எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸை பராமரிக்காமல் வைத்திருந்த குற்றச்சாட்டில் பஸ்ஸின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை,
பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம், வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தாயும் சகோதரியும் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த மாணவியும் அவரது தந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான இடத்தில் மோதியதில் மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தங்கொட்டுவ மருத்துவமனையிலும், அங்கிருந்து நீர்கொழும்பு மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி நாச்சியார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்து விட்டார். இளைய மகள் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியன்-குருபாக்கியம் தம்பதியின் மகன் ஆகாஷ் (22). எலக்ட்ரீசியன். முத்துப்பாண்டியன் இறந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக ஆகாஷூம், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் இருந்தார்.
இதை அறிந்து அவரது வீட்டுக்கு ஆகாஷ் வந்தார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவு எடுத்து, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வெளியே சென்றிருந்த நாச்சியார் வீட்டிற்கு வந்த போது மின்விசிறியில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும்,
ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார்.
உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார்.
முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (09.09) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கப் பயணித்த ரயில் ஒன்று புவக்பிட்டிய மற்றும் அவிசாவளைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி இளநீர் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து அதிகாலை 4.25 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த ரயில் வீதியில் ரயில் போக்குவரத்துகள் கொஸ்கமவரை மட்டுப்படுத்தப்பட்டதுடன், விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதன் பின்னர் மீள ரயில் சேவை வழமைக்கு திரும்பியது.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (09.09.2025) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (09.09) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் களுத்துறை, ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
ஹொரணை , கெபெல்லகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் தனது அயல் வீட்டுக்குச் சென்று அங்கு வசிக்கும் நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான அயல் வீட்டில் வசிக்கும் நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை,
தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கலட்டி பகுதியில் வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து வீதியில் சென்றவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்வதற்கு சென்ற நிலையில் கூரை வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(08.09) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 28 வருடங்களின் பின்னர் இந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் மேற்பார்வையில் ,மாணவனுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மாணவனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. பேருந்தின் , ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
தனியார் சொகுசு பேருந்து மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன்பகுதி பெரும் சேதமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும் லயன்ஸ் விளையாட்டு கழகமைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபரும், சங்கத்தின் பதவி வழித்தலைவருமான கி.நந்தபாலன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வுகளில் முதற்கட்டமாக பழைய மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.
அணிக்கு 8 பேர் கொண்ட இப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு 2006 ஆம் வருட க.பொ.த.சாதாரண தர மாணவர்களும், 2017 மாணவர்களும் தகுதிபெற்றனர். போட்டி முடிவில் 2006 ஆண்டு மாணவர்கள் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான கயிறு
இழுத்தல் போட்டியில் 2005 க.பொ.த.சாதாரண தர மாணவர்கள வெற்றியை தமதாக்கியிருந்தனர்.
வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி செல்வரத்தினம், கலந்துகொண்டதுடன் பெருமளவான பழையமாணவர்களும் பங்கெடுத்திருந்தனர்.
கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (05) உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 05.09.2025 வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நாளை(8) திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது. குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உட்பட பல நாடுகளில் தோன்றிய முழு சந்திர கிரகணம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பல இடங்களில் நிலா சிவப்பு நிறத்தில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பல மக்கள் பார்வையிடுவதாகவும் அவர்கள் சந்திரனை புகைப்படம் எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் தெரியும் முழு சந்திர கிரகணம் நேற்று (07.09.2025) நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்றிரவு 8.58 மணி முதல் நாளை (08) அதிகாலை 2.25 மணி வரை, 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டது.
அந்தவகையில், தற்போது வானில் சந்திரகிரகணம் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்நது.
அதன்படியே கட்டாரிலும் இந்த சிவப்பு நிலா தென்பட்டதாக சிலர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.