மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஏல நிலத்தில் நேற்று இரவு நடந்த விருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொட, மாபோதல இத்தவத்தையில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு மேலாக ஏல நிலத்தில் அகழ்வாராய்ச்சி சாரதியாக பணிபுரிந்து வந்த நபர் தனது பணியை நிறைவு செய்துள்ளார்.
மற்றைய தொழிலாளர்கள் அவருக்கு மதுபான விருந்து ஏற்பாடு செய்தமையினால் நேற்று வீட்டில் இருந்து ஏல நிலத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 10 மணியளவில் மதுபான விருந்து முடிந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மலிசிறிபுர கிராமப் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த நபர் கழுத்தை அமுக்கி தொந்தரவு செய்துள்ளார்.
இதன் போது கோபமடைந்த நபர் பையில் இருந்த கூரான கத்தியை எடுத்து அவர் குத்திகொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலைக்கு தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது…
சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன் உருவாகிய இவ் கல்லூரியானது இன்று 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி ஒரு விருட்சமாக வானுயர்ந்து நிற்கின்றது.
தனியார் கல்வி நிறுவனம் என்றாலே அதன் அடிப்படை நோக்கம் பணமாக தான் இருக்கும் ஆனால் இக்கல்லூரியானது பணத்திற்காக இல்லாமல் ஏழ்மையான மாணவர்களின் கல்வி தேவையினை Lingam foundation என்பதன் மூலம் இலவச ஆங்கில கல்வியினை 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வழி நடத்தி வருகின்றது.
தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியில் சிறிதாக உருவாகிய இக் கல்லூரி ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் இவ் தருணத்தில் தனது தலைமை காரியாலயத்தினை canada வில் நிறுவி உள்ளது இதன் பெருமை இக் கல்லூரியின் முதல்வரான சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரை மட்டுமே சாரும்.
Canada ல் மட்டுமில்லாமல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிலும் தனது கிளைகளை நிறுவ செயல்பட்டு வருகின்றது.
வவுனியாவில் ஆங்கில மொழிக்காக மட்டுமே இயங்கி வருகின்ற இக்கல்லூரி தன்னிடம் கல்வி கற்க வருகின்ற மாணவர்களை Canada and London நாட்டிற்கு செல்வதற்கான Students Visa வினையும் செய்து மாணவர்களின் வெளிநாட்டு கனவினையும் நிறைவேற்றி வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது அக்க குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்துள்ளனர்.
பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.
இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இது கடவுளின் பரிசு என அத்தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
கேரளாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் 17 வருடங்களுக்குப் பின் கைது செய்தனர். பிணத்தின் கையில் சிக்கிய தலைமுடியால் குற்றவாளி சிக்கினார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள கோழஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜனார்தனன் நாயர் (75). போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு திருமணமாகி ரமாதேவி (51) என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இதனால் ஜனார்தனன் நாயரும், ரமாதேவியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு மே 26ம் தேதி ரமாதேவி வீட்டில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜனார்தனன் நாயர் திருவல்லா போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று ரமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவல்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜனார்தனன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவி கொல்லப்பட்ட நிலையில் கிடந்ததாக போலீசிடம் கூறினார்.சம்பவம் நடந்த சமயத்தில் இவர்களது வீட்டுக்கு அருகே ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வந்தது. நெல்லையை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ரமாதேவியின் கொலைக்குப் பின்னர் சுடலைமுத்துவும், அவருடன் தங்கியிருந்த ஒரு பெண்ணும் மாயமானார்கள். இதனால் போலீசுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரதீக் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குற்றப்பிரிவு போலீசின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்று கூறி ஜனார்தனன் நாயர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசின் தீவிர விசாரணையில் சுடலைமுத்துவுடன் மாயமான பெண் தென்காசியில் வைத்து பிடிபட்டார்.
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தான் ரமாதேவி கொலை குறித்த முக்கிய துப்புகள் கிடைத்தன. ரமாதேவிக்கும், ஜனார்தனன் நாயருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததை தான் பலமுறை பார்த்ததாக அந்த பெண், போலீசிடம் தெரிவித்தார்.
