ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வயிற்றில் ஓங்கி அடித்ததில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது.
இதனையடுத்து கொலை சம்பவத்தை மறைத்து விபத்து நடந்தது போல காட்டுவதற்காக கேஸ் சிலிண்டரை கசிய வைத்துவிட்டு சச்சின் தப்பி ஓடினார்.
கேஸ் வாசனை அதிகமாக வந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சினேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சினேகா மற்றும்
குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன்.
அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இந்த பையனுக்கு 10 வயது. ஜெனிஃபர் 154 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில், தனது மகன் தனது பேச்சைக் கேட்காததால் ஜெனிஃபர் கோபமடைந்தார்.
இதனால் ஜெனிஃபர் சிறுவனின் மீது அமர்ந்தார். ஜெனிஃபர் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே சிறுவனின் மீது அமர்ந்தார்.
இதனால் மூச்சு விட முடியாமல் சிறுவன் இறந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஜெனிஃபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஜெனிஃபருக்கு இப்போது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், கோழி மிதித்து குஞ்சு இறக்காது என்ற பழமொழியும் உள்ளது. ஆனால் தாய் தன் மகனின் மீது அமர்ந்ததால் சிறுவன் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் நேற்றையதினம் (22.01) சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் (22) தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் – அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று முன்தினம் (21.01) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிற்சை பலனின்றி பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவர் தன்னுடைய மனைவியை கொலை செய்த பின்னர் வீட்டின் குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி பின்னர் சில உடல் பாகங்களை குக்கரில் வைத்து சமைத்ததாக அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் எலும்புகளை வெட்டி எடுத்து அரைத்து அவற்றை வேக வைத்துள்ளார். தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக சதை மற்றும் எலும்புகளை வேகவைத்து பின்னர் ஏரிக்கரையோரம் சென்று அவற்றை வீசிவிட்டதாக கூறியுள்ளார்.
இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் இருவரும் வெளியே சென்ற நிலையில் தன்னுடைய மனைவியை அவர் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில் போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக தற்போது கனடாவில் வசித்த 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை , அவர்களது வாகனம் விபத்துக்கு உள்ளானதை அடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு
அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட வேளை மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாகவும் , விபத்து தொடர்பில் கனேடியன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈராக்கில் சிறுவர் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி இனி 9 வயது சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும்.
ஈராக்கில், கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிறுவர் திருமணம் என்பது சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதில் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டத் திருத்தம், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டத்தின்படி, இனி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 9 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சன்னி இஸ்லாமிய பெண்களுக்கு திருமண வயது 15ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம் என்று, நாட்டின் சபாநாயகர் மஹ்மூத் அல்-மஷ்ஹதானி கருத்துரைத்துள்ளார்.
புதிய இணைப்பு : யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22.01.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் (வயது 32) சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற குறித்த இளைஞன் மீது மோதியே விபத்து இடம்பெற்றது.
முதலாம் இணைப்பு : யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலும்,
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும்,
தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சபை விவகாரங்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் சிக்கல்நிலை உருவாகும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா இன்று(23.01.2024) சபையில் முன்வைத்த கருத்து தொடர்பில் பதில் வழங்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“சபாநாயகரே இங்கு நாடாளுமன்ற உறுப்பினர முன்வைத்துள்ள கருத்துக்களுக்கான தீர்வை வழங்குவது உங்களது கடமை. எனினும் அவர் முன்வைத்த சிறப்புரிமை குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.
அவர் தற்போது நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
அவருக்கு வாய்ப்பு வழங்காமை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாகும். எனினும் இதற்கான முழு பொறுப்பும் எதிர்க்கட்சி தலைவரிடமே உள்ளது. அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி தலைவரே ஒதுக்கியிருக்க வேண்டும்.
இதனை நாடாளுமன்றிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, நான் அவருக்கு எடுத்துரைத்துள்ளேன். இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்காமை தொடர்பில் எங்களை கைகாட்டுவதில் எந்த பயனும் இல்லை.
இது தொடர்பில் மீண்டும் சபைக்கு அறிவிக்கின்றேன். தயவுசெய்து அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி வழங்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அரசாங்கம் என்ற வகையில் அவரின் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம். ஏனைய துணை குழுக்களுக்கு கூட அவரை நியமித்துள்ளோம். சபாநாயகரே, இந்த பிரச்சினைக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் கலந்தாலோசித்து உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்தி செல்வதில் பெரும் சிக்கல் நிலை உருவாகும். அர்ச்சுனா மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
பாதுகாப்பு பிரிவு தொடர்பான நடைமுறைகள் சட்டத்திற்கு அமைவாகவே இடம்பெறும். எவ்வாறாயினும் அவரை கைது செய்வதாக இருந்தால், அது சபாநாயகரின் அனுமதியினுடனே இடம்பெறும்.
நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு வேலை செய்ய விரும்புகிறரோம். தயவு செய்து இந்த விடயத்துக்குள் தேசிய பிரச்சினையை உள்ளிழுக்க வேண்டாம்” என்றார்.
தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில்துறையினர் அதிக விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்வதால் நுகர்விற்கான தேவை 250 முதல் 300 ரூபாவாக உயரும் என இலங்கை தேங்காய் கைத்தொழில் சபையின் தலைவர் ஜயந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறைக்காக 100 மில்லியன் தேங்காய்ப்பால், உறைந்த தேங்காய் துருவல் அல்லது துருவிய காய்ந்த தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதற்கு அரசாங்கத்திடம் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துண்டுகளாக்கப்பட்ட காய்ந்த தேங்காய்களை பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2021 மற்றும் 2024 க்கு இடையில் நாட்டின் தேங்காய் அறுவடையானது 700 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களினால் குறைந்துள்ளது எனவும்,
தொடர்ந்து தேங்காய் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விலை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள்.
என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது. படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்றும் அவர் தெரிவித்தார். 1980ஆம் ஆண்டுகளில், எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளார்கள்.
பல படுகொலைகளை செய்த தரப்பு இது என்றும், முடிந்தால் தன்னையும் கொலை செய்து விடுமாறும் தெரிவித்த அர்ச்சுான எம்.பி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான தமது மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்கு வழங்கிய முழு ஆதரவினையும் இன்றிலிருந்து முழுதுமாக மீளப் பெற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
64 நாட்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம் கொடுக்காவிட்டால் அது இந்த அரசாங்கத்தினுடைய வெட்கம்கெட்ட செயல். ஏன் இவர்கள் பயப்படுகின்றார்கள்.
எனக்கு கதைப்பதற்குரிய நேரத்தை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு ஒரு குழுவினை நியமித்துள்ளனர். நான் பல நாட்கள் காத்திருந்துள்ளேன். இது எந்த வகையில் நியாயம்.
நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு 36 நாட்கள் கதைப்பதற்கு அனுமதி வழங்காமல் முதலாவது நாளாக நான் உரையாற்றுவதற்கு கூட எனது சொந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கான அவசியத்தை இந்த அரசாங்கம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
இன்றில் இருந்து இந்த அரசாங்கத்திற்கு எனது மனதால் நான் கொடுக்கின்ற அனைத்து ஆதரவுகளையும் மீளப் பெற்றுக் கொள்கின்றேன். இன்றில் இருந்து உண்மையான எதிர்க்கட்சியாக நான் செயற்படுவேன்.
எனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டதற்காக கைது செய்கிறார்கள். ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் இது நடக்குமா. இந்த விடயத்தை நான் பாரிய கவலையுடன் நான் முன்வைக்கின்றேன்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மீது இருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் மூன்று எம்.பிக்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் எனக்கு இங்கு கதைப்பதற்கு கூட நேரம் கொடுக்கப்படுவதில்லை.
இங்கு தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களை கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
ஏன் இந்த அரசாங்கம் ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினரைப் பார்த்துப் பயப்படுகின்றது. இந்த அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இருந்தால் இன்றில் இருந்து இந்த பிரச்சினையை முடித்துக் காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (22.01) வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன்,
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்ர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்தியபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பீடியா பண்ணை கிராமம், வவுனியாவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் மிகவும் கடினமான சூழலில் அமைந்துள்ள கிராமமாகும்.
பிரதான சாலையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பாதுகாப்பான மையத்தை அமைக்கக் கூட ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லை.
மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர். டிராக்டர்கள் மற்றும் லொரிகளைப் பயன்படுத்தி அதற்குள் தங்கியிருக்கின்றனர்.
குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்டச் செயலாளர், இந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வெள்ளத்தில் முழ்கியதால் அதன் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று (22.01) காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக வெள்ள நீர் காரணமாக வவுனியா குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்த வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
இதனால் அதன் கடவுச் சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், அலுவலகத்தில் கடமையாற்றுவோர் வெள்ளத்திற்குள் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நீரை வெளியேற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொழும்பு,மருதானை பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (22.01.2025) இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இதன்போது, இந்த பெண் இன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.