என் மாமா இல்லைன்னா.. நடிகை பிரியங்காவின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்!!

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தாய்மை அடையாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக சில நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவார்கள்.

எனவே தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல என அவருடன் இணைந்து நடித்த நடிகை நீலிமா ராணி கூறியுள்ளார்.

மிகவும் தைரியமான பெண்ணான பிரியங்கா, தனது கணவரின் மீது மிக அன்பு வைத்திருந்தார்.எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்னைதான் இவர் வீட்டிலும் இருந்திக்கிறது. அப்படியிருக்கையில் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்.

மதுரையை சேர்ந்த இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். அருண் என்பவரை தனது ஆசைப்படியே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா தன்னுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா. அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கூறியுள்ளார்.

மாமான்னு அவ கணவர் பற்றி சொல்லிட்டே இருப்பா. ரெண்டு பேரும் க்யூட் ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில் அவளது முகத்தை பார்க்க காத்திருக்கிறோம் என நடிகை சந்தியா கூறியுள்ளார்.

ஆனால், இவர்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து தெரியவரவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அழகு நிலையம் ஆரம்பிச்சு, தனது நண்பர்களை எல்லாம் அழைத்திருந்தார். இப்படி தன்னம்பிக்கையோடு இருந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என கேள்வி எழும்பியுள்ளது.

இவரது இறப்பிற்காக காரணம் தெரியாமல் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. இதுகுறித்து பொலிசார் இவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இறுதியில் இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன் : முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.

இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.

அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கை தமிழர்கள் செய்யும் மோசடி செயல் : அதிர்ச்சித் தகவல்!!

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குறிப்பாக இலங்கை தமிழர்கள் பலர் இந்திய குடிமகன் என பொய்யாக கூறும் போலி பாஸ்போர்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் இந்த கும்பலில் டிராவல் ஏஜெண்டுகள், உளவுத்துறை மற்றும் தபால் கணக்கு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய குற்றவியல் பிரிவு மூலம் தற்போது இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக பத்து பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலுக்கு ரூ.3 லிருந்து 5 லட்சம் வரை பணம் கொடுத்தால் வெளிநாட்டு குடிமகன்களுக்கு, இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும்.

முருகன் மற்றும் தபால் ஊழியரான தனசேகரன் ஆகிய இருவர் கைதுக்கு பின்னரே இது தெரியவந்துள்ளது.

அதே போல போலியான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மூலம் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்குகளை திறந்துள்ளனர்.

இந்த ஆவணங்கள் எல்லாம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் போலி முகவரியை சரிபார்க்க வரும் பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும், பாஸ்போர்ட்டை விநியோகிக்க தபால்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் விடயம் நடந்துள்ளது.

நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை கஸ்தூரி!!

சென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை மிரட்டி, 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறுகையில், ‘வரிசையாக இதே மாதிரி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹாசினி விடத்துக்குப் பிறகு சென்னையில் இதுமாதிரி சம்பவங்கள் நடக்காது என நினைத்தால், அதையெல்லாம் செய்தியாகப் படித்துக்கொண்டே இன்னொரு பெண்ணை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே.

11 வயதுப்பெண் 7ஆம் வகுப்பு படிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, என் பெண்ணைப் போலவே இருக்கிறது. புரசைவாக்கத்தில் நடப்பது போயஸ் கார்டனில் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாருமே இங்கு பாதுகாப்பாக இல்லை.

இந்த மாதிரி இருந்தால், தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ எப்படி வாழ முடியும்? தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஆண்களும் இப்படித்தான் மோசமானவர்களா என்றே எனக்கே தோன்றுகிறதே..

‘பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே இந்தியா தான் மோசமான நாடு’ என சமீபத்தில் ஒரு Survey வெளியானது. ஆப்கானிஸ்தானை விட, சிரியாவை விட வெட்கக்கேடான ஒரு நிலையில் தானே நாம் இருக்கிறோம்.

