பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்தவர் பெருமாள். இவரது மகன் கண்ணன் (14). இவர், மாறாந்தை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், பள்ளி விடுமுறை நாள்களில் தன் தந்தையுடன் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தாா்.

இதனிடையே, கண்ணனின் தந்தை பெருமாளுக்கு வாதநோய் ஏற்பட்டதால் சில மாதங்களாக அவரது முழுப்பணியையும் கண்ணன் கவனித்து வந்தாராம். இந்நிலையில் இரு தினங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவரை, பள்ளிக்குச் செல்லுமாறு தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த கண்ணன், தந்தை திட்டிய ஆத்திரத்தில் தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், மாணவன் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்திய கணவர் : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

நரசிங் யாதவ் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என பலரும் பலவிதமாக பேசிய நிலையில், முதல் மனைவி புஷ்பா, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக உள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பின், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தபோது, ​​நரசிங் யாதவ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நரசிங் யாதவின் இரண்டாவது மனைவி விமலா பாசி தனது கணவரை கழுத்தை நெரித்தது தெரியவந்தது. போலீஸ் அதிகாரி பிரதீப்குமார் கூறுகையில், ‘குடிப்பழக்கத்திற்கு அடிமையான நரசிங் யாதவ், சம்பவத்தன்று வீட்டில் இருந்த சொம்புகளை விற்று மது வாங்கினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் இருந்த சோம்பாவை விற்றுவிட்டு மது அருந்தியதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். என்னுடைய அம்மா வீட்டில் சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்தினாயா? என்று கூறி விமலா கணவனிடம் தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் கணவரின் கழுத்தை நெரித்தார். விமலா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.

பதற்றமடைய வேண்டாம் : நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை!!

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம்.

வன்முறைகள் இதேவேளை தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை.

வன்முறைகள், அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தீர்த்த திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு : மற்றொருவர் மாயம்!!

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது. இதன்போதே இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றன.

வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது – 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தார். சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த தயாரூபன் வைஷ்ணவன் (வயது – 30) என்ற இளைஞர் காணாமல்போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை நடந்த சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

வழமை போன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த நபர் நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை மீட்ட அங்கிருந்த மக்கள் – கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டரில் கொண்டு சென்று, பின்னர் அம்புலன்ஸ் மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்ந்தது.

நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை. இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அதிக அபாய நிலையில் பரவும் நோய் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 24.8 சதவீத நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 2097 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் 15929 நோயாளிகள், இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 41.8 சதவீதமாகும்.

மத்திய மாகாணத்தில் 3895 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 10.2 சதவீதமாகும். வடமேற்கு மாகாணத்தில் 2521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது சதவீதமாக 6.6 சதவீதமாகும்.

வட மாகாணத்தில் 4738 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 2834 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 3875 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

இந்த மாதத்தில் 1446, கடந்த மாதம் 3897, ஜூலையில் 4506, மே மாதத்தில் 2647, ஏப்ரலில் 2234, மார்ச்சில் 3615, பெப்ரவரியில் 6007, ஜனவரியில் 10417 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் டெங்குவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் அதிகாலையில் நடந்த துயரம் : பேருந்தில் பலியான தாய்!!

கொழும்பின் புறநகர் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலமுல்லை – மீகொட வீதியில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் ஏறச் சென்ற பெண் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் மற்றுமொரு நபருடன் தனியார் பேருந்தில் ஏறிய போது ​​அதிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்துடன் சாரதி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

மீகொடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக , இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,09,000 ரூபாவாகவும் உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,92,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 206,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 189,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மேலும் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,567.34 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

சமூக ஊடகங்களைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சிறப்புத் திட்டம்!!

வரும் 21 ஆம் திதை இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசாரப்பணிகள் நிவடையவுள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமைதியான காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் பிரசாரம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஊடகங்களுக்கும் மௌன காலம் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் பிரசாரங்கள் தொடர்பில் விசேட ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உடனடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பல குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மரணத்திற்குப் பின் தொடரும் மர்மத்தை தீர்த்த விஞ்ஞானிகள் : ஆய்வில் வெளியா தகவல்!!

இறந்த உயிரினத்தின் செல்கள் அதன் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படும் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட “மூன்றாவது நிலையை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் நோபல் மற்றும் கலிபோர்னியாவின் சிட்டி ஆஃப் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டரின் அதிகாரி அலெக்ஸ் போஜிட்கோவ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உடலியலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, ஒரு அறிவியல் புனைகதை திரைப்படத்தின் கதைக்களத்தைப் போல எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு உயிரினம் மரணித்த பின் , அதன் செல்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இல்லாத புதிய திறன்களைப் பெறுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

வாழ்வும் மரணமும் பாரம்பரியமாக எதிரெதிர்களாகப் பார்க்கப்படுகின்றன ஆய்வாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த உயிரினத்தின் உயிரணுக்களிலிருந்து புதிய பலசெல்லுலர் வாழ்க்கை வடிவங்கள் தோன்றுவது, வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ‘மூன்றாவது நிலையை’ அறிமுகப்படுத்துகிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறந்த தவளைகளின் தோல் செல்கள் ஆய்வகத்தில் உள்ள பெட்ரி டிஷுக்கு எவ்வாறு மாற்றியமைக்க முடிந்தது என்பதை அறிந்தனர், பின்னர் அவை “xenobots” எனப்படும் பலசெல்லுலர் உயிரினங்களாக தங்களை மறுசீரமைத்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சிக் குழு இது ஒரு புதிய செல் செயல்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியது.

