எப்போ திருமணம் என தொடர்ந்து நச்சரித்த முதியவர்.. ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு நபர் செய்த கொடூரம்!!

45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ஆசிமின் மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சிரேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ​​”திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் அவரை கொன்றேன்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு முன் மணமகனின் வலிமையை சோதிக்கும் மணமகளின் தாய்… ஆபிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான வழக்கம்!!

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்த கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் அளவுக்கு மனிதன் தற்போது முன்னேறிவிட்டான். இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தும், இன்னும் சில பகுதிகளில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

சில பழங்குடியினர் விசித்திரமான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். ஆப்பிரிக்காவில் சில பின்தங்கிய நாடுகளின் பழங்குடியினரிடம் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

இதேபோன்ற ஒரு விசித்திரமான வழக்கம் இப்போது இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த விசித்திரமான வழக்கம் என்ன என்று பார்ப்போம்.

உகாண்டாவில் உள்ள பன்யன்கோல் (Banyankole) பழங்குடியினரிடையே இந்த விசித்திரமான வழக்கம் உள்ளது.

அந்த வழக்கப்படி திருமணத்திற்கு முன் மணமகன் தனது பாலியல் திறனை நிரூபிக்க வேண்டும். ஆம் இது விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மைதான்.

மேலும், மணமகனின் பாலியல் திறனை யார் சோதிக்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஏனெனில் மணமகளின் தாயே மணமகனின் பாலியல் திறனை சோதிக்கிறார்.

பன்யன்கோல் பழங்குடியினரில், சிறுமிகளுக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

ஆனால் அந்த பெண்ணின் தாயார் தனது மகளுக்கு பொருத்தமான பையனை காதல் ரீதியாக கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதற்காக தன் பெண்ணைக் கொடுக்க விரும்பும் பையனின் பாலியல் திறனை அவளே சோதிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு தாய் இல்லையென்றால், அந்தத் தாயின் மூத்த சகோதரியோ, தங்கையோ அந்தப் பொறுப்பை ஏற்பார்கள். அவர்கள் இல்லை என்றால், மணமகளின் மூத்த சகோதரி வேலை செய்வார்.

பாலியல் திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவருக்கு மணமகள் வழங்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும். இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படும்.

மணமகனின் பாலியல் திறனை சோதித்த பெண் மணமகளுக்கு அவனது பலம் மற்றும் பலவீனத்தை விளக்குகிறார். மேலும், முதலிரவில் அவளும் அந்த இளம்பெண்ணுடன் அறைக்குள் செல்கிறாள்.

புதுமணத் தம்பதிகளை இரவு முழுவதும் பின்தொடர்ந்து, அவர்களின் முதல் இரவை வெற்றியடையச் செய்ய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குகிறார்.

அந்த பழங்குடியின மக்கள் இன்றும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற இளைஞர்.. திரும்பி வந்து பார்க்கையில் ஒருவர் கூட உயிருடன் இல்லை!!

வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நௌஃபல் என்று இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாளாய் நிற்கிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய கிராமமான முண்டக்கையில் இருந்து ஓமன் சென்றுள்ளார்.

இவர், தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட உயிருடன் இல்லை.

இந்த நிலச்சரிவில் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள், சகோதரன், மைத்துனர் மற்றும் அவர்களது குழந்தைகள் என 11 பேரையும் இழந்து நிற்கிறார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு வந்து பார்க்கையில் வீடு இருந்த பகுதியில் வெறும் மணல் குவியல்தான் இருக்கிறது. வெளிநாட்டிற்கு செல்லும் போது அவர்களை பார்ப்பது தான் கடைசி என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி!!

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானப் பயணத் தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான குறித்த பெண், தன்னை வைத்தியர் என கூறிக்கொள்வதாகவும், இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று, இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மனைவியை மிரட்டுவதற்காக தந்தை செய்த மோசமான செயல்!!

சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது 6 வயது மகளை அருகில் வைத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதங்களாக வீட்டை விட்டுப் பிரிந்திருந்த மனைவியை கொன்றுவிடுவதாக வீடியோவில் மிரட்டியுள்ளார்.

மிரட்டும் வீடியோவையம் தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ளார். தனது மனைவி எந்த நேரத்திலாவது இந்த வீடியோவை பார்ப்பார் என்ற எண்ணத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மல்வனேகம – எல்லாவ கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜயக்கொடி ஆராச்சிலகே சமன் கருணாரத்ன என்ற இளைஞரே ஆவார்.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மனைவி இல்லாத காரணத்தால், இந்த சந்தேக நபர் தனது மகளுடன் வீடியோ எடுத்ததுடன், மனைவியையும் குழந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. சிறுமியின் தாய் தன்னையும் மகளையும் கைவிட்டுச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தம்புத்தேகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!!

இலங்கையில் வங்களில் நிலையான வைப்புக்களை வைத்துள்ள சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதங்களை அதிகரிக்க நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலையான வைப்புக்களுக்கான 8.5 வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை காரணமாக அதிகளவான சிரேஷ்ட பிரஜைகள் தமது நிலையான வைப்புக்களிலிருந்து பணத்தை மீற பெற்றுக்கொள்ளவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 60 வயதிற்குட்பட சிரேஷ்ட பிரஜைகளால் நிலையான வைப்பிலிடப்படும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு பத்து வீத வட்டி வழங்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.

 

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை!!

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனை தருசி கருணாரட்ன சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கியுள்ளார். தருசி தான் போட்டியில் பங்கேற்பதற்காக பயன்படுத்திய ஆடையொன்றை இவ்வாறு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த ஆடை (competition kits) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. சுவிட்சர்லாந்தின் லுசானோவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

தருசியின் நன்கொடையை பாராட்டும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நற்சான்று பத்திரமொன்றை வழங்க உள்ளது. இனிவரும் காலங்களில் தருசி போட்டியில் பயன்படுத்திய ஆடை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒரு நாள் 25 மணிநேரமாக மாறும்… நிலவுக்கும் பூமிக்கும் இடையில் நிகழும் மாற்றம்!!

எதிர்காலத்தில் ஒரு நாளினுடைய அளவு 25 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் Wisconsin madison பல்கலைக்கழகம் பூமிக்கும் நிலவுக்குமான வரலாற்று தொடர்பையும் அது எவ்வாறு பல மில்லியன் வருடங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது எனவும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கமைய நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாகவும் இதனால் ஒரு நாளினுடைய அளவு 24 மணித்தியாலங்களில் இருந்து 25 மணித்தியாலங்களாக மாறும் எனவும் ஒரு நாளினுடைய இரவு அல்லது பகலின் அளவு மாறும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை ஒரு வருடத்துக்கு 3.8 சென்ரிமீட்டர் அளவு படிப்படியாக நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வானில் இருக்க கூடிய இரு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு தொடர்பால இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

பூமியின் புவியியல் கடந்த காலத்தை பற்றிய நுண்ணறிவுகளை பெற ஆராய்ச்சியாளர்கள் சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை அமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

நிலவின் தாக்கத்தால் பூமியின் சுழற்சி இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாக கொண்டு இந்த ஆய்வை செய்ததாக கூறியுள்ளனர்.

இதனூடாக ஏறக்குறைய 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடன் பூமியின் உறவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நிலவு, பூமியிலிருந்து விலகி செல்லும் தற்போதைய விகிதம் இவ்வாறே தொடர்ந்தால், பூமியில் ஒரு நாளின் நீளம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் 25 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாம நிலவு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, ​​இந்த செயல்முறை படிப்படியாக நடைபெறும் என்றும் ஆனால் நிலவு இரவு வானில் இருந்து விரைவில் மறைந்துவிடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில்15 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன்!!

முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்து சென்று சிறுமியுடன் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் மோசடிகள் அதிகரிப்பு!!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் பணியகம் கேட்டுள்ளது.

