பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதியை சேர்ந்த நிவந்தி சுமன அலோக பண்டார என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட சில்லறைப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற ஒருவர் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அவர் தொடர்பிலான அடையாளங்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்தின் போது பாரவூர்தியின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர் மிஹிந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பொடி பெட்டியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொடி பெட்டி சமீபத்தில் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் லொக்கு பெட்டியின் சகோதரராகும். கிளப் வசந்த கொலைகளை லொக்கு பெட்டியினால் திட்டமிட்டதாக செய்திகள் வந்தன.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலக தலைவர்கள் உள்ளிட்ட 168 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதில் பெரும்பாலான குற்றவாளிகள் டுபாயில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா என்ற தம்பதியினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பத்தின் போது, தமிழ் குடும்பம் பயணித்த காரில் இருந்தவர்கள் மற்றும் மற்றைய வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அதே குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் காரில் பயணிக்காத நிலையில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.
இருப்பினும், சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அதிகாரிகளால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதி ஒருவர் கொஸ்கம பிரதேசத்தில் லொறியுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
புவக்பிட்டிய, பஞ்சசர மாவத்தையில் வசிக்கும் சசிந்து நில்ஷான் செனவிரத்ன என்ற 28 வயதுடைய திருமணமான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
லொறியில் மோதி காயமடைந்த தாதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 16 ஆம் திகதி காலை உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கொழும்பு வைத்திய அதிகாரி எஸ். வி. என். பெரேரா தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான லொறி சாரதியை எதிர்வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வவுனியா மாவட்டத்தில் தனியார் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று (17.06.2024) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பிவரும் சம்பவம் தொடர்பாக சுமுகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் குடியிருப்பு பூங்காவில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் அவதூறு பரப்பிய நபரும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோது திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர் குறித்த பத்திரிகை ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதேவேளை, அங்கிருந்த பெண் ஊடகவியலாளரையும் தள்ளி வீழ்த்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளையில், அருகில் இருந்த ஊடகவியலாளர்கள் அதனை தடுத்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள், அரசு இந்த விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
நாய்க்கடி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றும், அபராதம் விதிப்பது மட்டுமே குற்றங்களைத் தடுத்து நிறுத்தாது என்று சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து நான்கு வயது சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெறிநாய்க்கடித்தன் காரணமாக சிறுவனின் மூளையில் காயம் நெருக்கமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஜூலை 27ம் தேதி மாலை, 4 வயது சிறுவன் நிர்மல் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று சிறுவனைக் கடித்து தாக்கியதில் சிறுவனின் வாயில் காயம் ஏற்பட்டது.
தெருநாய் கடித்து 17 நாட்களுக்குப் பிறகு, சிறுவன் சிகிச்சைப் பலனின்றி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் வழக்காக இது பதிவாகியிருக்கிறது.
சம்பவம் நடந்த ஜூலை 27ம் தேதி, அந்த பகுதியில் இருந்த மக்கள் சிறுவனைக் கடித்த நாய் மீது கற்களை வீசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தெருநாய் கொல்லப்பட்டது.
அரக்கோணம் தாலுகா காந்திபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பி.கலைவாணி மற்றும் பாலாஜி தம்பதியின் மகன் நிர்மல் (4). நிர்மலுக்கு ஜெனிதா என்ற சகோதரி இருந்தாள். ஜூலை 27ம் தேதி மாலை, நிர்மல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் தாக்கியதில், வாயில் காயம் ஏற்பட்டது.
“நான் கொஞ்சம் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, வாயில் காயங்களுடன் எனது மகனைப் பார்த்தேன். வாய் முழுவதும் அதிக ரத்தம் வெளியாகிக் கொண்டிருந்தது” என்று சிறுவனின் தந்தை பாலாஜி கூறியிருந்தார்.
உடனடியாக நிர்மலை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் நிர்மலுக்கு நான்கு டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போட்டனர்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டில் அவருக்கு 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை சீரானதையடுத்து, நிர்மலை தங்கள் வீட்டிற்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் விரைவில், நிர்மல் கத்துவது மற்றும் அழுவது போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது பெற்றோரைப் பதற்றத்திற்குள்ளாக்கியது.
மீண்டும், நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் ரேபிஸ் வைரஸ் சிறுவன் நிர்மலின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரண்டு நாட்களில் அவர் இறந்து விடக்கூடும் என்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
“அதன் பின்னர் கவலைக்கிடமான நிர்மலின் உடலும் வீங்கத் தொடங்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவர்களது கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி செந்தில் குமார் கூறுகையில், சிறுவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தடுப்பூசியின் நான்கு டோஸ்களும் அவருக்கு வழங்கப்பட்டன. காயம் மூளைக்கு அருகாமையில் இருப்பதால் மரணம் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் மூளையை வேகமாக பாதிக்கிறது.
நிர்மலை கடித்த நாய் 11 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் தாக்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர்.
அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறித்துடித்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரீனிவாஸ் கடனால் அவதிப்பட்டு வந்துள்ளார். கார் ஓட்டுநரான அவர், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நேசராசா பனுசா என்ற பெண்ணே நேற்று(16) உயிரிழந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் – பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துவரும் 30 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டுக்கு தேவையான கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த (E-Passport) அக்டோபர் வரை தாமதமானதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை முடிந்தவரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 1,300 கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டாலும், தற்போது அது 250 முதல் 300 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவசர தேவை இல்லாவிட்டால் ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழ்நிலை காரணமாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம் திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கத்திளை தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால், வரிகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதத்தின் காரணிகளுக்கு ஏற்ப இந்த வரி திருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய வாகனங்களை மாத்திரம் முதலில் இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து 4 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல் மற்றும் அசெர் உயிரிழந்துள்ளனர்.
கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் கணொளி போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.
கொழும்பு – அம்புல்கம, பனாகொட வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி மின்கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜல்தர, லெனகல பிரதேசத்தை சேர்ந்த தெனெத் சக்விதி என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான திடீர் மரண விசாரணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 3,23,876 பரீட்சார்த்திகள் இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமிதா ஜயசுந்தர தெரித்துள்ளார்.
மேலும், இந்தாண்டு உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முடிவடையும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடி ரூபா 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 3 கஜமுத்துக்களுடன் மூவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 1கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட 3 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ள்ளன.
புத்தளம் மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக பாடசாலை உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் நேற்று (15) இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேரசூசி வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.
அதே நேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்.
எனினும் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட அதிபர்,உப அதிபர் மற்று ஆசியர்கள், ஆரிசியை மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
ஆசிரியையின் முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.