வவுனியா கனகராயன்குளத்தில் பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த சரண்யாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!!(படங்கள்)

வவுனியா – கனகராயன்குளம் – மன்னகுளத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த சரண்யா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னகுளம் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா மன்னகுளத்தில் வசித்து வந்த சரண்யா என்ற சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து, சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்திற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிசாரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதமும் 8 நாட்களும் கடந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதிவான் முகமட் ரிஸ்வான் மற்றும் யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன் , கனகராயன்குளம் பொலிசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மதியம் 2.30 மணியளவில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களால் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிசாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

1 324

திருமாவளவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் : கோவைப் பெண்னால் பரபரப்பு!!

Kavitha

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிராக கோவையில் பெண் ஒருவர் போராட்டம் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னுடன் நான்கரை வருடங்களாக நெருக்கமாக வாழ்ந்து விட்டு, என்னிடமிருந்து 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தனது ஆட்களோடு சேர்ந்து பறித்து விட்டு இப்போது என்னை ஏற்க மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக அவருடைய அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப் போகிறேன் என்று அந்தப் பெண் பெண் அரிவித்துள்ளார்.

கோவைச் சேர்ந்த 34 வய்துடைய கவிதா என்ற பெண்ணே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இவ்வாறு தெரிவித்ததால் சர்ச்ச்சை ஏற்ப்பட்டது. இந் நிலையில் மீண்டும் இப் பெண் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இவர் திருமாவளவன் மீது ஏற்கனவே கோவை பொலிஸ் நிலையத்திலும் , சென்னையில் உள்ள பிலிஸ் நிலையத்திலும் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்தார்.

இதுகுறித்து கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமாவளவன் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத்தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன்.

தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்கிறார்.

20 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.

என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கு சென்றாலும் அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன்.

என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலிசில் 10 தடவை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவலகத்தில் இன்று முதல் போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றார் அவர். இதையடுத்து அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலய ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது .

வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ் விநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகளில் பங்கெடுக்குமாறு  அறங்காவலர் சபையினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.

10407720_1615432115338176_4147337865269733779_n 11082562_1615432035338184_6690046350654890922_n 11120526_1615432078671513_504793673040947855_n 11121237_1615432228671498_8094552643657826333_n 11137187_1615432175338170_5341608197138519075_n

உலக சாதனையை சமன் செய்த இலங்கை வீரர் சானக வெலகெதர!!

Chanaka Welagedara

வேகப்பந்து வீச்சாளரான சானக வெலகெதர உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி 20 போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து சாதனையொன்றை சமப்படுத்தியுள்ளார்.

தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிவரும் அவர் எஸ்.எஸ்.சி கழகத்துக்கு எதிரான குறித்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு ஓட்டமற்ற ஓவர்களும் உள்ளடங்குகின்றன.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்க ‘ஹைவெல்ட் லயன்ஸ்’ கழக வீரரான கிரிஸ் மொரிஸ் கேப் கோப்ராஸ் கழகத்துக்கு எதிரான போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையே இதுவரை காலமும் சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா – கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!!

Train

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கோட்டை – வவுனியா மற்றும் கொழும்பு கோட்டை –மட்டக்களப்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவைகளிலும் 2 ஆம் வகுப்பில் மேலுமொரு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு கோட்டை மற்றும் பதுளை இடையே கடுகதி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தாண்டிற்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிகருதியும், பாடசாலை விடுமுறைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்களின் நலன்கருதியும் இந்த விசேட ரயில் சேவை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதிவரை இந்த விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன கூட்டம் : உண்மையான அரசியல் பணிக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் : வினோ நோகராதலிங்கம்!!(படங்கள்)

சுயநல அரசியல்வாதிகளின் கைகளினால் கறை படிந்து கொண்டிருக்கும் தூய்மையான அரசியலை காப்பாற்றி, உண்மையான அரசியல் பணி செய்ய இளைஞர்கள் தயாராக வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (04.04) நடைபெற்ற வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்..

சில சுயநல அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளினால் நீங்கள் அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம். கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்கும் போது அரசாங்கம் சந்தேகம் கொண்ட ஒரு நிலைமை இருந்தது.

துப்பாக்கி கலாசாரம் மேலோங்கியிருந்தது. சாதாரண இளைஞர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் நீங்கள் அரசியலில் ஈடுபட அச்சப்பட்டீர்கள். இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. நீங்கள் தேர்தலிலும், அரசியலிலும் ஈடுபட நாம் வாய்ப்புக்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.

நேர்மையான, உண்மையான அரசியல் பணி செய்ய நீங்கள் தயாராக வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.

சமூக, சமூதாய பணிகளில் நீங்கள் வெற்றிகொண்டால் அரசியல் பணிகளிலும் உங்களால் வெற்றிகொள்ள முடியும். எமது மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை உங்களால் கொண்டுவர முடியும்.

அண்மைய அரசியல் மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அரசியலோடு சமூக, பொருளாதார, கல்வி போன்ற விடயங்களிலும் இளைய சமூதாயம் புரட்சிகர சிந்தனைகளுடன் போராட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

11 12 13 14 15 16

வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!

Paddy

வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை இடைநிறுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தம்மிடமுள்ள நெல்லை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சித்திரை புத்தாண்டை கொண்டாட ஆவலாயுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றோ அல்லது நாளையோ தம்மிடமுள்ள நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் அதிகூடிய நீளமுடைய  இராட்சத முயல்!!(படங்கள்)

இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது.  இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும்.

இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும் இதன் குட்டி தற்போது 3 அடி 8 அங்குலம் நீளமுடையதாக வளர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் முதலிடத்தை அது பெறும் எனவும் விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முயலின் வளர்ப்பாளரான என்னெட்டே எட்வர்ட்ஸ் (63) என்பவர் இது குறித்துக் கூறுகையில், கீரை வகைகள் உட்பட 2000 கரட், 700 அப்பிள் பழங்கள் வருடாந்தம் இந்த முயலுக்குத் தேவைப்படுவதாகவும் அதற்கான செலவு 5ஆயிரம் யூரோக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3 4

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த தாயும் பலி!!

2

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டியும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய், தந்தை, சகோதரியான சிறுமி ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா, கூமாங்குழத்தைச் சோந்த சேர்ந்த சிவகுமார் தவமலர் (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் விஜயம்!!(படங்கள்)

வவுனியாவில் மீள்குடியேற்ற கிராமங்களான கள்ளிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் கிராமங்களுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் நேற்று (05.04) விஜயம் செய்தார்.

இப் பிரதேச மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும், அடிப்படை தேவைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துகொண்டார்.

1 2 3

கைக்குழந்தையுடன் இளம் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!

Kinaru

மிஹிந்தலை – தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தில் 20 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் தாய் தனது குழந்தையுடன் இன்று காலை கிணற்றில் குதித்துள்ளார்.

கஹவத்தையில் தொடரும் மர்மக் கொலைகள் : விசாரணைகள் மீள ஆரம்பம்!!

Kahawatta

இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் 2011ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பங்கள் தொடர்பில் காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொது அமைதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

வேறு பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் கஹவத்தை பகுதியில் திட்டமிட்டவகையில் பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கஹவத்தை கொட்டகெத்தன பகுதியில் நேற்றைய தினம் காணாமற்போன மூன்று பிள்ளைகளின் தயாரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கஹவத்தை பகுதியை அண்மித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தேடுதல் நடவடிக்கைக்கு இன்று கடற்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

Eating

1.பசி எடுத்த பின்புதான் சாப்பிட வேண்டும்
2. தாகம் எடுத்த பின்புதான் தண்ணீர் குடிக்க வேண்டும்
3. உணவை நன்றாக மென்று உண்ண வெண்டும்
4. சப்பளங்கால் போட்டு அமர்ந்து உணவு உண்ண வேண்டும்
5.உணவு உண்ணும் போது தொலைக்காட்சி பார்ப்பது, பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
6.உணவில் எல்லா வகையான சுவையும் கூடிய உணவுகள் இருந்தால் மிகவும் நல்லது
7.உணவுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் அரை மணி நேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

வவுனியாவில் தந்தை செல்வா பாலர் பாடசாலை!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 117 சிரார்த்த தினம் கடந்த 31 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஓமந்தையில் தந்தை செல்வா முன்பள்ளி நேற்று(05.04) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, ஓமந்தை பகுதியில் மருதங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்ப்பட்ட இந்த முன்பள்ளி வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச தமிழரசுக் கட்சியின் செயலாளர் மா.சிவசோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அண்மையில் மீள்குடியேறிய இந்த பிரதேசத்தில் இது வரை பாலர் பாடசாலை மரத்தடியில் இயங்கி வந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கனேடிய கிளையின் நிதியுதவியுடன் இந்த பாலர் பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

v1 v2

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி : இருவர் காயம்!!

ACCI

புத்தளம் – புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!

வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டிமீதே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனம் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த தரணிக்குளத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பலியானதுடன் குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது..

முச்சக்கரவண்டி சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்த்திசையிலிருந்து வந்த சொகுசு வாகனம் வீதியை கடந்துகொண்டிருந்த மாட்டின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து முற்சக்கரவண்டி மீது மோதியது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கிடங்கொன்றினுள் வீசப்பட சொகுசு வாகனமும் முச்சக்கரவண்டியைத் தள்ளியவாறு சென்றது.

இதனையடுத்து அயலவர்கள் ஓடிச்சென்று முச்சற்சக்கரவண்டியில் அகப்பட்டவர்களை காப்பாற்றியபோதிலும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தது.

இதனையடுத்து காயமடைந்தவா்கள் புளியங்குளம் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இந் நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிசார் சொகுசுவாகனத்தை ஓட்டிச் சென்றவரின் பாதணிகளை வாகனத்தில் இருந்து எடுத்துக்கொடுத்து காரொன்றில் ஏற்றி எங்கோ உடனடியாக அனுப்பியிருந்தனர்.

சம்பவத்தை நோரில் பார்த்தவர்கள் இவ் விபத்து தொடர்பில் எடுத்துக்கூறியபோதிலும், பொலிசார் அதில் அக்கறை செலுத்தாமல் சொகுசு வாகனத்தில் பயணித்தவர்களை கவனிப்பதிலேயே ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் சொகுசு வாகனத்தில் வந்தவர்களையும் அழைத்துச் சென்று விட்டனர். ஆனால் சம்பவத்தில் பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் பொலிசார் அக்கறை காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புளியங்குளம் பொலிசாரிடம் சாரதி தொடா்பில் கேட்டபோது வாகனத்தை செலுத்தி வந்தவர் யார் என தெரியாது எனவும் சாரதி தப்பிவிட்டார் எனவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 2 356789