இதன் பிறகு தான் போலீசின் சந்தேகப் பார்வை ஜனார்தனன் நாயர் மீது விழுந்தது. இதுதொடர்பாக ஜனார்தனனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வெட்டி கொலை செய்ததாக ஜனார்தனன் நாயர் போலீசிடம் ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்குப்பின் போலீசார் ஜனார்தனன் நாயரை பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். பெண் கொலை செய்யப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு அவரது கணவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவில் இலங்கையர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றிவந்த இலங்கையரான அர்ஜனன் சிவசத்தியராஜா (Arjanan Sivasathiyarajah), பணி நிமித்தமாக படகில் சென்ற நிலையில் கடந்த 3ஆம் திகதி மாயமாகியுள்ளார்.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 5ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், Kashechewan நதியில் அர்ஜனனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நதியில் தவறிவிழுந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றார்கள்.
2017ஆம் ஆண்டு அர்ஜனனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தன் தந்தைக்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியவில்லையே என வருந்திய அர்ஜனன், அந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவசர மருத்துவ உதவியாளராக பணி செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் புதிதாக பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில் தனக்குப் பிடித்த வேலையின்போதே மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அர்ஜனனின் சகோதரரான காஞ்சனன் (Kajanan Sivasathiyarajah) தெரிவித்துள்ளார்.
அர்ஜனன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில், இளம் வயதில் தங்கள் பிள்ளையை இழந்துள்ள அவரது குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). பைனான்சியரான இவர் நேற்று மாலை தொளசம்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பியூட்டீசியன் ரசீதாவை காதலித்தேன். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம்.
3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5ம் தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். அவரை கண்டு பிடித்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மாயமான ரசீதாவின் சமூக வலைதள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு பெயர்களில் போலியாக கணக்குகளை வைத்துக் கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சொகுசு கார், பைக்குகளில் பியூட்டியாக போஸ் கொடுத்து பலரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும் அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.
ரசீதாவுடன் பழகியதும் மனைவியை விவாகரத்து செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது பெண் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது கணவர் சத்யகணேஷ், ஒரு பெண்ணுடன் (ரசீதா) தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்னை செய்கிறார் எனக்கூறியுள்ளார். அப்புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் ஆமை ஒன்று தங்க நிறத்தில் இருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, ஆமைகள் ஆலிவ்-பச்சை, பச்சை அல்லது சிவப்பு பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.
பல வகையான ஆமை இனங்கள் பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் தங்க நிறத்தில் உள்ள இந்த ஆமை அபூர்வம் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசிரா மண்டல் கல்லுமரி கிராமத்தில் உள்ள குளத்தில் தங்க நிற ஆமை கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர் கிராமக் குளத்தில் வெள்ளிக்கிழமை மீனவர்கள் மீன் பிடிக்க வலை வீசியபோது, அவர்கள் ஒரு அரிய தங்க நிற ஆமையைப் பிடித்தனர், இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.
அத்தகைய பிரகாசமான தங்க நிறத்தை அவர்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்பதால், அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். தங்க ஆமையை வீடியோ எடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அந்த அபூர்வ ஆமையை பார்த்துச்சென்றனர். இறுதியாக மீனவர்கள் அதே குளத்தில் ஆமையை விடுவித்தனர். தங்க நிற ஆமையின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, தங்க ஓடு ஒரு மருத்துவ நிலையில் இருந்து விளைகிறது, இதில் குரோமடிக் லுசிசம் தோலை பாதித்து அதன் நிறத்தை மாற்றுகிறது. பல்வேறு உயிரினங்களில் நிறமி குறைவதால் ஏற்படும் அசாதாரண நிலையின் விளைவாக லூசிசம் ஏற்படுகிறது.
மேலும், மரபணு மாற்றம் காரணமாக ஆமைகள் தங்க நிறத்துடன் பிறந்த நிகழ்வுகள் உள்ளன, ஆனால் இவை மிகவும் அரிதானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரித்தானியாவில், வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு பெண், பின் அரசின் நிதியுதவியைப் பெற்று வாழும் நிலையை அடைந்தார்.
