கண்டி மண்சரிவு : 8 பேரின் உடல்கள் மீட்பு : பல சடலங்கள் மண்ணுக்குள்!!

கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்கு செல்ல வேண்டாம் : மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கலாநிதி வசந்த சேனாதீர கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டவர் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு சென்ற டிட்வா புயலின் பாதிப்பால் முழு நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மண்சரிவிலும் வெள்ளத்திலும் , சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை கனவத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர் மீடுப்பு பணியில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் குறித்த வெளிநாட்டவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று (01.12.2025) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காணாமல் போயிருந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்போது அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் : பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை!!

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் கடந்ந வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் அடித்து செல்லப்பட்டனர்.

இந் நிலையில் அவர்களது இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை உயிருடன் அருகில் உள்ள தோட்டத்தில் மீட்கப்பட்டது. இந்நிலையில் தாயின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதுடன் தந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோரை பிரிந்து தவிக்கும் பிஞ்சு குழந்தையுடன் குடும்பம் தவித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த பெற்றோரின் சடலங்கள் இராகலையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது!!

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுண்டிக்குளம், சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது. குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.

 

வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக்கிழமை(28) தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களை தேடும் பணி நேற்றையதினம்(30) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று(1) காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அவர்களின் புகைபடங்கள் வெளியாகியுள்ளன.

நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிலை!!

கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆலய செயற்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக நான்காவது நாட்களை கடந்தும் மின்சாரம், தொலைபேசிகளுக்கான இணைப்பு சில பிரதேசங்களில் வழங்கப்படாதுள்ளதுடன் , வழங்கப்பட்ட பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் இதுவரை சீர்செய்யப்படவில்லை.

அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருளில் மூழ்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!!

முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதனால் கடல் நீர்மட்டமானது உயர்வடைந்த நிலையில் முல்லைத்தீவு கொக்குளாய் திருகோணமலை பிரதான வீதியான செம்மலை பகுதியில் உள்ள நாயாற்றுபாலம் முற்றாக கீழிறங்கியுள்ளது.

முற்றாக தடை

இதனால் கொக்குளாய், கொக்குதொடுவாய், கர்நாட்டுக்கேணி திருகோணமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

 

3000 மணித்தியாலங்களுக்கும் மேலான பயண அனுபவம் கொண்ட விமானியை இழந்த இலங்கை!!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (30.11.2025) சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உலங்குவானூர்தி அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளனர்.

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த பதிவில் , “ஒரு இளம் மகனின் அன்பான தந்தையான நிர்மல், நேற்று டித்வா சூறாவளியால் அகால மரணமடைந்த இலங்கையர்களின் வரிசையில் இணைந்தார். விலைமதிப்பற்ற இலங்கை விமானியாக நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை விட்டுச் சென்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவிப்பு!!

பெரும் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறியுள்ளார்.

வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் சிறு குழந்தைகளுக்கும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் வீடுகளைச் சுற்றி நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இல்லையெனில், டெங்கு மற்றும் சிக்குன்யா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று சமில் முத்துக்குட மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கார் கடற்படையினரால் மீட்பு!!

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மதவாச்சி – மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய கார் கடற்படை அனர்த்த வாகனம் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

 

யாழில் மருமகனுக்கு மாமானார் அரங்கேற்றிய கொடூரம் : தீவிரமாகும் விசாரணை!!

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாகவும், மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இதேவேளை தாக்குதல் நடத்தியவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இன்று (30.11.2025) காலை மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.\

இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

அவர்கள் அங்கிருந்து வவுனியா விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு நோயாளர் காவு வண்டியினூடாக வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்கள் ஹெலிகொப்டரில் மீட்பு!!

அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மூன்று பெண்களை இன்று (29.11.225),

விமானப்படை மீட்பு குழுவினர் பெல் – 412 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்து சென்றனர்.

புயல் கடந்தாலும் தொடரும் மறைமுக பாதிப்பு : கடுமையான மழை குறித்து எச்சரிக்கை!!

சூறாவளி தீவை விட்டு நகர்ந்துள்ள நிலையில் அதன் நேரடி விளைவுகள் குறைந்துவிட்டாலும், மறைமுக விளைவுகள் இன்னும் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், கனமழை குறைந்திருந்தாலும், பேரிடர் நிலைமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை. எனவே, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போதைக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு கருணாநாயக்க வலியுறுத்தினார்.

சூறாவளி காரணமாக ஏற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான புதுப்பிப்புகளை வழங்கும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிணறுகளில் இருந்து தண்ணீரை முறையாக சுத்திகரிக்கும் வரை குடிப்பதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், இலங்கையின் மீதான மறைமுக தாக்கம் தொடர்ந்து வருவதால், தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

எனவே, மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இன்று கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த மறைமுக விளைவுகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தீவை விட்டு விலகிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு நாடு முழுவதும் சாதாரண வானிலை நிலவும் என்றும் அவர் கூறினார்.

குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு : மகனை காணவில்லை!!

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம – மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29.11.2025) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.

கொத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5 வீடுகள் உள்ளன. ஆசிரியை தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆசிரியை புபுது மஹேஷிகாவின் உடல் சில நிமிடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மகனை இன்னும் காணவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கையில் இயற்கையின் கோர தாண்வத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், காணாமல்போனோர் எண்னைக்கையும் அதிகரித்து வருகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.