வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது.

முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் (23.10.24) அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போதும் உறவினர்கள் பார்வையிட்டுள்ளார்கள். அதன் பின்னர் 06.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வவுனியா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது அவர் நன்றாக இருந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி பிள்ளைகள் அறிந்து அங்கு சென்று பார்வையிட்ட போது அவர் பேச்சற்ற நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கைதியினை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது கைதி தொடர்பில் எந்த தகவலும் பொலிஸாரால் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸார் ஏற்கனவே குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா சிறைச்சாலை பொலிஸார் குற்றம் சாட்ட முள்ளியவளை பொலிஸார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனை விட தீவிர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் மருத்துவரிடம் விசாரித்த போது அவரது மூளை சாவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒருவாரமாக மூளை சாவடைந்த நிலையில் குறித்த கைதி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கட்டு வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த 13 ஆம் திகதி சென்றபோது அவர்கள் 18ஆம் திகதி திங்கட் கிழமைதான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.

இந்த கைதியின் உயிரிழப்பு குறித்து மனைவி பிள்ளைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் சிறைச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இவரின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

வவுனியாவில் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்!!

வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நேற்றையதினம் குறித்த சிறுவன் கிணற்றுப் பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளார். இதன்போது தவறி உள்ளே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து!!

கேகாலை, ரம்புக்கனை நகரத்திற்கு அருகில் பேருந்து ஒன்று மோட்டார்சைக்கிளை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (16.11) காலை இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் : பலர் படுதோல்வி!!

 

பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 160இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் சபையின் முதல் நாள் பணிகள் ஆரம்பமாகும்.

செங்கோல் வைத்த பின்னர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் திகதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றைய தினம் முதல் பணியாக பொதுச் செயலாளரால் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 இன் விதிகளின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்வார்கள் அதனை துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும்.

தேர்தல் வாக்களிப்பு மூலம் 196 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாக மொத்தம் 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில்,

  1. சுசில் பிரேமஜயந்த
  2. அனுர பிரியதர்ஷன யாப்பா
  3. நிமல் சிறிபால டி சில்வா
  4. மகிந்த அமரவீர
  5. ரொஷான் ரணசிங்க
  6. டக்ளஸ் தேவானந்தா
  7. டீ.பி.ஹேரத்
  8. ரோஹன திசாநாயக்க
  9. சரத் வீரசேகர
  10. புத்திக பத்திரன
  11. சன்ன ஜயசுமன
  12. திஸ்ஸ குட்டியாராச்சி
  13. நிபுண ரணவக்க
  14. எம்.ஏ.சுமந்திரன்
  15. மனோ கணேசன்
  16. எஸ்.எம். சந்திரசேன
  17. துமிந்த திசாநாயக்க
  18. அசங்க நவரத்ன
  19. ஷாந்த பண்டார
  20. பிரமித்த பண்டார தென்னக்கோன்
  21. அரவிந்தகுமார்
  22. வடிவேல் சுரேஷ்
  23. ஷசீந்திர ராஜபக்ஷ
  24. ரமேஷ் பத்திரன
  25. மனுஷ நாணயக்கார
  26. கஞ்சனா விஜேசேகர
  27. செல்வராசா கஜேந்திரன்
  28. ஹரின் பெர்னாண்டோ
  29. ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய
  30. பவித்திரா வன்னிஆராச்சி
  31. ரஞ்சன் ராமநாயக்க
  32. திலும் அமுனுகம
  33. உதய கம்மன்பில
  34. நிமல் லன்சா
  35. பிரசன்ன ரணவீர
  36. அஜித் ராஜபக்ச
  37. அருந்திக்க பெர்னாண்டோ
  38. ஜானக்க வக்கும்புர
  39. பிரேமலால் ஜயசேகர
  40. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
  41. சிவநேசதுரை சந்திரகாந்தன்
  42. அங்கஜன் ராமநாதன், உட்பட பலர் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 20 பெண் உறுப்பினர்கள்!!