Callie Rogers லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்றபோது அவருக்கு வெறும் 16வயது. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், ஒரு மணி நேரத்துக்கு வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
பணம் வந்ததும் காதலும் வந்தது. Nicky Lawson என்பவரை மணந்தார் Callie, 180,000 பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகைக்கு குடிபோனது குடும்பம். இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் காதல் கசந்தது, தற்கொலைக்கு முயன்றார் Callie.
ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். அப்போதும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக, 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பக அழகு சிகிச்சை செய்துகொண்டார் Callie.
நண்பர்கள் என்று கூறிக்கொண்டு ஏராளமானோர் அவருடன் இணைந்து கொண்டார்கள், ஆனால், அவர்கள் நோக்கம் முழுவதும் அவரது பணத்தின் மேலேயே இருந்தது.
கடைசியில் எல்லாம் இழந்து, அரசின் நிதியுதவியை பெறும் நிலையை அடைந்தார் Callie. Cumbria என்ற இடத்தில் அதிவேகத்தில் சென்ற ஒரு காரை துரத்திச் சென்ற பொலிசார், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மடக்கிப்பிடிக்கும் அளவுக்கு அந்த காரின் சாரதி கட்டுப்பாடில்லாமல் இருந்தார்.
காரணம், அவர் கொக்கைன் என்னும் போதைப்பொருளின் கட்டுப்பாட்டில் இருந்தார். அது, Callieதான். கார் ஓட்ட விதிக்கப்பட்ட நீண்டகால தடைக்குப் பின், தற்போது அவர் அதே Cumbriaவில் கடைக்குச் சென்றுவிட்டு காரில் பயணிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அவ்வளவு சின்ன வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் என்பது மிகப்பெரிய பணம், பணம் வந்தாலும் வாழ்க்கை மாறாது என்றெல்லாம் பேச்சுக்கு சொல்லலாம். ஆனால், அது உண்மையில்லை, வாழ்க்கை மாறத்தான் செய்கிறது, அதுவும் நல்ல விதமாக அல்ல, அது என்னை உடைத்துவிட்டது என்று கூறும் Callie, லொட்டரி நிறுவனங்கள் லொட்டரி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18ஆக்கவேண்டும் என்கிறார்.
செவிலியராக முடிவு செய்துள்ள Callie, அதற்காக தற்போது பல்கலைப் படிப்பை மீண்டும் தொடர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன் காணாமல் போன அடுத்த நாளே, மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் காணாமல் போன சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி என்ற பகுதியை அடுத்துள்ளது விசாப்பூர் என்ற இடம் உள்ளது.
இங்கு பரத் பாலேகர் – சுகந்தா பாலேகர் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா, ஸ்ரீ என்ற 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், பரத் பாலேகர் அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார்; பிள்ளைகளும் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 2-ம் தேதி பரத் பாலேகர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. பரத் பாலேகருக்கு இப்படி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் இருந்துள்ளது.
அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. வழக்கமாக சென்று விட்டு வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணத்தில் அவரது மனைவியும் பெரிதாக அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து மறுநாள் ஜூலை 3-ம் தேதி சுகந்தா பாலேகர், தனது 2 பிள்ளைகளையும் பள்ளியில் கொண்டு போய் விட்டுள்ளார். பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
மேலும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. இதனால் யாரேனும் குழந்தைகளை கடத்தி விட்டனரோ என்று உறவினர்கள் பயந்துபோனர். தொடர்ந்து இதுகுறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்தே கணவர் காணாமல் போன மறுநாள் மனைவி காணாமல் போனதும், அன்று மாலை நேரத்தில் பிள்ளைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன குடும்பத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தம் தாங்காமல், தோல்வி பயத்தில் பெற்றோர் ஆசிரியர் திட்டுதல் என எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு முன்னுதாரணமாக அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணி ஆசிரியர் பணி. பள்ளியின் தலைமை ஆசிரியரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயராணி (53). பள்ளிக்கு அருகிலேயே வசித்து வருகிறார்.
இவருக்கு 2 மகள்கள். இருவருக்குமே திருமணமாகி விட்டது. நேற்று ஜூலை8ம் தேதி சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால், அவருடைய இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் வந்திருந்தார்.
