முகத்தில் பொலிதீன் கவரைக் கட்டி மகன் கொலை, தூக்கில் சடலமாகத் தொங்கிய பெற்றோர்.. நடந்தது என்ன?

கன்னியாகுமரியில்..

ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதன் (40). எம்.இ., பி.எல் பட்டதாரியான இவர், பெங்களூரிலுள்ள ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும் தக்கலை மணலி பகுதியைச் சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த சைலஜா (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7-வயதில் ஜீவா என்ற மகன் இருந்தார்.

பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த முரளிதரன், மூன்று வருடங்களுக்கு முன்பு தக்கலையில் குடிபெயர்ந்தார். தக்கலை அருகே மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர்.

முரளிதரன் ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தினமும் மாலை தன்னுடைய மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவர் தந்தை கோபால், வழக்கம்போல் சனிக்கிழமை மாலை வீட்டிற்குச் சென்றபோது பூட்டியிருந்ததால், சத்தம் போட்டு அழைத்துள்ளார்.

வெகு நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும், பேரன் ஜீவா முகத்தில் பாலித்தீன் கவர்கள் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் கட்டிலிலும் பிணமாகக் கிடந்துள்ளனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தக்கலை போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். டி.எஸ்.பி உதயசூரியன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. முரளிதரனுக்கும், சைலஜாவுக்கும் திருமணமாகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

அதன் பிறகு பிறந்த மகனுக்கு ஜீவா என பெயரிட்டு வளர்த்துளனர். ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா, பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மகனின் நோய்க்கு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்தில் ஐ.டி துறையில் வேலை இழந்த முரளிதரன், தன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் தனது பி.எல் படிப்பை வைத்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர். ஒரே மகனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டதாலும், அடுத்ததாக வேறு குழந்தைகள் இல்லாததாலும், அவர்கள் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மனமடைந்த தம்பதி, குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்துள்ளனர். சிறுவன் ஜீவாவுக்கு நோய்க்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிக அளவில் கொடுத்துள்ளனர். அதனால் மயக்கமடைந்த ஜீவாவின் முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டுள்ளனர்.

இதில் சிறுவன் ஜீவா மூச்சுத்திணறி இறந்துள்ளான். அதன் பிறகு முரளிதரன் வீட்டின் ஹாலில் உள்ள மின் விசிறியிலும், சைலஜா அறையிலுள்ள மின் விசிறியிலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டதால், மனமுடைந்து குடும்பத்தினர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லாரியுடன் விவசாயியை கடத்திச் சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த தம்பதி!!

கர்நாடகாவில்..

லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த வேலூர் தம்பதியை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கர்நாடகாவில் விபத்தில் விவசாயி பலியானதால், அவரது தக்காளியை கொள்ளையடித்த சம்பவத்தில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கோலார் மார்க்கெட்டில் இருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் நகருக்கு லாரியில் தக்காளியை ஏற்றிக் கொண்டு விவசாயி மல்லேஷ் என்பவர் சென்றார்.

அப்போது தமிழகத்தின் வேலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கர் (28) – சிந்துஜா (26) ஆகியோர் காரில் சென்றனர். ரிங்ரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, தங்களது காரின் மீது லாரி மோதியதாக கூறி தக்காளி லோடு லாரியை வழிமறித்தனர்.

பின்னர் லாரியில் இருந்த விவசாயி மல்லேஷிடம், விபத்துக்கான இழப்பீடு கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவர் விபத்து ஏற்படாத நிலையில், எங்கிருந்து இழப்பீடு கொடுப்பது? என்று கேட்டார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின், விவசாயியை மிரட்டி அவருடன் லாரியை கடத்திச் சென்றனர். அவர்களின் திட்டப்படி, ரிங்ரோட்டில் விவசாயியை தள்ளிவிட்டு, 2.5 டன் தக்காளியுடன் லாரியை சென்னைக்கு ஓட்டிச் சென்றனர்.

பின்னர் சென்னையில் அந்த தக்காளியை விற்று, அவர்களுக்குள் பணத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு பிரிவு) சிவபிரகாஷ் தேவராஜு கூறுகையில், ‘சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், லாரியுடன் தக்காளியை கொள்ளையடித்து சென்ற தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

தற்போதைக்கு தம்பதிகள் மட்டும் செய்து செய்யப்பட்டனர். 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் குற்றவாளிகள் சிக்கினர். தலைமறைவாக உள்ள மற்ற 3 குற்றவாளிகளான ராகேஷ், குமார், மகேஷ் ஆகியோரை தேடி வருகிறோம்’ என்றார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ. 120க்கும் மேல் விற்கப்படும் நிலையில், பயிரிடப்பட்ட தோட்டத்தில் இருந்து தக்காளியை கொள்ளையடித்து செல்லுதல், கடத்திச் சென்று விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால் தக்காளி பயிரிட்டோர், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடு வீதியில் இளம் பெண் துடிதுடித்து பலியான சோகம்!!

