23 வயது பெண்ணின் உயிரைப் பறித்த காதல் : காதலன் தப்பியோட்டம்!!

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், காதலனால் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்,

தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொல்லினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் செத்துப்போன மனித நேயம் : பாடசாலை சென்ற மாணவன் பரிதாப உயிரிழப்பு!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (5) யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான முருகசோதி சிறிபானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நோயாளர் காவு வண்டி மாணவர்களை கொண்டுசெல்ல வராததோடு, வீதியால் பயணித்த வேறு வாகனங்களும் மாணவர்களை ஏற்ற பின்வாங்கியுள்ளன.

நீண்ட நேர பரிதவிப்பின் பின்னர், அங்கிருந்தவர்கள் பட்டா ரக வாகனமொன்றில் மாணவர்களை ஏற்றி, மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார்.

அதேவேளை மகன் விபத்துக்குள்ளாகியிருப்பதை கண்டு, விபத்து இடம்பெற்ற இடத்தில் மயங்கி விழுந்த தாயொருவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல கேட்கப்பட்டபோதும், அவரை ஏற்றிச்செல்ல நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் மறுத்துவிட்டு, திரும்பிச் சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் கேள்வியுற்ற விபத்துக்குள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் காயமடைந்த இருவரையும் பட்டா ரக வாகனமொன்றில் ஏற்றி அங்கிருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும் மாணவன் உயிரிழந்திருந்த நிலையில் மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சகோதரன் மற்றும் மனைவியின் செயலால் 19 வயது யுவதி உயிர்மாய்ப்பு : தவிப்பில் பெற்றோர்!!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பனாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த யுவதியின் சகோதரனும் சகோதரனின் மனைவியும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சமூகத்தில் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த யுவதி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய், தந்தை, மகள் கொலை : பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

டெல்லியில் தாய், தந்தை, மகள் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (4) ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.

காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீசார், இந்த கொலை சம்பவம் பணம், நகைக்காக நடந்தப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவரை தவிர, மற்ற மூன்று பேரும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டிருப்பது பொலிசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. கன் அர்ஜுனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பொலிசாருக்கு வந்த சந்தேகம்

அத்துடன் அவருடைய கையில் புதிதாகக் காயம் காணப்பட்டதுடன், கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அர்ஜுனுக்கும் அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இவ்வாறு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் குறித்து வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. அப்போது, மகன் கீழ்படியவில்லை என தந்தை தண்டித்ததுடன், தனது சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைக் உள்ளதாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தந்தை, தாய், சகோதரி மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டு பெற்றோரின் 27வது திருமண நாளான நேற்று அரங்கேற்றியுள்ளார்.

இந்நிலையில் மகனே , தன் குடும்பத்தை கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது : இலங்கையில் கண்ணீரை வரவழைத்த சம்பவம்!!

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராத துயர சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்தேறியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த தாயின் உடலை , ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு,

ஹொரவபொத்தானை பொது மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இறந்த இந்த தாய் பல மாதங்கள் சிகிச்சைக்காக ஹொரவபொத்தானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாயாருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தும், நோய்வாய்ப்பட்ட தாயை பார்க்க யாரும் வரவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தாயார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் தாயின் சடலைத்தி கூட பிள்ளைகள் யாரும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது உடல் அரச செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹொரவபொத்தானை லேவசபிரி ஏரி கிராமத்தில் வசித்து வந்த இந்த தாய் இறந்துவிட்டதாக பிள்ளைகளுக்கு தெரிவிக்கப்பட்டதும் ஒரு பிள்ளை வந்து தாயாரை வந்து பார்த்ததாகவும், எனினும் பின்னை சொல்லாமல்கொள்லாமல் மருத்துமனையை விட்டு வெளியேறியதாகவு கூறப்படுகின்றது.

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இந்த தாய்க்கு மிகுந்த அன்பையும் அக்கறையையும் அவர் இறக்கும் வரை அளித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் ஐவர் இருந்தும் தாயின் மரணத்தில் கூட அவர்கள் பங்கெடுக்காத சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

 

தொடருந்து கடவையில் சிக்குண்டு விபத்துக்குள்ளான கார் : நால்வர் படுகாயம்!!

காலியில் (Galle) தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (03) இரவு ஏற்பட்டுள்ளது.

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று தொடருந்துடன் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி – சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் : பேருந்து நிலையத்தில் அமைதியின்மை!!

வவுனியா பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் நேற்றையதினம் (03.12) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் புறப்படுகின்ற நேரம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்!!

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் ஹீரோ முதற்கொண்டு, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

மேலும் நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேத்ரனின் மகள்கள் இருவருமே தற்போது திரையுலகில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தை கேன்சரால் போராடி வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக தன்னுடைய தந்தை புற்றுநோயில் இருந்து மீண்டு வருவார் என நப்புகிறோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர், வீட்டில் ஓய்வில் இருந்த நேத்ரன் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் சின்ன சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேத்ரன் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பொன்னி’ சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய மனைவி தீபா நேத்ரன், சன் டிவியில் ஒளிபரப்பாகி வேறு சிங்க பெண்ணே சீரியலில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நேத்ரன் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம்(04) தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,732 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 23,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

கட்டுநாயக்கவில் இருந்து சென்ற விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த வெளிநாட்டவரை விமான பணியாளர்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர் குடிபோதையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விமானத்தின் சீட் பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறித்த வெளிநாட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம்!!

களுத்துறையில் கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் உறவினர் என கூறப்படும் 17 வயதுடைய சிறுவனே தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரும் உயிரிழந்தவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் கத்தியால் குத்தியுள்ளார்.

இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்த போது, ​​அங்கு வந்த வயல் உரிமையாளர், சந்தேக நபரை தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியை பறித்துச் சென்றுள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம்!!

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 38 வயதான வயதான தாயே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் யானை தாக்கியதில் கடற்படை அதிகாரி மரணம்!!

வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் நேற்று இரவு (29.11) உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று திரும்பிய அதிகாரி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளது.

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்!!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நவம்பர் மாதம் முழுதும் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் ஆகியவற்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கான விலைத் திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

‘நீ அசைவம் சாப்பிட கூடாது காதலியை தொல்லை செய்த காதலன்’ விரக்தியில் பெண் விமானி எடுத்த விபரீத முடிவு!!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிருஷ்டி துலி (25) என்பவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரிய தொடங்கியதில் இருந்து, மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பயிற்சிக்காக டெல்லி சென்றபோது ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 25ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அன்று ஆதித்யா காரில் டெல்லி சென்றார்.

அப்போது, ​​சிருஷ்டி செல்போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆதித்யா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

நண்பர் ஒருவர் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​டேட்டா கேபிளில் சிருஷ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டார்.

உடனடியாக சிருஷ்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிருஷ்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆதித்யா சிருஷ்டியை அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது காதலியை அசைவ உணவு உண்ணக் கூடாது என்று வற்புறுத்தியதாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி ஆதித்யாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட் மாற்றிக் கொண்டு திருமணம் : பின்னணியில் இருக்கும் தந்தையின் பாசம்!!

திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24 -ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது.

திருமணத்தின் போது, மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு ஆகிய இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். பின்னர், மாலைக்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றி கொண்டனர்.

இதையடுத்து, திருமணத்திற்கு வந்த இளைஞர்களிடம், விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று மணமகன் பிரேந்திரன் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மணமகன் பேசுகையில், “என்னுடைய தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

என் தந்தையின் உயிரிழப்பு என் வாழ்க்கையில் மிகவும் ஆழமாக பாதித்தது. இதனால் இருச்சக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்த விழுப்புணர்வை மேற்கொண்டேன்” என்றார்.