இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலம் டைம்னர் கிராமம் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சார வசதியினை பெற்றுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் கிராமம், நீண்டகாலம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
இந்நிலையில் அங்கு தற்போது 53 வீடுகளே உள்ளன. இந்த கிராமத்தில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மின்சாரம் கிடையாது. மின்சாரம் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு நக்சலைட்டுகள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.
தற்போது நக்சலைட் ஒழிப்பு வேட்டை வேகப்படுத்தப்பட்டு உள்ளதுடன் அவர்களுக்கான மறுவாழ்வு திட்டமும் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், வீதி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ”மஞ்ச்ரா-டோலா” என்ற திட்டம் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தீஷ்கார் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், டைம்னர் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி வைத்து உள்ளார்.
பதுளை – பண்டாரவளை வீதியில் தோவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்கரமொன்றிலிருந்து காற்று வெளியேறியதால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாத்தாண்டி – தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23.03) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முனுகம காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு (23) சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பார்ட்டி நடப்பதாக பமுனுகம காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறித்த இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனைநடத்தியபோது பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்ததாகவும், அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா ஆகியவற்றுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்த பெண் சந்தேக நபர்கள் மற்றும் 34 ஆண் சந்தேக நபர்கள் என மொத்தம் 57 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பார்ட்டி நடந்த ஹோட்டல் உரிமையாளர் 3 கிராமும், 200 மில்லிகிராமும் கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சந்தேக நபர்களின் வயது 18 முதல் 35 வயது வரை உள்ள கொழும்பு புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் எனதெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் நேற்று (23.03) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து பண்டாரவளையில் உள்ள பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவதாகவும், அவர்களில் தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
காயமடைந்த நான்கு பெண்களும் மற்ற ஆணும் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காச நோயினால் வவுனியாவில் கடந்த வருடம் 9 பேர் இறந்துள்ளதுடன், 56 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (24.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை ‘ஆம் எங்களால் காச நோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது.
இலங்கையை பொறுத்த வரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காச நோயாளர்களாக இனம் காணப்பட வேண்டும். ஆனால் கடந்த வருடம் 8 ஆயிரம் பேரே நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். விகிதாசாரத்தின் படி அதன் எண்ணிக்கை 14 ஆயிரமாக இருக்க வேண்டும்.
கடந்த வருடம் வவுனியா மாவட்டத்தில் 56 நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நோய் வந்து உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வராமல் காலதாமதமாக வந்தமையால் அந்த மரணம் ஏற்ப்பட்டது.
குறிப்பாக தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலை நேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் இரத்தம் வெளியேறல் இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்து கொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம்.
எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்கக்கூடும். அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம்.
ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறு மாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அதற்கான மருந்து உள்ளது. அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று (24.03) இடம்பெற்றது. வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலமானது யாழ் வீதியை அடைந்து,
வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வைத்தியசாலையை சென்றடைந்தது.
இதன்போது காசநோயை கட்டுப்டுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்க வண்டிகளும் கலந்து கொண்டன.
வவுனியாவில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று மேற்கொள்வதற்கு காச நோய் கட்டுப்பாட்டு பிரிவால் ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டது.
இதன்போது அங்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வைத்தியர்களிடம் தெரிவித்தார்.
இதன்போது தாம் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். எனினும் போக்குவரத்து பொறுப்பதிகாரி அனுமதி வழங்க மறுத்தார்.
இச் சம்பவத்தை அங்கு கடமையில் நின்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒளிப்பதிவு செய்தனர். இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் அழைத்து அவர்களது ஊடக அடையாள அட்டையை பெற்று அதனை பதிவு செய்து அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தினார்.
