லண்டன் தாக்குதலை அடுத்து ஐ.சி.சி முக்கிய அறிவிப்பு!!

லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில் நேற்றிரவு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளனர்.

இந்தத் தீவிரவாத தாக்குதலில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து கொண்டிருப்பதால், சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐ.சி.சி, கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயம் என்று தெரிவித்துள்ளது.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய மர்ம நபர்கள் இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி கத்தியால் பலரை தாக்கி உள்ளனர்.

அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியது.

லண்டனில் இதைப் போன்று தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதால், சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், திட்டமிட்டது போலவே ஜூன் 1ம் திகதி ஆரம்பமான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில்தான் ஐ.சி.சி, ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு அடுத்து பெண்கள் உலகக் கோப்பை வருகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

லண்டனில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஊளைச்சதை அதிகரித்துவிட்டதா : இதோ தீர்வு!!

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

மத்யூஸ்க்கு காயம் : தரங்கவுக்கு தடை : இலங்கையின் அடுத்த தலைவர் யார்?

இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக பொறுப்பேற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது.

டொப் 8 அணிகள் பங்கேற்றுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் கடந்த 1ம் திகதி தொடங்கியது.
முன்னதாக, இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்க தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

அதேசமயம் போட்டியின் போது இலங்கை அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அணித்தலைவராக செயல்பட்ட தரங்கவிற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் யூன் 8ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதவுள்ளன.

அடுத்த போட்டி ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்கள் வரையில் இருப்பதனால், காயம் காரணமாக ஓய்விலிருக்கும் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவேளை அடுத்த போட்டியில் மத்யூஸ் உடற்தகுதி பெறாத பட்சத்தில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் : 36 பேரை சுட்டுக்கொன்ற நபர்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூதாட்ட மையத்தில் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் உள்ள Resorts World Casino என்ற சூதாட்ட மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி ஹொட்டலுக்கு தீ வைத்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் நடத்திய நபரும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jessie Javier Carlos எனத் தெரிய வந்தது.

மேலும், இவர் பிலிப்பைன்ஸ் குடிமகன் எனவும் தீவிரவாதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்திற்கு அடிமை ஆனதால் கணக்கில்லா பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு மனநிலையில் தான் அவர் சூதாட்ட மையத்தில் தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கணவன், மனைவி அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழ்நாட்டில் கணவரின் மது பழக்கத்தால் கணவன் மற்றும் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜினி (35) இவர் மனைவி சங்கீதா (31) இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கட்டிட வேலை செய்யும் ரஜினி குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வீட்டுக்கு கொடுக்காமல் அதை வைத்து தினமும் மது அருந்தியுள்ளார்.

இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி வழக்கம் போல குடித்து விட்டு வந்ததால் அவருக்கும் சங்கீதாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் விரக்தி அடைந்த சங்கீதா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றார். அப்போது, கணவன் ரஜினியும் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து, தீயில் கருகிய இரண்டு பேரும் அலறினார்கள். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

அரைகுறை ஆடையுடன் தாலிகட்ட வந்த மணப்பெண்!!

திருமண சடங்கில் மணப்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் கலந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

திருமண நாளுக்காக பெண்கள் தேடி தேடி அலங்கார உடை வாங்கி அணிவதுண்டு. ஆனால் டெல்லியில் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் ஷார்ட்ஸ் அணிந்து வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் மணமகன் சம்பிரதாய உடையும், மணமகள் லெஹெங்கா ஆடையின் சட்டை அணிந்து கீழே ஷார்ட்ஸ், கையில் கோக்குடன் போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர். இணையதளத்தில் இதை பயன்பாட்டாளர்கள் ஏகத்துக்கும் கலாய்த்துள்ளனர்.

சுவையாக நடக்க வேண்டிய திருமணம் இப்படி நகைச்சுவையாக மாறியுள்ளதாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யாழில் பிடிபட்ட கோடி பணம் திருடிய மோசடி கும்பல் : பின்னர் வீதியில் நடந்த விபரீதம்!!

யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அக்குவா சேவ் என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.

அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகார சபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி தீர்மானித்ததற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக விநியோகஸ்தர் உரிமம் பெறுவதுபோல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 1 மணி நேரத்தின் பின்னதாகவே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தி மேற்படி நிறுவனத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையு ம் வைத்திருக்கின்றனர்.

அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபாய் பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

அடுத்து வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமானால் நாட்டில் அரிசி தட்டுப்பாடுஏற்படுபடலாம் என விவசாய திணைக்கத்தின் காலநிலை தொடர்பான அதிகாரியான ரஞ்சித்புன்யவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 2 லட்சம் ஹெக்டெயர் பரப்படையநெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அரிசி தட்டுப்பாடு நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக வேறு உற்பத்திகள் தொடர்பில் விவசாயிகள்கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரஞ்சித் புன்யவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீழ்ந்த உலங்கு வானூர்தியை மீட்டெடுத்த இலங்கை விமானப்படை!!

