பாடசாலையில் உடன் படித்த மாணவனை கொன்று புதைத்த நண்பர்கள்!!

பணத்துக்காக பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்த மாணவனை இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு பல நாட்களாக அவர்கள் திட்டம் போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் நபா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அரோரா. இவர் மகன் ராஜட் (17). இவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அங்குள்ள காட்டு பகுதியில் சடலமாக புதைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இது சம்மந்தமாக ராஜட்டின் முன்னாள் பள்ளி வகுப்பு தோழனான இந்திரஜித்தை பொலிசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திரஜித்தும், சுக்பிர் என்பவனும் நண்பர்களாவார்கள். இருவருமே ராஜட்டுடன் ஒரே பள்ளிக்கூடத்தின் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ராஜட்டின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க இருவரும் முடிவு செய்து ராஜட்டை கடத்தியுள்ளனர். பின்னர், பெற்றோரிடம் போனில் பேசி பணம் கேட்க கூறியுள்ளனர். ஆனால் இதற்கு ராஜட் மறுக்கவே அவனை இருவரும் கொலை செய்து காட்டு பகுதியில் புதைத்துள்ளனர்.

இந்த திட்டத்தை பல நாட்களாக இருவரும் போட்ட நிலையில் ராஜட்டை கொல்வதற்கு முன்னரே தயாராக காட்டில் குழி தோண்டி வைத்துள்ளனர்.

தற்போது இந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சுக்பிரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். ராஜட் வெகுளியாக யார் சொல்வதையும் நம்பக் கூடியவனாகவும், வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் குழந்தைதனமாக இருந்துள்ளான் எனவும் அவன் தந்தை சுரேஷ் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் ராஜட்டுக்கு அதில் 4000 நண்பர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

37 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!!

 
மன்னார் – ஆண்டாங்குளம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் குடும்பஸ்தரொருவர் சுமார் 37 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் நேற்றைய தினம் மாலை மடு காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகம் (சலூன்) நடத்தி வரும் குறித்த குடும்பஸ்தரை கடந்த 25.10.2017 அன்று மாலை 4 மணி முதல் காணவில்லை என அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் காணாமல் போனவரின் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, மடு பூ மலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட மடு 3ஆம் கட்டை காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மடு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த தகவல் கிடைத்த நிலையில் பொலிஸார் தலத்திற்கு விரைந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து சடலத்தை பார்வையிட்ட காணாமல் போன குடும்பஸ்தரின் உறவினர்கள், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் கிராம அலுவலகர் மற்றும் விசேட தடவியில் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டுபாயிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களுக்கு இந்தியாவில் நேர்ந்த கதி!!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக டுபாய் சென்று, அங்குள்ள குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை – குப்பம் சீனிவாச நகரில் வசித்து வந்த 31 வதுடைய பகீரதன் மற்றும் திருச்சி – சுந்தர் நகர் 6ஆவது வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய சசிதரன் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து உரிய அனுமதியில்லாமல் தமிழகம் வந்து, வெளியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலமாக போலி கடவுச்சீட்டு மூலமாக டுபாய் சென்றுள்ளனர்.

டுபாயில் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருவரது கடவுச்சீட்டிலும் இலங்கை முகவரி இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கை விமான நிலையத்தில் பகீதரன், சசிதரனிடம் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருவரும் தமிழகத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரையும் இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.

அது குறித்து, கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்த பகீரதன், சசிதரன் ஆகியோரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து பீளமேடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இருவர் மீதும் கடவுச்சீட்டு மோசடிப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருப்பினும், இருவரும் இலங்கை அகதிகள் என்பதால் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் சென்னை, புழல் சிறையில் அடைக்கவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வலுவடைந்த புதிய தாழமுக்கம் தொடர்பில் புதிய தகவல்!!

எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட புதிய தாழமுக்கம் வலுவிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு 1500 கிலோமீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருக்கும் குறித்த தாழமுக்கமே வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இந்த தாழமுக்க நிலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு நகரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இந்த தாழமுக்கமானது இந்தியாவை நோக்கி நகரும். எனினும் இதனால் இலங்கைக்கு பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் இது குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு உட்­பட இலங்­கை­யின் பெரும்­ப­கு­தி­யைத் தாக்­கக் கூடிய புயல் வங்­கக் கட­லில் வலுவடைந்ததாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள் : காரணம் என்ன?

