மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள பகுதி ஒன்றுக்கு செல்லும் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் சடலம் என்றும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என்றும், கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு (11.07.2025) மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியிருந்தமையினால் அவ்விடத்தில் பதற்றநிலமை ஏற்பட்டதுடன் பொலிஸாரின் வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருந்தமையுடன் பொலிஸாரின் வான் நோக்கி மூன்று தரம் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகி இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் போக்குவரத்து பொலிசார் வந்துள்ளனர்.
இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியமையுடன் மேலும் ஆத்திரத்தில் சம்பவத்திற்கு காரணமான இரு பொலிஸார் மீதும் பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.
அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தமையுடன் இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்த வான் நோக்கி மூன்று தரம் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகிய இரு பொலிஸார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் தீவிர விசாரணை முன்னெடுக்க வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளமையுடன் சந்தேகங்களும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸாரின் பெயர் சின்னம் எவ்வாறு வந்தது?, உயிரிழந்த நபருக்கும் பொலிஸாருக்கிடையே தள்ளுமுள்ளு எதேனும் ஏற்பட்டதா?, மோட்டார் சைக்கிளின் சக்கரத்தினுள் தடி எவ்வாறு வந்தது? யார் வீசியது, பொலிஸார் ஏன் அவரை விரட்டினர் போன்ற பல்வேறு வினாக்களுக்கு பதிலில்லை.
இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரை நாம் வினாவிய போது, பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் சென்றமையினால் பொலிஸார் அவரை துரத்திச் சென்ற சமயத்தில் அவர் தடுமாறி கீழ வீழ்ந்து உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரின் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தியமையினால் அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,
மேலும் மற்றுமொரு கோணத்தில் சந்தியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் கூமாங்குளம் மதுபானசாலைக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,
அவ்விடத்திற்கு பொலிஸார் சென்றதாகவும் அதனையடுத்து பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரது மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தி அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,
மற்றுமொரு கோணத்தில் பொலிஸார் துரத்தி சென்றும் பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் பயணித்தமையினால் பொலிஸார் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தினர் அதன் அவர் கீழே வீழ்ந்து உயிரிழந்தார் எனவும்,
இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நீதியானதும் நியாமானதுமான விசாரணைகளுக்கு தாம் சகல பாதுகாப்பு பிரிவினருக்கும் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலுள்ள சிசிரிவி கமராவின் உதவியுடனும் பொதுமக்களின் வாக்குமூலத்துடனும் விசாரணைகளை வவுனியா தலைமை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையுடன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பு செட்டியார்தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்று 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
அதனடிப்படையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாக காணப்படுகிறது.
அதேநேரம் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்த விலை
கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10.07.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10.07) மாலை,
நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நேற்றைய தினம் (11.07) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில்,தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார்.
குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று (12.07.2025) அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை டைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.
தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில்சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.
தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக வெளியேவரமுடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த யானை வழிதவறி நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11.07.2025) இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்ப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர்.
இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்ப்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.
இதனால் பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்ப்பாட்டினால் தடுமாறிய பொலிசார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர். இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்ப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிசாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டபொதுமக்கள் பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை வயது 58 என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலத்திற்கு அருகில் பொலிசார் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்படுகின்றது.
குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பொலிசாரும் களம் இறக்கப்பட்டிருந்தனர்.
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ஜக்சனா கணேசலிங்கம் ஒன்பது பாடங்களிலும் “A” சித்தியினை பெற்றுள்ளார்.
இம் மாணவிக்கு செல்வி. ரவிசங்கர் கஜனிகா (மச்சாள்) மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை சமூகத்தினர் என அனைவரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதி ஒருவர் கருத்தரிப்பதற்காக கழிவு நீரை குடிக்க வைத்ததால் 35 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண் அணு ராதா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை.
இதனால், தனது அம்மாவை அழைத்துக் கொண்டு மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அங்கு அவர் அணு ராதாவுக்கு பேய் பிடித்ததாக கூறியுள்ளார்.