அத்துடன், குறித்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முச்சக்கர வண்டிகளையும் அங்கு நின்ற போக்குவரத்து பொலிசாரிடம் கூறி, போக்குவரத்து பொறுப்பதிகாரி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
குறித்த ஊர்வலம் தொடர்பில் வைத்தியர்கள் பிரதி பொலிஸ் அதிபர், வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதன் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊர்வலத்திறகு அனுமதி வழங்கியிருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களும் பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கயந்த குணேந்திர திடீர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராசிரியரின் மனைவி தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் குறித்த வாகனத்தில் பயணித்த அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் கயந்த குணேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற திருப்பிய நிலையில் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வேன் லொறியின் பின்புறத்தில் மோதிய விபத்தில் 46 வயதான விரிவுரையாளர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மனைவியின் தாயும் மூன்று பிள்ளைகளும் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும் நேற்று இரவு மனைவியின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் (Pavel Stepchenko) தனது 23 வயதில் ஓய்வு பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்ததன் மூலம் சர்வதேச சாதனை பதிவு நிறுவனத்தில் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கிறது. இதற்கு முன்பு யாரும் இவ்வளவு இளம் வயதில் ஓய்வு பெறவில்லை என்பதால், அவரது பெயர் ரஷ்யாவின் தேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
2 வருட வேலைக்குப் பிறகு 23 வயதில் ஓய்வு
ஆடிட் சென்ட்ரலின் அறிக்கைப் படி, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்த பாவெல் ஸ்டெப்செங்கோ (Pavel Stepchenko) 2 வருட வேலைக்குப் பிறகு தனது 23 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
பாவெல் (Pavel Stepchenko) தனது 16 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு, 21 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது.
இதையடுத்து, 2 வருட வேலைக்குப் பிறகு தற்போது தனது ஓய்வையும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு பாவெல் (Pavel Stepchenko) இரண்டு ஆண்டுகள் ரஷ்ய வெளியுறவுத் துறைக்காக கடுமையாக பணியாற்றி இருக்கிறார்.
இப்போது, ஓய்வூதியம் மற்றும் தொடர்புடைய அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கின்றன.
நவம்பர் 2023இல் ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த பாவெலின் கோரிக்கை சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் (Pavel Stepchenko) சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில் நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளதாகவும், விபத்தின்போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட நபரே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி (Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி பயின்று வருகிறார்.
திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாடு ஒன்றிற்கு தீர்வு வழங்கியுள்ளார். 1928 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காற்றியக்கவியலாளர் ஹெர்மன் கிளாவர்ட்(Hermann Glauert), உருவாக்கிய சிக்கலான கணித பிரச்சனைக்கு திவ்யா தற்போது தீர்வு கண்டுள்ளார்.
கிளாவர்ட்டின் மாதிரி செயல்திறனை அதிகப்படுத்தியிருந்தாலும், டர்பைன் ரோட்டரில் செயல்படும் விசைகள் அல்லது காற்றழுத்தத்தின் கீழ் கத்திகள் எவ்வாறு வளைகின்றன போன்ற முக்கியமான காரணிகளில் அது கவனம் செலுத்தவில்லை.
திவ்யாவின் கண்டுபிடிப்பு, பொறியாளர்கள் ரோட்டார் பிளேடு வடிவம், திருப்பம் மற்றும் கோணத்தை மேம்படுத்த உதவுவதோடு, இறுதியில் விசையாழிகளின் ஆற்றல் வெளியீட்டை மேம்படுத்துகிறது.
மேலும், விசையாழிகள் காற்றோடு எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது.
இந்த தீர்வு மூலம், காற்றாலை ஆற்றல் உற்பத்தியில், செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க சிறந்த ஓட்ட நிலைமைகளை தீர்மானிப்பதன் மூலம், திவ்யாவின் பணி காற்றாலை ஆற்றல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் திவ்யாவிற்கு வழிகாட்டிய அவரது பேராசிரியர் ஸ்வென் ஷ்மிட்ஸ்( Sven Schmitz), “திவ்யாவின் பணி உலகளவில் அடுத்த தலைமுறை காற்றாலை விசையாழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என பாராட்டியுள்ளார்.
இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, தியாகி சிறந்த விண்வெளி பொறியியல் ஆய்வறிக்கைக்கான அந்தோணி இ. வோல்க் விருது (Anthony E. Wolk Award) வழங்கப்பட்டுள்ளது.
