இலங்கையில் வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்கும் வகையில் புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
பொது பயணிகள் சேவைகளை செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் சில மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொது பயணிகள் சேவைகளின் பாதுகாப்பு முறை தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் செயற்பட்ட சம்பவங்கள் கண்கானிப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்கள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறு சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் என்பவற்றை பூட்டுமாறு சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை முதல் அனைத்து அழகக நிலையங்களும் பூட்டப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாரியளவு சமூகத்திற்குள் பரவவில்லை என்ற போதிலும் அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமிக்கதென வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்கள் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் ஆபத்தாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால் நோய் அறிகுறிகள் இல்லாமல் நோய் பரப்புபவர்களிடம் சிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
H1N1 என்கின்ற பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவியது அமெரிக்காவிலிருந்து தானே அதற்கு யாரேனும் இழப்பீடு கேட்டோமா என சீனா அமெரிக்காவைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகளாவிய ரீதியில் இதுவரையில் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாக மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவமடைந்த அமெரிக்கா சீனா மீது தனது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
கொரோனா வைரஸை சீனா தான் திட்டமிட்டு பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியதோடு, சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும், சீனா உண்மையை மறைத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.
இதனால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தை போர் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா தொடர்பாக நேற்று பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங்,
“ஹெச்1என்1 காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் 2009ம் ஆண்டு அமெரிக்காவில் தான் கண்டயறிப்பட்டது. 214 நாடுகளுக்கு பரவிய அந்த நோய் சுமார் 2 லட்சம் உயிர்களைக் கொன்றொழித்தது. இதற்காக அமெரிக்காவிடம் யாராவது இழப்பீடு கேட்டோமா ?
1980 ஆண்டில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது அமெரிக்காவில் தான். இந்த நோய் உலகிற்கு பெரும் துயரமாக மாறியிருக்கின்றது. இதற்கு யாராவது அமெரிக்காவை பொறுப்பேற்குமாறு கூறினோமா ?
2008ம் ஆண்டு லேஹ்மன் சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தால் உலகப் பொருளாதாரமே பாதிப்படைந்ததாக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு அமெரிக்காவிடம் யாராது இழப்பீடு கேட்டோமா ?” இன்றூ கொரோனா வைரஸ் க்கு சீனா மீது அமெரிக்கா விசாரணை நடத்துவதற்கு முனைப்பு காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என கொந்தளித்துள்ளார். அமெரிக்காவே , சீனாவை குற்றம் சாட்டுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
“இந்த வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவான எதிரி, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாதிக்கக்கூடும். ஏனைய நாடுகளைப் போலவே, சீனாவும் இக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இவ் வைரஸை வெளிப்படையாக மற்றும் பொறுப்பான மனப்பான்மையுடன் கட்டுப்படுத்த சீனா மிகக் கடுமையான மற்றும் முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கெங் கூறினார். “சீனா மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளது, உலகளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகின்றது.
பெரிய பொது சுகாதார நெருக்கடிகள் மற்றும் தொற்று நோய்களுக்கு முகங்கொடுக்கும் போது, சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் நின்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் , பழிவாங்கல்களை ஓரம் கட்டல் வேண்டும்.
இப்போது அமெரிக்காவின் எதிரி வைரஸ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சீனா அல்ல,” என்று அவர் கூறினார். “மற்ற நாடுகளைத் தாக்கி மதிப்பிடுவது இழந்த நேரத்தையும் உயிர்களையும் மிச்சப்படுத்தாது.”
சீனாவைத் தாக்குவதையும் குற்றம் சாட்டுவதையும் நிறுத்திவதோடு, பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக உள்நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தின் போது தற்போதைய நிலைமைகள், சகல துறை சார் விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
கொடையாளர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதியை அரசாங்க அதிபர் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து நிரூபிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து யாழ். மாவட்டத்தில் தங்கி உள்ளவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதிகளை பெற்று இன்று காலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11இல் திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் திறக்கும் திகதி,
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பல்கலைக்கழகங்களில் கல்விசார் பணியாளர்களின் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதன்படி இணையம் மூலமான கவ்விச்செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது 309 கொரோனா வைரஸ் தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பேலியகொட மீன் சந்தையை நாளை முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், அவற்றின் விற்பனையாளர்கள் நாளை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதியன்று பாடசாலைகளை திறப்பது குறித்து சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 13 சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பிரதிநிதிகளில் பேராசிரியர்கள், சிறுவர் நலன் காப்பு அமைப்புக்கள்,கல்விசார் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றின் உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.