அங்கு பெண்களை மோசமாக நடத்துகிறார்கள். இங்கு பெண்களை மோசமாக நடத்துபவர்கள் யாரும் மனிதர்களே அல்ல, எல்லோரும் விலங்குகள். இது சென்னை நகரமா இல்லை மொத்தமாகவே வண்டலூர் உயிரியல் பூங்காவா என்று தெரியவில்லை.

’தண்டனை வேண்டும்’ என நாமும் ஒவ்வொரு முறையும் கூவிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரில், 18 பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய முகத்தை மறைத்துத் தானே புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது நிரபராதியாக இருந்துவிட்டால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றுதானே..

அந்த 22 பேரின் குடும்பத்திலும் 11 வயது குழந்தை மகளாகவோ, பேத்தியாகவோ இருப்பார்கள்தானே.. ஒரு குழந்தையைப் பார்த்து இந்த மாதிரி எண்ணம் எப்படி வரும்? என்ன தமிழ் கலாச்சாரம்.. இந்த மாதிரி குற்றத்தில் மாட்டியவர்கள் வீட்டின் முன்னால், அவர்கள் முகத்தை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.

நம்மூரில் எதற்கும் பயப்படுவதாக தெரியவில்லை. ஒருவேளை பொதுவெளியில் அவமானப்பட்டால், அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அவமானப்பட்டால்.. ஒருவேளை அதனால் முன்னேற்றம் எதுவும் இருக்குமா என நப்பாசை, நம்பிக்கை என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்த சம்பவத்திற்கு ஆடையோ, வயதோ அந்தப் பெண்ணின் நடத்தையோ காரணமில்லை. அந்தப் பெண்ணுக்கு இருக்கும் குறையைக் கூடப் பொருட்படுத்தாமல், அதையே advantage ஆக எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களாக இப்படி சீரழித்திருக்கிறார்கள்.

குழந்தைகளையும், சிறுமிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற கேடுகெட்ட கலாச்சாரம் தான் நம்முடைய தமிழ் கலாச்சாரம் என்று சொன்னால், நான் தமிழச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்.

சென்னை காவல்துறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். யார் யாரையோ சமூக விரோதிகள் என்று சொல்லி சுடுகிறார்களே.. இங்கு கண்ணெதிரே தெளிவாக தெரிகிற சமூக விரோதிகளுக்கு சட்டப்படி நிறைய தவணை கொடுக்காமல் வேகமாக வழக்கை முடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

உயிர் பிரியும் கடைசி நேரத்தில் உயிர் கொடுத்த ஆசிரியரின் பேச்சு : நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!!

புதுக்கோட்டையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு பேச்சு கொடுத்தே ஆசிரியர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் அருண்பாண்டியன்.

கூலித்தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுது, கடை ஒன்றில் நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்பொழுது திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் மயங்கி தரையில் சரிந்தான்.

இதனையடுத்து உடனடியாக சக மாணவர்கள் அவனை மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். ஆனால் நிலைமை மோசமானதாக இருந்ததால், பிராணவாயுவின் உதவியுடன் மாணவனை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் திறமையால் வெறும் 15 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் சென்ற செவிலியர் வேகமாக மாணவனை வாகனத்திலிருந்து இறக்கி, மருத்துவமே பிரிவுக்கு அளித்து சென்றனர்.

மாணவன் ஒரு புறம் உயிருக்கு போராடி கொண்டிருக்க, தகவலறிந்து அருண்பாண்டியனின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பிராணவாயுவை எடுத்தால் சிறுவன் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்கிருந்த ஒரு சிலர், விருப்பப்பட்டால் சிறுவனை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூற, அருண்பாண்டியனின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

அதேசமயம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு நடந்தவை பற்றி செவிலியர் ஒருவர் ஆசிரியரிடம் தெரிவிக்க, பதறிப்போன ஆசிரியர்கள் கையில் காயத்திற்கு மருந்து கூட போடாமல் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவன் விழி பிதுங்கி உயிருக்கு போராடுவதை பார்த்து, அவனுடைய காதருகே சென்று மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்ற அடுத்தடுத்து பேச சிறிது நேரத்திலேயே மாணவன் உடலில் அசைவு தெரிய ஆரம்பித்தது. அடுத்த 7 நிமிடங்களில் மாணவன் எழுந்து அமர்ந்து ஆசிரியர்களின் பேச ஆரம்பித்தான்.