கும்பகோணத்தில்..

சாலை ஓரத்தில் இருந்த குல்மொஹர் மரம் அடியோடு சாய்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் டூவீலரை ஒட்டிச் சென்ற வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணத்தில், பலத்த காற்று வீசியதில் வேருடன் மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகே சரவணப்பொய்கை தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (37). கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளி, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி தன் மகனையும், தாயையும் கவனித்து வந்துள்ளார். இவருடன் கீழமாஞ்சேரியைச் சேர்ந்த சோபனா (32) என்பவரும் வேலை செய்து வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆடி வெள்ளிக்கு சாமி கும்பிடுவதற்கு பூஜை பொருள்கள் வாங்க, டூவீலரில் கும்பகோணத்திற்கு வள்ளியும், சோபனாவும் சென்றுள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியது.

வளையப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த குல்மொஹர் (செம்மயிற்கொன்றை) மரம் அடியோடு சாய்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில், டூவீலரை ஒட்டிச் சென்ற வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சோபனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக கும்பகோணம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரம் விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சோகம்!!

கோவையில்..

தமிழக மாவட்டம் கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்.

இவர் தனது தாய் பிரேமா, மனைவி லக்ஷயா மற்றும் மகள் யக்ஷிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ராஜேஷ் கடன் பிரச்சனையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியதை அக்கம்பக்கத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷின் வீட்டிற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.

மேலும் அவரது தாய், மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். அவர்கள் விஷம் குடித்தது பின்னர் தெரிய வந்தது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜேஷின் குடும்பம் தற்கொலை செய்து இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்றும், கடன்தொல்லையால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலனை தீர்த்து அதிரடி திட்டம் போட்ட காதலி.. பாம்பை கடிக்க வைத்து கொன்ற கொடூரம்!!

உத்தராகண்டில்..

உத்தராகண்டில் பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 14 அன்று நடந்ததுள்ளது. காரில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அங்கு 30 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவரது கார் இன்ஜின் இயங்கிய நிலையிலேயே இருந்துள்ளது.

பின்னர் இறந்த நபரின் உடலில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்தன. பின்னர் பிரேத பரிசோதனையில் நாகப்பாம்பு கடித்தால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில் உயிரிழந்த நபர் தொழிலதிபர் அங்கித் சவுகான்(30) என்பது தெரியவந்தது.

ஆனால் அவரது சகோதரி இஷா, அங்கித் சவுகான் மரணத்தில் அவரின் காதலி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அங்கித் சவுகான் மரணத்தில் அவரில் காதலியை விசாரிக்க போலீசார் முடிவு எடுத்தனர்.

அதன்படி நடத்திய விசாரணையில் மஹி செல்போனை ஆய்வு செய்ததில் அவர் பாம்புப் பிடாரன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர் தீவிர விசாரணையில் அங்கித் சவுகானை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரும் அங்கித் சவுகான் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் மஹி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மஹி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்துள்ளார். மேலும் கொலைத் திட்டத்தில் தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக்காரி உஷாதேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

மேலும் கொலை செய்வது எப்படி என்பதை தொலைக்காட்சி தொடரைப் பார்த்து கற்றுத் தேர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கொலை செய்வது எப்படி, தடயங்களை அழிப்பது எப்படி என்பதை யூடியூப் மூலம் பார்த்துள்ளார்.

பின்னர் காதலரை, நல்ல பாம்பை விட்டு கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்துவிட்டார். இந்நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மஹி ஆர்யா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். அண்மையில் நல்ல பாம்பை வாடகைக்குக் கொடுத்த பாம்புப் பிடாரன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தலைமறைவான 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம். அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களைக் கைது செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.

தங்கநகை கேட்டு தகராறு செய்த கணவன்.. இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கரூரில்..

பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் ஆன நான்கே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ்( 32). இவர் திருக்காடுதுறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் . இவரது மனைவி காயத்ரி(24).