 
இந்தியத் தலைநகர் டெல்லியில், கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதால், அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள், மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்து விளையாடி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது. வாகனம் மற்றும் தொழி்ற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்துள்ளது.

இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பீல்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சற்று முன்னர், ஏழு விக்கெட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களைக் குவித்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி எடுபடவில்லை. ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.

238 பந்துகள் மட்டுமே சந்தித்து அவர் இரட்டை சதம் விளாசியது மிகவும் சிறப்புக்குறியதாகும். இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும்.

இதனையடுத்து, இந்த ஜோடி நிலைத்து நின்று ரன்களை குவித்தது. ரோகித் சர்மா 65 ரன்களில் சந்தாகன் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதனையடுத்து, களமிறங்கி அஷ்வின் 4 ரன்களில் வெளியேறினார். கோலி 287 பந்துகளில் 243 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

128 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கேப்டன் கோலி முடிவெடுத்தார்.

இதனையடுத்து, இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றது.

வடகொரிய ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி : ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை!!

வடகொரியா 6வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 3ம் திகதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. தொடர்ந்து அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘கவாசாங்-15’ ஏவுகணையை கடந்த 29ம் திகதி ஏவி சோதித்தது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.

ஹவாய் தீவில், மாதம் தோறும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியாவின் எச்சரிக்கையையொட்டி, இப்போது ஹவாயில் முதல்முறையாக அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

1980களில் பனிப்போரின்போதுதான் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அபாய சங்கு அங்கு ஒலித்துள்ளது.

இந்த அபாய சங்கின் ஒலி மாறுபட்டதாக அமைந்திருப்பதோடு, அடுத்த கட்ட அறிவிப்பு வருகிற வரையில் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு உணர்த்துகிறது.

இதுபற்றி ஹவாய் நெருக்கடி கால மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் வெர்ன் மியாகி கூறுகையில், “இந்த அபாய சங்கு ஒலியின் மாறுபாட்டை மக்கள் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

வடகொரியா ஏவுகணையை ஏவினால், அந்த ஏவுகணை 20 நிமிடங்களில் தாக்க முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

ஹவாய் தீவில்தான் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க ராணுவ தலைமையகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஏற்படவிருந்த பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது!!

 
வவுனியா குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் துரித செயற்பாட்டால் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்தில் துருசு அமைந்திருந்த பகுதியை சூழ மண் அரிப்பு ஏற்பட்டுகுளத்தின் உட்புறமாக பாரிய துவாரம் ஏற்பட்டு குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டிருந்தது.

காலை குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குளக்கட்டில் நீரின் போக்கு வழமைக்கு மாறாக காணப்பட்டதை அடுத்து நீர்ப்பாசன திணைக்களத்திற்குஅறிவித்துள்ளனர்.

இதனையடுத்து கமக்காரர் அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினர் விரைந்து செயற்பட்டு குளக்கட்டை புனரமைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக உடைப்பெடுக்கவிருந்த குளத்தில் பணிகளை விரைந்து புனரமைப்பு செய்தமையால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா பாடசாலைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உதவி!!

 
வவுனியா மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், வட மாகாண சபை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பாடசாலைக்கான பாண்ட் வாத்தியத்தையும், ம.தியாகராஜா மற்றும் செந்தில்நாதன் மயூரன் இணைந்து கதிரைகளும், ப.சத்தியலிங்கம் குடிநீர்தாங்கியும் வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர் சி.சிவராசா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் என பெரும்பாலானோர் கலந்துக் கொண்டனர்.

வவுனியா தோணிக்கல் சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆதிசிவன் பாதஅமுதம் கும்பாபிசேக மலர் வெளியீடு!

வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு விஷாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில் (ஆதி சிவன் ஆலயம்)     ஆதிசிவன் பாதஅமுதம்  கும்பாபிசேக  மலர்  வெளியீட்டு  நிகழ்வு  இன்று 03.12.2017 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்றது .

 

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம்!

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில்  நேற்று 02.12.2017  சனிக்கிழமை திருக்கார்த்திகை  வழகீடும் சொக்கபானை உற்சவமும்   மிக சிறப்பாக இடம்பெற்றது .