அனைவருக்கு இந்த சம்பவம் ஆச்சர்யம் அளித்த வேளையில், மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி கூறியதோடு, அருண்பாண்டியனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தனர்.

இதனையடுத்து இரவு 10.30 மணிக்கு மாணவனுக்கு பொருத்தப்பட்டிருந்த பிராண வாயுவினை நீக்கி அவனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவனை விட்டு விடாதீர்கள் : இறப்பதற்கு முன்னர் இளம்பெண்ணின் கடைசி வார்த்தை!!

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்த நிலையில், கணவரே அவரை கீழே தள்ளியிருக்கலாம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் மாயங்க் சிங்வி. இவர் மனைவி அனிஷியா பத்ரா (32). அனிஷா இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இதை தற்கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்த நிலையில், அனிஷியாவின் கணவர் மாயங்க் வரதட்சணை கொடுமையால் அவரை கொன்றிருக்கலாம் என அனிஷியா குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதையடுத்து இரண்டாம் முறையாக அனிஷியாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. இது குறித்து பேசிய அனிஷியாவின் சகோதரர் கரண், இறப்பதற்கு முன்னர் அவர் எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பினார்.

அதில் மாயங்க் என்னை அறையில் வைத்து பூட்டியுள்ளார், அவரால் என் வாழ்க்கை பறிபோக போகிறது. அவரை விட்டு விடாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே என் சகோதரியை கீழே தள்ளிவிட்டு கூட கொலை செய்திருக்கலாம்.

இது குறித்து விசரிக்க மாயங்கை கைது செய்ய கோரியும் பொலிசார் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார்.

அனிஷியாவுக்கும், மாயங்க்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் மாயங்க் அப்போதேலிருந்தே குடித்துவிட்டு அனிஷியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குடும்பத்தார் கடந்த மாதமே புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டை பொலிசார் சீல் வைத்த பின்னரும், ஆதாரங்களை அழிக்க மாயங்க் அங்கு சென்றார் என அனிஷியாவின் சகோதரர் கரண் கூறியுள்ளார்.

தந்தை இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது படுத்திருந்த குழந்தை : கண்ணீர் வரவழைக்கும் காட்சி!!

தனது தந்தை இறந்துபோனது கூட தெரியாமல் சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை படுத்திருந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்பவர் பலியாகினார்.

முகத்துக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ளது. முகுத்தின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

இறுதிசடங்கின்போது, தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது குழந்தை சவப்பெட்டியின் மீது படுத்திருந்தது. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தது.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைலாகி வருகிறது. இந்நிலையில், ஜாலாவர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்தர் அக்குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”உன்னை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. நீ அந்த சவப்பெட்டியில் இந்திய கொடியின் மீது அமர்வதற்கு முன்புதான் உன் தந்தையின் முகத்தை பார்த்தாய்.

நீ பெரிய பெண்ணாக வளர வேண்டும். உன்னுடைய அப்பா பெருமையடையும் வகையில் நீ வாழ வேண்டும் என்று எழுதியுள்ளார்.

இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர் காந்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டித்தின் மீது கடந்த ஞாயிற்று கிழமை தாய் குரங்கு ஒன்று இறந்த குட்டியுடன் அமர்ந்திருந்தது.

