பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!!

Jeyakanthan

தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் ‘ஞானபீட’ விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் நேற்று(08.04) காலமானார்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று (8.4.2015) காலமானார்.

யாருடைய சாயலும் இல்லாமல் தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டு, எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே எழுதுவதை நிறுத்தி கொண்டிருந்த ஜெயகாந்தன், கடந்த பல மாதங்களாகவே உடல்குன்றியிருந்து வந்து, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் நேற்று பிரிந்தது.

1934ல் கடலூரில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார் ஜெயகாந்தன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ கட்சியின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949 ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப்பட்டது. ஆதலால் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார்.

இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராஜருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது – சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.

இவரது நாவல்களான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகியவை இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாக வந்தன. ‘ஊருக்கு நூறு பேர்’ என்ற கதையை இயக்குநர் லெனின் திரைப்படமாக்கினார். ’உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இவரே இயக்கினார். சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.

சாகித்திய அகாதமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர் நேற்று 8.4.2015 இரவு 9 மணிக்கு காலமானார்.

“இசைமுரசு” நாகூர் ஹனீபா காலமானார்!!

Haneeba

“இசைமுரசு” நாகூர் ஹனீபா (90) சென்னையில் நேற்று காலமானார். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா.

குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் ஹனீபா. அதுவும் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா….. ஓடி வருகிறான் உதயசூரியன் போன்ற எண்ணற்ற பாடல்கள் தி.மு.க. கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாதவை.

96 வயதான நிலையில் முதுமை காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நாகூர் ஹனீபா காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா : எச்சரிக்கை!!

British

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள இந்திய, சீன உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் கழுவுமிடங்களில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.

விசா காலம் முடிந்த பின்னரும், அங்கேயே சட்ட விரோதமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், பிரித்தானிய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நடத்தும் உணவகங்களில், அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தினமும் சராசரியாக, 40 வெளிநாட்டினர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து, தலா 18.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

யாழில் தூய நீருக்கான உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது!!

யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரைப்பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு கிழமைக்குள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தூயநீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு முன்னர் இன்று வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடமிருந்து சாதகமான கடிதம் ஒன்று சற்றுமுன்னர் போராட்டக்காரர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் போராட்டக்காரர்கள் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எதுவும் கொடுக்கப்பட்டருக்கவில்லை என்றும், அதன் காரணமாக அந்தக் கடிதத்தைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

J1 J2 J3 J4

ரயிலில் மோதுண்டு இளைஞர் பரிதாபமாக பலி!!

Accident

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தவுள்ள “தமிழ் மாருதம் 2015”!!(அழைப்பிதழ் இணைப்பு)

வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் “தமிழ் மாருதம் 2015” வரும் பன்னிரெண்டாம் திகதி (12.04) வவுனியா கலாசார மண்டபத்தில் காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் இயல் விழா எனும் மிகப் பெரிய விழாவினை நடாத்தி வவுனியா மண்ணில் சரித்திரம் படைத்த தமிழ் மாமன்றம் இம்முறை, முத்தமிழினையும் பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பாடசாலை மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை அரங்கேற்றவுள்ளது.

“தமிழ் மாருதம் 2015” இற்கான ஊடக அனுசரணையை சக்தி வானொலி வழங்கவுள்ளனர். அனைவரையும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வவுனியா தமிழ் மாமன்றத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

“தமிழால் வையகத் தலைமை கொள்வோம்”

11 12

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிதம்பரபுரம் நலன்புரிநிலையமே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எமது வாழிடமாகவுள்ளது. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் தினம் தினம் போராடியே நாம் வாழ்கின்றோம்.

எமக்கு அப் பகுதியில் உள்ள காணிகளை வழங்குவதாக பல தடவைகள் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வாக்குறுதி வழங்கினர். ஆனால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எமக்கு விடிவு கிடைக்கும் என ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தோம். ஆனால் இன்று வரை கதை சொல்கிறார்களே தவிர எமக்கு தீர்வைத் தரவில்லை.

எனவே, எமக்கு காணி வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி அந்த மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் அதன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் சென்று அரச அதிபரை சந்திக்க முற்பட்டனர். எனினும் பொலிஸார் அனுமதி வழங்காமையால் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக ஐவரை வவுனியா மாவட்ட அரச அதிபரை சந்தித்து அவர்கள் பிரச்தினைகளை தெரியப்படுத்த பொலிஸார் அனுமதித்தனர்.

21

விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம் : முரளிதரன்!!

Murali

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன்..

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சூழ்நிலையை பொறுத்து எப்படி பந்து வீச வேண்டும் என பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்குவதே எனது பணி.

சன் ரைசர்ஸ் அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் நான் இதுவரை கற்றுக் கொண்டதில் இருந்து ஒரு சில அறிவுரைகளை மட்டும் வீரர்களுக்கு அளித்தால் போதும் என்று நினைக்கிறேன்.