திவ்யா தியாகி, தற்போது கணக்கீட்டு திரவ இயக்கவியலில் (CFD) அதிநவீன ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், அமெரிக்க கடற்படையிடமிருந்து முக்கிய ஆதரவைப் பெற்ற, ஹெலிகாப்டர் விமான உருவகப்படுத்துதல்களை மேம்படுத்துவதிலும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கடந்த மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்தை, அவரது மனைவியான முஸ்கனும் (Muskan, 27) ராஜ்புத்தின் நண்பரான சாஹிலும் (Sahil, 25) சேர்ந்து கொன்றுவிட்டார்கள்.
இந்நிலையில், முஸ்கனையும், சாஹிலையும் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் தவறான உறவு ஏற்பட, தங்கள் உறவுக்குத் தடையாக ராஜ்புத்தைக் கொன்றுவிட இருவரும் முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி, உணவில் மயக்கமருந்துகளைக் கலந்துகொடுத்து, ராஜ்புத் மயங்கியதும், சாஹிலை வரவழைத்துள்ளார் முஸ்கன்.
ராஜ்புத்தை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு எங்காவது கொண்டு வீசிவிட இருவரும் திட்டமிட்டுள்ளார்கள்.
ராஜ்புத்தின் தலையையும் கைகளையும் தன்னுடன் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார் சாஹில். மீதமுள்ள உடல் பாகங்களை தன் கட்டிலுக்குக் கீழே உள்ள ட்ராவில் போட்டு மூடிவைத்து, அந்த கட்டிலில்தான் படுத்துத் தூங்கியுள்ளார் முஸ்கன். மறுநாள், திட்டம் மாறியுள்ளது.
அதன்படி ஒரு பெரிய ட்ரம் வாங்கி அதற்குள் ராஜ்புத்தின் உடல் பாகங்களைப் போட்டு, சிமெண்ட் கலவையால் மூடியுள்ளார்கள் இருவரும்.
ராஜ்புத்தைக் கொன்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட முஸ்கனும் சாஹிலும், முதன்முறையாக சிறையில் கடும் அச்சம், பதற்றத்துடன் நாட்களை செலவிட்டுவருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை அடையாளம் தெரியாத தம்பதியிடம் ரூ.200 க்கு விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தம்பதியினர் மூதாட்டியிடம், பேரனுக்கு உணவு, தங்குமிடம், படிப்பு ஆகியவை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி அந்த மூதாட்டி சிறுவனை விற்றது தெரியவந்துள்ளது.
தற்போது, இந்த சிறுவன் காவல்துறையினரால் மீட்கப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “65 வயதான மூதாட்டிக்கு வீடு இல்லை. மகன் காணாமல் போய்விட்டார். மருமகள் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார்.
இதனால், தனது பேரனை அழைத்துக் கொண்டு ராய்பால் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், அவரது சகோதரியின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால் பேரனுடன் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அந்த நேரத்தில் தான் அடையாளம் தெரியாத தம்பதியிடம் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த விடயம் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினருக்கு தெரியவரவே காவல்துறையினரால் சிறுவன் மீட்கப்பட்டார்” என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போயுள்ளார்.
அந்த நேரத்தில் லொறி விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த வீடியோ வெளியானது. அப்போது, உயிரிழந்த பெண்ணின் டாட்டூவை பார்த்த அவரது குடும்பத்தினர் இது லலிதா பாய் என்று கூறினர்.
பின்னர், கொலை செய்யப்பட்டதாக கூறி அந்த பெண்ணை லலிதா பாய் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் லலிதா பாய் மீண்டும் உயிரோடு திரும்பி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து லலிதா பாயிடம் விசாரிக்கும் போது, “ஷாருக் என்ற நபர் தன்னை ரூ.5 லட்சத்திற்கு ஒருவரிடம் விற்பனை செய்தார். பின்னர், என்னை ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவிற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், என்னிடம் செல்போன் இல்லாததால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது, நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்” என்றார்.