மூன்றாம் நிலை என்று அழைக்கப்படும் நிலையில் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் “மின்சுற்றுகள்” உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகளவில் 40 கோடி மக்கள் உயிரிழக்கக்கூடிய ஆபத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

உலகளவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த உயிரிழப்பு 2025 மற்றும் 2050 க்கு இடையில் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி லான்காஸ்ட்’ இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தநிலைமைக்கு ‘சூப்பர்பக் நெருக்கடி’ என்று பெயரிட்டுள்ளது.

மருந்து-எதிர்ப்பு நுண்ணுயிர் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியானது உலகளாவிய பொது சுகாதார அபாயம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏறக்குறைய 520 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி நீண்ட பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையில், இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தாக்கம் முதியவர்கள் மீது இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பின்னும் இருவரை வாழ வைத்த 21 வயது யுவதி : இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் இருவரை வாழவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளைச்சாவு அடைந்த யுவதியின் சிறுநீரகம், இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதாகவும், நோயாளிகள் நலமுடன் இருப்பதாகவும் கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க நேற்று (15) தெரிவித்தாதுள்ளார்.

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தை சேர்ந்த சுபன்யா வீரகோன் என்ற 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலை தலைவலி ஏற்பட்டதையடுத்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிற்சை பலனின்றி கடந்த 13ம் திகதி அவர் மூளைச்சாவு அடைந்தமை உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பில் யுவதியின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, (14) திகதி இரண்டு நோயாளர்களுக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரிழந்த யுவதியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினோம். நேற்று (15) அந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டு நலமாக இருப்பதாக அறிந்தோம்.

தன் மகள் இறந்துவிட்டாலும், அவளது உறுப்புகளுடன் வேறு யாரோ வாழ்கிறார்கள் என்று கேட்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுபன்யா வீரகோனின் இறுதிக் கிரியைகள் நேற்று (16) கலிகமுவவில் உள்ள பத்தபாவின் பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.

மகனின் இறப்பை தாங்க முடியாத தாய் மரணம் : இலங்கையில் சோகம்!!

குருநாகலில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த 70 வயதுடைய தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சஞ்சீவ, சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

 

வவுனியாவில் 900 தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய பொலிசார் தொடர்ந்தும் களத்தில்!!

வடமாகாணத்தில் அதி கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வவுனியா பொலிசார் அகற்றியுள்ளதுடன், தொடர்ந்தும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இன்றும் (18.09) தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா நகரம், குருமன்காடு, திருநாவற்குளம், யாழ்வீதி, தாண்டிக்குளம், நகரப்பகுதி என்பவற்றில் வலம் வந்த பொலிசார் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றினர்.

தேர்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தேர்தல் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நடைவடிக்கைளுகம் நிறைவடையும் நிலையில் பொலிசார் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, 9000 வரையிலான தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் வவுனியாவிலேயே அதிக சுவரொட்டிகள் அகற்றபட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கதறிய மகள் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலி!!

மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா(46) நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கணவன், மனைவி காலை அலுவலகம் செல்வதற்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின்புறம் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பியில் நீலாவின் கைகள் உரசிய நிலையில், மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த ரத்தினமணி உடனடியாக மனைவி நீலாவை தூக்கியுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்ட நேரமாக பெற்றோரை காணாத அவரது மகள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது தாய் தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

உடனடியாக மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளிக் குழந்தைகள் குளத்தில் சடலமாக மீட்பு!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய மாணவிகள் இருந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த சனிக்கழமை மாயமாகினர். சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த போலீசாருடன், அக்கம் பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர்.

சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் கிடப்பது தெரியவரவே, ஓடோடிச் சென்ற பெல்லா பல்டி (14) என்னும் சிறுமி, பிள்ளைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கொடுக்க முயற்சித்தார்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, இரண்டு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இன்னொரு துயரம் என்னவென்றால், குழந்தைகளின் தாய் சுதாவும், குழந்தைகளின் பாட்டியும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் தந்தையான டேவிட் அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்துள்ளார்.

ழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் இழந்து, அவர்களுடைய பெற்றோர் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

பால்மா விலை குறைப்பு வெளியானது புதிய விலை விபரங்கள்!!

பால்மா விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”பாலுற்பத்தி அதிகரித்துள்ளமையினால் வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அதிகரித்ததன் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முதல்(10.09.2024) நடைமுறைக்கு வரும் வகையில் , 400 கிராம் பால்மா பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பால்மா விலையை மேலும் குறைக்க முடியும். பால் உற்பத்தியின் போது அறவிடப்படும் வரிக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் நிதியமைச்சினால் தனிப்பட்ட தீர்மானம் மேற்கொள்ள முடியாது. சர்வதேச நாணயநிதியத்துடன் இணங்கியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு உடன்படும் பட்சத்தில் மேலும் 200 ரூபாவினால் பால்மா விலையினை குறைக்க முடியும்.

எனவே எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்நாட்டில் பால்மா உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. அதனால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.

எனினும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனாக தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.