காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

ஹேவாஹெட்டயில்..

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரில் அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே சவப்பெட்டியில் படுகொலை செய்யப்பட்ட தாய், குழந்தை.. இலங்கையில் நடந்த சோகம்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்றையதினம் (22-07-2023) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்றன.

அங்கு, சட்ட வைத்திய அதிகாரி வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்தார். விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய செல்லும் போது சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தரிக்கோலால் தாக்க முற்பட்டதாகவும், அதனை தடுக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கத்திரிக்கோலால் தன்னை தானே குத்தி காயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : முழுமையான விபரம்!!

இன்று (23.07.2023) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

119 பொலிஸ் அவசர பிரிவு ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பத்து பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவனை தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல், அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெற்றோல் ஊற்றியுள்ளனர்.

“எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை வெட்ட முயன்ற போது கணவனை காப்பாற்ற குறுக்கே சென்ற 21 வயதான மனைவியும் சரமாரியான வெட்டுக்காயங்களிற்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதான பாத்திமா என்ற மனைவி உயிரிழந்தார். கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளானார்.

02 வயதுடைய சிறுவன் மற்றும் 07,08 ,13, ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளமையுடன் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தடவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டமையுடன் சட்ட வைத்திய அதிகாரி ம.கோகுல்சங்கர் மற்றும் பதில் நீதவான் தயாபரன் ஆரத்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து வீட்டின் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : நடந்தது என்ன?

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

119 அவசரச் சட்டத்தின் ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பத்து பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவனை தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல்,

அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெற்றோல் ஊற்றியுள்ளனர். “எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை வெட்ட முயன்ற போது கணவனை காப்பாற்ற குறுக்கே சென்ற 21 வயதான மனைவியும் சரமாரியான வெட்டுக் காயங்களிற்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதான பாத்திமா என்ற மனைவி உயிரிழந்தார். கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளானார்.

02 வயதுடைய சிறுவன் மற்றும் 07,08 ,13 ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளமையுடன் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தடவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டமையுடன் திடீர் மரணவிசாரணை அதிகாரி ம.கோகுல்சங்கர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டார்.

வவுனியாவில் புகையிரத்துடன் பாரவூர்தி மோதி விபத்து : இருவர் காயம் : பாரவூர்தி சேதம்!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07.2023) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன்,பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், மற்றொரு நபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் : குடும்பப் பெண் எரித்துக்கொலை : வீடும் எரிப்பு : 9 பேர் காயம்!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுளைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவரது கணவர், சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மற்றும் தடவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக இனம் தெரியாத நபர்கள் நடமாடித்திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

17 லட்சம் கடன்.. குழந்தை மனைவியை கொன்று தந்தை விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்-க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தனது 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு எதோ மாத்திரையை கொடுத்துள்ளார்.

பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார்.  பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்துகொண்டுதில் மயக்கமடைந்துள்ளார்.

அவரது உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி கையில் இருந்து வெளியேறிய இரத்தம் அறை முழுவதும் பரவி நிலையிலும், 7-வயது மகள் வாயில் நுரை தள்ளியபடியும் உயிரிழந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 17 லட்சம் கடன் உள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் மனஉளைச்சலில் வேறுவழி தெரியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து குழந்தைக்கு மாத்திரை கொடுத்தும், மனைவி மற்றும் அரவிந்த் இருவரும் மாத்திரை உட்கொண்டு கை நரம்பை அறுத்துகொண்டாதாக கூறியுள்ளார்.

வவுனியா வடக்கில் முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21.07) மாலை அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும், கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுகிறது.

நேற்றும் முறுகல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மகேஸ்வரன் மீது கொலையாளி கல் வீசி தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மகேஸ்வரன், மண்வெட்டியை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றுள்ளார்.

தப்பியோடியவர் பக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று, அங்கிருந்த இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள். மகேஸ்வரன் யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

39 வயதான கொலையாளி ஒன்றரை வருடமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர், யுத்தம் முடிவதற்கு முன்னரே அந்த அமைப்பை விட்டு விலகி விட்டார்.

அவர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளது. கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

 

இளம் தாய் மற்றும் மகள் படுகொலை : திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது!!

அங்குருவாதொட்டயில்..

அங்குருவாதொட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வரகாகொட சல்கஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் மோதிலில் ஈடுபட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் அதிகாரிகளை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் குத்திக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அங்குருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவிலிருந்து யாழ் வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில்..

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2023) தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார்.

எனினும் தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளார். சங்கிலி தொடர்பில் கேட்ட போது, சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய் என தங்கை கூறியுள்ளார். அதனால் அக்கா – தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பி பிடி சண்டையாக மாறியுள்ளது.

அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்ததையடுத்து, கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன், பொலிஸ் நிலையம் சென்ற தங்கை, தனது அக்கா மீது முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்..

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது. சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரை உயிரிழந்துள்ளார்.

பச்சிளம் குழந்தை மற்றும் இளம் பெண் படுகொலையில் முக்கிய சந்தேக நபர் கைது!!

உருதுதாவவில்..

அங்குருவாதொட்ட, உருதுதாவவில் இடம்பெற்ற இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த மனைவி : பரிதவிக்கும் பிஞ்சுக் குழந்தை!!

ராமநாதபுரத்தில்..

கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (30), இவரின் மனைவி தாரணி காமாட்சி (29). இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

சுதாகர் எலெக்ட்ரிக் மற்றும் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமக்குடி பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் ஜன்னலில் கொசுவலை மாட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சுதாகர்.

வெளிப்புற ஜன்னலில் கொசுவலை மாட்டுவதற்காக பக்கவாட்டு சுவரில் நின்று வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.

இதில் அவரின் தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுதாகரை அவரின் உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உயர் சிகிச்சைகள் அளித்தும், பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் சுதாகர். கணவர் இறந்த துக்கம்தாளாமல் கைக்குழந்தையுடன் தாரணி காமாட்சி கதறி அழுதபடி இருந்திருக்கிறார்.

அவரின் உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அழுகையை நிறுத்தவில்லை எனச் சொல்லப்படுகிறது. நேற்றுவரை சாப்பிடாமல் குழந்தையை வைத்துக்கொண்டு கணவரின் படத்துக்கு முன்பு அமர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

உறவினர்களும், அந்தப் பகுதியினரும் தொடர்ந்து ஆறுதல் கூறிய நிலையில், அழுகையை அடக்கிக்கொண்டு, “நான் அழமாட்டேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்” எனக் கூறி குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு, “நான் தூங்கச் செல்கிறேன்” எனக் கூறிவிட்டு, தனி அறைக்குள் சென்று உள்பக்கமாகப் பூட்டியிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, அவரை வெளியே வருமாறு உறவினர்கள் அழைத்திருக்கின்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்திருக்கின்றனர்.

அப்போது அவர் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். இது குறித்து தகவலறிந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்ட தாரணி காமாட்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறைத் தண்டனை!!

ஈரானில்..

பொது இடத்தில் ஹிஜாப் அணியாத ஈரான் பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணியாமல் சென்ற காரணத்துக்காக ஈரானிலுள்ள நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் வந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும் சிறையில் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறுமியுடன் மோசமாக நடத்துக்கொண்ட சிறிய தந்தைக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை கைது செய்யபட்டுள்ளார்.இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.தந்தை இரவில் கடற்தொழிலுக்கு செல்லும் வேளையில் சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் சிறிய தந்தை சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியில் பிரதேச செயலக அதிகாரிகளால் சிறுவர் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அடுத்த வருடத்திற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிப்பு!!

விடுமுறைகள்..

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொாடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலானது அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.