இவர் திருக்காடுதுறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தனது மனைவியின் பெற்றோர்களிடம் தங்க நகை வாங்கி வருமாறு அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். அதன் பெயரில் காயத்ரி தனது பெற்றோர்களிடம் சென்று தங்க நகை கேட்டு வந்துள்ளார்.

அதன் காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு முன் 4 1/2 பவுன் தங்க செயின் கொடுத்துள்ளனர். மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் விரக்தியில் இருந்துள்ளார்.

பூபேஸ் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து காயத்ரி வீட்டில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபேஸ் வெளியில் சென்று விட்டு வந்து கதவை திறந்து பார்த்தபோது காயத்ரி சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயத்ரியை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த சம்பவம் குறித்து காயத்திரியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காயத்ரியின் தாய் இளையம்மாள் காயத்ரியின் சகோதரர் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர்.

இது குறித்து சசிகுமார் தனது சகோதரி காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகளே ஆனதால் காயத்ரி வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கரூர் கோட்டாட்சியர் ரூபினா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

காயத்ரியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பூபேஷை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

வேடிக்கை பார்த்த சிறுவன் மாடியில் இருந்து விழுந்து பலியான சோகம்!!

சென்னையில்..

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்அவுஸ் பல் லவன் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ் ( 33). இவர் தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு லித்திக் (1), லித்தேஸ் (4) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். செந்தமிழ், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீட்டில் டிவி பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேரம் லத்திக் வீட்டில் தூங்க கொண்டிருந்தான். மற்றொரு குழந்தையான வித்தேஸ் மாடியில் உள்ள பால்கனியில் சிறிய நாற்காலியில் ஏறி நின்று சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளான். இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதை சாலையில் சென்றவர்கள் பார்த்தனர். உடனே அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது லித்தேசின் குடும்பத்துக்கே தெரியாது. மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்கு சேர்த்த பின்னரே செந்தமிழுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தான் அவர் மனைவியுடன் அலறி அடித்துக் கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்றார். சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான்.

முறையான சிகிச்சை அளிக்காததே குழந்தை இறப்புக்கு காரணம் என்று செந்தமிழ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கூலித் தொழிலாளி!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் கூலி தொழிலாளி ஒருவர் வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்று பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. வீட்டின் மூத்த மகளான இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

பாரதி, அவரது ஊரிலுள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பாரதியால் படிக்க முடியவில்லை. பின்னர், அவரது பெற்றோர் தாய் மாமாவான சிவபிரசாத்திற்கு பாரதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தனது குடும்பத்தின் நிலை காரணமாக பாரதி கூலி வேலைக்கு சென்றுள்ளார். இருந்தாலும், பாரதிக்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பேராசிரியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும், கல்வியின் மூலம் தான் உயர முடியும் என அவர் நினைத்திருக்கிறார்.

விவசாயப் பண்ணையில் தினசரி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்த பாரதி தனது பட்டப்படிப்பைப் பெற ஆறு வருடங்கள் உழைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். பின்பு, அனந்தபூரில் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.

வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதியை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் (Phd) பட்டப் படிப்பில் சேர ஊக்கப்படுத்தினர். இதனால், அவர் கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்து தற்போது வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்றிருக்கிறார்.

இதற்கு, பாரதியின் கணவரும் உறுதுணையாக இருந்துள்ளார்.பெண் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , என் தாத்தா என்னைப் படிக்கச் சொன்னார் என்று பாரதி கூறியுள்ளார்.

அரசு வேலையை கைவிட்டு கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர்!!

டில்லியில்..

அரசு வேலையை விட்டுவிட்டு சோற்று கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர் இன்று மல்டி மில்லியனராக மாறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள பலர் அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் வேலைகளுக்காக தொடர்ந்து பாடுபடுகின்றனர்.

ஆனால், விவசாயத் தொழிலில் உள்ள சாத்தியக்கூறுகளை பலர் உணரவில்லை. ஆனால் இந்திய கோடீஸ்வரரான ஹரிஷ் தன்தேவ் விவசாயத்தின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார்.

ஹரிஷ் தன்தேவ் ஒரு பொறியியலாளராக இருந்தார், மேலும் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். தன்தேவ் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக சேர்ந்தார்.

நல்ல அரசு வேலை மற்றும் சலுகைகளுடன் நிலையான சம்பளம் இருந்தபோதிலும், தன்தேவ் தனது வாழ்க்கையில் திருப்தி அடையவில்லை. டில்லியில் நடந்த ஒரு விவசாய கண்காட்சியை பார்வையிட்ட பிறகு ஹரிஷ் தன்தேவின் வாழ்க்கை மாறியது, இறுதியாக அவர் தனது விவசாய கனவை தொடர முடிவு செய்தார்.

