அறிவுரை கூறியவரைக் கொலை செய்த மாணவன் : தாயும் கைது!!!

நன்றாகப் படிக்குமாறு அறிவுரைக் கூறியவரை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்ததாக 11ம் வகுப்பு படித்து வந்த மாணவரைப் போலீசார் கைதுச் செய்துள்ள நிலையில், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக மாணவரின் தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி(88). இவர் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த ஆட்டையாம்பட்டி போலீசா, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், மூதாட்டியின் வீட்டருகே வசித்து வந்த மதுரையைச் சோ்ந்த பாண்டி மனைவி கிருஷ்ணபிரியா (38), அவரது மகன் ஆகிய இருவரும் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து காரில் வெளியே செல்வது சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து கிருஷ்ணபிரியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியை தனது மகன் தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கணவா் இறந்த நிலையில் கிருஷ்ணபிரியா, மூதாட்டியின் வீட்டருகே தனது மகனுடன் தங்கி அரியானூரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மூதாட்டி, கிருஷ்ணபிரியாவின் மகனிடம் தந்தை இல்லாததால் நன்றாகப் படித்து தாய்க்கு உதவுமாறு அறிவுரை கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவா், மூதாட்டி தூங்கும் போது அரிவாளால் அவரது தலையை வெட்டிவிட்டு அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளாா்.

ஹோட்டல் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணபிரியா, மகனின் சட்டையில் இருந்த ரத்தக் கரையைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னர் இது குறித்து மகனிடம் தொடர்ந்து விசாரிக்கையில், மூதாட்டியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து அங்கிருந்து இருவரும் காரில் ஏறி புதுவையில் உள்ள அவா்களது உறவினா் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னா் அவா்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது எனப் போலீசா தெரிவித்தனா்.

கொலை செய்த மாணவா், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது தாயார் கிருஷ்ணபிரியா ஆகிய இருவரையும் கைது செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், கிருஷ்ணபிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனா்.

2032இல் பூமிக்கு பேராபத்து : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

2032 ஆம் ஆண்டில் 024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானிகள், பூமியிலிருந்து சுமார் 8,29,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சிறுகோள் பூமியை நோக்கி வருவதாக 2024ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரியக் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2 சதவீதம் (1-in-83) வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால், பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

இது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும். சிறுகோளின் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் விண்வெளியில் வைத்து மோதலை ஏற்படுத்தும் திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நிலையில் , 2024 YR4 சிறுகோளைக் கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், 2032 இல் அதன் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!!

இலங்கைக்கு அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான அரிசி இருப்புகளைப் பெறமுடியும் என அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்காலத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்படவுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி குறித்து

வினவிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா , அந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, நெல் கொள்முதல் செயல்முறை கடுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும்,

செயல்பாட்டில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இளம் ஆசிரியை கொலையில் சகோதரன் கைது : தாயாரால் பொலிஸார் குழப்பம்!!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் திருமணமாகாத இளம் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகாத நிலையில், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிபப் பெண் கைது!!

வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில் வைத்து 51 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 1740 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பூவரசங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (29) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியானதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்தினை ஏற்படுத்தி விட்டு உழவியந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்!!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் மண்ணெண்ணெய்யின் விலையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, கடந்த மாதம் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தீங்கு விளைவிக்கும் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம், படிப்படியாக குறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகார மத்திய சுற்றுச்சூழல் சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு நேற்று(30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐத் தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்திய பகுதியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50க்கும் கீழே குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரம் நேற்று, எந்த இடத்திலும் 150க்கு மேல் பதிவாகவில்லை என்றும், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 100க்கு அருகில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா கற்குழி பகுதியில் இளைஞர் குழு அட்டகாசம் : வீதியால் சென்றவர்கள் மீது வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி பணம் பறிப்பு!!