2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹரிணி அமரசூரிய, கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பெண் பிரதிநிதித்துவம்

  • தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க
  • பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல்
  • நிலாந்தி கோட்டஹச்சி
  • களுத்துறை மாவட்டத்தில் ஓஷானி உமங்கா
  • மாத்தறை மாவட்டத்தில் சரோஜா போல்ராஜ்
  • இரத்தினபுரி மாவட்டத்தில் நிலுஷா கமகே
  • கேகாலை மாவட்டத்தில் சாகரிகா அதாவுத
  • புத்தளம் மாவட்டத்தில் ஹிருணி விஜேசிங்க
  • மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி
  • கண்டி மாவட்டத்தில் துஷாரி ஜயசிங்க
  • காலி மாவட்டத்தில் ஹசர லியனகே
  • மாத்தளை மாவட்டத்தில் தீப்தி வாசலக
  • யாழ் மாவட்டத்தில் ராசலிங்கம் வெண்ணிலா

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய முன்னாள்,

  • அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல,
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகி உள்ளனர்.

அநுர அரசின் புதிய பிரதமர் யார்?

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமகால பிரதமரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!!

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தெலிஜ்ஜவில கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், காலி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ரயிலுக்கான சமிஞ்ஞை ஒளிரும் வேளையில் ரயில் வருவதாக அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதியான 34 வயதான நபரும் அவரது 80 வயதான தாத்தாவுமே உயிரிழந்தனர் விபத்தில் காயமடைந்த உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) பிற்பகல் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை பெல்லங்கடவல கிளை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கினிஹிரிகம, கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு மக்களின் நிராகரிப்பால் 4ஆசனங்களை இழந்த தமிழரசுக்கட்சி!!

நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிருந்தது. அவ்;வகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெற்று தமிழரசு கட்சிக்கு மொத்தமாக ஏழு ஆசனங்களுடன் ஒரு தேசிய பட்டியல் ஆசனமுமாக எட்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற மூன்றாவது கட்சியாக இலங்கை தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்று பதிவாகும்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறைத் தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்றுள்ளது. அவ்வகையில் 69355 வாக்குச்சரிவுகளை எதிர்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் 2020இல் 9ஆசனங்களுடன் தேசியப்பட்டியல் ஆசனமொன்றுமாக 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி இம்முறை 7ஆசனங்களுடன் தேசியபட்டியல் ஆசனமொன்றுமாக எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அவ்வகையில் கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது. கடந்த காலங்களில் பல கட்சிகள் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிருந்தது.

இம்முறை தமிழரசுகட்சியாக மட்டுமே தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2020 தேர்தலில் அதிகூடிய வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்டு 3ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இம்முறை இரண்டாவது கட்சியாகவே குறித்த மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தினை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணமாவட்டத்தில் 2ஆசனங்களை இழந்துள்ளது. அதேபோன்று 2020இல் வன்னி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இம்முறை மூன்றாம் நிலை வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தினையே பெற்றுள்ளது. இதனடிப்படையில் இரு ஆசனங்களை இங்கும் இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020இல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

இம்முறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் ஓர் ஆசனம் மேலதிகமாக இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 2020இல் ஓர் ஆசனத்தினைப் பெற்றுக்கொண்ட தமிழரசுகட்சி இம்முறையும் அவ்வாசனத்தினை தக்க வைத்துள்ளது.

கடந்த வருடம் திகாமடுல்ல மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தினையும் பெற்றுக்கொள்ளாத தமிழரசுக்கட்சி இம்முறை ஓர் ஆசனத்தினைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் 2020இல் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுகட்சிக்கு மூன்று ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆனால் இம்முறை ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ளன. வடக்கு மாகாணத்தில் ஆறு ஆசனங்கள் 2020இல் கிடைக்கப்பெற்றன.

ஆனால் இம்முறை இரு ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாணத்தில் 4ஆசனங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.

இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி தோல்வியை தழுவியுள்ளமை புலனாகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வருகைதந்த ஆறு ஆசனங்களும் இம்முறையும் கிடைத்திருந்தால் தேசிய பட்டியல் உட்பட 12ஆசனங்களை தமிழரசுகட்சி பெற்றிருக்கும்.

நாட்டில் இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டல நிலைமை மேலும் சாதகமாக இருப்பதால் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலத் திணைக்களத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல்முறை : நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!!

நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.

