அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
எனினும் 200 மாணவர்களுக்கு குறைவான தொகைக்கொண்ட பாடசாலைகள் சுகாதார ஒழுங்குவிதிகளின்படி செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் போதுமான வகுப்பறைகளுடன் போதுமான ஆசிரியர்களுடன் பாடசாலைகளில் சமூக இடைவெளிகளை பேணும் வகையில் செயற்படமுடியுமானால்,
பாடசாலைகளை திறக்குமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் பணிப்பெண்ணாக பணி புரியும் பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் பெருமளவு பணம் இருந்தமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போ தை ப் பொ ருள் வர்த்தகரின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணின் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை விடவும் அதிக பணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரான்ட்பாஸ் பொலிஸாரினால் நேற்று இரவு இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ச ந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் 70 வயதுடைய உடல் ஊனமுற்ற தாய் ஒருவரை பார்த்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது வங்கி கணக்கை சோதனையிடும் போது இரண்டரைக் கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்ததென்பது தொடர்பில் பொலிஸார் தீவிர வி சாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கை து செ ய்யப்பட்ட ச ந்தேக ந பர்களை இ ன்றைய தி னம் தி ருகோணமலை நீ திமன்றத்தில் ஆ ஜர்படுத்த ந டவடிக்கை எ டுத்துள்ளதாகவும் வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருவதாகவும் மொரவெவ பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.
பா திக்கப்பட்ட சி றுமி த ற்பொழு து திருகோணமலை பொ து வை த்தியசா லையில் சி கிச்சைகளுக்காக அ னுமதிக்கப்ப ட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படு கின்றது
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை – கஹபொல பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப் பார்ப்பது ஒரு காலாவதியான முறைமையாகும்.
ஆகையினால் மிருகக்காட்சிசாலையை நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அது விலங்குக் கொ டுமைக்கு வழிவகுக்காத வகையில் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா துறை அமைச்சகத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தெஹிளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க மாதத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யானைகளைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றை ஊர்வலங்களில் பயன்படுத்த கொடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், வழிகாட்டுதல்கள் விரைவில் அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளார்.
நமது இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
எனவே, பட்டதாரி நியமனத்தில் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டக் கற்கை நெறிகளை உள்வாரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ கற்க வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்துள்ளார்கள்.
இந்தப் பட்டம் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சான்றுப்படுத்துகின்றது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தின் போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் தான் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறும் நிலை வந்தது.
பட்டதாரி நியமனத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது ‘அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் அனைத்துப்பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள்.
தேர்தலுக்கு முன் பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்ட போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
நிலமை இப்படி இருக்க ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டதாரி நியமனத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்கள் புறக்கணிப்படுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல.
அரசு இந்த விடயத்தை உடனடியாக மீள் பரிசீலனை செய்து தகுதியான சகல பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும்.
அத்துடன் இந்த நியமனத்துக்கு விண்ணப்பித்த பலர் கொரோனவால் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.
எனவே அவர்கள் நாடு திரும்பி இந்நியமனத்தை பெற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் க றுப்பாக இ ருப்பதாக தோ ழிகள் கே லி, கி ண்டல் செ ய்ததால் 19 வ யது இ ளம் பெ ண் த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு ப குதியை சே ர்ந்தவ ர்கள் சதீஷ்குமார் – சிந்து த ம்பதி. இ ந்த த ம்பதிக்கு ஆர்த்தி, அவானி எ ன்று இ ரு ம கள்க ள் உ ள்ள னர். இ தில், 19 வ யது ஆர்த்தி நெடுமங்காடு அ ரசு க ல்லூரியில் இ ரண்டாமா ண்டு ப டித்து வ ருகிறார்.
ஆர்த்தியின் அ வரை நீ க றுப்பாக இ ருக்கிறாய் எ ன்று அ டிக்க டி கே லி பே சியதாக சொ ல்லப்ப டுகிறது. இ தனால், ம னமு டைந் த நி லையிலிரு ந்த ஆர்த்தி வீ ட்டில் யா ருமி ல்லாத போ து நே ற்று தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.
ச கோத ரி அவானிதான் ஆர்த்தி தூ க் கி ல் தொ ங் கு வ தை மு தலில் பா ர்த்து க த்தியு ள்ளார். தொ டர்ந்து , பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக்க ப்பட்டு, உ டல் பி ரேத ப ரிசோ தனைக்காக ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை க்கப்ப ட்டது.
ஆர்த்தியின் உ டலை பா ர்த்து பெ ற்றோர் , ச கோதரி க த றி அ ழு த து ப ரிதாப த்தை ஏ ற்படுத்தி யது. த ற் கொ லை க் கு மு ன் ஆர்த்தி எ ழுதி வை த்த க டிதத்தில்,
க றுப்பாக இ ருப்பதாக கூ றி எ ன் தோ ழிகள் கே லி செ ய்து வ ருகின் றனர். அ தனால் த ற் கொ லை செ ய்து கொ ள்கி றேன் எ ன்று எ ழுதியு ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை.
அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு வசதியுமில்லை என்று மாணவர்கள் கூறினார்கள்.
பாடசாலை வருவதற்கு தலை முடி ஒரு தடையாக இருக்கக் கூடாதென எண்ணிய நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டுபவராக மாறினார். அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) மனித நேயப்பணியினை செய்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திங்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது ஆசிரியர் பற்றாக்குறையாக நிலவும் பாடசாலையாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த பாடசாலையாகவும், வறிய நிலையில் வாழும் மாணவர்கள் கல்வி பயிலும் மிகவும் பின்தங்கிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் ப லியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் ப டுகா யமடைந்துள்ளார்.
இன்று மாலை 05 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்கள் சி க்கியு ள்ளனர்.
குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது, 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் ப லியாகியுள்ளதுடன் 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் ப டுகாய மடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தின்போது, கிளிநொச்சி காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உ யிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார்.
உ யிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் விபத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட கதிரேசு வீதி கடந்த மூன்று வாரங்களாக இருளில் முழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கின் வரவேற்பு வாசலாக வவுனியா மாவட்டம் திகழ்கின்ற போதிலும் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள கதிரேசு வீதியில் உள்ள வீதி மின்விளக்குகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஒளிரவில்லை.
இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் வவுனியா நகரசபையில் பொதுமக்கள் முறையிட்டுள்ள போதிலும் நகரசபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் குறித்த வீதி இருளில் முழ்கியுள்ளமையினால் தாம் அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கு திருடர்களுக்கு வாய்ப்பாக அமையும் நிலை கதிரேசு வீதிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரை மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 9வது நாடாளுமன்றம் நாளைய தினம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நபர்களை தெரிவு செய்து அறிவிக்கவில்லை.
9வது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இந்த 223 பேரில் 77 பேர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் 63 பேர் தேர்தலில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 60 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 49 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளனர்.
ஏனைய கட்சிகள் ஊடாக 17 பேர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 14 பேர் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் தேசிய பட்டியல் ஊடாக செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை மட்டக்கப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோர் சிறைச்சாலையில் இருந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக சிறைச்சாலையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நாளையதினம் நடைபெறவுள்ள 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கென நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து அதிகூடிய பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்த வண்ணமே நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளையதினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் அனுமதி வழங்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ப டு கொ லை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.
அவசியமில்லாத மின்சார உபகரணங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை, நாட்டு மக்களிடம் கேட்டுள்ளது.
நேற்று முன்தினம் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலும் செயலழிப்பு நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக நேற்று முதல் நான்கு நாட்களுக்கு இரண்டரை மணித்தியாலம் மின்சாரம் தடை செய்யவுள்ளதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்று முழுமையாக வெ டித்துள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்களாகும் என மின் நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் செயலழிந்த ஏனைய இரண்டு இயந்திரங்களை செயற்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.
இந்த நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரையில் மின்சார விநியோக தடை ஏற்படும். இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்கமுவே நாலக தேரரின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் க ஞ் சா பயிரிடுவதை ச ட்டமாக்க தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுதேச மருத்துவம் தொடர்பான ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். அரச ஆயுர்வேத ம ருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு நேற்று விஜயம் செய்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர், நாட்டை மிகவும் நேசிக்கும் கடந்த காலத்தில் தேசிய சுதந்திர போ ராட்ட த்தை ஆரம்பித்த பிக்கு. இதனால், இப்படியான பிக்குமார் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு அவர்களின் யோசனையை நாட்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
முதலாவது நடவடிக்கையாக சுதேச மருத்துவத்திற்கு தேவையான மூலப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக ஆயிரம் ம ருத்துவ கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் கிராம மக்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் நாட்டில் பயிராகும் அனைத்து செடிகளையும் வளர்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வாராந்தம் பெருந்தொகை தங்கம் ச ட்டவி ரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த குழுவினரால் மேற்கொண்ட தங்க விற்பனை தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
குறித்த குழுவினால் வாரத்திற்கு 300 முதல் 500 கிலோ கிராம் தங்கம் கொழும்பு ஹெட்டிவீதியில் உள்ள தங்க நகை கடைக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாதாரண முறையில் அந்தளவு தங்க தொகை குறித்த நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடகு வைக்கும் தங்க பொருட்களை மீட்டு தருவதாக கூறி இந்த குழுவினர் மோ சடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடகு வைக்கப்படும் தங்க நகைகளை தி ருடி, குறைந்த விலையில் தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.