வவுனியா, கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள், பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை என பாதிகப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (30.01) வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதி மற்றும் கற்குழி செல்லும் வீதி என்பவற்றில் மதுபோதையில் வாள்கள், பொல்லுகளுடன் நின்ற இளைஞர் குழு ஒன்று குறித்த வீதிகளில் கற்களை போட்டும், போத்தல்களை உடைத்தும் வீதியால் சென்றவர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்துள்ளனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 107 இற்கு அழைப்பு எடுத்து அறிவித்த போதும் பொலிசார் வரவில்லை எனவும், தாம் தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இளம் பெண்ணும் ஆணும் செய்த மோசமான செயல் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!!

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனும் அவரது காதலியும் சேர்ந்து அவரது வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 56 பவுண் தங்கம் மற்றும் 200,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளனர்.

20 வயதுடைய பெண்ணும் 25 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக எண்டேரமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளம் பெண் எண்டெரமுல்ல, பகுதியை சேர்ந்தவர் எனவும் இளைஞன் களனி, சிங்கரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் அடகு வைத்து, 1,800,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை ஒன்றை சந்தேக நபர்கள் கொள்வனவு செய்திருந்த நிலையில் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

அத்துடன் பெறுமதியான கணனி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் இணைந்து இந்த வாரம் தேங்காய் இறக்குமதி தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருந்தனர்.

எனினும், தேங்காய் இறக்குமதி தொடர்பான மீள்பரிசீலனையின் காரணமாக அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களான தேங்காய் தூள் மற்றும் தேங்காய் பால் என்பவற்றை இறக்குமதி செய்யும்

அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இருப்பதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வின் படி, தேங்காய் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தோனேசியா பொருத்தமான நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேவையை பொருத்து, குறித்த தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரபல ஹோட்டல் ஒன்றில் மதுபானத்தை திருடி குடிக்கும் குரங்குகள்!!

கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் பிரதேசவாசிகள் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது.

 

பூமியை நோக்கி பாய்ந்து வரும் ‘2024 YR4 சிறுகோள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர்.

இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரியக் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2 சதவீதம் (1-in-83) வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால், பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

இது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும். சிறுகோளின் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் விண்வெளியில் வைத்து மோதலை ஏற்படுத்தும் திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர்.

இப்போது, 2024 YR4 சிறுகோளைக் கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், 2032 இல் அதன் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

தென்னிலங்கையில் பெற்றோரை ஏமாற்றிய மகள் : காதலனுடன் இணைந்து களவாடிய காதலன்!!

கொழும்பு தமது காதலனுடன் இணைந்து, பெற்றோரை ஏமாற்றி அவர்களுக்கு சொந்தமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் களனி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இணைய சூதாட்டத்துக்கு அடிமையானவர் எனவும் அவர் குறித்த சூதாட்டத்தில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த யுவதி மாத்திரமே அவரது வீட்டில் இருந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் குறித்த யுவதியிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர் அதன்போது, அவர் தமது காதலனுடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்துக்கான திட்டத்தை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த திருட்டு சம்பவத்துக்கான திட்ட வரைபடமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபரான யுவதி இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் பயன்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நிபுணர்கள் ப்ளீச்சிங் கிரீம்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது, பலர் லேசான மற்றும் பிரகாசமான சருமத்தை விரும்புகிறார்கள்.

இந்த கிரீம்கள் பெரும்பாலும் மருந்தகங்கள் மற்றும் அழகுசாதனக் கடைகளில் இருந்து வாங்கப்படுகின்றன, அதே நேரத்தில் சில கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களாகவும் விற்கப்படுகின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சரும வைத்தியர் ஹிரோமெல் டி சில்வா, இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத கிரீம்கள் அல்லது சரியான லேபிளிங் மற்றும் ஆய்வக விவரங்கள் இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தார்.

இந்த கிரீம்களில் சிலவற்றில் சரியான வெளிப்பாடு இல்லாமல் ஸ்டீராய்டுகள் இருக்கலாம், இது தோல் சிதைவு, வறட்சி, தோல் மெலிதல், சிவத்தல், அரிப்பு, எரிதல் மற்றும் ஒட்டும் தன்மை போன்ற பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் டி சில்வா மேலும் எச்சரித்தார்.

கூடுதலாக, இந்த தயாரிப்புகள் இதயத் துடிப்பையும் பாதிக்கக்கூடும் என்றும், பயனர்களுக்கு மேலும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.