12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து அம்பிகா சாமுவேல், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஸ்ணன் கலைச்செல்வியும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மலைய பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்புமுனையாக உள்ளது .

அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுரவை கடவுளாக மாற்றிய இலங்கையர்கள்!!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பரும் எதிர்பாராத பெரு வெற்றியை பெற்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியது.

ஜேவிபி இன் தலைவர் அனுரகுமார ,ஜனாதிபதிதியாக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஜனாதிபதியாக விளங்குகின்றார்.

இந்நிலையில் நேற்றையதினம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அனுரகடி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அனுரவிற்கு சூடம் ஏத்தி வழிபாடு செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முதல்முறையாக இரண்டு மலையகப் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு!!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு மலையக பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

பல ஆண்டுகளாக அரசியல் செய்யும், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகளால் முடியாத ஒன்றை தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி சாதித்துக் காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட கிருஷ்ணன் கலைச்செல்வி 33,346 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அதேபோல மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜ் 148,379 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இப் பெண்கள் இருவரும் மலையகத்தின் உரிமைக் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் முழுமையான விபரங்கள்!!

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி – 14

1. ஹரினி அமரசூரிய -655,289

2. சதுரங்க அபேசிங்க -127,166

3. சுனில் வட்டகல -125,700

4. லக்ஸ்மன் நிபுணராச்சி – 96,273

5. அருண பனாகொட -91,081

6. எரங்க குணசேகர -85,180

7. ஹர்ஷன நாணயக்கார – 82,275

8. கௌசல்யா ஆரியரத்ன – 80,814

9. அசித நிரோஷன் -78,990

10. மொஹமட் ரிஸ்வி சாலி – 73,018

11. சுசந்த தொடவத்த – 65,391

12. சந்தன சூரியராச்சி – 63,387

13. சமன்மலி குணசிங்க – 59,657

14. தேவானந்த சுரவீர – 54,680

ஐக்கிய மக்கள் சக்தி – 04

1. சஜித் பிரேமதாச – 145,611

2. ஹர்ஷ டி சில்வா – 81,473

3. முஜிபுர் ரஹ்மான் – 43,737

4. எஸ். எம். மரிக்கார் – 41,482

குருநாகல்

குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் கருணாரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 12 ஆசனங்கள்

1. நாமல் கருணாரத்ன – 356,969

2. ஆனந்த விஜேபால – 133,142

3. சுஜீவ இந்திக திஸாநாயக்க – 109,979

4. விஜேசிறி பண்டாரநாயக்க – 86,218

5. கீதா ஹெராத் – 84,414

6. நாமல் சுதர்சன – 83,418

7. ஜகத் குணவர்தன – 81,864

8. அசோக குணசேன – 72,216

9. ஜி. டி. சூரிய பண்டார – 72,198

10. சந்தன பண்டார தென்னகோன் – 70,038

11. தர்மப்பிரிய திஸாநாயக்க – 68,580

12.மொஹமட் அஸ்லம் – 67,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்

1. நளீன் பண்டார – 58,971

2. தயாசிறி ஜயசேகர – 51,402

3. அலவத்துவல சந்திரவன்சா – 46,915

இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்

1. சாந்த பத்மகுமார – 137,965

2. எஸ். பிரதீப் – 112,711

3. ஹினிதும சுனில் செனவி – 76,505

4. ஜனக சேனாரத்ன – 74,068

5. சுனில் ராஜபக்ச – 58,138

6. உபுல் கித்சிரி – 55,726

7. வசந்த புஷ்பகுமார – 52,841

8. நிலுஷா கமகே – 48,791

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்

1. ஹெஷான் விதானகே – 54,850

2. வருண பிரியந்த லியனகே – 44,705

3. பாலசூரியகே ஆரியவங்ச – 26,760

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

1. தம்மிக்க பட்டபெந்தி – 186,409

2. கோசல ஜயவீர – 61,713

3. சாகரிகா அதாவுத – 59,019

4. மனோஜ் ராஜபக்ச – 54,173

5. நந்தன மில்லகல – 49,635

6. காஞ்சனா வெலிபிட்டிய – 45,723

7. நந்த பண்டார – 45,115

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1. கபீர் ஹாஷிம் – 36,034

2. சுஜித் சஞ்சய் பெரேரா – 26,164

புத்தளம்

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 06 ஆசனங்கள்

1. சந்தன அபேரத்ன – 113,334

2. அஜித் கிஹான் – 58,183

3. கயான் ஜானக – 51,233

4. ஹிருனி விஜேசிங்க – 44,057

5. எண்டன் ஜயக்கொடி – 43,907

6. மொஹமட் பைசல் – 42,939

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1. ஹெக்டர் அப்புஹாமி – 25,755

