பாதெனிய – அநுராதபுரம் வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08.06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துஇந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் போர் விமானம் விழுந்துள்ளது. விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளான மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படை நிலையம் அருகே வழக்கமான பயிற்சியின போது போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஹரியானாவில் மற் றுமொரு போர் விமானம்விபத்துக்குள்ளானது, ஆனால் அந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார்.
இந்திய நாட்டின் பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.
இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாக பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்துடன் ஆர்சிபியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கவில்லை.
எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே, அவசர அவசரமாக வெற்றி நிகழ்வை நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் நிர்வாகத்துக்கு, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல்.,கிண்ணத்தை ரோய்ல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில், 2025 ஜூன் 4ம் திகதியன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்தப்பட்டபோதே நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இனந்தெரியாத விசமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு மேற்படி சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பாடசாலை சமூகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதே சிலை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் இன்று மை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த வியடம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் வீடு மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளதுடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 6ஆம் திகதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.
இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு கண் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அக்கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார்.
இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.
நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம் (09.07.2025) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 995,559 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,120 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 280,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 257,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,730 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 245,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்ட மட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுள் நான்கு இடங்களை வவுனியா பிரதேச செயலகத்தினை சேர்ந்த கிராம அலுவலர்கள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தின் கீழுள்ள வெளிக்குளம் கிராம அலுவலர் முதலாவது இடத்தினையும், நொச்சிமோட்டை கிராம அலுவலகர் இரண்டாவது இடத்தினையும், வைரவப்புளியங்களும் கிராம அலுவலகர் மூன்றாவது இடத்தினையும் , ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம அலுவலகர் ஜந்தாவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேற்குறித்த நிலைகளை பெற்றுக்கொண்ட கிராம அலுவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டமையுடன் இப்போட்டியில் தம்மை அர்ப்பணிப்புடன் தயார்ப்படுத்தி பொது மக்களுக்கான சேவையினை சிறப்பாக ஆற்றிவரும் அனைத்து கிராம அலுவலர்களுக்கும் வவுனியா பிரதேச செயலகத்தினரும் தமது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
வவுனியா – ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத் தீர்மானத்தையும் மீறி பொலிஸார் மீண்டும் காணியினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிசார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடருந்து கடவையை கடக்க முயன்ற பாடசாலை பேருந்து மீது தொடருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து கடவையை கடக்க முயன்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான பாடசாலை பேருந்தின் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடருந்து கடவையை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் பேருந்து தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து மோதியதில் பாடசாலை பேருந்து 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டல்லஸ் நகரத்தில், இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார் மீது ஒரு லொரி மோதியதில் ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பெற்றோர்கள் மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில தெரியவருகையில்,
ஐதராபாத் பகுதியில் வசித்து வந்த தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் ஆகியோர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் விடுமுறை செலவிடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தனர்.
அவர்கள் அட்லாண்டாவுக்கு சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் டல்லஸுக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், இந்த பயங்கர விபத்து கிரீன் கவுண்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஒரு மினி-ட்ரக் எதிரே வந்த அவர்களது காரில் , நேரடியாக மோதியுள்ளது. கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் உள்ளே இருந்த நால்வரும் வெளியே வர முடியாமல், காருக்குள் கருகி உயிரிழந்துள்ளனர்.
கார் முழுவதுமாக சாம்பலாகி விட்ட நிலையில், பொலிஸார் எஞ்சியுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் உடலின் பாகங்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
DNA மாதிரிகள் மூலம் மரணமடைந்தவர்களை உறுதி செய்த பிறகு, உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இதுபோன்ற மேலும் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2024 செப்டம்பர் மாதம், டல்லஸுக்கு அருகே உள்ள அன்னா, டெக்சாஸ் பகுதியில், வேகமாக வந்த லொரி ஒன்று காரை மோதியது.
அந்த காரில் பயணித்த இந்தியர்களான ஆர்யன் ரகுநாத் ஓரம்பட்டி, பாரூக் ஷெய்க், லோகேஷ் பாலசர்லா மற்றும் தர்ஷினி வசுதேவன் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
2024 ஒகஸ்ட் மாதத்தில், மற்றொரு சம்பவத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள், டெக்சாஸில் விபத்தில் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில், அவர்களின் தீனேஜ் மகன் மட்டுமே உயிர்வாசித்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, டிப்பருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த டிப்பர் சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மித்தெனிய பகுதியில், ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07.07.2025) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மித்தெனிய – பல்லே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டிருந்த ரம்புட்டானை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, ரம்புட்டான் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இழப்பையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனின் தாயார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08.07.2025) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
புகையிரத கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சடலத்தினை மோதிய புகையிரதத்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.