அணியில் உள்ள லெக் ஸ்பின்னர் கரண் சர்மா மற்றும் ஓப் ஸ்பின்னர் பர்வீஸ் ரசூல் இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்கள்.

இருவருக்கும் ஒரு நாள் போட்டிக்கான அணிகளில் விளையாட போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு இங்கே நல்ல வாய்ப்பு உள்ளது.

இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த அடித்தளமாக உள்ளது. இந்திய உள்நாட்டு வீரர்கள் சர்வதேச தொடர்களில் சாதிக்க இது உதவும். விளையாடும் வாய்ப்பை இழந்தது எனக்கு எப்போதும் வருத்தம்தான்.

சென்ற வருடம் வரை நான் விளையாடினேன். ஆனால் இனி விளையாடுவது சரியாக இருக்காது. விளையாடுவதில் இருந்து பயிற்சியளிப்பது என்பது முற்றிலும் மாறுபட்டது.

வீரர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் இறுதியில் எல்லாமே வீரர்களின் கையில் தான் உள்ளது. அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

1990 மற்றும் 2000ம் ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது கிரிக்கெட்டில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டு பந்து வீச வேண்டும். தூஸ்ரா வகை பந்து வீச்சுக்கும் கூட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில விதிமுறைகள் உள்ளன.

பந்து வீசும் போது முழங்கையை 15 பாகைக்கு மேல் வளைத்து பந்து வீச கூடாது என்ற விதி உள்ளது. ஒரு பந்துவீச்சாளர் தூஸ்ரா வீசக்கூடாது என்று எந்த விதிமுறையும் கிடையாது. அதனால் பந்துவீச்சாளர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு, விதிமுறைகளை பின்பற்றி பந்து வீச வேண்டும்.

ஆனால் விக்கெட் விழுவதை விட ரன்கள் குவிக்கப்படுவதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் பந்துகளை அடித்து நொறுக்குவதை ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதை ரசிகர்கள் விரும்புவதில்லை. இது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது என முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களாக சவுதியில் அடைபட்டிருந்த இலங்கைப் பெண் நாடு திரும்புகிறார்!!

SL

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை நாடு திரும்புகிறார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற இந்தப் பெண்ணை விடுவிக்க முடிந்துள்ளது. குறித்த பணிப்பெண் அவர் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டார்.

1999ல் மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்றின் ஊடாக பணிப்பெண்ணாகச் சென்ற குறித்த பெண் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினார். அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இந்த பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இவரைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் உத்தரவின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இவரை இலங்கைக்கு அழைத்துவர சகல ஏற்பாடுகளையும் செய்தது.

அத்துடன் 18 வருடங்களுக்கான இவரது சம்பளத் தொகை 52,000 சவுதி ரியால்கள். இலங்கை பெறுமதியில் 18 லட்சம் ரூபா. இத்தொகையை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்டு இப்பெண்ணிடம் கையளிக்கப்படும்.

இதற்கான காசோலை இன்று புதன்கிழமை காலை அமைச்சரின் தலைமையில் குறித்த பெண்ணிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம்!!

BODY

திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர், ஆந்திர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம் காரணப்படுகிறது.

ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுவதால் ஆந்திரா செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர பொலிசார் நேற்று சுட்டுக் கொன்றனர். கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உடல்கள், ஆந்திர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதிக பணம் தருவதாக தமிழக தொழிலாளர்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தலுக்காக சிலர் பயன்படுத்தியதாகவும் கூறி மலைவாழ் மக்களும். இறந்தவர்களின் உறவினர்களும் குற்றம் சாட்டியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் பதற்றம்

ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக, ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவை நடந்து வருகின்றன. இதனால், தமிழகத்திற்கான பஸ் போக்குவரத்தை ஆந்திர அரசு இன்று நிறுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த துவாக்குடியில் ஆந்திர சுங்கச்சாவடி மீது 15 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சுங்கச்சாவடியின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஆந்திரா கலாச்சார கழகத்தையும் பல்வேறு அரசியல் கட்சிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

உள்துறை அமைச்சகம் உத்தரவு

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து இது தொடர்பாக ஆந்திர அரசு அறிக்கை தர வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் பலியானவர்களின் விபரம், தாக்குதல் நடந்த இடும், தாக்குதல் நடத்தியவர்கள் விபரம், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்களுடன் நால்வர் கைது!!

Helmet

பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு,

ஹிக்கடுவ பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தெஹிவளை அத்திடிய தனியார் வங்கி கொள்ளை, பிலியந்தல, அத்துருகிரிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டோர் தலைகவசங்களை அணிந்தே கொள்ளையிட்டுள்ளனர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 217 குற்றச் செயல்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்த நபர்களினாலே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வருடம் மார்ச் மாதம் மாதம் வரையில் 221 குற்றச் செயல்கள் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு மார்ச் மாதம் 21ம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத் தடை தொடர்பான சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. குறித்த திட்டத்தை செயற்படுத்த எதிர்வரும் 28ம் திகதி வரை இத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Fruits

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

வாழைப்பழம்

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.

