தென்னிலங்கை வைத்தியசாலையொன்றில் சிறுவனுக்கு நேர்ந்த கதி : ஆத்திரமடைந்த தந்தை!!

இலங்கையின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் மாத்தறை கிளையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக சிகிச்சை பெற சென்ற சிறுவன் ஒருவருக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். சிறுவனின் கையில் ஏற்பட்ட முறிவிற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரின் தந்தை சிறுவனை குறித்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அத்துடன், அதற்கான கட்டணமாக 4,000 ரூபாவும் அவரால் செலுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, சிறுவனுடன் சிகிச்சை அளிக்கும் பகுதியில் காத்திருக்குமாறு வைத்தியசாலை ஊழியர்களால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், 4 மணிநேரத்திற்கு பின்னரும் சிறுவனை பார்வையிட வைத்தியர் எவரும் வராததால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.

இதன் பின்னர், சிறுவனின் தந்தை அனுமதிக் கட்டணமாக செலுத்தப்பட்ட 4,000 ரூபாவையும் ‘X-Ray’ அறிக்கையையும் தருமாறு வைத்தியசாலை ஊழியர்களிடம் கேட்டு அதனை நேரலையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு இவ்வாறு இரண்டாவது முறையாக இதே வைத்தியசாலையில் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கவனயீன பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (22.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 752,843 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 212,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 194,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 185,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் மேலாடையின்றி தோசை தயாரித்தமையால் சர்ச்சை!!

கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், இரண்டு குற்றச்சாட்டுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்துள்ளனர்.

“கமே கடை, தோசை கடை” உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படும் பல உணவுக் கடைகளுக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேனவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரித்தல், அசுத்தமான முறையில் உணவை சேமித்தல், பூச்சிகள் கொண்ட உணவு விற்பனை செய்தல், அசுத்தமான நிலையில் உபகரணங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்தல், கழிவுகள் வடிகாலில் செல்வதைத் தடுத்தல், குப்பைத் தொட்டிகளைத் திறந்து வைத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாம்பை கடித்துக் கொன்ற குழந்தை!!

பாம்பென்றால் படையும் நடுங்கும் எந்பது பழமொழி. ஆனால் இந்தியாவின் பீகாரில் ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த நிலையில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விளையாட்டுப் பொருள் என பாம்பை கடித்த குழந்தை
வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.

குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். குழந்தை கடித்ததில் பாம்பின் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதேளை அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் , குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவில் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த பெண் சடலமாக தோண்டியெடுப்பு!!

நுவரெலியா (Nuwara Eliya) – ஹங்குராங்கெத்த பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த நிலையிலேயே இன்றைய தினம் (21.08.2024) கோனப்பிட்டிய – சீனாக்கொலை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதான, மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

இவர் அக்கரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் இடமாற்றம் காரணமாக கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறிருக்கையில், அவர் காணாமல்போயுள்ளதாக அவரது கணவரால் ஆறு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைக் கைது செய்ததுடன், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர், பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி இன்று வலப்பனை நீதவான் சியபத் விக்ரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்ய உள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா – விளக்கு வைத்த குளம், ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (21.08.2024) இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் ரக வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பத்தின் போது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்!!

தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் 9 ஆவது கிமீ 80 தூண்களுக்கு இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும், மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்கத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது 21 வயது மகன் காரை செலுத்தி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்!!

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை கைதுசெய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட பொருட்களுடன் வெளியேற முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் மருத்துவர் தடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் அங்காடியின் நிர்வாகத்திடம் அழைத்துச்செல்லப்பட்டு சோதனையிடப்பட்டபோது, அவரது பையில் இருந்து பணம் செலுத்தப்படாத சொக்லேட்டுகள், ஒரு பால் பவுடர் டின் மற்றும் சொசேஜ் என்பன மீட்கப்பட்டன.

இந்தநிலையில் அவர் ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பொருட்களை திருடிய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மருத்துவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 200,000 சரீரப்பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடலை பார்வையிட்ட நீதிபதி!!

வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று (21.08.2024) மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் மரணித்த குழந்தையின் பெற்றோர்க்கு நீதி வேண்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்றயதினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று (21.08.2024)மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது…

குழந்தையின் தாய் வலி தாங்கமுடியாமல் பலமணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கைஇல்லை.

எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள், இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை. எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.

இதேவேளை இன்று மாலை சிசுவின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

நகைக்காக சுவற்றில் மோதி பெண் கொலை : 12 மணி நேரத்தில் இளைஞன் கைது!!

திருவாரூர் அருகே இளவங்கார்குடி ராஜகுரு நகரை சேர்ந்தவர் நாகநாதன் (45). வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரபாவதி (40). நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படவில்லை.

சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கொல்லைப்புறமாக சென்று பார்த்த போது, சமையலறையில் பிரபாவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து திருவாரூர் தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக இளவங்கார்குடியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வீட்டில் பிரபாவதி மட்டும் தனியாக வசித்து வருவதை அறிந்து சந்தோஷ், கடந்த 17ம் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சமையல் அறையில் நின்றிருந்த பிரபாவதியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.

அவரை அடையாளம் கண்டு கொண்டதால் போலீசிடம் தெரிவித்து விட்டால் மாட்டிக்கொள்வோம் என கருதி, பெட்ஷீட் மூலம் பிரபாவதி முகத்தை மூடி சுவற்றில் மோதியுள்ளார். பின்னர் கத்தியால் கழுத்தில் குத்தி, முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

தாலி செயின் மற்றும் கொலுசை அவரது வீட்டு மாடியில் மறைத்து வைத்து விட்டு செல்போனை மட்டும் எடுத்து கொண்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, கொலை நடந்த 12 மணி நேரத்தில் சந்தோஷை கைது செய்தனர்.

