பேஸ்புக் மூலமாக விவாகரத்து பெற்ற முதல் ஜோடி!!

fb

அமெரிக்காவில் தம்பதியினர் ஒருவர் பேஸ்புக் மூலமாக விவாகரத்து பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் Victor Sena Blood Dzraku-Elanora Baidoo என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு அனுப்பினர்.

இதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தங்கியதுடன், ஒருவருக்கொருவர் சந்திக்காமல் தொலைபேசியிலேயே பேசி வந்துள்ளனர். இதற்கிடையே, விக்டர் தனது வீட்டை விட்டு வெளியேறி வேறொரு இடத்திற்கு சென்று விட்டார். மேலும், அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்றும் தெரியவில்லை.

எனவே அவருக்கு பேஸ்புக் வலைதளம் மூலம் சம்மன் அனுப்பும்படி உயர்நீதிமன்றத்தில் Baidoo மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு தொடர்ந்த Baidoo பேஸ்புக் மூலமாகவே விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இதன் மூலம் பேஸ்புக் வழியாக விவாகரத்து பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை Baidoo பெற்றுள்ளார்.

கண் இமையில் அரிய வகை கட்டியினால் அவதியுறும் பச்சிளங் குழந்தை!!

Baby

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி-எய்மி தம்பதியருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை கோல்பி. பிறக்கும் போதே கோல்பியின் வலது கண் இமையின் மேல் ஒரு சிறிய கட்டி இருந்தது. பிறந்த ஒரு சில வாரங்களுக்குள் ஒரு முட்டையின் அளவிற்கு கட்டி பெரிதாக வளர்ந்து விட்டது.

இதனால் ஒரு கண் மருத்துவர்கள் அதை ஒரு வகை அரிய கட்டியான ’ஹெமாங்கியாமோ’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கினாலும், கட்டியுள்ள கண்ணின் பார்வை பறிபோய் விடும்.

23 வயதான ஜேமி ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி எய்மி திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார். தன் குழந்தையின் மோசமான நிலைமையை தாங்க முடியாத இருவரும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார மையத்தில் விண்ணப்பித்து கோல்பியின் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தனர்.

ஆனால் அது மிகவும் தாமதமானது. அந்த நாட்களில், கோல்பி தனது கட்டியைத் தொட்டு சிரித்து விளையாடும் போது இருவரின் மனதிலும் நரக வேதனை உண்டாகும். தங்களுடைய குழந்தையை குணமாக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி ரணமாய் கொல்லும்.

இதற்கிடையில் கோல்பியை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கள் விஷமத்தனமான பேச்சினால் அவர்களை மேலும் காயப்படுத்தினர். ”நீங்கள் ஏன் இந்த கட்டியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள்.. அது அப்படியே இருக்கட்டுமே” என்று கேட்ட ஒரு மருத்துவரை ஜேமி அடிக்கவே போய்விட்டார். ஒருவழியாக, அமெரிக்காவைச் சேர்ந்த லிட்டில் பேபி ஃபேஸ் என்ற அறக்கட்டளை கோல்பியின் அறுவை சிகிச்சைக்கன செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்தது.

விரைவில் தங்கள் குழந்தையின் முகத்தைக் கட்டியில்லாமல் பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியடைந்த இருவரும் இங்கிலாந்தின் பிரிஸ்டால் யுனிவர்சிடி மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது, அவர்கள் தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியாதென்றும் அவன் வளர்ந்த பிறகே செய்ய முடியுமென்றும் கூறி சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர்.

மனம் தளராமல் தங்களின் வாழ்நாள் சேமிப்பான, 10000 பவுண்டினை வைத்து அமெரிக்கா வந்த தம்பதியினர் கோல்பியை லியோனக்ஸ் ஹில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அறக்கட்டளையின் உதவியுடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டது. வாழ்நாளில் இதை விட மகிழ்ச்சியான தருணம் கிடையாது என்கின்றனர் கோல்பியின் பெற்றோர்.

மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொலை!!

Killed

இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

திருப்பதியில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் இன்றுகாலை நடந்த இந்த சம்பவத்தில், 20 பேர் ஆந்திர மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்களே, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் சேசாசலம் வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை, காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி கன்டா ராவ் தெரிவித்தார்.

அவர்கள் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பலியானதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனையவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

வவுனியாவிலிருந்து வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று (07.04) நடைபெற்ற போதே புதிய உறுப்பினர் சபைக்கு வருகை தந்தார்.

சுழற்சி முறையில் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்ற போது, மேரி கமலா குணசீலன் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து அவருடைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அவரது இடத்துக்கு முன்னாள் வவுனியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

v1 v2

மகாவலி கங்கையில் அடித்துச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!!

Body

மகாவலி கங்கையில் குளிக்கச் சென்று காணாமல்போன கம்பளை சாஹிரா கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 4 மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அதில் மூவர் காப்பற்றப்பட்டதுடன் ஒரு மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

தோனி ஒருநாள் பிச்சையெடுப்பார்: யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்!!

Dhoni

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் , இந்திய அணியின் தலைவர் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கிண்ண அணியில் யுவராஜ் சிங் உள்ளடக்கப்படாமைக்கு ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டிருந்த அவர் மீண்டும் தோனியை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அவர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு, “தோனி என்பவர் ஒன்றும் இல்லை, ஊடகங்களினாலேயே அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியுள்ளார். ஊடகங்களே அவருக்கு இந்த மகுடத்தை சூட்டியுள்ளன. எனினும் அவர் அதற்கு தகுதியற்றவர்.