அங்கு அவருடைய வாகனத்தை நிறுத்தி விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிவிக்கப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியை விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சனையா அல்லது பணிச்சுமையா? எதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் மகள்களுக்கு திருமணமான நிலையில், இரு மகள்களும் தாயாரின் சடலத்தைப் பார்த்து கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பூசுச்துரை பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் வேலைக்காக போலந்து சென்றுள்ளார். அங்கு அனியா என்ற போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அருண் பிரசாத் பேசி பழகி உள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், இன்று இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மந்திரங்கள் முழங்க போலந்து பெண் அனியாவை புதுக்கோட்டை இளைஞர் அருண் பிரசாத் கரம்பிடித்தார்.
ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு, ஒன்றரை வருடம் சாமியாராக கோயில் கோயிலாக வலம் வந்த கணவன், பிச்சை எடுத்த பணத்தை மகன்களுக்கு அனுப்பியதால் சிக்கினார். சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (38).
இவரது மனைவி வாணி (40), மகன்கள் கவுதம் (15), ஹரிஷ் (12). தம்பதியர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன், மனைவிக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2021, டிசம்பரில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டின் சோபாவுக்கு அடியில் உட்புறமாக துணியில் சுற்றி மூட்டையை அடுக்கி வைப்பது போல, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.
2 நாட்கள் கழித்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று அழுகிய நிலையில் வாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து ரமேஷை தேடி வந்தார்.
ஆனால், ரமேஷ் செல்போனை பயன்படுத்தாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிப்பதில் தொடர்ந்து போலீசாருக்கு சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் மறைந்திருந்து ரமேஷ் வருவதை கண்காணித்தனர்.
அவர் வந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரமேஷிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அவரது மனைவி வாணி, கொலையாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து ரமேஷை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி வந்துள்ளார்.
மேலும் வாணியின் நடத்தையிலும் ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ரமேஷை வாணி வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ரமேஷ், வாணி கட்டியிருந்த சேலையின் முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் வாணி கழுத்து எலும்பு நொறுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், அவரது உடலை மறைக்க முற்பட்டுள்ளார். அவரது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
இதனால் வாணியின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. வேறு வழி இல்லாமல் வாணியின் உடலை மூட்டை கட்டி சோபாவின் அடியில் போட்டுவிட்டு எலி மருந்து வாங்கி அதனை மதுவில் கலந்து குடித்துள்ளார்.
ஏற்கனவே மது குடித்து இருந்ததால் மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ரமேஷ் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.
திருவண்ணாமலை சென்றதும் சில சாமியார்களுடன் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்த சில சாமியார்கள் வட இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளனர்.
அவர்களுடன் வட இந்தியாவிற்கு சென்ற ரமேஷ், அங்கு பூரி ஜெகந்நாதர் கோயில், ரிஷிகேஷ், காசி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று, கோயில் கோயிலாகச் சுற்றியுள்ளார்.
சாமியார்கள் எங்கு தங்குகிறார்களோ, அங்கு தங்கி பிச்சை எடுத்து துறவு வாழ்க்கையை ரமேஷ் வாழ்ந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தான் பிச்சை எடுத்த 1,800 ரூபாய் பணத்தை ஓட்டேரியில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு அவரது கூகுள் பே நம்பருக்கு, வேறு ஒரு நபர் மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பணத்தை தனது மகனிடம் கொடுத்து விடுமாறு ரமேஷ் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த நபரும் பணத்தை அவரது மகனிடம் கொடுத்து விட்டார். அதன் பிறகு ரமேஷ் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
அப்போது ரமேஷ், தான் சாமியாராக மாறிவிட்டதாகவும், தற்போது நான் பேசிக் கொண்டிருக்கும் நம்பர் என்னுடன் உள்ள ஒரு சாமியாரின் எண் எனவும் நண்பரிடம் கூறியுள்ளார். மேலும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து இந்த தகவல் ஓட்டேரி போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ரமேஷின் நண்பரிடம் இருந்து குறிப்பிட்ட அந்த சாமியாரின் செல்போன் நம்பரை வாங்கி கால் லோகேஷன் போட்டு பார்த்தனர். அப்போது அந்த எண் திருவண்ணாமலை, சதுரகிரி, பின்னர் காசி போன்ற கோயில் சார்ந்த மடங்களை காண்பித்தது.