எவ்வித தயார் நிலையும் இன்றி பாடசாலைகளை திறப்பது என்பது 43 லட்சம் மாணவர்களை ஆபத்தில் சிக்கவைக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் எல்லா மாணவர்களையும் ஒன்றாக பாடசாலைகளுக்கு அனுமதிக்காது தேசிய பரீட்சைகளுக்கு தோற்றுகின்ற மாணவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் அவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையை அவர்கள் செய்துள்ளனர்.
இந்தநிலையில் வகுப்பறைகளில் சமூக இடைவெளிகளை பேணமுடியும் என்று இந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களுக்கு மாற்று கல்வி முறைகள் தொடர்பில் ஆராயுமாறும் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
பாடசாலைகளை திறக்கும் தீர்மானத்தை எடுக்கும்போது சுகாதார அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகள் தேவை என்பதையும் சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரித்துள்ளார்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடித்தால் உள்ளூர் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் சம்பந்தமான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பொருளாதாரம் பெரும்பாலும் மேல் மாகாணத்தில் இயங்கும் வணிகங்களை சார்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவைத் தொடர்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
எனினும், அது நாட்டில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்ததும் இலங்கை புதிய சந்தைகளை குறிவைக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முதலில் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வெளிவரும் நாடுகளை பின்பற்றி இலங்கை செல்லும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் வகையில் நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை முயற்சிக்கும் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சுமார் 210க்கும் மேற்பட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 160,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கும் வைத்தியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், உள்நாட்டை சேர்ந்தவர்களும், உலகெங்கிலும் உள்ளவர்களும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை உருவாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மருத்துவ மாணவரான தில்ஷன் அபேவர்தேனா ஒரு CPR இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இது கொரோனா வைரஸை தணிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களுக்கு, சுகாதார அமைச்சில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தில் 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 25 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு சிறுவர்களுக்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனாசிகிச்சைப்பிரிவாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை நிறைவேற்றி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில் இரா ணுவ தளபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் கொட்டாவ பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் இருந்து தொற்றியிருக்கலாம் என ச ந்தேகிப்பதாக இரா ணுவ த ளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ நோயாளி, கொட்டாவ பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை செல்வதாக தெரியவந்துள்ளது. அந்த நபர் செல்லும் மருந்தகத்தில் இதற்கு முன்னர் 114வது நோயாளி அடையாளம் காணப்பட்டார்.
அந்த நபரும் இந்த மருந்தகத்திற்கு வந்துள்ளார் என தெரியவந்தது. நேற்று அடையாளம் காணப்பட்ட பொரலஸ்கமுவ நபர் மார்ச் மாதம் 24 மற்றும் 26ஆம் திகதிகளில் சென்றுள்ளார்.
இதனால் அங்கு தான் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என ச ந்தேகிக்கின்றோம். எப்படியோ நேற்று இரவு இந்த நபரை க ண்டுபிடித்தோம். இதேவேளை, இந்த நபருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருந்தகமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் ம ரணித்தவர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு,
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ம ரணித்தவர்கள் நினைவாகவும், அவர்களது ஆத்ம சாந்திக்காவும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் சமூக இடைவெளிகளைப் பேணியதுடன் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் ஊரங்கு தளர்வை அடுத்து வவுனியா உட்பட நாட்டில் ஊரடங்கு அமுல் செய்யப்படாத மாவட்டங்களில் இன்று அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ம் திகதியுடன் (20.03.2020) மூடப்பட்டிருந்த வவுனியா அஞ்சல் சேவை அலுவலகம் 31 நாட்களுக்கு பின்னர் இன்று (21.04.2020) திறக்கப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த அளவிலான மக்களே வரிசையில் காத்திருந்தனர்.
நாட்டின் போக்குவரத்து இயல்புக்கு திரும்பும் வரை அஞ்சல் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்று இலங்கையின் அஞ்சல் அதிபர் ரஞ்சித் அபேரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் வெளிநாடுகளுக்கான அஞ்சல்கள் மறுஅறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து ம துபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று (21.04.2020) காலை 8.30 மணியளவில் பிறப்பித்த உத்தரவினையடுத்து வவுனியாவிலுள்ள அனைத்து ம துபான விற்பனை நிலையங்களும் இன்று திறக்கப்படவில்லை.
நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் ம துபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் மறு அறிவித்தல் வரையில் ம துபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்தல் விடுத்துள்ளது.
ம துபான விற்பனை நிலையங்களை திறப்பது சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு ஆரோக்கிய வழிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விடுத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.