மேலும், பேயை விரட்டவும், கருத்தரிக்க வைப்பதற்காகவும் பூஜை செய்ய வேண்டும், அதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் எண்டு மந்திரவாதி கூறியுள்ளார். இதனை நம்பிய அணு ராதா அவருக்கு அட்வான்ஸ் பணம் ரூ.22 ஆயிரம் தந்துள்ளார்.
பின்னர் சடங்குகளை ஆரம்பித்த மந்திரவாதி, அனுராதாவின் தலைமுடியை இழுத்து கழிவுநீரை குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதனை அவரது அம்மா தடுக்க முயன்றும் அனுராதாவுக்கு தொடர்ந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார்.
பின்னர், பூஜை நடக்கும் போதே உடல்நிலை சரியில்லாமல் அணு ராதா கீழே விழுந்தார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து அனுராதாவின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்ததன்பேரில் மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் வெளியான கா.பொ.த சதாரண தர பரீட்சையில் திருகோணமை தமிழ் மாணவி கிசோதிகா 9 (A) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டில் வீர மங்கையாக திகழும் Lifters’ Club Trinco கிசோதிகா 9 (A) சிறப்புச் சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு கல்வியை நாசமாக்கும் எனத் தமிழ்ச் சமூகத்தில் பரவிவரும் மூட நம்பிக்கையை உடைத்து சாதனை மாணவியாக கிசோதிகா திகழ்கின்றார்.
மாணவி பாடசாலை மட்டப் பழு தூக்கும் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் வென்ற மாணவி கிசோதிகா சாதாரணதரத்தில் 9 (A) சிறப்புச் சித்திகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி கிசோதிகாவிற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களைய்ம் கூறி வருகின்றனர்.
யாழ்ப்பாணம்- சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவர்கள் பளுதூக்கல் போட்டியில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி, இந்த பாடசாலையின் மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பாடசாலையின் மாணவியொருவர் பளுதூக்கல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுள்ளார்.
மேலும், மாணவன் ஒருவன் இரண்டு மாதங்கள் மாத்திரம் தான் பயிற்சி பெற்று இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் உதவியுடனும், பெற்றோரின் ஆதரவுடனும் தாம் வெற்றி பெற்றதாகவும் இன்னும் தேசிய மட்டத்தில் தாம் சாதனை படைப்போம் எனவும் குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சாதனை படைத்த மாணவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும்,
அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்பின்னரே சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அர்ச்சுனா எம்.பி எழுந்து, விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி கடுமையாக கூச்சலிட்ட நிலையில், பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எழுந்து விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து அர்ச்சுனா இராமநாதன் எம்.பி கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் நேற்று (10.07.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவரும்போது, அப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் நேற்று (10) மாலை நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது,
நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர பொலிஸார் நேற்று (10.07) மீட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர்
அங்கு மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற கியோசனின் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பில் தனது அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.
நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக புதன்கிழமை (9) இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு
தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளமை தெரிய வந்துள்ளது மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கைப்பை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான ஆட்டோக்களை வாங்கி விடலாம் என இந்த பையை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) என்பது பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பேஷன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம், உலகளவில் 50 நாடுகளில், 460 க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2026 தொகுப்பிற்காக, பல்வேறு வகையான கைப்பைகளை லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், ஆட்டோ ரிக்சா வடிவிலான கைப்பை, இணையத்தையும் ஃபேஷன் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோனோகிராம் கேன்வாஸ் தோலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைப்பையின் விலையை கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லூயிஸ் உய்ட்டனின் தயாரிப்புகள் அனைத்தும், சிறந்த தரம் மற்றும் செயல்திறனுடன் உயர்தரப் பொருட்கள் கொண்டு, மிகுந்த அனுபவம் வாய்ந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் தகறாரில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிங்தொட்ட, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் ஆவார்.
போதைப்பொருள் பொதி ஒன்றுக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.