தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்!!

கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.

எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உயிரிழந்தவர் மூத்த மகள் என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ தனியார் வங்கியொன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நானும் எனது கணவரும் வியாபாரம் செய்கிறோம். மகளுக்கு எந்த நோயும் இல்லை. பிறந்த நாளில் இருந்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் நிகழ்வு ஒன்றிற்கு சென்றார். இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். வந்து குளித்துவிட்டு மாடிக்குச் சென்றார்.

அதிகாலை 3 மணியளவில், என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்தார், எனக்கு சோர்வாக இருப்பதாக கூறினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையிலும் தெரியவில்லை என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணம்(Jaffna) – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (25.08.2024) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவர் திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம் பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் போது காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் உயிர்ழந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

கனடாவில் இருந்து வந்தவர் கிளிநொச்சியில் மாயம்!!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், அவர் காணாமல் போன தினத்துக்கு முதல்நாள் அவரது நண்பர் அவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் விட்டதாக தெரிவிக்கின்றார்.

அதேசமயம் அவரது வீட்டில் சிசிடிவி கேமராவின் தேக்கவியல் (server) சாதனமும் காணாமல் போயுள்ளதுடன் அவரது தலைக்கவசம் உடைந்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அவரது வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் காணாமல் போனதாக தெரியவில்லை என அவரது நண்பர் குறிப்பிடுகின்றார். இந்நிலையில் இது குறித்து அவரது நண்பர் நேற்று முன் தினம் (24) அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சுவிஸில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு!!

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (26.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது விருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவர் அவ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள்!!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08.2024) அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவு தினம் வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் கொடியேற்றல் இடம்பெற்றுடன் கொடிக்கீதத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் பாடியமையிருந்தனர்.

அத்துடன் மங்கள விளக்கேற்றலுடன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட திணைக்களத் தலைவர்கள், மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வவுனியா இலங்கை திருச்சபை த.க.பா மாணவர்கள் இசைத்தமையுடன் வரவேற்புரையினை சந்திரகுமார் கண்ணன், தலைமை உரையினை வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், சிறப்புச் சொற்பொழிவினை தமிழ்மணி அகளங்கள் ஆகியோர் முன்னெடுத்தமையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் பாராட்டு பரிசில்கள் வழங்குதலுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுற்றிருந்து.

மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு!!

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று (24.08.2024) இரவு தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார்.

கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அவரது கணவர் நேற்றயதினம் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சாவடைந்தார்.

குறித்த சம்பவத்தில்வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த எஸ் .சுதன் (26 வயது) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு.. பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்!!

தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே அரண்மனைப்புதூர், முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தனியார் நிதி நிறுவன ஊழியர்.

வெளியிலும் பைனான்ஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி அஜிதா (33), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் பிரித்விகா (5). சதீஷ்குமாருக்கு சொந்தமாக செய்து வந்த பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த அஜிதாவும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் சதீஷ்குமார் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் மகள் பிரித்விகாவையும் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர், வீட்டிற்குள்ளேயே சதீஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் கண்டமனூரில் உள்ள அஜிதாவின் பெற்றோர், மகளை செல்போனில் பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், தங்கள் மகன் சுரேந்தருடன் நேற்று முன்தினம் இரவு அஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். காலையில் இருந்து வீடு பூட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பழனிசெட்டிபட்டி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அஜிதா, பிரித்விகா கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர். அருகில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

இதையடுத்து, போலீசார் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் விபரீத முடிவுக்கு தொழில் நஷ்டம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த 10 நாள்களில் உயிரோடு வந்த நபர் : கொலைகார தம்பதியின் குட்டு அம்பலம்!!

கடனை அடைக்க காப்பீட்டு தொகையை பெறுவதற்கு அப்பாவி நபரை கொன்ற விவகாரத்தில் தம்பதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி காப்பீடு தொகைக்காக அப்பாவி நபரை கொன்று, அவரை தனது கணவா் என கூறி பெண் ஒருவா் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடா்பான செய்தியை விரிவாக பார்க்கலாம்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையை சோ்ந்த தம்பதி முனிசாமி கவுடா மற்றும் சில்பாராணி ஆவார். முனிசாமி கவுடா அந்த பகுதியில் டயா் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

அவா் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கடன் பெற்று இருந்துள்ளார். ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே தனது பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற்று கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக தம்பதி கூட்டாக சோ்ந்து கொடூரமான திட்டத்தை தீட்டி உள்ளனா்.

அதன்படி முனிசாமி கவுடாவை போன்று தோற்றம் கொண்ட அப்பாவி ஒருவரை அவா்கள் தங்கள் காரில் அழைத்து சென்றுள்ளனா். பின்னா் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே கொல்லஹள்ளி கேட் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனா். பின்னா் உடலை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதற்கிடையே ஹாசன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், சில்பாராணி, உயிரிழந்தவா் தனது கணவா் என கூறி உடலை வாங்கி உள்ளார். பின்னா் குடும்பத்தினா் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் சில்பாராணி நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவா்கள் சில்பாராணியை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனா். இந்த நிலையில் சில்பாராணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது சில்பாராணி தனது கணவா் முனிசாமி கவுடா தான் இறந்துவிட்டதாக கூறி உள்ளார். மேலும் தனது கணவரை தலைமறைவாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி உள்ளார். எனவே முனிசாமி கவுடாவும் வேலைக்கு செல்லாமல் வெளியூரில் சுற்றித்திரிந்துள்ளார். சில்பாராணியும் கணவரை இழந்த வேதனையில் வாழ்வது போல் நடித்துள்ளார்.