அவர் ஒன்றும் இல்லாத ஒருவராக இருந்த நேரமொன்று இருந்தது ஆனால் இன்று அவர் ஊடகங்களின் முன் அமர்ந்து அவர்களை ஏமாற்றுகிறார். அவரை மிகைப்படுத்திக் காட்டிய ஊடகங்களையும் , அவர் ஓட்டங்களைப் பெறும் போது கைதட்டும் இந்திய மக்களையும் பார்த்து சிரிக்கிறார்.

உண்மையில் நானொரு ஊடகவியலாளனாக இருந்திருந்தால் அவரது கன்னத்தில் அறைந்திருப்பேன்.

தோனி , இராமாயணத்தில் வரும் இராவணனுக்கு ஒப்பானவர். அவர் அகங்காரம் பிடித்தவர். இராவணனின் இறுமாப்பு முடிவுக்கு வந்தது போது தோனியும் ஒருநாள் கஷ்டப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார் யோக்ராஜ்.

இதுமட்டுமன்றி தோனி ஒருநாள் பிச்சையெடுக்கும் நிலைக்கு செல்வார், அவரிடம் ஒரு பைசா கூட இருக்காது எனவும் எவ்வித உதவியும் அவருக்கு கிடைக்காது எனவும் தோனியை சபித்துள்ளார் யோக்ராஜ் சிங்.

வவுனியாவில் ந.புவிகரனின் ‘பள்ளிப் பட்டாம் பூச்சிகள்’ பாடல் வெளியீடு!!(படங்கள்)

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.

இவ் விழாவில் ந.புவிகரனின் ‘பள்ளிப் பட்டாம் பூச்சிகள்’ என்னும் பாடலின் இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது. பாடசாலை பருவத்தை மீட்டு பார்க்கும் வகையில் இப் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கலைஞர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இப் பாடல் வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

11 12 14 15

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய விழா!!(படங்கள்)

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.

காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும் இந் நிகழ்வில் நாட்டிய நடனம், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், கோலாட்டம், பிரதேச கலாசார நிகழ்வுகள் என பல வகையான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இன் நிகழ்வில் பிதேச கலைஞர்கள், பிரதே செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 24 56 7 8 9 1110

இங்கிலாந்தில் பாம்பு பிடித்த சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்க!!

Vimukthi

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் கார் ஒன்றுக்குள் இருந்த பாம்பை எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளார்.

காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய பாம்பை மீட்க முடியாது போராடிய காரின் சாரதி தனது நண்பரான விமுக்தி குமாரதுங்கவை தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் உதவி கோரியுள்ளார்.

பின் அவ்விடத்திற்கு வந்த விமுக்தி, காரில் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி, பாம்புக்கும் பாதிப்பு இன்றி அதனை மீட்டெடுத்ததாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் மூன்று மணித்தியாலங்களாக செயற்பட்டு விமுக்தி தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். பின்னர் பாம்பு மிருக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அனுபவத்தை இதற்கு முன்னர் பெற்றதில்லை என விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சவுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை!!

11

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவுதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.08.24ம் திகதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தனது மனைவி தொடர்பில் அறிந்து கொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவுதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா மீட்பு!!

Kanja

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில் ஏராளமான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமேஸ்வர சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த தீவுகளில் திங்கட்கிழமை சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 50 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பதுக்கி வைத்தது யார் என்பது தெரியாத நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் யார் : சபாநாயகர் இன்று அறிவிப்பார்!!

Parliament

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா அல்லது தினேஷ் குணவர்த்தனவா அல்லது இரா.சம்பந்தனா என்ற சர்ச்சை அரசியலில் தலைதூக்கியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சுதந்திரக் கட்சியினர் இணைந்து தேசிய அரசு அமைத்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா பதவி வகிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன வாசுதேவ நாணயக்கார விமல் வீரவன்ச உட்பட பலர் போர்க் கொடி தூக்கினர். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியும் நிமால் சிறிபால டி. சில்வா எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என்று வலியுறுத்தியது.

பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை கடும் வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. தினேஷ் குணவர்த்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் எம்பிக்களிடம் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் ஒரு பிரிவினர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஆதரவாக கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர். இவ்விதம் இரு தரப்பினரும் ஏட்டிக்கு போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என சபாநாயக அறிவித்திருந்தார்.

எனவே இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் கூடவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கமலினி செல்வராஜன் காலமானார்

Kamalini selvarajan

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார். தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார்.

ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி.என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென்.அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென்.கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது சில்லையூர் செல்வராசனை திருமணம் புரிந்து கொண்டார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ” என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.

வவுனியாவில் தீயில் எரிந்து வர்த்தக நிலையம் நாசம்!!

vav shop

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள் முடிந்து பூட்டபட்ட பின்னரே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையில் இருந்த வாகன ஸ்ரிக்கர்கள், டிஜிற்றல் இயந்திர சாதனங்கள் மற்றும் கணனிகள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கடை கட்டடமும் முற்றாக சிதைவடைந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!

Hang

வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மாலை வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் வனஜா (16) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசத்தில் உதவி வழங்கல்!!(படங்கள்)

கனடா வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வவுனியாவில் இயங்கிவரும் Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 35 மாணவர்களுக்கு கடந்த மாதம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

2 13