சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், ராஜகோபால் கேட்டரிங் வேலைக்காக கோடம்பாக்கத்திற்கு ரயிலில் சென்றுள்ளார்.
அப்போது அவர் காதில் மாட்டியிருந்த Bluetooth ஹெட்செட் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அதனை எடுக்க கீழே இறங்கிய ராஜகோபால் தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக வந்த மற்றொரு ரயில் அவர் மீது மோதியதில் மாணவர் ராஜகோபால் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி.
அவரது மகன்கள் வினோத்குமார் (27) மற்றும் கனகராஜ் (23). அவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களில், கனகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இது அவரது சகோதரர் வினோத்குமாருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மீதான காதலை கைவிடுமாறு தனது தம்பியை எச்சரித்து மிரட்டினார்.
ஆனால், அவர் தனது காதலை கைவிடவில்லை. இந்த சூழ்நிலையில், ஜூன் 25, 2019 அன்று, காதல் ஜோடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வினோத்குமார்,
அவர்களைச் சுற்றி வளைத்து, அரிவாளால் இருவரையும் வெட்டிக் கொன்றார். இதில், கனகராஜ் இறந்தார். வர்ஷினி பிரியா ஜூன் 29 அன்று கோவை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
இந்த இரட்டைக் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் சரணடைந்தார்.
இந்த வழக்கில், மேட்டுப்பாளையம் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளான கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவை எஸ்சி-எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வினோத்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் அவர் மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார் என நீதிபதி விவேகானந்தன் நேற்று தீர்ப்பு வழங்கினார். மற்ற 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினோத்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) விவாதிப்பார்கள் என்றும் நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு இதன்போது உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கடந்த 17 ஆம் திகதி வலிப்பு நோய் காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், தனது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் அது 4,658 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் மோசடியாளகள் தொடர்பில் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவர், நுவரெலியா பசுமலையில் வசிக்கும் தனது டிக்டொக் காதலியான பாடசாலை மாணவி ஒருவரை காண சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி, தந்தையை இழந்தவர் எனவும் அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தனது சிறிய தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் வீட்டிற்கு திடீரென வந்த இளைஞனின் நடத்தையால் அயல் வீடுகளில் வாழும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட, விடயம் தொடர்பில் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், இளைஞனை விசாரித்த போது, அவரின் பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞனிடம் தேசிய அடையாள அட்டையும் இருக்கவில்லை. எனவே, பொலிஸார் இளைஞனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த திணைக்களம் இன்று (25.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை என்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி உளுந்து செய்கையானது வடக்கில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதற்கான கேள்வியானது அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன்பட்டும், நகைகளை அடைவு வைத்தும் செட்டிகுளம், ஓமந்தை, பாவற்குளம், சூடுவெந்தபுலவு, நெடுங்கேணி, சிப்பிக்குளம், பறநாட்டாங்கல் என பல பகுதிகளிலும் உளுந்து செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியாவில் உளுந்து செய்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிர் செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
உளுந்து அறுவடைக்கு தயாரக இருந்த வேளை வவுனியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்தமையால் உளுந்து செடிகளிலேயே முளைத்து விட்டது.
இதனால் அதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் தமது செலவீனத்தைக் கூட மீளப் பெற முடியாதவாறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உளுந்து 100 வீதம் அழிவடைந்துள்ள நிலையில் தமக்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அதன் இயக்குநர் ஓய்வு பெற்ற ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.
வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அதற்கமைய, தற்போது செயலில் உள்ள தொலைபேசிகளின் IMEI எண்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவை எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் செயலில் இருக்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு IMEI எண்கள் பதிவு செய்யப்பட்ட வலையமைப்புகளுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று இயக்குநர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடத்தின் இறுதியில் 160 ரூபாவில் இருந்து சடுதியாக 40 ரூபாவால் தேங்காயின் விலை அதிகரித்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
2000 ஆம் ஆண்டளவில், தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்களால் குறைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளன.
தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன. இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்.
கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் (Ambalangoda) உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது.
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியில் தரித்து நின்ற சமயத்தில் குறித்த தனியார் பேரூந்தினை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.
இதன் போது திடீரென தனியார் பேரூந்து புறப்பட முற்பட்டமையினால் ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் கண்ணாடியுடன் தனியார் பேரூந்தின் கண்ணாடியுடன் மோதுண்டு சிறு சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து இரு பேரூந்தின் சாரதிகளுக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டமையுடன் பின்னர் இரு பேரூந்துகளும் தொடர்ந்து பயணித்தன.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தினை சூடுவெந்தபுலவு பகுதியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில் சாரதி தனது ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேரூந்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி உலுக்குளம் பொலிஸ் பிரிவில் வருகின்றமையினால் அப்பகுதி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதிபர் திருமதி.வனித்தா தியாகராஜா தெரிவித்தார் .
வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நேற்றுமாலை வெளியாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.
மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார். குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற திருமதி அகிலத்திருநாயகி அவர்கள் நான்கு பதங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார்.
இவர் முல்லைத்தீவு முள்ளியளை மண்ணினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆவார்.
10000 M ஓட்டத்தில் முதலாம் இடமும் 3000 M வேக நடையில் இரண்டாம் இடமும் 1500 M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடமும் 5000M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.
இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.
மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
அதேவேளை கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.