இதற்கிடையே ஒசக்கோட்டையில் என்ன நடக்கிறது என தெரியாமல், முனிசாமி கவுடா சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது உறவுக்காரரான இன்ஸ்பெக்டர் ஒருவா் கண்ணில் முனிசாமி கவுடா பட்டுள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டா், முனிசாமி கவுடாவை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக உயிரிழந்ததாக நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து முனிசாமி கவுடாவை பிடித்து இன்ஸ்பெக்டா் போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து முனிசாமி கவுடா அவரது மனைவி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த லாரி டிரைவா் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனா். காப்பீட்டு தொகைக்கு ஆசைப்பட்டு அப்பாவி நபரை திட்டமிட்டு தம்பதி கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகத்தையே உலுக்கி உள்ளது. இறந்ததாக கூறப்பட்ட முனிசாமி கவுடா உறவினா் கண்ணில் பட்டதால் தற்போது குட்டு அம்பலமாகி உள்ளது.

25 கிலோ தங்கம் அணிந்து திருமலை கோயிலுக்கு சென்ற புனே தொழிலதிபர்!!

பொதுவாகவே அனைத்து மக்களும் தங்களின் பக்தியை பல முறையில் வெளிக்காட்டுவார்கள். சமீபத்தில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தினமும் 75,000 முதல் 90,000 யாத்ரீகர்கள் வரும் கோயிலுக்கு ஜூலை மாத காணிக்கையாக ரூ. 125 கோடி கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

அந்த மாதத்தில், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். 8.6 லட்சம் பேர் சம்பிரதாய முறைப்படி தொண்டூழியம் செய்தனர், மேலும் ஒரு கோடிக்கும் அதிகமான லட்டுகள் விற்கப்பட்டன.

கலியுகத்தில் மக்களுக்கு உதவுவதற்காக பூமிக்கு வந்ததாக நம்பப்படும் விஷ்ணுவின் வடிவமான வெங்கடேஸ்வரருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீனிவாசா, பாலாஜி, வெங்கடாசலபதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமலையைத் தனது இல்லமாகத் தேர்ந்தெடுத்தார் என்று புராணம் கூறுகிறது.

கோயில் இப்போது 16.2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்நிலையில் புனே சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தங்கள் குடும்பத்துடன் வரும் போது, 25 கிலோ தங்கம் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுடன் பாதுகாப்புக்காக சுமார் 15 பேர் வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 5 மாதங்களில் 3400 க்கும் மேற்பட்டோர் கைது : வெளியான காரணம்!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் 20 விசேட பொலிஸ் குழுக்கள் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் மறைமுக உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : பதம் பார்த்த மலைப்பாம்பு!!

இயற்கை உபாதையை கழிக்க கழிவறையில் அமர்ந்திருந்தவரின் பிறப்புறுப்பை , திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன் என்பவே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி தனது வீட்டு கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது அவரது பிறப்புறப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. கழிவறையில் ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது.

உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க பாம்பை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது 12 அடி மலைபாம்பு என்றும் அது பிடியை தளர்த்த இல்லை எனவும், குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் மோசமான வலி, மற்றும் கழிவறை எங்கும் ரத்தம் இருந்தது.

கழிவறையில் ஒரு மலைப்பாம்பு இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் பாம்பிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில் அந்த பாம்பு அவரின் விரலையும் கடித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதனையடுத்து உடனே அங்கிருந்த பாத்ரூம் பிரஷை வைத்து அந்த பாம்பின் தலையிலேயே அடித்ததை அடுத்து பிடியை தளர்த்தி உள்ளது.

அவரது தாக்குதலில் பாம்பு உயிரிழந்ததை அடுத்து அயல் வீட்டாரை சம்பவத்தை கூறியதை அடுத்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

,”நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும்” என கூறியுள்ள அவர், மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித தையலும் இன்றி தான் தப்பித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து 500 மாணிக்கக் கற்கள் மற்றும் 100 வெள்ளி மோதிரங்கள் களவுபோயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

வெள்ளி மோதிரங்கள் மற்றும் தங்க நகைகளைத் தயாரிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

வர்த்தகர் கடந்த 11ஆம் திகதி திருகோணமலை பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்குச் சென்று கடந்த 21 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, வீட்டிற்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட வர்த்தகர் இது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

களவுபோன மாணிக்கக் கற்கள் அனைத்தும் 07 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல இலட்சம் ரூபா எனவும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் ஹலவத்தை நோக்கி பயணித்த போது தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ், கொழும்பு தனியார் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு : காப்பாற்றப்பட்ட பயணிகள்!!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் சாரதி திடீரென உயிரிழந்ததாகவும், பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதாகவும் இங்கினியாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 23ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பேருந்தின் சாரதி உடல் நலக்குறைவு காரணமாக இங்கினியாகலையில் பேருந்தை நிறுத்திவிட்டு தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

சாரதியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பேருந்தை செலுத்தி செல்ல வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய நிலையில், வேறு சாரதிகள் இல்லாத காரணத்தினால் 10 மைல் தூரம் வரை பேருந்தினை செலுத்திச்சென்றுள்ளார்.

இதன் பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உடனடியாக இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாத்திரம் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.

பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மஞ்சுள பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்!!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுனர் உரிமம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 8 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 91 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் ஏனையவர்களுக்கும் அட்டைகள் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்தாண்டு நிலைமை வழமைக்கும் திரும்பும் எனவும் சாதாரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அட்டைகளை வழங்க முடியும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.