படப்பிடிப்புக்கு சென்ற போது காரில் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார். அன்று முதல் பிராணிகள் நலனில் அக்கறை காட்டி வருகிறார்.

தெருவோரம் திரியும் நாய்க் குட்டிகளை எடுத்து போய் குளிப்பாட்டி வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். அக்கம் பக்கத்தில் உள்ள பலர் தெருவில் திரியும் நாய்க் குட்டிகளை பிடித்து திரிஷாவிடம் ஒப்படைத்து வருகின்றனர். இப்போது அவர் வீட்டில் நிறைய நாய்க் குட்டிகள் உள்ளன. திரிஷா பிராணிகள் மீது காட்டும் ஆர்வத்தை பார்த்து பிராணிகள் நல அமைப்புகள் அவரை தூதுவராக சேர்த்து பொறுப்புகள் வழங்கியுள்ளன.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் தன்னிடம் உள்ள நாய்க் குட்டிகளை தத்து கொடுக்க திரிஷா சிறப்பு முகாம் நடத்தினார். நிறைய பேர் நேரில் வந்து திரிஷாவிடம் இருந்து நாய்க் குட்டிகளை தத்தெடுத்து சென்றனர்.

மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!!

laxmi

பீட்சா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் இயக்கும் அடுத்த படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 7 வாரங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இப்படத்தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு விற்பவராக வருகிறாராம். இதுகுறித்து லட்சுமிமேனன் கூறும்போது,

நான் இப்படத்தில் இட்லி விற்பவராக வருகிறேன். என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைவதற்கு படப்பிடிப்புக்கு செல்லும் முன் மதுரையில் உள்ள ரோட்டோர இட்லி கடைகளுக்கு சென்று, அவர்களின் விற்பனை முறையை தெரிந்து கொண்டேன். இதுபோன்று யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். இந்த பாடலை மதுரையிலேயே படமாக்கினர். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் –

andersonஇங்கிலாந்து அணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கூறியுள்ளார்.

முன்னாள் பிரபல வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான அவர் இதுகுறித்து கூறியதாவது:–

தற்போதைய நிலையில் இங்கிலாந்து வீரர் ஜிம்மி அண்டர்சனே பந்துவீச்சில் முன்னிலையில் உள்ளார். என்னை பொறுத்தவரை அவர் தான் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீரராக இருக்கிறார். அவரது பந்துவீச்சு எப்போதும் நேர்த்தியுடன் இருக்கிறது. புதிய பந்தையும், பழைய பந்தையும் ஒரே இலக்குடன் வீசக்கூடியவராக உள்ளார். அவரது சுவிங் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது.

ஸ்டெய்னால் ஒரு ஓவரில் ஒரு முறைதான் சுவிங் பந்து வீச முடிகிறது. ஆனால் அண்டர்சன் 6 பந்தையும் சுவிங் செய்ய கூடியது. ஸ்டெய்ன் உலகின் சிறந்த பவுலராக இருந்தாலும் அவரைவிட சற்றே முன்னணியில் ஆண்டர்சன் உள்ளார். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

30 வயதான அண்டர்சன் 84 டெஸ்டில்320 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர்களில் இயன்போத்தம், பாப் வில்லிஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 3–வது இடத்தில் உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசஷ் டெஸ்ட் தொடரில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. 2 டெஸ்டில்13 விக்கெட் கைப்பற்றி இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

அண்டர்சனை பாராட்டும் வாசிம் அக்ரமுக்கு சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஆவார். அவர் 104 டெஸ்டில்414 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

107 செய்தி இணையங்களை முடக்கியது சீனா..!

chinaசெய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது. அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது.

அதிலும் சமீப காலமாக செய்திகளை தரும் வகையில் 100க்கும் மேற்பட்ட வெப்சைட்கள் தலைதூக்கின. இதில், அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைள் குறித்த செய்திகளும் இந்த வெப்சைட்களில் இடம்பெற்றன. மாகாண அளவில் நிலவும் அரசியல் விவகாரங்கள் தான் அதிகம் இடம் பெற்றன.

இந்த வெப்சைட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில்,ஓசைப்படாமல், இத்தகைய வெப்சைட்களை முடக்கும் வேலையில் சீன அரசு இறங்கியது. கடந்த மே மாதம் ஆரம்பித்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு இதுவரை 107 வெப்சைட்கள் முடங்கியுள்ளன. மக்களிடம் பிரபலமாக விளங்கிய வொய்ஸ் ஒப் த பீப்பிள், டெமாக்ரடிக் லீகல் சூப்பர்விஷன் நெட்,சைனீஸ் சிட்டிசன்ஸ் நியூஸ், ஜஸ்டிஸ் ஒன்லைன் ஆகியவை அடங்கும்.

இந்த வெப்சைட்கள், ஒன்லைன் தொடர்பான அங்கீகாரம் அளிக்கும் அரசின் தேசிய இன்டர்நெட் கட்டுப்பாட்டு மையத்திடம் உரிமம் பெறவில்லை. அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை தந்து மக்களை குழப்ப முயற்சிப்பது தெரியவந்தது. அதனால் இந்த சட்டவிரோத வெப்சைட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!

கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 5ம் திகதி திறந்து வைக்கிறார்.

கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில் காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு 2016 ல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

colombo_soth_harbour1

colombo_soth_harbour2 colombo_soth_harbour3

வெடித்துச் சிதறியது ஆயுதக்கிடங்கு – 40 பேர் பலி..!

syriaசிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர்.

120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மத்திய சிரியாவின் நகரமான ஹாம்ஸ் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் ஆயுதக் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது.

ஆயுதக் கிடங்கின் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்தன. இன்னும் பல வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அதிபர் பஷார் ஆஸாத் ஆதரவாளர்கள் தான் அதிகளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

syria

ஓடும் ரெயிலில் சண்டை போட தயராகும் அஜீத்!!

ajith

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது. இப்போது படம் வெளியாக தயாராக இருப்பதால் படம் குறித்தான பல்வேறு செய்திகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. படத்திற்கு ஒருவழியாக ஆரம்பம் என்று பெயரிட்டு, புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படம் குறித்த தகவல்கள், ஆரம்பத்திலிருந்தே வரத் துவங்கியுள்ளன. இப்படத்தில் அஜீத் ஓடும் ரெயிலில் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.

இதற்காக ஒடிஷா-ஆந்திரா எல்லையில் உள்ள ரயில் பாதையில் இந்த காட்சியை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக தென்கிழக்கு ரெயில்வேயில் முறையான அனுமதியும் பெற்றுள்ளனராம். இந்த காட்சியில் அஜீத் டூப் போடாமல் அவரே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் காட்சியில் அஜீத் டூப் போடாமல் நடித்து, விபத்துக்குள்ளானார். இதனால் காலில் பலத்த அடிபட்டு அதற்கு சிகிச்சையும் மேற்கொண்டார். இந்நிலையில், சிவா இயக்கும் இப்படத்தில் ரயில் சண்டை காட்சியில் அஜீத் டூப் போடாமல் நடிப்பதாக வந்துள்ள செய்தி படக்குழுவினரை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

அவுஸ்திரேலியா செல்லத் தயாரான 39 பேர் மாத்தறையில் கைது..!

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறையில் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் 18 ஆண்களும் ஏழு பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!

votingவட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியாவில் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேற்சைக்குழுக்களும் வவுனியா மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந் நிலையில் செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக் குழுக்ளையும் சேர்ந்த 171 பேர் 6 ஆசனத்திற்காக போட்டியிடவுள்ளனர்.