அதன் அருகில் இன்னும் பல குரங்குகள் அமர்ந்திருந்தன. அப்போது அந்த தாய் குரங்கு குட்டி குரங்கை பார்த்து வேதனையோடு கண்ணீர் வடித்ததுடன், இறந்த குட்டியுடன் அந்த குரங்கு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகின்றது.

ஒரு நொடிகூட தனது இறந்த குட்டியின் சடலத்தை விட்டு பிரியாமல் இருக்கும் தாய் குரங்கின் செயல் அப்பகுதியில் இருக்கும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண் : வழக்கில் திடீர் திருப்பம்!!

டெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர் இன்ஜினியரான மயாங்க் சிங்வியை 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனதிலிருந்தே வரதட்சணை கேட்டு அனிசியாவை, மயாங்க் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் தொடர் பிரச்சனை இருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அனிசியா தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பாக மயாங்குக்கு, எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்ய போகிறேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அனிசியாவின் பெற்றோர்கள் மயாங்க் தன் மகளை கொன்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் மயாங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பா.. அம்மாவுக்கு நீ மட்டும் தான் இருக்க : தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உருக்கமான கடிதம்!!

இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, அப்பா மற்றும் அம்மாவுக்கு நீ மட்டும் தான் அண்ணா இருக்கிறாய் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சஞ்சய் பிரசாந்த் (18). இவர் கோயமுத்தூர் பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாலிடெக்னிக் வந்த மாணவர் சஞ்சய் பிரசாந்த் சக மாணவர்களுடன் வகுப்பறையில் பேசி கொண்டு இருந்த போது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் முருகன் மாணவர்கள் தன்னைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்து மாணவர் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் ஆகியோரது ஐடி கார்டை பிடிங்கிக் கொண்டு வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது அவர் பெற்றோர் அழைத்து வந்தால் மட்டும் தான் வகுப்பில் சேர்த்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் பிரசாந்த் தனது பெற்றோரை அழைத்து வரவில்லை.

ஆனால் அதே வேளை மற்ற சக நண்பர்கள் பெற்றோரை அழைத்து வந்ததால் அவரை வகுப்பில் அனுமதித்து உள்ளனர். ஆனாலும் சஞ்சய் பிரசாந்த் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாலிடெக்னிக் வந்து உள்ளார். தன்னை எப்படியும் ஆசிரியர் உள்ளே அழைப்பார். வகுப்பறை சென்றால் திட்டுவார் என கருதி வெளியில் காத்திருந்து உள்ளார். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சஞ்சாய் திருப்பூரில் உள்ள தனது வீட்டின் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த மாணவன் சஞ்சய் எழுதியிருந்த சுமார் ஒன்றரை பக்க கடிதம் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில், அம்மா, அப்பா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் உங்களை விட்டு செல்கிறேன்.

நான் எப்போதுமே தனியாக இருப்பதாக உணருகிறேன். திடீர் திடீரென்று எனது கழுத்தை யாரோ நெரிப்பது போன்று இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உங்களிடமும் சரியாக பேச முடியவில்லை இதனால் நான் பிரிந்து செல்கிறேன்.

அன்புள்ள அண்ணா, நான் இல்லை என்று நீ கவலைப்படாதே, நான் சென்ற பின்னர் அம்மா, அப்பாவுக்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். என்னை பற்றி நினைத்துக்கொண்டே இருக்காதே. நன்றாக வேலை செய், அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக்கொள். நான் இல்லை என்ற குறையை அவர்களுக்கு வைக்காதே.

அம்மா, அப்பா, அண்ணா மற்றும் எனது நண்பர்களை விட்டு செல்ல வருத்தமாகதான் இருக்கிறது. ஆனாலும் எனக்கு இந்த உலகத்தில் வசிக்க பிடிக்கவில்லை.

எனவே நான் செல்கிறேன். அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், அண்ணனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்ததாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியர் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையி, சஞ்சய் தன்னுடைய கடிதத்தில் கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து எதுவும் எழுதவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பனை உயிரோடு எரித்து கொலை செய்தது ஏன்? இளைஞன் திடுக்கிடும் வாக்குமூலம்!!

தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார்.

தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகை தற்கொலை செய்தது ஏன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், நேற்று காலை பிரியங்காவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது, படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், திருமணம் முடிந்து இதுநாள் வரை பிரியங்காவுக்கு குழந்தை இல்லை. இதுவும் அவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். இருப்பினும், பிரியங்காவின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமனாரை அடித்து கொன்ற மருமகள் : திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவில் கணவரை கத்தியால் குத்திய மனைவி இரண்டு நாட்கள் கழித்து மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் மனைவி ரோஜாலின். மூன்று நாட்களுக்கு முன்னர் சந்தீப்புக்கும், ரோஜாலினுக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் கத்தியால் கணவரை ரோஜாலின் குத்தியுள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரோஜாலின் தனது மாமனார் சரத்துடன் வீட்டில் இருந்த நிலையில் அவருடன் வாய்தகறாறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ரோஜாலின் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரோஜாலினை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் : நடிகர் பார்த்திபன் ஆவேசம்!!

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகள், சிறுமிகள் முதல் பாட்டி வரை பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன, திரையுலகினரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என்று பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகை கஸ்தூரி, அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்கிறார். இந்த அவமானத்திலாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

சிறுமியை சீரழித்த 17 பேரை தாக்கியது தவறு தான் என்றாலும் மக்களின் உணர்வு நியாயம் தான் என்கிறார் நடிகை குஷ்பு.

நடிகர் விஷால் செய்துள்ள டுவிட்டில், பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். சென்னை சிறுமி சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது!!

வவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது தமது உடமையில் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கடைத்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது வவுனியா சுற்றுவட்ட வீதியில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 40 மில்லி கிராம் ஹெரோயின்போதைப் பொருளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது உடமையில் 70 மில்லிக் கிராம் போதைப் பொருளினை வைத்திருந்ததாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பற்றைக்காடுகளாக : கையகப்படுத்துமா அரசாங்கம்?

அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப் பகுதியிலும் கடமையாற்றக்கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர்.

வாடகை வீடுகளிலும், அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் 2011ம் ஆண்டளவில் ஓமந்தை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்புக் காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வீடமைப்பதற்காக அரச மானியமாக 5 லட்சம் ரூபா சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும், 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கின்றது.

600 அரச ஊழியர்களுக்கு ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும் 65 காணிகளில் மாத்திரம் அரச ஊழியர்கள் வீடுகளை அமைத்து குடியமர்ந்துள்ளனர்.

மிகுதி 155 காணிகளில் முழுமையாக காடுகளாக காணப்படுவதுடன் , 200 காணிகளில் கிணறு மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும், 130 காணிகள் வீடு மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் மொத்தமாக 485 காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.

இவ் விடயம் தொடர்பாக ஓமந்தை அரச விட்டுத்திட்டத்தில் வசிக்கும் அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இவ் அரச வீட்டுத்திட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் வேறு இடங்களில் காணிகள் இருப்பதினால் இங்கு அவர்கள் வருவதில்லை

600 அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தற்போது 65 அரச ஊழியர்களே வசித்து வருகின்றோம். மிகுதி காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதினால் நாங்கள் அச்சத்தில் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.

பாம்புகள், காட்டு உயிரினங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மற்றும் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதினால் நாங்கள் வேலைக்கு சமூகமளிக்கும் சமயத்தில் திருடர்களில் தொல்லைகள் காணப்படுகின்றது.

எனவே காடுகளாக காணப்படும் காணிகளை அரசாங்கள் மீள அவர்களிடமிருந்து கையகப்படுத்தி காணிகள், வீடுகள் அற்று வவுனியாவில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமென விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் சொந்த நிலம், சொந்த வீடுகள் அற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் இந் நிலையில் காணப்படுவது மனதிற்கு வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.