கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான பேரூந்து!!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (03.06) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்திற்கு பஸ் வண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணமென கூறப்படுகின்றது. விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையிலீடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக மக்கள் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளே விபத்துக்குள்ளாவதுடன் பெருமளவான உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் உரிய பராமரிப்பின்றி சேவையிலீடுபடுத்தப்படுவதால் அண்மைக்காலமாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமென தெரிவிக்கும் மக்கள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவி எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு : பகிடிவதையால் வந்த வினை!!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குளியாப்பிட்டி பொலிஸார் , சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் : நடந்தது என்ன?

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (03.06.2025) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா (வயது 32) என்ற பெண்ணே சாவடைந்துள்ளார். அவர் கர்பிணிப் பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போதே சின்னப்பூவரசங்குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!

வவுனியாவில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று (03.06.2025) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிளுக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கரம் : வீதியில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன், ஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில், 28 வயதான கந்தசாமி பிரணவன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

தம்பிராய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞன் மீது, இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முல்லைத்தீவில் ஆலயத்திற்கு தாமரை இலை பறிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிக்க தாமரை குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (01.06.2025) மதியம் 11.30 மணியளவில் குளத்தில் இறங்கி இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் கிராம மக்களின் முயற்சியின் பயனாக இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளனர்.

அளம்பில் தாமரை குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற அளம்பில் வடக்கை சேர்ந்த 25 வயதுடைய இராஜசேகர் நிசாந்தன் மற்றும் பத்து வயதுடைய சிவநேசன் பிரணவன் ஆகிய இருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உடலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 மாத கர்ப்பிணித் தாயின் வயிற்றில் விழுந்த பலாப்பழம் : சிசுவுக்கு நேர்ந்த சோகம்!!

கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது. கடந்த 29ஆம் திகதி இரவு தெரணியகல, லிஹினியகல பகுதியில் வீட்டில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.

இரவு 11.00 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இந்த துயர சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து தாயின் வயிற்றில் விழுந்துள்ளது.

வேதனை மிகுதியால் துடித்த தாயார் உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தாய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து!!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று ( 02)காலை இடம்பெற்றுள்ளது.

திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மாநகரசபையில் முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம்!!

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் .

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

செல்போன் தர மறுத்த 13 வயது சிறுவன் : கழுத்தை நெரித்து கொன்ற பெரியப்பா!!

தமிழக மாவட்டம் விருதுநகரில் சிறுவனை பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (54). இவரது வீட்டின் அருகே தம்பியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தம்பி லட்சுமணின் 13 வயது மகன் கார்த்திக், கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

வீடு திரும்பிய லட்சுமணனும், அவரது மனைவியும் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சிறுவன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் கார்த்திக்கின் பெரியப்பாவான ராமர்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது காதலியை வீட்டிற்கு அழைக்க ராமர் சிறுவனிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் சிறுவன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், அவனை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் சிறுவன் உயிரிழக்க, சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிறுவன் கார்த்திக் இறந்துவிட்டதாக அனைவரிடமும் ராமர் கூறியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை!!

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை திங்கட்கிழமை (02.06.2025) மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமானசேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணம் தொடங்கியுள்ளது.

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை : நடந்தது என்ன?

தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், திருநங்கையில் தாக்குதலில் இலங்கையர் காமயடைந்த நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.

அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.

ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, ​​எனக்கு கோபம் வந்ததால் இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநங்கை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி சாரதியை பாதணியால் தாக்கிய பெண் காலில் விழுந்து மன்னிப்பு!!

முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளம்பெண், அவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பெண்னும் கணவரும் முச்சக்கரவண்டி சாரதியின் கால்களை பிடித்த் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் பெங்களூரு பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது முச்சக்கரவண்டி உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.

இந்தி மொழியில் முச்சக்கரவண்டி சாரதியை இளம்பெண் திட்டியதுடன் தனது செருப்பால் சாரதியை தாக்கியுள்ளார். இதை முச்சக்கரவண்டி சாரதி தனது கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அதோடு முச்சக்கரவண்டி சாரதி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்த பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

வேன் விபத்தில் மூன்று பேர் காயம்!!

ஏ 9 வீதியில் அநுராதபுரம் , மடாட்டுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.06) இரவு இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : மனைவி பலி, கணவன் படுகாயம்!!

கொழும்பு – காலி பிரதான வீதியில் எலகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.06) காலை இடம்பெற்றுள்ளது.

பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரான கணவன் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஹவில, ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஆவார். இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம் : பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ள மலையகத்தை சேர்ந்த இளம்யுவதி சினேகா பற்றிய செய்திகளும் காணொளிகளும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

மலையகம் டயகம அக்கரப்பத்தனை சேர்ந்த இளம்யுவதியான சினேகா தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளார்.

இவரின் முதல் தெரிவுசுற்று பாடல் தொலைக்காட்சியில் வெளியானதிலிருந்தே இலங்கையிலிருந்து பலர் சார்பாக குறித்த யுவதியின் உடைகள் மற்றும் அவர் கூறிய கதைகள் என்பவற்றை விமர்சனத்திற்குட்படுத்தி வருகின்றன.

இதற்கு முன்னரும் இலங்கையை சேர்ந்த இருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலும், அவர்கள் ஈழத்தை சார்ந்தவர்கள் என்ற போர்வையில் அனுதாபம் தேடும் ஒரு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி மாறியிருந்தது.

இந்த விடயமும் பேசப்பட்டிருந்தாலும், மலையக இளம்யுவதி சினேகாவின் விவகாரமே பூதாகரமாக வெடித்துள்ளது.

அதற்கு காரணம் குறித்த இளம்யுவதி அணிந்திருந்த உடையும், அவர் நிகழ்ச்சியில் கூறிய காரணமுமாகும். ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற சீசனிலும் மலையகத்தை சேர்ந்த இளம்யுவதியொருவர் கலந்துக்கொண்டார்.

அவரின் திறமைகள் பேசப்படாமல், நிகழ்ச்சியின் TRP காக அனுதாபம் தேடும்படலாமாகவே அதுவும் மாறி முடிந்திருந்தது. தற்போது இந்த வருடம் மீண்டும் அதேபோல TRPக்காக மலையகத்தின் வறுமையையும், ஈழத்தின் வலியையும் விற்பதை போலுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த யுவதியின் தந்தை மற்றும தாயார் காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளாவது, எனது மகள் கூறிய அனைத்தும் உண்மையே, நான் பாத்திரங்கள் கழுவி சம்பாதித்தே உழைத்து வருகின்றேன். நாங்கள் இன்றும் தீப்பிடித்து கருகிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

இலங்கை நிகழச்சியில் எனது மகளுக்கு உடைகள் கொடுக்கப்பட்டன. ஒப்பனைகள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பெடுத்தார்கள். உணவுமே கொடுத்தார்கள். ஏன் பேருந்திற்கு கூட அவர்கள் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.

யுவதியின் தாயார் கூறுகையில், தனது மகள் அவளின் நண்பர்களிடம் உடையையே வாங்கி அணிந்து சென்றுள்ளார்.

தற்போதும் எங்கள் பிள்ளைகளிடம் நல்ல உடைகள் இல்லை. தயவுசெய்து எனது மகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலை, நாங்கள் பொய் கூறவில்லை. தவறாக கூற வேண்டாம் , மனவேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.