விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயம்!!

கம்பஹா Ihalagama பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக் கிழமை காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன தினத்தன்று குறித்த சிறுவன், சிவப்பு நிற மேல் சட்டையும், பழுப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்தார் என சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சிறுவனுக்கு நெற்றியில் கரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனைப் பற்றி ஏதாவது தகவலும் கிடைக்கப் பெற்றால் பொலிஸ் அவசர தொலைப்பேசி எண்ணிற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்லது சிறுவனின் தந்தையின் தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தையின் தொலைபேசி எண்-077-9615745.

பாலியல் தொழிலுக்கு அனுமதி : ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடையா : நடிகர் மயில்சாமி ஆவேசம்!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் நடிகர் மயில்சாமி ஆவேசமாக பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கணும், அமைதியான முறையில் இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.

அரசு தரப்பில் இருந்து யாராவது வந்து பேசுனீர்களா? எனக்கு என்ன என்று இருக்காதீர்கள்?

செத்தால் ஒட்டு துணி கூட உங்களுடன் வராது, பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்கு, ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லையா? என ஆவேசமாக பேசியுள்ளார்.

நான் அப்போது ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன் : உண்மை முகத்தை காட்டிய சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்கார வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

அந்த ரசிகர், “நீங்கள் பல டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளீர்கள், உலகக்கிண்ணம் வென்ற அணியிலும் இடம் பிடித்துள்ளீர்கள், உங்களது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாகவே இருந்தது.

ஆனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணியில் இருந்ததே இல்லையே, ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம், அது ஏமாற்றம் அளிக்கும் விடயமாகவே இருந்தது. 2004ம் ஆண்டு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போது கூட ஷேன் வார்னே, ஸ்டூவர்ட் மெக்கில் அந்த வாய்ப்பை தட்டி பறிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், ஓய்வு பெற்றது குறித்து பேசிய சங்கக்காரா, எப்போதும் ரசிகர்கள் என்னிடம் ’ஏன் நீங்கள் ஒரு 2 ஆண்டு கூடுதலாக விளையாடவில்லை, 15,000 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி நகரவில்லை’ என்று பல கேள்விகளை கேட்பார்கள்.

ஆனால் நான் ஓய்வு பெற வேண்டும் என்று மட்டுமே முடிவெடுத்தேன். எனது முன்னால் இருக்கும் எந்தவொரு விடயத்தையும் நான் பார்க்கவில்லை.

நான் எனது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி இருந்ததால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் கண்டிப்பாக பதிலளிக்க முடியும். ஆனால் நான் அணியின் வெற்றிகளுக்காகவே விளையாடினேன் என்றார்.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெற முடியாத வெற்றிகளுக்காக கவலை தெரிவித்த சங்கக்கார, அணிக்காக சிறப்பான பங்களிப்பு அளித்த பிறகு ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பிரித்தானியாவில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய 16 வயது சிறுமியின் மரணம்!!

பிரித்தானியாவில் தென் யார்க்ஷயர் பகுதியில் நேற்று 16 வயது சிறுமி ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுமி மர்ம நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தில் 18 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

இந்த சிறுமி இறப்பு தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், அந்த சிறுமியுடைய நண்பர் ஒருவர் “அவர் சமூக வலைதளத்தில் பழக்கமான ஒருவரை சந்திக்க சென்றதாகவும் மீண்டும் அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த லியோனி என்ற சிறுமி இறப்பு தொடர்பில் முழுமையாக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் அவரது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

அந்தவகையில் 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து மக்கள் தங்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கரின் மனிதாபிமானம்!!

 
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரஜை ஒருவர் வறுமையின் கீழ் இயங்கி வந்த பாடசாலைக்கு உதவிகளை செய்துள்ளார்.

தனது விடுமுறையைக் கழிக்கும் சீகிரியாவுக்கு சென்றுள்ள இவர் சீகிரிய உடவெலயாகம கனிஷ்ட பாடசாலைக்கு சென்று நிறப்பூச்சு பூசியதோடு வெண்பலகைகளையும் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்பவரே இவ்வாறு மாணவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.

தனது சொந்த செலவில் பாடசாலை கட்டடத்துக்கு தாமே நிறப்பூச்சு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, “எனது சுற்றுலாப்பயணத்தை விட இதுவே எனக்கு முக்கியம்” என டேவிட் தெரிவித்துள்ளார்.

பின்னர் பாடசாலை மாணவர்களுடன் தனது பொழுதினையும் செலவிட்டுள்ளார். அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில்!!

சர்வதேச பொருளாதார அமைப்பின் தொடக்க விழா இங்கிலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதியளவு 8 கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 6 பேர் அமெரிக்க வர்த்தகர்கள், ஒருவர் ஸ்பெயின் மற்றையவர் மெக்சிகோவைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டது.
இந்த 8 பேரில் முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். அவரது சொத்து மதிப்பு 743 கோடி டொலர்களாகும்.