2. ஜனத் சித்ரல் – 18,916

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 02 ஆசனங்கள்

1. அருண் ஹெட்டியாராச்சி – 38,368

2. ரொஷான் அக்மீமன – 25,814

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 01 ஆசனம்

1.இம்ரான் மஹ்ரூப் – 22,779

இலங்கை தமிழரசு கட்சி – 01 (ITAK)

1.சண்முகம் குகதாசன் – 18,470

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 04 ஆசனங்கள்

1.மஞ்சுள சுரவீர – 78,832

2.மதுர செனவிரத்ன – 52,546

3.ஆர்.ஜி. விஜேரத்ன – 39,006

4.கிருஷ்ணன் கலைச்செல்வி – 33,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1.பழனி திகாம்பரம் – 48,018

2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273

ஐக்கிய தேசிய கட்சி – 01(unp)

1.ஜீவன் தொண்டமான் – 46,478

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்

1. நளிந்த ஜயதிஸ்ஸ – 371,640

2. நிலந்தி கொட்டஹச்சி – 131,375

3. நிஹால் அபேசிங்க – 96,721

4. சஞ்சீவ ரணசிங்க – 78,832

5. தனுஷ்கா ரங்கநாத் – 74,502

6. ஓஷானி உமங்கா – 69,232

7. சந்திமா ஹெட்டியாராச்சி – 50,509

8. நந்தன பத்மகுமார – 50,452

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1. அஜித் பெரேரா – 43,975

2. ஜகத் வித்தான – 43,867

புதிய ஜனநாயக முன்னணி – 01(NDF)

1. ரோஹித அபேகுணவர்தன – 10,204

அநுராதபுரம்

அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த சமரசிங்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்

1. வசந்த சமரசிங்க – 251,639

2. சேனா நாணயக்கார – 86,150

3. சுசில் ரணசிங்க – 72,508

4. சுசந்த குமா – 71,695

5. பாக்ய ஸ்ரீ ஹேரத் – 63,551

6. பி.டி.என்.கே. பலிஹேன – 52,507

7. திலின சமரக்கோன் – 49,730

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1. ரோஹன பண்டார – 46,399

2. சுரங்க ரத்நாயக்க – 24,348

கண்டி

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்தா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1 லால் காந்தா -316,951

2 ஜகத் மனுவர்ண -128,678

3 மஞ்சுள பிரசன்ன -94,242

4 முடித விஜேமுனி -82,926

5 ஹர்ஷன திஸாநாயக்க – 78,526

6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929

7 ரியாஸ் மொஹமட்-64,043

8 துஷாரி ஜயசிங்க -58,223

9 மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1 ரவூப் ஹக்கீம் -30,883

2 சமிந்திரனி கிரியெல்ல -30,780

புதிய ஜனநாயக முன்னணி – (NDF)

1.அனுராதா ஜயரத்ன – 20,749

மொனராகலை

மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ஆர். எம். ஜயவர்த்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எச்.எம். தர்மசேனா – 20,171 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்

1. ஆர். எம். ஜயவர்த்தன – 105,107

2. அஜித் பிரியதர்ஷன் – 54,044

3. சதுரி கங்கானி – 42,930

4. ருவான் விஜேவீர – 40,505

5. சரத்குமார் – 39,657

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. எச்.எம். தர்மசேனா – 20,171

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி

1. இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458

2. ஞானமுத்து சிறீநேசன் – 22,773

3. இளையதம்பி சிறிநாத் – 21,202

தேசிய மக்கள் சக்தி

1. கந்தசாமி பிரபு – 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 32,410

குறித்த ஐவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்

1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652

2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

1. துரைராசா ரவிகுமார் – 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்

1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்

1. காதர் மஸ்தான் – 13,511

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் – 32,102

2. சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430

3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்

1. சிவஞானம் சிறீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்

1. இராமநாதன் அர்ஜுனா – 20, 487

மாத்தளை

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன – 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. கமகெதர திஸாநாயக்க – 100,618