ஹரிஷ் அரசு வேலையை விட்டுவிட்டு ஜெய்சால்மரில் 120 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். ராஜஸ்தானில் பெரும்பாலான விவசாயிகள் பஜ்ரா மற்றும் கோதுமை பயிரிடும்போது, ​​ஹரிஷ் பலவிதமான கற்றாழையில் கவனம் செலுத்த முடிவு செய்தார். இது உண்மையில் அவரது வணிகத்தை இயக்க உதவியது.

ஹரிஷ் தன்தேவ் வழக்கமான பயிர்களை தேர்ந்தேடுக்காமல், ஆடம்பர அழகு சாதனப் பொருட்களில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும், மற்றும் ஹாங்காங், பிரேசில் மற்றும் அமெரிக்காவில் அதிக தேவையுள்ள சோற்று கற்றாழையை பயிரிட முடிவு செய்தார்.

அவரது விவசாயம் பாரிய அளவில் வளர்ந்து வருவதால், ஹரிஷ் விரைவில் ஜெய்சால்மரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நேச்சர்லோ அக்ரோ என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். விவசாயியாக மாறிய இந்த பொறியாளர் 80,000 கற்றாழை நாற்றுகளுடன் தனது தொழிலை தொடங்கினார், அவை இப்போது லட்சக்கணக்கில் வளர்ந்துள்ளன.

விரைவில், தாண்டேவ், ஆயுர்வேத தயாரிப்புகளின் தயாரிப்பு நிறுவனமான பாபா ராம்தேவின் பதஞ்சலியுடன் கைகோர்த்தார். பதஞ்சலியின் அலோ வேரா ஜெல் மற்றும் சோப்புகள் போன்ற தயாரிப்புகளுக்கு அலோ வேராவின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக ஹரிஷ் ஆனார்.

இப்போது தன்தேவ் குளோபல் குழுமத்தை நடத்தி, உலகம் முழுவதும் கற்றாழை ஏற்றுமதி செய்து, மல்டி-மில்லியனராக மாறியுள்ளார், மேலும் அவரது வருவாய் ஆண்டுக்கு ரூ. 2 முதல் 3 கோடியாக உள்ளது.

தடுப்பூசி போட்டதும் 10 மாத குழந்தை பலி.. கதறும் தாய்!!

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர்.

இதனால் கீதா குழந்தையை தூக்கி கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட உடனே திடீரென குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை சுயநினைவை இழந்து விட்டது.

உடனடியாக அருகில் உள்ளஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை எடுத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசியை செலுத்தினர்.

ஆனால் குழந்தையின் உடல்நிலை படுமோசமானது. அங்கு பணிபுரியும்மருத்துவர் தனது காரிலேயே குழந்தையையும், பெற்றோரையும் அழைத்து கொண்டு தஞ்சை அரசு ராசமிராசுதார் மருத்துவமனையில் இறக்கி விட்டார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.குழந்தையை இறந்ததை கேட்ட தாய் வாயிலும் , வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத காட்சி காண்பவர்களை கரைய வைத்தது.

இது குறித்து குழந்தையின் தாய் கீதா” தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமானது. உடனே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றோம்.

அங்கேயும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவரின் காரிலேயே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அரசு மருத்துவமனையில் எங்களை இறக்கிவிட்ட வேகத்தில் மருத்துவர்களை காணவில்லை. உள்ளே போய் மருத்துவரை சந்தித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாகவும், எனவே இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்ற மகனே தாய், தகப்பனை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த கொடூரம்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என 2 மகன்கள்.

இதில் ஹோட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக பணிபுரிந்து வந்தார். சாந்தா மத்திய அரசு ஊழியராக பணிசெய்து ஓய்வு பெற்றவர். தின்ட்லு பகுதியில் சச்சின் வசித்து வருகிறார். சரத் மட்டும் பாஸ்கர், சாந்தாவுடன் தங்கி இருந்தார்.

பாஸ்கர் தம்பதியின் சொந்த ஊர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ஆகும். இதில் சரத் எங்குமே வேலைக்கு செல்லவில்லை. வீட்டின் மாடியில் தனியாக தங்கி இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பாஸ்கருக்கும், சரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகன் சரத்தை பணிக்கு செல்லுமாறு பாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத் திடீரென்று வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாஸ்கரை கண் மூடித்தனமாக தாக்கி உள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தா தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சாந்தாவையும் இரும்பு கம்பியால் சரத் தாக்கியுள்ளார்.