அவரைத் தொடர்ந்து ஸ்பெயினின் அமான்சியோ ஆர்டேகா சொத்து மதிப்பு (663 கோடி டொலர்கள்) 2 ஆவது இடத்திலும், அமெரிக்காவின் வாசன் பப்பெட் (602 கோடி டொலர்கள்) 3 ஆவது இடத்திலும், மெக்சிகோவின் கார்லஸ் ஸ்லிம் ஹீலு (494 கோடி டொலர்கள்) 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் டாட் காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (448 கோடி டொலர்கள்), 5 ஆவது இடத்திலும், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷக்கர்பெர்க் (441 கோடி டொலர்கள்) 6 ஆவது இடத்திலும், ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டொலர்கள்) 7 ஆவது இடத்திலும், நியூயோர்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டொலர்கள்) 8 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதனால் உலக பொருளாதாரத்தில் சமநிலை இல்லாத சூழ்நிலை ஏற்படும் என உலக பொருளாதார அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள காணி அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!!

 
வவுனியா – ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுவத்தினரால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.

ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தின் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களை இராணுவத்தினர் அகற்றிய நிலையிலே இன்று குறித்த காணி வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்தன் பின்னர், குறித்த காணியின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதனையடுத்து, தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை இராணுவத்தினர் அகற்றிய நிலையில், இன்று 22 ஏக்கர் காணியை இராணுவத்தினர் வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

இதேவேளை, மிகுதியாகவுள்ள 2 ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் ஆட்சி ஏற்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.

காணி கையளிக்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் கா. உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்து : மூவர் படுகாயம்!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதி ஓழுங்கையில் இன்று ( 17.01.2017) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வைரவர் கோவில் வீதியுடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியொன்று சென்று கொண்டிருந்த சமயத்தில் வீதியில் நின்ற கப் ரக வாகனம் தீடீரேன பின் பக்கம் நோக்கி பயணித்தது. இதனால் கப் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கலவர பூமியாக மாறிய வவுனியா மத்திய பேருந்து நிலையம்!!(காணொளி)

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன், வவுனியாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று காலை அரச பேருந்து நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பேருந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இரு பகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பேருந்து ஒன்று அரச பேருந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே மோதல் தோன்றியது.

இதனிடையே வவுனியா வர்த்தகர் சங்கத்தினரும் பேருந்து தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் அரச பேருந்து சாரதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11.30 மணியளவில் பொலிஸாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பேருந்துக்களை செல்லவிடாமல் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் பேருந்துக்களுக்கு முன்னால் அமர்ந்து இருந்து வருகின்றனர். வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை வழிமறித்து தாக்கி வருகின்றனர்.

அதனால் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதிகளால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இரு பகுதியினரையும் அழைத்துச் சென்ற பொலிஸார் வரும்வரை வழிவிடமுடியாது என்று தெரிவித்து வீதியை மறித்து போக்குவரத்தை இடை நிறுத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானின் பிரதி நிதிகளும் பேருந்து நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பேருந்து சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இதனிடையே பொலிஸாருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வர்த்தகர் சங்கம் தனியார் அரச பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னைய நடைமுறையினை ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை பின்பற்றுமாறு பொலிஸார் அரச பேருந்து நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச பேருந்துகள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பேருந்துகள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது. எனினும் பெருமளவானவர்கள் இரு பகுதியிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொலிஸார் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பஸ் நிலையத்தில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

 
இன்று (17.01.2017) காலை அரச பேரூந்து நிலையத்திற்குச் சென்ற பொலிசார் அரச பேரூந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேரூந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பேரூந்து நிலையத்தில் நின்ற பேரூந்து சாரதிகள், நடத்துநர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இருபகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பேரூந்து ஒன்று அரச பேரூந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே மோதல் தோன்றியது.

இதனிடையே வவுனியா வர்த்தக சங்கத்தினரும் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் அரச பேரூந்து சாரதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரூந்து நிலையப்பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11.30 மணியளவில் பொலிசாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பேரூந்து சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேரூந்துக்களை செல்விடாமல் அரச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள் பேரூந்துக்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர்.

மேலும் அக்கறைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்து வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேரூந்து சாரதிகளால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இரு பகுதியினரையும் அழைத்துச் சென்ற பொலிசார் வரும்வரை வழிவிடமுடியாது என்று தெரிவித்து வீதியை மறித்து போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் பிரதி நிதிகளும் பேரூந்து நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பேரூந்து சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இதனிடையே பொலிசாருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வர்த்தகர் சங்கம் தனியார் அரச பேரூந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னைய நடைமுறையினை ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகும் வரை பின்பற்றுமாறு பொலிசார் அரச பேரூந்து ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச பேரூந்துகள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புதிய பேரூந்து நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பேரூந்துகள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12.20மணியளவில் இருந்து பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது. எனினும் பெருமளவானவர்கள் இருபகுதியிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொலிசார் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடாசாலையில் கால்கோல் விழா!!