வவுனியா வேப்பங்குளம் தீவிபத்து சம்பவம் தொடர்பாக மக்கள் சிலரின் கருத்துக்களை நிராகரித்த நகரசபை செயலாளர்!

வவுனியா வேப்பம் குளத்தில் அமைந்துள்ள இரும்பகம் (Hardware ) இல் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தைக்கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொண்டுவந்திருந்த தண்ணீர் பவசரில் முழுமையாக தண்ணீர் இருக்கவில்லை அப்படி இருந்திருந்தால் தீ பரவுவதை வேகமாக தடுத்திருக்கலாம் என அப்பகுதியில் நின்ற சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் நகர சபை தலைவரிடம் கேட்டபோது.

தீ அணைப்பு பவுசரில் தண்ணீர் போதியளவு நிரப்பியே வைக்கப்பட்டுள்ளது. இதை எவர் வேண்டுமானாலும் வந்து பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அடிக்கடி தண்ணீர் மாற்றி வைக்கப்பட்டு வருகின்றது. எமது தீ அணைக்கும் பவுசரில் 4 ஆயிரம் லீற்றர் தண்ணீரையே சேகரிக்கமுடியும். ஒரு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றால் உடனடியாக அங்கு சென்று தண்ணீரைப் பீச்சி அடிக்கும் போது 10 நிமிடத்தில் 4 ஆயிரம் லீற்றர் தண்ணீரும் முடிந்துவிடும். திரும்பி மீண்டும் சென்று தண்ணீர் நிரப்பிக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும். எம்மிடம் ஒரே ஒரு தீ அணைக்கும் பவுசரே உள்ளது அதை வைத்துக்கொண்டே நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தை நான் நேரில் சென்று அவதானித்த போது எமது பணியாளர்கள் கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அங்கு ரின்னர் வர்ணப் பொருட்கள் என்பன காணப்பட்டது இதன் காரணமாக தீயைக் கட்டுப்படுத்தப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வியாபார நிலையத்துக்குள் எவரும் செல்ல முடியாத நிலையில் தீ அணைக்கும் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தீயைநோக்கித் தமது உயிரையும் துச்சமென மதித்துச் சேவை மேற்கொண்டுவருவதை நான் அவதானித்துள்ளேன். அவர்கள் அவ்வாறு செயற்படும் போது பொதுமக்களின் கருத்துக்கள் , குற்றச்சாட்டுக்கள் எமக்கு கவலையளிக்கின்றது என்றார்.

 

வவுனியாவில் தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம்!!

 
வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று (02.12.2017) காலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம், கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் உரையாற்றிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில அசம்பாவித சம்பவங்களை பற்றியும் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடைகள் தீப்பற்றி எரிந்தமை பற்றியும் கலந்துரையாடினார்.

இச்சம்பவங்களை வைத்து ஒரு சிலர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும், அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், நேற்றைய தினம் வேப்பங்குளம் பகுதியில் வியாபார நிலையம் தீப்பற்றியதையும் ஒருசாரார் வீண் வதந்திகளை பரப்பிவருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலங்களாக இருப்பதால் இளைஞர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துவதாலும், கூட்டமாக குழுக்களாக நின்று பொதுமக்களுக்கு இடையூறு செலுத்துபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உங்களின் பிள்ளைகளை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வைரவபுளியங்குளம், குருமன்காடு பகுதிகளில் இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்கள் என ஒருவர் தெரிவித்ததற்கு பதிலளித்த பொறுப்பதிகாரி, மாலை வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் தம்மை நேரடியாக தொடர்பு கொள்வதற்கு தொலைதொடர்பு இலக்கத்தையும் வழங்கியிருந்தார்.

சிறுமியின் மூக்கை கடித்த சாப்பிட்ட நாய் : இன்று அவரது நிலை!!

 
சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்ட இந்திய குழந்தைகள் தற்போது அங்கு நல் வாழ்க்கை வாழ்ந்து வருவதை அமெரிக்க பெண் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஓகியோ மாகாணத்தை சேர்ந்த Kristen Williams என்ற பெண்மணிக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாதிருந்தபோதிலும், தான் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது.