தாய் தந்தை இருவரும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தந்தை, தாயின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு சரத் தப்பி சென்று விட்டார்.

நேற்று காலையில் சச்சின் மொபைலில் தந்தை, தாயுடன் பேச முயன்றார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நேற்று காலை பெற்றோரை பார்க்க சஜித் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாஸ்கரும் சாந்தாவும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சரத்தை வலைவீசி தேடிவருகிறார்கள். அறிவுரை கூறியதால் தந்தை, தாயை பெற்ற மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் கொடுமை செய்து சிறுவன் கொலை!!

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் 6 வயது மதியரசு.

இவன் கடத்தூர் பகுதியில் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். ஜூலை 16ம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடித் திரிந்தனர். சிறுவன் காணாமல் போனதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது .

காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்ட போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனின் உறவினரான 18 வயது பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொபைலை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை செய்து கொலை செய்துள்ளார். சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசி சென்றுவிட்டதாக பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டாகத்தான் கொலை செய்திருக்க வேண்டும் என காவல்நிலையம் முன்பு சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை : பொலிஸாரிடம் நடிக்கும் சந்தேக நபர்!!

ஹொரணை..!

ஹொரணை – அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தையின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விலங்குகள் கடித்ததால் அந்த உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாவு திணைக்களத்திற்கு துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைகள் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரிடம் நேற்று பிற்பகல் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சந்தேகநபர் தனது மன நிலை இன்னமும் குழப்பமடைந்துள்ளதாகக் கூறி மந்த நிலையில் வாக்குமூலம் வழங்கும் நிலை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொரணை – வரக்காகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர், தனது வீட்டிற்கு அடுத்துள்ள கைவிடப்பட்ட வீட்டில் தங்கியிருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைது செய்யச் சென்ற போது, ​​அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது அவர் கத்திரிக்கோலால் தன்னை தானே வெட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் மயக்கமடைந்த சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்த போது ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப சுமையால் கனவை தொலைத்த இளம் வீராங்கனை!!

சச்சினி பெரேரா..

தடையூன்றி பாய்தல் என்ற போல்வால்ட் (Paul Vault) போட்டியில் தேசிய சாதனைகளை படைத்த இலங்கையின் தலைசிறந்த தடகள வீராங்கனை ஒருவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நாணய நெருக்கடி காரணமாக உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்கள், நீண்ட கால நோய் பராமரிப்பு தேவைப்படும் தனது தாயை கவனிப்பதில் பிரச்சினையை கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் 24 வயதான சச்சினி பெரேரா தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து அவர் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.எனினும் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவை சச்சினி பெரேரா தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் “இதுதான் எனது உலகம் என்று நான் உணர்கிறேன்” எனவும் ஆங்கில நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“நீ ஒரு விளையாட்டு வீராங்கனை, வீட்டு வேலைக்காரி அல்ல” என்று தனது பெற்றோர் அடிக்கடி கூறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.இதன்போது இலங்கையில் தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்த வலிமை பயிற்சி அட்டவணையை தற்போது பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகங்களினால் இந்த தகவல் வெளியானதையடுத்து சச்சினி பெரேராவின் நிலைமை கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தநிலையில் சச்சினிக்கு அரபு இராச்சியத்தில் விளையாட்டு தொடர்பான வேலையைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : கடுமையான நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,யார் எதை கூறினாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் உள்ளூர் தயாரிப்புகள் மூலம் உள்ளூர் வருமான பொருளாதாரத்தையும், அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் வெளிநாட்டு பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.

பொருளாதாரச் செயற்பாடுகளை வெறும் பேச்சளவில் மாத்திரம் வைத்திருந்தால் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (21.07.2023) மத்திய வங்கி வெளியிட்டிருந்த நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318.7256 ரூபாவாகவும், விற்பனை விலையானது 331.9854 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டுபாயில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கை இளைஞன்!!

டுபாயில்..

டுபாயில் 23 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞன் சுற்றுலா விசாவில் டுபாயில் வேலைக்காகச் சென்றிருந்தார்.

அவர் நாட்டிற்குச் சென்ற சொற்ப நாட்களில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தை சேர்ந்த 23 வயதான கசுன் பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெற்றோருக்கு வந்ததையடுத்து கசுனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.