 
வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடாசாலையில் கால்கோல் விழாவும் தைப்பொங்கல் நிகழ்வும் நேற்று (16.01.2017) பாடசாலையின் அதிபர் திருமதி கி.புனிதவதி தலமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களான கேசவன் மற்றும் சிவராசா ஆகியோருடன் தொண்டு நிறுவனத்தைதை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்ரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொது அமைப்புக்களை சேர்த அங்கத்தவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் கதானாயகர்களான ஆண்டு ஒன்றிற்கு புதிதாக வந்தமாணவர்களை கௌரவப்படுத்தி மலர்மாலை அணிவித்து அழைத்துவந்து அவர்களுக்கான பரிசுப்பொருட்களும் பிரதம சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

வவுனியாவில் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம்-04!!

 
பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் ஒழுங்கமைப்பில், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி திரு. சதீஸ்குமார் தலைமையில் நேற்றுமுன்தினம் (15.01.2017) மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி பெரியமடு பொதுநோக்கு மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக நெடுங்கேணி வர்த்தக சங்கத் தலைவர் திரு.தேவராசா (கடாபி) , இளைஞர் கழக வவுனியா நெடுங்கேணி பிரதேச சம்மேளன தலைவர் திரு.சஞ்சீவன், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ்,
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன், உறுப்பினர் கணேசலிங்கம் மாறன் ஆகியோருடன் கிராம சமூகமட்ட அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா விளையாட்டு கழகத்தின் ஆதரவில் கல்வியால் எழுவோம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு இங்கிலாந்தில் இருந்து அனுசரணை வழங்கிவரும் விளையாட்டுக்கழக தலைமைக்குழுவினரான கனகரத்தினம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன், செல்வரத்தினம் சுரேஸ், கருணாநிதி இனியன் ஆகியோருக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஸ்ரீராமாபுரம் உதயதாரகை இளைஞர் கழகத்தின் மைதான புனரமைப்பு!!

 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், காத்தார் சின்னக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உதயதாரகை இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பு திறப்பு விழா அண்மையில் உதயதாரகை இளைஞர் கழகத்தின் தலைவர் அருண்குமார் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ், இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு.ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், ரெலோ அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் திரு.புரூஸ் மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் தே.பிரகாஷ்கர், உறுப்பினர் கணேசலிங்கம் மாறன் ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து வெளிவந்த இருள்!!

ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே “இருள்”.

மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன் மற்றும் ஜே.தர்சன் ஜெயகணேஷ் நடிப்பிலும் தயாராகி வரும் இக் குறுந்திரைப்படத்துக்கு மு.கதிர்காமத்தம்பி ஒளிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளதுடன் ஜெறோன் இசையமைத்துள்ளார்.

சிறகுகள் கிறியேஷன் தயாரிப்பில் ஷியா விஷன் ஸ்ரூடியோ வழங்கும் இக்குறுந்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி தைப்பொங்கல் தினத்தன்று இணையத்தில் வெளியிடப்பட்டு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Siragukal Creation
Siya Vision Studio
Cast-S.Jathurshan , J.Tharshan Jeyaganesh
Cinematography- M.Kathirgamaththamby
Music-A j Jeron
Written & Directed – Poobalasingam Kesavan

வவுனியா செட்டிகுளம் பேரூந்திலிருந்து கழன்று விழுந்த மிதிபலகை!!

இன்று(17.01.2017) காலை வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து கங்கன்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது மிதிபலகை கழன்று விழுந்துள்ளது.

அதிகளவான பயணிகளை ஏற்றிய பேரூந்து வேகமாக பயணித்த போது வீதியிலுள்ள பள்ளம் ஒன்றில் இறங்கிய சந்தர்ப்பத்தில் மிதிபலகை கழன்றதாக தெரியவருகின்றது.

இவ் விபத்தில் மிதிபலகையில் பயணித்த மூவருக்கு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டதுடன் பெரியளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் பொங்கல் விழா!(படங்கள்)

பல்லினத் தன்மையை மற்றும் பல்லினத் தன்மையின் அழகை இரசிப்போம்” எனும் கல்வியமைச்சின் கருப்பொருளுக்கமைவாக  வவுனியா நெடுங்கேணி  மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழாவானது அதிபர் திரு.செ.பவேந்திரன் அவர்களின் தலைமையில் கடந்த  (11.01.2017) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழர்  பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கெண்டாடப்பட்ட இவ்விழாவில் தைப்பொங்கல் தொடர்பான சிறப்பான பல கருத்துக்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் எடுத்துக் கூறப்பட்டன.