7 வயது சிறுவன் துடிதுடிக்க கொலை.. அத்தை அதிர்ச்சி வாக்குமூலம்.!!

அஸ்ஸாமில்..

அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன் இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா . இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர்.

பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன் – மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருந்தான். பிற்பகலில் கணவன் – மனைவி 2 பேரும் வீட்டிற்கு சாப்பிட வந்தனர்.

அப்போது வீட்டில் மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவனை சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்ததால் இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுவன் கொலை செய்யப்பட்டது மில் வளாகம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வரவாய்ப்பு இல்லை என்பதால், மில்லில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஜாகீர்உசேன் அக்காவும், சிறுவனின் அத்தையுமான நூர்ஜாகதுன் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் நூர்ஜாகதுனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேனின் அக்காவான நூர்ஜாகதுன், அசாமில் இருந்தபோது, வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால் தனது சகோதரியை கோவைக்கு வரவழைத்த ஜாகிர், தான் பணியாற்றும் மில்லிலேயே கடந்த ஆண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே, மில்லில் ஆர்வத்துடன் வேலை செய்து வந்த ஜாகிர் உசேனுக்கு, மில்லின் உரிமையாளர் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

இதனை நூர்ஜாகதுனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்த வீட்டிற்கு பிற்காலத்தில் உரிமையாளராக ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில், ஜாகிர் உசேனின் மகனை கொன்று, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.

தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்டு சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்!!

கரூரில்..

ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுத்திணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்.

பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் குமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றாருக்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள அணையின் கரையில் அமைந்துள்ள ரிசார்ட் உணவகம் ஒன்றில் செவ்வாய்கிழமை அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் வழங்கபட்ட நண்டு உணவை தினேஷ்குமார்-கிருபா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கணவர் தினேஷ்குமார் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருபாவை மீட்டு குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார். தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குபதிவு செய்து விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவருக்கு சிறுவயதிலிருந்தே மூச்சு திணறல் பிரச்சனை இருந்தும் வந்ததாகவும், அதற்குரிய மருந்துகளை கையொடு அவர் எடுத்துச்சென்ற நிலையிலும் இந்த உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் விடுதி மேலாளர் கூறுகையில், “புதுமண தம்பதியர் மதியம் வேளையில், அவர்கள் தங்கி இருந்த அறைக்கு நண்டு உணவை கொண்டு வருமாறு ஆர்டர் செய்தனர்.

இளம் பெண் நண்டு குழம்பை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், கையில் கொண்டு வந்த மருந்துகளை உண்ட பின்பும் அவருக்கு மூச்சு திணறல் நிற்கவில்லை என்று இந்த பிரச்சனை ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பிறகு தான் கணவர் எங்களிடம் தகவலை தெரிவித்தார்.

உடனடியாக நாங்கள் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு வைத்து தான் சிகிச்சை பலனின்றி அந்தப்பெண் உயிரிழந்தார். சிகிச்சைக்கு தாமதமாக சென்றதும் அவர் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள்.. மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கணவன்!!

ஆந்திராவில் ..

நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சித்திரவதைகளும் குறையவே இல்லை. பெண்குழந்தைகள் பிறந்ததால் கணவனும், மாமியாரும் மனைவியின் விரல்களை உடைத்துதனி அறையில் வைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் வசித்து வரும் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரில் வசித்து வரும் சபீஹாவுக்கும் 2017ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்.

தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றதால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். இதற்காக ஏற்கனவே 3 முறை போலீசில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து ஆண் வாரிசு வேண்டி சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

அத்துடன் சபீஹாவை வீட்டின் மேல் மாடியில் கை விரலை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தராமல் சித்தரவதை செய்து வந்துள்ளனர். சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வந்தார்.

சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது கணவர், மாமியாரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனையடுத்து சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று சபீஹாவை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் தவறி விழுந்து 18 மாத குழந்தை பலி.. கதறி துடித்த பெற்றோர்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டி.எடையார் கிராமத்தில் வசித்து வருபவர் முகில்வண்ணன். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தியாஸ்ரீ என்ற பெண் குழந்தை .

இந்த குழந்தை நேற்று பிற்பகலில் வீட்டு சமையலறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தது. ஆஷா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் குழந்தையின் சத்தம் நின்று விட்டதால் ஆஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தை விளையாடிக் கொண்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்ததில் குழந்தை தியாஸ்ரீ அங்கு அன்னக்கூடை தண்ணீரில் தவறி விழுந்து கிடந்தாள்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை தியாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றரை வயது குழந்தை அன்னக்கூடை தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா மாணவி கனிஷ்ட பொதுநலவாய போட்டியில் பதக்கம் வென்று சாதனை : மாணவிக்கு வரவேற்பு!!

கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.

அகில இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதிகள் இந்த வரவேற்பினை வழங்கினார்கள். அவர்களோடு கோசியாவின் அம்மா மற்றும் சகோதரி, பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவதே தனது குறிக்கோள் என பதக்கம் வென்ற வீராங்கனை கோசியா தெரித்துள்ளார்.

34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.

1ம் இணைப்பு..

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கல் போட்டியில் பங்குகொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி 3ம் இடத்தை பெற்று சாதித்திள்ளார்.

2023ம் ஆண்டிற்கான கனிஷ்ட பொதுநலவாய போட்டிக்கான பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வடமாகாணத்தின் வவுனியாவிலிருந்து, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தரம் 09 மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.

14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87 கிலோ கிராம் எடையை தூக்கிய கோசியா இரண்டாமிடத்தை வெற்றி கொண்டிருந்தார். கனிஷ்ட பொதுநலவாய போட்டியில் 5 கிலோ அதிகமாக தூக்கி அவருடைய அதி கூடிய எடையை பதிவு செய்துள்ளார்.

வவுனியா, கணேசபுரம் பகுதியை சேர்ந்த கோசியா, இந்தியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களினால் தேசிய போட்டிகளுக்கு பின்னர் எந்தவித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை எனவும், வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர் போட்டிகளுக்கு அணியும் பாதணியை கூட இரவல் வாங்கி சென்றதாகவும் அவரின் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் தெரிவித்தார்.

பயணம் செய்வதற்கு கூட அதிகளவான பணமின்மையால் தான பயிற்றுவிப்பாளராக போட்டிகளுக்கு செல்லவில்லை எனவும், மொழி அவ்வளவாக தெரியாத நிலையில் இலங்கையின் ஏனைய வீர வீராங்கனைகளுடனும், அதிகாரிகளுடனும் இந்தியா டெல்லிக்கு சென்று இவ்வாறு வெற்றி பெறுவது பெரும் சாதனை என பயிற்றுவிப்பாளர் பெருமிதம் கொள்கிறார்.

இவருக்கு உரிய பயிற்சிகளை வழங்கி வளர்த்தெடுத்தால் கனிஷ்ட ஒலிம்பிக் போட்டிகளிலும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் சாதனை படைப்பர் எனவும் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவரது பாடசாலை விளையாட்டு ஆசிரியர்கள் வி.நிரஞ்சலா, ஜே.டி ரெஜினோல்ட், எஸ்.அகிலா ஆகியோரும் கோசியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார் எனவும் பயிற்றுவிப்பாளர் நன்றி தெரிவித்தார்.

-நன்றி V மீடியா-

இத்தாலியில் காதலியை கொலை செய்த இலங்கைச் சிறுவன்!!

இலங்கை..

இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுவன் ஒருவர் இத்தாலியில் தனது காதலியை கொலை செய்த சம்பவத்தால் சர்ச்சை நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர கொலையால் இலங்கையில் இருந்து இத்தாலி செல்பவர்களுக்கு கடும் நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவன் தனது மிஷேல் என்ற 17 வயதான சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்தார் என கூறப்படுகின்றது. 30 யூரோக்கள் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதம் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் தற்போதுள்ள சட்டத்தின்படி, 18 வயதுக்கு அதிகரிக்காமல் இருந்தால், அது மைனர் என்ற பிரிவின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் கொலை செய்யப்பட்ட மிஷேலும், சந்தேக நபரான இலங்கை சிறுவனும் 17 வயதானவர்கள் என்பதனால் இந்த கொலைக்கான தீர்ப்பு எப்படி வழங்கப்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தீர்ப்பு குறித்து இன்னும் உறுதியான எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, கடந்த காலங்களில் இத்தாலியில் இலங்கையர்களால் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது இத்தாலியில் வாழும் மற்றும் பணிபுரியும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு மேலும் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலிக்கு செல்லவும் அங்கும் வேலை தேடவும் முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு இந்தப் பின்னணி மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் யுவதி : விசாரணை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்!!

பேராதனையில்..

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற 21 வயதுடைய வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.அதன்படி, குறித்த குழு நேற்றைய தினம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரோஎக்சோன் எனப்படும் நோய்யெதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

மாத்தறையில்..

மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கிக்கொண்டதால் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (15) குறித்த குழந்தை தனது வீட்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 1 வயது 15 நாட்கள் நிறைந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையில்..

முச்சக்கர வண்டிகளை சில மாற்றங்களுடன் இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.இதன்படி, முச்சக்கர வண்டிகளை இனிவரும் காலங்களில் தேவையற்ற விதத்தில் அலங்கரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதி வழங்கப்படாது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 08 மில்லியன் மொத்த வாகனங்களில் சுமார் 02 மில்லியன் முச்சக்கர வண்டிகளாகும்.இதன்படி சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் காணாமல்போன இரு யுவதிகள் : உறவினர்கள் விடுத்த அவசர கோரிக்கை!!

கொழும்பில்..

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த 17 வயதான பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற யுவதி கடந்த 12.07.2023 புதன்கிழமையில் இருந்து காணவில்லை என தெரிய வருகின்றது.

குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக பகல் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார்.யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

இதேவேளை, கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 14-07-2023 வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள யுவதி கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும், காணாமல்போன யுவதி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்.வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான புஸ்பராசா எழில்நாத் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறப்படுகின்றது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய தடகள போட்டிகளில் புதிய சாதனை : இலங்கைக்கு தங்கப் பதக்கம்.!!

தாய்லாந்தில்..

ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனைகளுடன் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சம்பியன்ஷிப் தொடரில் இன்று (16.07.2023) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே தருஷி தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

19 வயதான தருஷி கருணாரத்ன போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளதுடன் 1998 ஆம் ஆண்டு சீனாவின் ஜாங் ஜியான் 2:01.16 வினாடிகளில் பதிவு செய்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் வித்தியாசமான வடிவில் முட்டை இட்ட கோழி!!

நானுஓயாவில்..

நானுஓயா மஹாஎலிய பிரதேசத்தில் கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இந்த கோழியை சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் வளர்த்து வரும் நிலையில் தொடர்ந்து சிறந்த முறையில் முட்டைகளை கொடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் திடிரென நேற்றைய தினம் ‘யு’ வடிவிலான முட்டையை இட்டுள்ளதால் உரிமையாளர் வியப்படைந்துள்ளார். இந்த வினோத முட்டையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோழிகளுக்கு ஏற்படும் மரபணு மாற்றமே இவ்வாறான முட்டைகள் இடுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முட்டைகள் உண்பதற்கு உகந்ததல்ல எனவும் மீள கோழிக்குஞ்சுகள் அடைகாக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான முட்டைகளில் மஞ்சட்கருவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் கைது!!

வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிசார் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டர் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து கணவர் செய்த கொடூரம்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவி கை விரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து உணவு வழங்காமல் சித்ரவதை செய்த ஊர்காவல் படையை சேர்ந்த வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் இரண்டு மூன்று முறை பெரியவர்களால் போலீசில் புகார் அளித்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீட்டின் மேல் மாடியில் சபீஹாவின் கை விரலை உடைத்து அறையில் அடைத்து வைத்து சாப்பிட உணவு கூட வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனால் சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்து வீட்டோர் சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சபீஹாவின் பெற்றோர் பலமனேர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சபீஹாவை மீட்டு அவரிடம் நடந்த விவரங்களை கேட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்காளியால் கணவனை விட்டு பிரிந்த மனைவி : இப்படியும் ஓர் சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில்..

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி ஒரு கிலோ ரூ150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர் மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலையேற்றம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சில குடும்பங்கள் உணவில் சேர்க்கும் தக்காளியின் அளவை குறைத்துள்ளன.

உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் தயாரிப்பது பல இடங்களில் கைவிடப்பட்டுள்ளது. அதோடு தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள், விவசாயிகள் பாதுகாவலர்களை நியமிக்கும் சம்பவங்களும், அவற்றை பதுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார்.

விலையேற்றத்துக்கு நடுவே தன்னிடம் கேட்காமல் ஏன் 2 தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். இது வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றி எல்லை மீறி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த சஞ்சீவ் பர்மனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.

அப்போது அவர் தனது மகளையும் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே மனைவி வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என சஞ்சீவ் பர்மன் நம்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை சஞ்சீவ் பர்மன் ஆங்காங்கே தேடிப்பார்த்தார். உறவினர்களிடம் விசாரித்தார்.

அப்போது மகளோடு, மனைவி எங்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இதனால் கவலைக்குள்ளான சஞ்சீவ் பர்மன் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சஞ்சீவ் பர்மனின் மனைவி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.