ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்!!

ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல காத்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். கேகாலை, தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

தெதிகம பிரதேசத்தை சேர்ந்த அஷான் பிரபோத என்ற 27 வயதுடைய திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அடுத்த மூன்று வாரங்களுக்குள் ருமேனியாவில் வேலைக்குச் செல்லத் தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல், உயிரிழந்த இளைஞர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழுவினர் ஒரு இளைஞனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு நீராடச் சென்ற போது அஷான் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் : பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!!

மினுவாங்கொடை நகரில் ஏழரை கோடி ரூபாவை திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் பணப் பாதுகாப்பு வாகனத்தின் சாரதியாக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு திருடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கம்பஹா உகல்பொட பிரதேசத்தில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கீளுள்ள தொலைபோசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா பொலிஸ் நிலையம் – 0718591608/
0718591610

நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் தனியார் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேற உத்தரவு!!

யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றையதினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இராணுவம் வெளியேற உள்ளது.

அதேவேளை கடந்த மாதம், 30 வருடங்களாக மூடப்பட்டிருந்த வசாவிளான் – அச்சுவேலி வீதி மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி அனுர அரசாங்கம் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதியின் 3வது மாடியிலிருந்து மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சக மாணவிகளின் மனரீதியான துன்புறுத்தலே மாணவி அம்முவின் மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி அம்முவின் தந்தை, அவளது வகுப்புத் தோழிகள் மூன்று பேர் தொடர்ந்து தனது மகளைத் தொந்தரவு செய்ததாகவும், சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகும், அவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அம்மு கூறியதாக தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அம்மு சஜீவ் எனும் மாணவி, விடுதி கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டார். அம்மு சுட்டிப்பாரா எஸ்எம்இ நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். அம்முவை அவளுடைய தோழிகள் மனதளவில் துன்புறுத்தினார்கள்.

அம்மு ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவப் பயிற்சிக்காகச் சென்ற போது அம்முவுக்கும் அவளது வகுப்புத் தோழிகள் மூவருக்கும் இடையே சில சிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் அவள் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரால் துன்புறுத்தப்பட்டாள். தொல்லை தாங்க முடியாமல் விடுதியில் உள்ள வேறு அறைக்கு மாறினாள்.

காணாமல் போன புத்தகத்திற்காக அவளது பையை அங்கீகரிக்காமல் தேடியதும் அம்முவை மேலும் மனதளவில் காயப்படுத்தியுள்ளது.

இது குறித்த பிரச்னைகள் தொடர்ந்தபோது கல்லூரி கல்லூரியின் முதல்வரிடம் அம்மு புகார் அளித்தார். தன் வகுப்பு ஆசிரியர் அவளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தது அம்முவுக்குத் தெரியாது.

அவர் சுற்றுப்பயணத்திற்கு வரவில்லை என தெரிவித்திருந்தும் அந்த கும்பல் அவளை மிரட்டத் தொடங்கியிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது’ என அம்முவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த பத்தனம்திட்டா போலீசார், அவரது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டுள்ளன.

 

லண்டனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவத்தில் திருப்பம் : நாட்டைவிட்டு தப்பிய கணவர்!!

லண்டனில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்கு லண்டனில் பிரிஸ்பேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 24 வயதான ஹர்ஷிதாவின் சடலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, நார்தம்ப்டன்ஷைர் பொலிசார் கொலை விசாரணையைத் தொடங்கினர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சர்வதேச அளவில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக நார்தண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் ஹர்ஷிதாவின் கணவர் பங்கஜ் லம்பா எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.

ஹர்ஷிதாவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹர்ஷிதாவின் உடலை நார்தாம்ப்டன்ஷையரில் இருந்து இல்ஃபோர்டுக்கு காரில் லம்பா கொண்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அவர் தற்போது நாட்டை விட்டு ஓடிவிட்டார் என நம்புகிறோம். அத்துடன் பங்கஜ் லம்பாவின் புகைபடத்தையும் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். உடற்கூராய்வில், ஹர்ஷிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

அத்துடன், ஹர்ஷிதா முன்பு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் இது தொடர்பில் நார்த்தாம்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடியவர் என்பதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை!!

பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாக சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் மருத்துவமனையில்!!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக. இன்று (18) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏ 35 பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த, மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முச்சக்கர வண்டியில் கருநாகம் : அழையா விருந்தாளியால் அதிர்ந்த சாரதி!!

முச்சக்கர வண்டியின் டயஸ் போட்டிற்குள் மறைந்திருந்த விஷம் நிறைந்த கருநாகம் பாம்பு, வாகனம் திருத்துநரின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (17) அன்று சிறுவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்றபோது பயணத்தின் இடையில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் மயிலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து பாம்பை அவதானித்த சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.

உடனடியாக வாகனம் திருத்துநரை வரவழைத்து வண்டியின் முன் பகுதியை கழட்டி பாம்பை வெளியே எடுத்து காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.

அதேவேளை கவனயீனமாக சாரதி இருந்திருந்தால் சாரதியை விஷப்பாம்பு தீண்டியிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுரவின் கீழ் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுக்கள்!!

இலங்கையில் 22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதி அனுரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் 5 வருடம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் வெளியிட்ட கருத்து!!

அடுத்து வரும் 5 வருடமும் எப்படி செயற்படுகின்றேன் என்பதை பார்ப்பீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன். இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர். அதற்கு பல காரணம் உள்ளது.

எனக்கு எதிரான போலிப் பிரசாரங்களை எதிர்க் கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர். அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

எனது தொழில் அரசியல் அல்ல. நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தராக செயற்படும் எண்ணத்தில் இருந்தேன்.

இந்நிலையில். வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்படக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.

என்மீது கட்சி வைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான எனது சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்.

அந்தவகையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கும் நன்றிகள்.கட்சிக்கும் நன்றிகள். இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன். அது பொதுச்சபையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒரு விடயம். அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்படவில்லை“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்குத் தெரிவு!!

பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தைச் சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டில் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்குத் தேசியப் பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும்.

2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

தேசிய மக்கள் சக்தி – 13 தமிழர்களின் பெயர் விபரங்கள்

01. கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041

02. அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201

03. கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856

04. கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102

05. எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430

06. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579

07. சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379

08. கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346

09. எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)

10. அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368

11. செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652

12. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)

13. இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்)

சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள ஜேவிபி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

அதற்கான ஒப்புதல் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுசந்த குமார கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் 76 வருடங்களாக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவதால், தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் கவிழாது எனவும் சுசந்த குமார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18.11) காலை நடைபெற்றது.

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் : விபரங்கள் உள்ளே!!

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ல நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமனம் இடபெற்றுகின்றது.

அந்தவகையில் முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளி கலைவிழா -2024

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளி கலைவிழா

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலைவிழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் பூங்கோதை செல்வராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நகரசபை செயலாளர் அரசரட்ணம் பாலகிருபன் , வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ரமேஷ் ரட்ணதேவி , வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை அதிபர் துவாரகேசன் கார்த்திகா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம சேவையாளர் சபாஸ் வவித்திரா , முன்னாள் கிராம சேவையாளர் கந்தையா விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையுடன் விருந்தினர்களாக முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் , பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.