கடைசியாக அந்த எண் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தை காண்பித்தது. மேலும் ரமேஷ் சாமியாராக மாறிவிட்ட தகவலையும் தெரிந்து கொண்ட போலீசார், டெல்லியில் உள்ள ஆசிரமங்களில் ரமேஷை தேடினர்.
இதில் டெல்லி அஜ்மேரி கேட் எனும் பகுதியில் உள்ள ஹரிஹர சுதன் ஆசிரமத்தில் ரமேஷ் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் ரமேஷை கைது செய்ய டெல்லிக்குச் சென்றனர்.
அப்போது அவர் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சென்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உஷாரான ஓட்டேரி போலீசார் கடந்த திங்களன்று பவுர்ணமி முடிந்து எந்தெந்த சாமியார்கள் ஊருக்குக் கிளம்பியுள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர்.
இதில் குறிப்பிட்ட சிலர் நேற்று முன்தினம் காலை ரயில் மூலம் வட இந்தியாவிற்குச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலை ரமேஷை கையும் களவுமாக பிடித்தனர்.
போலீசாரிடம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சிக்கிய ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளிவந்தன. அப்போது, அவர், தான் வேண்டுமென்றே வாணியை கொலை செய்யவில்லை எனவும், தொடர்ந்து அவர் என்னை அவமானப்படுத்தி வந்ததால் போதையில் சேலையால் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார் எனவும் கூறி அழுதுள்ளார்.
ஒன்றரை வருடங்கள் கழித்து தனது தந்தை பிடிபட்டுள்ளதை அறிந்த ரமேஷின் மகன்கள் ஓட்டேரி காவல் நிலையம் வந்தனர். அப்போது ரமேஷ் தனது இரண்டு மகன்களிடமும் என்னை மன்னித்து விடுங்கள் என்றுக் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வாணியின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ப்ரீதாவிடம்செல்போன் பறிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி செல்போனை தாவி பிடிக்க முயன்றதில் பிரீத்தி ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ப்ரீத்தி உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ் , மணிமாறன் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கந்தன்சாவடியில் வசித்து வரும் 23 வயது இளம் பெண் ப்ரீத்தி. இவர் பி.காம் முடித்துவிட்டு கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை2ம் தேதி மின்சார ரயில் மூலமாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 2 இளைஞர்கள் இவரது செல்போனை பறித்து தப்பி ஓடத் தொடங்கினர்.
ரயிலில் இருந்து செல்போனை பறிக்கும் போது இளம் பெண்ணையும் இழுத்ததால் அவர் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். பரீத்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு கடன் கொடுத்தவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சன்னப்பட்டினம் என்ற கிராமம். இங்கு அருண்குமார் – ரஞ்சிதா தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணமானது. இதையடுத்து இந்த தம்பதி தொழில் தொடர்பாக சன்னசந்திரா என்ற இடத்தில் வசித்து வந்துள்ளனர்.
ஹோட்டல் தொழில் செய்து வரும் அருண் குமார், தனது தொழில் நிமித்தமாக கணேஷ் என்பவரிடம் வட்டிக்கு ரூ.8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும் அவரால் தனது ஹோட்டலை லாபத்துடன் நடத்த இயலவில்லை.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் அவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது ஹோட்டலை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் தான் கொடுத்த கடனை கணேஷும் திரும்ப கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார்.
நேரடியாக வீட்டுக்கு வந்து கேட்டு வந்தபோது, கணேஷுக்கும் ரஞ்சிதாவுக்கும் திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் ஒருநாள் அருண் குமாருக்கு தெரியவரவே, தனது மனைவி மற்றும் கடன் கொடுத்த கணேஷை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவர்கள் தங்கள் காதலை விடவில்லை. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரஞ்சிதாவும், கணேஷும் அருண்குமாரை கொலை செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி கணேஷ் தனது நண்பர்கள் உதவியை நாடியுள்ளார்.