பிரியாணி சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக பலியான சோகம்!!

ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரண் குமார் .இவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார்.

இந்த விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளில் ஒருவர் வீட்டு விசேஷத்தில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்குமாறு பாதிரியாரிடம் கொடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட கொடுத்துள்ளார். அதன்பின் குழந்தைகள் தூங்க சென்றனர். அப்போது 1 ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி ஜோஸ்வாவுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிரியார் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பதட்டமடைந்த பாதிரியார் இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் விடுதிக்கு வந்து குழந்தைகளை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் ஜென்மேலி பாவனி(8), சத்தா(6) ஆகிய பெண் குழந்தைகள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை கைது செய்ததுடன் அவரிடம் இச்சம்பவத்தை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சந்திரபாபுநாயுடு விடுதியில் தங்கி இருந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் அனுமதியின்றி நடத்தப்படும் ஆதரவற்ற இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவற்றை உடனடியாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மனைவியின் மூக்கை அறுத்த கணவன் : தாய் வீட்டிக்கு போக அடம் பிடித்ததால் விபரீதம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனிதா கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். அந்த வீடியோவில், அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து, தன் கணவனை மூக்கை அறுத்ததாகக் குற்றம் சாட்டினார்.

அவள் இனி வாழ விரும்பவில்லை என்று சொல்வதைக் கேட்கலாம். மேலும், தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.படுகாயமடைந்த பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதனையடுத்து எக்ஸில் பதிவிட்ட ஹர்டோய் போலீசார், இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“குறிப்பிடப்பட்ட வழக்கு தொடர்பாக, இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் (கிராமப்புறம்) விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என ஹர்டோய் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக அந்த பெண், தனது கணவர் அடிக்கடி தன்னுடன் சண்டையிடுவதாகவும், அதன் விளைவாக அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். இருப்பினும், அவர் 4 நாட்களுக்கு முன்பு திரும்பி வந்து, மீண்டும் ரக்க்ஷா பந்தன் நிகழ்வில் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு, சிங்கமுத்துவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு!!

நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “கடந்த 1991 -ம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் சினிமா துறையில் நடித்தேன்.

பின்னர், எனது கடும் உழைப்பால் 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகர் ஆனேன். தற்போது, என்னுடைய சினிமா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

2000 -ம் ஆண்டு முதல் நானும், நடிகர் சிங்கமுத்துவும் ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின்னர், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் போல அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் என் மீது அவர் பொறாமை, பகை கொண்டார். 2015 -ம் ஆண்டுக்கு பிறகு என்னை பற்றி மோசமாக பேச ஆரம்பித்ததால் அவருடன் சேர்ந்து படம் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

இதனிடையே, தாம்பரத்தில் இருக்கும் பிரச்சனையான நிலத்தை எனக்கு வேண்டுமென்றே வாங்கி கொடுத்தார். இதனால் சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு என்னை பற்றி சிங்கமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் எனக்கு மனவேதனை அளித்துள்ளது.

பொதுமக்களுக்கு மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதால், 5 கோடி ரூபாயை சிங்கமுத்து மான நஷ்ட ஈடாக வழங்கவும், என்னை பற்றி பேச தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 

மனைவி தொல்லை தாங்க முடியவில்லை.. வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்படி, தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி தேட ஆரம்பித்தனர். அவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் மொபைல் எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முகேஷ் தன்னுடைய மொபைலில் புதிய சிம் கார்டைப் பொருத்தி ஆன் செய்துள்ளார். அப்போது அவர் நொய்டாவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார் நொய்டாவுக்கு சென்று, வணிக வளாகத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த முகேஷை பிடித்தனர். பின்னர், முகேஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்தது.

முகேஷ் கூறுகையில், “எனது மனைவியுடன் எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் விவாகரத்து ஆனவர் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு 12 வயதில் மகள் இருந்தார்.

அதன்பிறகு எங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், அவர் என்னை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தார். வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார்.

அவருடன் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என்னுடைய சுதந்திரத்தை பறித்துக் கொண்டார். என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்து வைக்காதீர்கள்” என்றார்.

பின்னர் முகேஷை சமாதானப்படுத்திய பொலிஸார் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். இருவருக்கும் மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டனர்.

அதற்கு, முகேஸும் அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய திருநங்கைகள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியா பெங்களூருவில் 18 வயது இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞன் தேநீர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடைக்கு தேநீர் அருந்த வந்த சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த இளஞனிடம் , அதிக வருமானம் ஈட்டுவதற்கான வேலை தங்களிடம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறிய நிலையில் இளைஞன் மறுப்பு தெரிவிக்க, திருநங்கைகள் வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

தெருக்களில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் திகதி இரவு திருநங்கைகள் குறித்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு சென்று, ஒரு ஆண் பிச்சைக்காரராக நீ ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளாய். பெண் பிச்சைக்காரராக இருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என எண்ணிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் இளைஞன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயமாக திருநங்ககைள் இளைஞனுக்கு சில ஊசிகளை செலுத்தியதால இளைஞர் மயக்கம் அடைந்துள்ளார்.

மயக்கம் தெளிந்த பின்னர் அவரது அந்தரங்க பகுதி கத்தியால் வெட்டியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்ன ஆகஸ்ட் 3 ஆம் திகதி வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

எப்படியோ அங்கிருந்து தப்பித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் முறைபாடளித்த நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஐந்து திருநங்கைகளையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.