இதனால், இந்தியாவில் இருந்து குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், பல்வேறு குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்துள்ளார். அதில், ரூபா என்ற சிறுமியின் மூக்கை நாய் கடித்து சாப்பிட்டுவிட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்துள்ளது. இதனால் பல பேர் இவரை தத்தெடுக்க முன்வரவில்லை என அனாதை இல்லம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அச்சிறுமியை தத்தெடுத்துள்ளார்.

இவருடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் கடந்த 2013 ஆம் ஆண்டு தத்தெடுத்துள்ளார். இவரது முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது. இவர்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்து சென்ற Kristen, தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதியை திரட்டியுள்ளார்.

அந்த நிதியுடன் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகியுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்துள்ளன.

தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக Kristen தெரிவித்துள்ளார்.

ஆடைகளை களைந்து சித்திரவதை : அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்!!

 
பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் பெரும்பாலான சிறைச்சாலைகள் அதிக எண்ணிக்கையிலான கைதிகளால் நிறைந்துள்ளது. மட்டுமின்றி போதிய காவலர்களும் இல்லாததால் அங்குள்ள சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக மாறியுள்ளன.

பெரும்பாலான சிறைக்கைதிகளை அரை நிர்வாண கோலத்திலேயே சிறைக்குள் காவலர்கள் நடத்துகின்றனர். சில கைதிகளை முழு நிர்வாணமாக அறைக்குள் பூட்டிவைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல்களும் மிக அதிக அளவில் நடைபெறுவதாகவும் சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரேசில் சிறையில் நடந்ததாக வெளியான குறித்த வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

119 பாம்புகளுடன் அசத்தும் கேரளப் பெண்!!

கேரளாவில் ராஜி என்னும் பெண்மணி ஆண்களை காட்டிலும் பயமின்றி பாம்புகளை பிடிக்கிறார்.

கேரள மாநிலம் பாலோட்டில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.ராஜி. தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர், பாம்புகள் பிடிப்பதை சேவையாக செய்து வருகிறார்.

கடந்த 9 மாதங்களில் மட்டும் 119 பாம்புகளை திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் பிடித்து, வனப்பகுதியில் விட்டுள்ளார்.

தங்கள் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து விட்டால், மக்கள் இவரை தொடர்பு கொண்டு அழைக்கின்றனர், இரவு நேரத்தில் தன் கணவருடன் சென்று இலாவகமாக பாம்புகளை பிடித்து விடுகிறார் ராஜி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாம்புகளை பிடிக்க பணம் கேட்பதில்லை, சிலர் நன்கொடையாக அளித்தால், நான் அதை ஏற்கிறேன், ஆனால் பேரம் பேசுவது இல்லை.

ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு பணம் கூட வாங்குவதில்லை, 100க்கும் மேற்பட்ட பாம்புகள் ஆபத்தை உண்டாக்கியிருக்கின்றன, ஆனால் எந்த பாம்பும் கடிக்கவில்லை.

மக்களுக்கு உதவி செய்வதற்காகவே பாம்பு பிடிப்பதை ஒரு சேவையாக செய்கிறேன். வாழ்க்கையை பணயம் வைத்து இதனை செய்து வருகிறேன், இதனை நான் தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

ஓடஓட வெட்டிக் கொலைசெய்யப்பட்ட ரௌடி : அம்பலமான பின்னணிக் காரணம்!!

சென்னை மண்ணடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் என்பவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன.

2013ம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவத்திற்கான வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஜோர்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிணைக்காக விஜயகுமார் நேரில் ஆஜரானார்.

அப்போது விஜியை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று சராமாரியாக வெட்டிவிட்டு ஓடியது. உயிருக்கு போராடிய விஜி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகள் அப்துல் தமீம், வெங்கடேஷ், கணேஷ், முனுசாமி, மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பில்லா சரவணன், அப்பு எடிசன் உள்ளிட்ட இரண்டு பேரையும் தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கொலையாளிகள் பிரபல ரவுடி ஈசாவின் ஆட்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் பகுதியில் விஜி திடீரென மாமுல் வாங்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் விஜியின் ஆதிக்கம் அதிகரித்ததால் இனி விஜி இருந்தால் மாமுல் சரிவர வராது என்ற கோபத்தில் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.