யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (23)இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது வீதியால் பயணித்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக குறித்த மரணம் சம்பத்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (23.01.2025) மாலை வெளியாகின. இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
இதேநேரம், யாழ். ஜோன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மாத்தளை நகரில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனது 16 வயது மகனைக் கண்டுபிடிக்க சிறுவனின் தாயார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்.
முத்தெட்டுதென்ன கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சுனேத்ரா ஜெயராணி என்பவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தளை, முவந்தெனிய கல்லூரியில் படிக்கும் ருவிஷன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். தாயார் மாத்தளை நகரத்திற்குச் செல்வதாகக் கூறி 19 ஆம் திகதி காலை வீட்டை விட்டுச் சென்று மாலை வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய போது மகனை காணவில்லை எனவும் 5 நாட்களாகியும் மகனை கண்டுபிடிக்கவில்லை எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ரத்தோட்ட பொலிஸாரிடம் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
அருகிலுள்ள வீட்டில் இருந்த பாதுகாப்பு கேமராவில், மாணவன் ஒரு குடையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.
காணாமல் போன தனது மகன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் ரத்தோட்டா பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்,
சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமீட்டம் நிறைந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழ்ப்பாணம்(Jaffna) – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(22) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம்(வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது அந்த வீதியால் வந்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (22.01) வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் விதுசன்(வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சம்பவதினத்தன்று(22) ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம்(22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி(வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பப் பெண்ணுக்கு நேற்றுமுன் தினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(24) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 829,069ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 29,250ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 26,820ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் (22 karat gold 8 grams) விலையானது 214,500ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 25,600 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)204,750ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 217,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 201,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் துஷார பெரேரா, 2017ஆம் ஆண்டு தனக்குக் கிடைத்த ஒரு சிறப்பு நீல சபையர் (மாணிக்ககல்) தொடர்பாக அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும், அதன் மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாணிக்கக்கல் கொருண்டம் குடும்பத்திலிருந்து வந்த 350 கரட் நீல சபையர் ஆகும். அமெரிக்க மற்றும் ஜெர்மனியில் இருந்து வர்த்தகர்கள் இதை வாங்க ஆர்வமாக இருந்தபோதிலும், சட்ட மற்றும் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் இலங்கைக்கு பணத்தை கொண்டு வர முடியவில்லை.
எனவே, கல்லை விற்க அவர் அரசாங்க அமைச்சர்களிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது.
2017 முதல், இலங்கையின் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் கரடுமுரடான கற்களுக்கான மதிப்பீடுகளை வழங்காததால், இந்த இரத்தினக் கல்லை வெளிநாடுகளுக்கு விற்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
அத்துடன், ஏற்றுமதி விதிகள், விலையுயர்ந்த கற்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்கின்றன.
இந்த நேரத்தில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் விற்பனைக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், ஆனால் 150 மில்லியன் இலஞ்சம் கோரினார் என்று தொழிலதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் உதவிக்கு ஈடாக கல்லின் மதிப்பில் ஒரு பங்கைக் கேட்டிருந்தார்.
தொழிலதிபர் துஷாராவின் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்தநிலையில், 2018 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு, கப்பம் வாங்குவதற்காக அவிசாவெல்லாவின் புவக்பிட்டி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக துஷாரா கூறியுள்ளார்.
இந்த அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் துஷாரா கூறியுள்ளார்.
இதேவேளை, ஒரு கொள்வனவாளரை கண்டுபிடித்து இரத்தினக் கல்லுக்கு பணம் பெற்றாலும், இலங்கையின் சட்டங்களால், பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் சட்ட சவால்களையும் எதிர்கொள்வதாக துஷார தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணத் தயாராக இருப்பதாக துஷார கூறியுள்ளார்.
வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை (23.01.2025) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு – பட்டானிச்சூர் இடைப்பட்ட வயல் நிலங்களில் தொடர்ந்தும் மண் கொட்டப்பட்டு மேட்டு நிலங்களாக மாற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மௌனம் காப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளத்தின் கீழுள்ள வயல் நிலங்களிலேயே இவ்வாறு மண் கொட்டப்பட்டு வேலிகள் போடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்ற சமயத்தில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம்,
கட்டளை பிறப்பிக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்போது எவ்வித நடவடிக்கைகளும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விவசாயம் செய்வதற்கான நிலங்கள் இல்லாமல் போகின்ற நிலைமை வவுனியா மாவட்டத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த மண், வேலிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கேதிவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது குறித்த பட்டா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறச்சியினை முறையற்ற முறையில் கொண்டு சென்றமை உட்பட்ட குற்றச்செயல்களில் குறித்த வாகனத்தினை பொலிஸார் கையகப்படுத்தியமையுடன் வாகனத்தின் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கையகப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை A9 வீதியில் நேற்று (23.01.2025) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்
பாதிக்கப்பட்ட பெண்கள் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப்பிடித்துள்ளனர்.
கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த ச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (23.01.2025) காலை இடம்பெற்றுள்ளது. விரந்து வந்த தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக:ள் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்து வரும் நிலையில், இன்றையதினம் (23) தங்கத்தின் விலை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,251 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 Karat Gold 1 Grams) விலை 29,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 232,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 Karat Gold 1 Grams) விலையானது 26,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும், கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆழ்கடலுக்கு சென்று நீருக்கடியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதற்காக அவர்கள் டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் உதவியுடன் புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர்.
அங்கு அவர்களுக்காக 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தினர்.
பின்னர், கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் 5 பேர் கடலுக்கடியில் சென்றனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், “முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் நீச்சல் வீரர்கள் என்பதால் சிரமம் ஏற்படவில்லை” என்றார்.
தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த 11 மாத கைக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட கல்ஃப் ஏர் விமானம் நடுவானில் வந்துக் கொண்டிருந்த போது விமானத்தில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த ஃபெசின் அகமது என்ற 11 மாதக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
உடண்டியாக இது குறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்கியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
ஆனால் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அங்கமாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானத்தில் திடீரென குழந்தை உயிரிழந்ததால், பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜனவரி 19 ஆம் தேதி, சந்துரு தனது மகளின் திருமணச் சான்றிதழைப் பெற ஹுலிதிமாபுரா சென்றார். அதன் பிறகு, அவர் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.
வழியில், அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
இருப்பினும், உறவினர்கள் தீக்ஷிதாவிடம், சந்துரு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர். மருத்துவமனையில் இருந்தபோது, சந்துரு தனது மகள் மற்றும் மனைவியிடம் ஒரு திருமண வேலையில் மும்முரமாக இருப்பதாகவும்,
இடையில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், தீக்ஷிதாவின் திருமணத்திற்குப் பிறகு, தீக்ஷிதா மற்றும் அவரது தாயாருக்கு அவரது தந்தை சந்துரு இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சந்திருவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து, திருமண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.