2. சுனில் பியன்வில – 56,932

3. தீப்தி வாசலகே – 47,482

4. தினேஷ் ஹேமந்த பெரேரா – 43,455

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. ரோகினி கவிரத்ன – 27,945

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. சுனில் ஹதுனெத்தி- 249,251

2. சரோஜா போல்ராஜ் – 148,379

3. எல்.எம் அபேவிக்ரம – 68,144

4. அக்ரம் இல்யாஸ்- 53,835

5. கம்மெத்தகே அஜந்த – 48,820

6. லால் பிரேமநாத் – 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. சதுர கலப்பத்தி – 32,196

காலி

காலி மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஏழு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.

அதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு

1. நளின் ஹேவகே – 274,707

2. ரத்ன கமகே – 113,719

3. நயனதாரா பிரேமதிலக- 82,058

4. நிஷாந்த சமரவீர – 76,677

5. திலங்கா ருக்மல் – 74,143

6. நிஷாந்த பெரேரா – 71,549

7. டீ.கே.ஜயசுந்தர – 58,761

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. கயந்த கருணாதிலக்க – 36,093

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண(SLPP)

1. சானக சம்பத் – 8,447

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வௌியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் நிஹால் கலப்பத்தி , மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

1. நிஹால் கலப்பத்தி – 125,983

2. அதுல ஹேவகே -73,198

3. சாலிய மதாரசிங்க – 65,969

4. அரவிந்த விதாரண – 48,807

5. பிரபா செனரத் – 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. திலிப் வெதஆரச்சி – 23,514

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP)

1. டீ.வி.சானக்க – 16,546

பதுளை

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா – 208,247

2. கிட்ணன் செல்வராஜ் – 60,041

3. அம்பிகா சாமுவேல் – 58,201

4. ரவீந்திர பண்டார – 50,822

5. சுதத் பலகல்ல – 47,980

6. டினிந்து சமன் – 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே – 35,518

2. சமிந்த விஜேசிறி – 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359

பொலன்னறுவை

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விரு்ப்பு வாக்குகள் விபரம்

1. டீ.பி.சரத்- 105,137

2 ஜகத் விக்கிரமரத்ன – 51,391

3 சுனில் ரத்தினசிரி – 51,077

4 பத்மசிறி பண்டார – 45, 096

5. கிங்க்ஸ் நெல்சன் – 28,682

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்த பிரதமர் ஹரிணி!!

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன.

இதற்கு முன்னர், நாடாளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற இலங்கையின் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணப்பட்டார்.

அவர், கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் 527,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சாதனையை இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமர் ஹரிணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர், பெற்ற வாக்குகள் முழுமையான விபரம்!!

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 39894 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பாக கால்நடை வைத்தியர் செ.திலகநாதன் மற்றும் ஆசிரியர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 32232 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் றிசாட் பதியுதீன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி 29711 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் துரைராஜா ரவிகரன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 21102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் செல்வம் அடைக்கலநாதன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் கட்சி 17710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் காதர் மஸ்தான் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியிலிருந்து இம்முறை வைத்தியர் செ.திலகநாதன், ஆசிரியர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் து.ரவிகரன் ஆகிய மூவரும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முழுமையான விபரத்திற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துக…

வன்னி தேர்தல் தொகுதி இறுதி முடிவு

வன்னி தேர்தல் தொகுதி தபால்மூல வாக்களிப்பு

வவுனியா இறுதி முடிவு

முல்லைத்தீவு இறுதி முடிவு

மன்னார் இறுதி முடிவு

 

வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி!!

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி தமிழரசுக் கட்சி 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் படுதோல்வியடைந்துள்ளது. இதன்படி..

தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் கட்சி 8354 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தேசியக் கூட்டணி 6556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 5575 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

வவுனியா தேர்தல் தொகுதி முழுமையான முடிவுகளை பார்வையிட இங்கு அழுத்தவும்