 
காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த எம்.ஐ-17 உலங்குவானூர்தியை இலங்கை விமானப்படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென் மாகாணம் முழுவதும் பெய்த கன மழையினால் வெள்ளப்பெருக்கும், மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் வெள்ளத்திற்குள்ளும், மண் சரிவிற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலையில் பறந்து கொண்டிருந்த போது, எம்.ஐ-17 உலங்குவானூர்தியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானி அதனை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்றில் தரையிறக்கினார்.

இதனால் உலங்குவானூர்தி சேதமடைந்தது. இதனையடுத்து பார ஊர்தியில் சென்ற படையினர், உலங்கு வானூர்தியின் பாகங்களை அகற்றிவிட்டு அதனை மீட்டெடுத்துக் கொண்டு சென்றனர்.

ஏழு மாகாணங்களில் இன்றும் மழை : வட மாகாணத்தில் வரட்சி தொடரும்!!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும்என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழைபெய்யும். கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழைபெய்யும்.

மாத்தளை, பொலனறுவை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்போது மணிக்கு 50கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடற்பிராந்தியங்களும் சற்றுகொந்தளிப்பாகக் காணப்படும் என்று குறிப்பிட்டார். அத்துடன், தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலையின்போது, வடக்கு, கிழக்கில்வரட்சியான காலநிலையே நிலவும். எனவே, யாழ். மாவட்டம் உட்பட வடக்கின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக வரட்சிநிலவும் என்று கூறப்படுகின்றது.

வவுனியாவில் வயோதிபர் மீது தாக்குதல்!!

மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் வவுனியா மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்று மது அருந்திய பின் அருகிலிருந்த காணியில் காணப்பட்ட பாலை மரத்தில் பாலைப்பழம் பறிப்பதற்காக அம்மரத்தை தறிக்க முற்பட்ட வேளையில் காணியின் உரிமையாளர் மரம் தறிப்பதை தடுக்க முயன்ற போது அக்கும்பலால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான கிருபானந்த மூர்த்தி (58) தலையில் பலமாக அடிபட்டதன் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது சகோதரரான சத்தியமூர்த்தி(56) என்பவரும் அருகே சென்ற போது கும்பலால் தாக்கப்பட்டு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது,

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மதுபானசாலையால் அப்பிரதேசத்தில் பல சமூக சீர்கேடுகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறித்து அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சாதனைப் பெண் பதக்கத்தை விற்கவேண்டியதில்லை : பணிகளைச் செய்ய அமைச்சர் அழைப்பு!!

சுதந்திகா ஜயசிங்க நாளை வேண்டுமானாலும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வந்து தனது பணிகளைச் செய்யலாம் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஒலிம்பிக் பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக சுசந்திகா ஜயசிங்க விடுத்துள்ள அறிவிப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விளையாட்டு நிதியத்திலிருந்து சுசந்திகா ஜயசிங்கவுக்கு 80 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிதியத்தின் பணத்திலிருந்து இப்படியான கொடுப்பனவுகளைச் செய்யமுடியாது.

எனவே, முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் வாகன வசதிகளையும் செய்துகொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்தேன். 60 ஆயிரம் ரூபாவை வழங்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதனால்தான் சுசந்திகா ஜயசிங்க இப்படி சொல்கின்றார்.

பதக்கத்தை விற்பனைசெய்யவேண்டியதில்லை. அமைச்சுக்கு வந்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்கலாம். சம்பளமும் நிறுத்தப்படவில்லை” என்றார்.

யூடியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்!!

யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.

கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார்.

மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார்.

இந்நிலையில் ஒருவர் மாத்திரம் பயணம் செய்யக்கூடிய போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய தொழிநுட்பத்திற்கேற்ப மாற்றியமைத்துள்ளார்.

அத்தோடு தன்னைப் பார்த்து யாரும் ஏளனமாக சிரித்து விடக் கூடாது என்பதற்காக, விட்டரிற்கே தெரியாமல் தயாரித்து வந்த விமானத்தை, கடந்த மார்ச் மாதம் வயல் வெளிகளிக்கிடையில் அமைத்த விமான ஓடுதளத்தினுடாக வெற்றிகரமாக இயக்கியுள்ளார் ஒரு விவசாயியின் மகன் பாயென்லாங் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்புவோர் மீது நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களினூடாக இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமூக வலைத்தளங்களின் மூலமாக பல்வேறுபட்ட மதங்களைச் சாரந்த்தவர்களையும், இனங்களைச் சேர்ந்தவர்களையும் தூண்டுவிடும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!!

பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பணம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவராகும். அத்துடன், கொலையாளி என சந்தேகிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேதுருதுடுவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகையைத் திருமணம் செய்துகொண்ட இயக்குநர்!!

வயதான இயக்குநர், நடிகையைத் திருமணம் செய்துகொண்டதால் பரபரப்பாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை போன்ற ஏடாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ஒரு இயக்குநரின் காதல் டைரி. இவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், பொன். ஸ்வாதி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர், இளையராஜா.

இந்த நிலையில், நேற்று காலை வேலு பிரபாகரனின் காதல் கதையில் நடித்த ஷெர்லி தாஸும், வேலு பிரபாகரனும் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். வள்ளுவர் கோட்டம் பின்புறமுள்ள ‘லீ மேஜிக் லேண்டர்ன்’ பிரிவியூ தியேட்டரில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.