011 2 864 241 அல்லது 011 2 864 123 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும்.

அண்மைய காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பல கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் குடிவரவு கொள்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றம்!!

கனடாவின் (Canada) குடிவரவு கொள்கையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் செமி – ஸ்க்கில்ட் தொழிலாளர்கள் (semi-skilled workers) எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை எளிதில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தினால் (IRCC) குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் (IRPA) இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்போது, பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புக்கள் (TEER) நிலைகள் 4, 5 ஆகியவற்றில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான புதிய நிரந்தர பொருளாதார குடிவரவு வகுப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக திறன்கள் மற்றும் அனுபவங்களை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதன் மூலம் பொருளாதார குடிவரவு முறைமையினையும் (economic immigration system) நவீனமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், TEER (Training, Education, Experience, and Responsibilities) முறையானது தேசிய தொழில் வகைப்படுத்தல் (NOC) முறையின் புதுப்பிப்பாக 2022இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்தின் மூலம் TEER முறைமையானது, தொழில்களுக்கான பழைய ‘திறன் நிலைகள்’ என்பதற்கு பதிலாக, TEERS என்று அழைக்கப்படும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, TEERS இன் 0 – 3 என்பது பொதுவாக இரண்டாம் நிலைக் கல்வி அல்லது குறிப்பிட்ட நீளம் கொண்ட பயிற்சி தேவைப்படும் வேலைகளுக்கானது. மேலும், TEERS 4 மற்றும் 5 ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வி, வேலையில் பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது ஆகும்.

குறிப்பாக, TEER 5ஆனது எவ்வித முறையான கல்வியும் இல்லாமல், குறுகிய கால பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாற்றங்கள் TEER 4 மற்றும் 5 வேலைகளில் கனேடிய வேலை அனுபவம் பெற்ற வெளிநாட்டு நபர்களுக்கு எளிதாக நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

 

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.08.2024) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை வசிக்கும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கொள்ளையனாக மாறிய சிறுவன்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 14 வயதுச் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என ஐந்து கடைகளும் கொள்லையிடப்பட்டிருந்தன.

அதோடு , புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளது.

கொள்லைச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் கைதான சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட 46,230 ரூபா பணமும், திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய சோகம் : உடல் இல்லை மகளின் கைக்கு இறுதிச்சடங்கு : கதறி அழுத தந்தை!!

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்த செய்த சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ளது.

வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரையில் 360 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது

அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை தந்தை ராமசாமி உறுதி செய்தார்.

தன் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகள் ஜிசாவின் ஒரு கை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு தகன மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதைப் பார்க்கும் ராமசாமி தன் முகத்தை மூடியபடி கதறி அழுகிறார். பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்யக்கூடியதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் தலைக்குள் பேன் இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

பெண்ணின் தலையில் பேன் இருந்தமையால், விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு 12 மணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறங்கியது. கடந்த மாதம் 15 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,

மருத்துவ காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஈதன் ஜுடல்சன் என்ற நபர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சம்பவம் நடந்தபோது அவரும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், எனினும் முழுமையான விவரத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

“விமானத்தில் பயங்கரமான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்றும் யாரும் மயக்கமடையவில்லை, யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியபோது ஒரு பெண் விமானத்தின் முன்பகுதியை நோக்கி வேகமாக ஓடினார்.

அது குறித்து சக பயணிகளிடம் நான் விசாரித்தபோது, விமானத்தில் இருந்த ஒரு பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக கூறி 2 பெண்கள் கூச்சலிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விமான ஊழியர்களிடமும் அந்த பெண்கள் முறையிட்டதன் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவருக்கும் மீண்டும் அதே இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஜுடல்சன்,

பேன்கள் குறித்து குற்றச்சாட்டு கூறிய 2 பெண்கள் அதே இருக்கை வேண்டாம் என்று வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.