தர்ப்பூசணி

கோடையில் கிடைக்கும் தர்ப்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்(Lycopene), விட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்

தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

கரட்

ஆண்கள் கண்டிப்பாக தினம் ஒரு கரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

தோல்விக்கு நான் இழைத்த தவறுகளே காரணம் : மஹிந்த ராஜபக்ஷ!!

Mahinda

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய சில தவறுகளால் தோல்வியை தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் விருப்பத்தில் தற்போது நாட்டில் ஆட்சி நடைபெறவில்லை என்றும் நிறைவேற்று சபை என்பதன் ஊடாக நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

Ranil

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை இல்லா பிரேரணை கொண்­டு­வர ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பங்­கா­ளிக் கட்சிகள் தீர்­மானம் எடுத்துள்ளன.

எனினும் இப்­போ­தைக்கு அந்த திட்டம் இல்லையென முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். காலம் கடந்தும் மக்­களின் ஆத­ர­வில்லா அரசு அமை­யு­மாயின் எதிர்த்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின் போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

நடை­பெற்று முடிந்த தேர்­தலில் மக்­களின் ஆத­ரவும் தெரிவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற்கே கிடைத்­தது. ஆனால் மக்­களின் ஆத­ர­வினை பெறாத ஐக்­கிய தேசிய கட்சி அரசாங்கத்­தினை அமைத்­துள்­ள­துடன்,ரணில் விக்­கி­ர­ம­சிங்க மக்­களின் ஆணை­யின்றி பிரதமராகியுள்ளார்.

இது முற்­றிலும் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது மட்­டு­மன்றி மக்­களின் நம்­பிக்­கை­க­ளையும் வாக்­கு­க­ளையும் ஏமாற்றும் செயலாகும். தேசிய அர­சாங்­கத்தின் தலைவர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைவர் ஆவார்.

நாம் அர­சாங்­கத்தில் இல்லை.தேர்­தலில் மக்­களின் ஆத­ரவு இல்­லாத அதேபோல் தேர்­தலில் போட்­டி­யி­டாத கட்சி இன்று பாரா­ளு­மன்­றத்தின் ஆதிக்­கத்தை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இச்­செ­யற்­பா­டு­களை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

அதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணை­யினை கொண்­டு­வரும் எண்ணம் இப்­போ­தைக்கு இல்லை. ஆனால் இல்­லை­யென்று நான் கூறவும் இல்லை. தேவை­யான சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்தை கவுக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­களும் இட­து­சா­ரி­க­ளு­மான வாசு­தேவ நாண­யக்­கார, தினேஷ்­கு­ண­வர்த்­தன, விமல் வீர­வன்ச ஆகி­யோரின் முன்­னி­லையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் சில உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் திட்டம் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

திருமண விடயத்தில் சர்ச்சையை உண்டாக்கிய சர்மி!!

Charmi

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் Getting married today !! என்று டுவிட் செய்துள்ளார். இதை கண்ட பலர், இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் இது ஜோதி லட்சுமி படத்தின் கெட்டப் என்று கூற, எந்த விஷயத்தில் விளையாடுவது என்று தெரியாதா என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் அர்ச்சனாவை திட்டித்தீர்த்த ராதாரவி!!

Archana

ராதாரவி மிகவும் கோபமானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்று தெரியும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் தொகுப்பாளர் அர்ச்சனாவை திட்டி தீர்த்துள்ளார்.

ஆர்.கே. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே, மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’என் வழி தனி வழி’.இந்தப் படத்தின் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. விழாவினை தொகுப்பாளினியும் சின்னத்திரை நடிகையுமான காமெடி டைம் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.

விழாவில் பேச ஒவ்வொருவரையும் அழைத்தார். அப்போது நடிகர் ராதாரவியை பேச அழைக்கும்போது நடிகர் ராதாரவி பேசுவார் என்று கூறிவிட்டார். இதனால் கடும் டென்ஷனான ராதாரவி அர்ச்சனாவை ஒரு பிடி பிடித்துவிட்டார்.

அவர் கூறியதாவது “ஒருத்தரை பேச அழைக்கும்போது இப்படி மொட்டையாதான் கூப்பிடுவீங்களா? எனக்கு பொறுப்பான பதவி இல்லையா? தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்னு சொல்ல தெரியாத நீங்க எல்லாம் ஏன் நிகழ்ச்சியை தொகுக்க வழங்குறீங்க.நான் உங்களைப் பற்றி இந்த மேடையில பேசினா உங்களால தாங்க முடியுமா?” என்று சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்க, முகமெல்லாம் சுருங்கி போய்விட்டது அர்ச்சனாவுக்கு. பின்னர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அடுத்தவர்களை அழைக்க ஆரம்பித்தார் அர்ச்சனா.