பின்னர் கடந்த ஜூன் 29-ம் தேதி ஹோட்டல் விவகாரம் குறித்து பேச வேண்டுமென்று அருணை தனியாக சந்திக்க வர சொல்லியுள்ளார். அருணும் அதனை நம்பி கட்டிகெரேபாளையம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கே இருந்த கணேஷ், அருணை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து சடலத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது அது அருண் என்று தெரியவந்ததால் அவரது மனைவி ரஞ்சிதாவிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. விடாமல் அவரிடம் விசாரித்ததில் அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ரஞ்சிதா, அவரது காதலன் கணேஷ், அவரது நண்பர்களான சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான இறை நம்பிக்கை இருக்கும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
அதேநேரம் சில நாடுகளில் டெவில் எனப்படும் சாத்தானை வழிபடுவதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர். அவர்களில் சிலர் சாத்தான் அளித்த உத்தரவு என்று கூறி செய்யும் சில சம்பவங்கள் நமக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மெக்சிகோ நாட்டில் அரங்கேறியுள்ளது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த 32 வயதான நபர் டெவில் வழிபாடு எனப்படும் சாத்தான் வழிபாட்டைச் செய்து வந்துள்ளார். அவர் தனது மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு குறித்து வெளியான பல தகவல்கள் பகீர் கிளப்பும் வகையிலேயே அமைந்துள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்த இளைஞன் போதை மருந்து எடுத்துள்ளார். போதை தலைக்கேற அவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அத்துடன் நிற்காமல் தனது மனைவியின் மூளையை வெளியே எடுத்து, அதை டகோ என்ற உணவில் வைத்துச் சாப்பிட்டுள்ளார். மேலும், அவரது மண்டை ஓட்டை சிகரெட் தூசிகளைப் போடும் ஆஷ் ட்ரேவாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தைச் செய்த அந்த நபர் அல்வாரோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அல்வாரோ தனது மனைவி மரியா மான்செராட் என்பவரைத் தான் இப்படி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்தாண்டு தான் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.
மரியா மான்செராட் இதற்கு முன்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்து குடும்பம் நடந்து வந்துள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளது. அப்போது தான் அவருக்கும் அல்வாரோவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இருப்பினும், திருணமான ஒரே ஆண்டில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
அல்வாரோவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. தான் வழிபடும் டெவில் தான் இந்த கொலையைச் செய்ய தனக்கு ஆர்டர் போட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மனைவியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய இந்த சைக்கோ, சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளார். சில பாகங்களை மலையில் வீசிய அவர், வேறு சில பாகங்களை வீட்டிலேயே வைத்துள்ளார்.
அல்வாரோ போதையில் இதைச் செய்துள்ளார். போதை தெளிந்ததும் தான் எவ்வளவு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளோம் என்பதை உணர்ந்த அவர், இரு நாட்கள் கழித்து தனது வளர்ப்பு மகளை அழைத்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அல்வாரோ தனது வளர்ப்பு மகளிடம் போன் செய்து. “உங்கள் அம்மாவை வந்து வாங்கிக் கொள். ஏனென்றால் நான் அவரை ஏற்கனவே கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளேன். வந்து வாங்கிக் கொள்” எனக் கூறியுள்ளான். இந்த கொடூர கொலை குறித்த தகவல்கள் நெட்டிசன்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
குருணாகலில் 20 வயதான யுவதிக்கு 22 வயதான நபர் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தர்கா நகர் மீகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதான நபர், கடந்த பல மாதங்களாக இந்த யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.
அப்போது அந்த யுவதியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்று அந்த யுவதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.
கண்ணாடி குவலைக்குள் போதைப்பொருளை போட்டு, ஏதோவொரு குழாயை தன்னிடம் கொடுத்து, அந்த கண்ணாடி குவலையின் கீழ், லைட்டர் அல்லது தீக்குச்சிகளாக தீமூட்டுவார்.
அதன்பின்னர், வெளிவரும் புகையை மூக்கில் இழுக்குமாறு வற்புறுத்துவார்.இவ்வாறுதான் தனக்கு ஹெரோய்ன் பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.போதையில் இருக்கும் போது, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் தற்போது தலைமறைவாகியிருக்கும் இளைஞனை தேடிவரும் பொலிஸார், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பருவக்காலத்தில் பெற்றோர்கள் மிகக் கவனமாக கண்காணிக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.