வீட்டின் முன்பு செருப்பை வைக்கும் தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு பெண் கொலை.!!

திருவொற்றியூரில்..

வீட்டின் முன்பு செருப்பை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கொலை செய்த எதிர்வீட்டை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன் (43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (40). இவர்கள் 2வது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வசந்தி வீட்டு வாசல் முன்பு, அட்டை பெட்டியில் செருப்புகளை வைப்பது வழக்கம்.

இதற்கு எதிர்வீட்டில் வசித்து வரும் குமார் (50) என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி இதுதொடர்பாக, வசந்தியிடம் குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட வசந்தியின் கணவர் புஷ்பகாந்தனிடமும் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இது மோதலாக மாறியது. அப்போது குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த குமார், திடீரென புஷ்பகாந்தன் மற்றும் அவரது மனைவி வசந்தியை தாக்கி, கீழே தள்ளி உள்ளார். இதில் நிலைதடுமாறிய வசந்தி வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார்.

பலத்த காயமடைந்த வசந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரா கொலை வழக்காக மாற்றி, குமாரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வீசியவர் விரல்களை இழந்த பரிதாபம்!!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளது.

இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வவுனியா கள்ளிக்குளம் – சிதம்பரம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

வெளிநாட்டில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதிக்கு ஏற்பட்ட நிலை!!

இலங்கையில்…

தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட குமுதினி கண்ணன்(53), அவரது கணவர் கந்தசாமி(57).

கணவனும், மனைவியும் சேர்ந்து 60 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக வீட்டில் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தம்பதி மீது 2016ம் ஆண்டு ஆஸ்திரேலிய பெடரல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விக்டோரியா கவுன்டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

இதில் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், குமுதினிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது கணவருக்கு 6 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது என குமுதினி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வேறு ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குமுதினிக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவை – தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, ஜம்புரேவெல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய டி.ஜி டில்மி சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு கருத்தரித்தல் தாமதமானதால் ஆலயமொன்றில் தங்கியிருந்து சில பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சமய வழிபாட்டு முறையிலான சிகிச்சை தொடங்கப்பட்டு முதல் நாள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது நாள் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பொலன்னறுவை ஜயந்திபுர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்தரித்தல் தாமதமானதால் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட மருந்தினை உட்கொண்டமையினால் பெண் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் நடந்த அனர்த்தம் – இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் பலி!!

இத்தாலியில்..

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியசென்ஸா மாகாணத்திலுள்ள ட்ரெபியா ஆற்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய, லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்ப விசாரணையின்படி, மகன் முதலில் நீரில் மூழ்கி சிரமப்பட்ட நிலையில்,

தந்தை அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளதாக அறியமுடிந்துள்ளது. எனினும் துரதிர்ஷ்டவசமாக, அந்த இடத்திற்கு உதவியாளர்கள் வந்தபோது, ​​அவர்கள் ஏற்கனவே நீரில் மூழ்கிவிட்டனர் எ‌ன்று கண்டறியப்பட்டுள்ளது.

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது.. பெண் கொலையில் அதிரடி திட்டம் போட்ட காதலன்!!

பெங்களூருவில்..

பெங்களூரு இளம் பெண் கொலை வழக்கில் டெல்லியில் பதுங்கியிருந்த அவரது காதலர் கைது செய்யப்பட்டார். கொலையை மறைக்க சினிமா பாணியில் தான் ஊரிலேயே இல்லை என்பதை போல் பக்காவாக பிளான் போட்டு அந்த காதலர் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சாஃப்ட்வேர் ஊழியரான அகாங்ஷா கடந்த கடந்த ஜூன் 6ஆம் தேதி பெங்களூரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அகாங்ஷா அர்பித் குஜரால் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களின் காதலலை முறித்துக்கொண்டனர். தன்னுடனான உறவை முறித்த அகாங்ஷாவை கொலை செய்ய திட்டமிட்ட அர்பித் கடந்த ஜூன் 6 ஆம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார்.

அப்போது அகாங்ஷாவை கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து அகாங்ஷா, அர்பித்தை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற அர்பித், அகாங்ஷாவை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

போலீஸாரிடம் இருந்து தப்பிக்க குஜ்ரால் இந்த கொலையை பக்காவாக திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு வரும் போது தனது மொபைலை டெல்லியில் வைத்து விட்டு 7 முதல் 8 செட் துணிகள் மற்றும் ரூ.5,000 பணத்தை வீட்டில் இருந்து கொண்டு வந்துள்ளார் அர்பித். முதலில் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று அங்கு தனது ஆடைகளை வைத்துவிட்டு பின்னர் பெங்களூரு வந்துள்ளார்.

அகாங்ஷாவின் வீட்டிற்கு வாகனத்தில் சென்றால் போலீசில் மாட்டிக் கொள்ளலாம் என்று யோசித்த அர்பித், முகத்தை மறைத்தப்படி நடந்தே சென்றுள்ளார். பின்னர் அகாங்ஷாவை கொலை செய்து விட்டு எங்கெங்கோ மறைந்திருந்த அவர், கொலை விஷயம் வெளியில் தெரிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே ரயில் நிலையத்திற்கு சென்ற அர்பித் பின்னர் ரயில் மூலம் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அசாமுக்கு சென்ற அவர் தினசரி கூலித் தொழிலாளியாகவும் காய்கறி வியாபாரியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர், மீண்டும் விஜயவாடாவுக்கு சென்ற அவர் தனது நண்பரின் ஓட்டுநர் பள்ளி அலுவலக கட்டிடம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில் அர்பித்தின் தாயை அவரது நண்பர் மூலம் தொடர்பு கொண்ட போலீசார், அவர் மூலம் அர்பித் இருக்கும் இடத்தை துப்பு துலக்கியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்த அர்பித்தை போலீசார் கைது செய்தனர்.

அப்போது இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்றும் 20 நாட்களாக நான் எங்கெல்லாம் ட்ராவல் செய்திருக்கிறேன் பாருங்கள் என அனைத்து டிக்கெட்டுகளையும் காட்டியிருக்கிறார் அர்பித்.

ஆனால் எல்லாம் தெரியும் என போலீசார் போட்ட போட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட அர்பித் குஜரால், தன்னை பிரிந்த அகாங்ஷா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் அவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

மேலும் அகாங்ஷாவை கொலை செய்ய தான் போட்ட திட்டத்தையும் கூறியுள்ளார் அர்பித். இதையடுத்து அர்பித்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஓட்டி பேத்தியை வளர்க்கும் சிங்கப் பெண் பவானியின் கதை!!

ஈரோட்டில்..

ஈரோட்டில் ஆட்டோ ஓட்டும் பெண் டிரைவர் பவானியை நேர்காணலில் சந்தித்த போது அவர் கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகளையும், வேதனையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஈரோட்டில் 13 வருஷமா ஆட்டோ ஓட்டுகிறேன். எங்கள் ஊரில் பெண்கள் யாரும் ஆட்டோ ஓட்டவில்லை. அதனால், எனக்கு ஆட்டோ ஓட்டும் ஆர்வம் வந்தது. அதுமட்டுமல்லாமல், சுயமாய் வேலை செய்ய வேண்டும் என நினைத்து இந்த தொழிலில் இறங்கினேன்.

எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலுக்கு வந்தேன். இன்றும் எதிர்ப்புகள் நிறைய இருந்தாலும் அதை Face பண்ணிட்டு தான் இருக்கிறேன். உதவி செய்வதற்கு என யாரும் இல்லை.

எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். என் மகன் காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னை மதிக்காமல் தகாத வார்த்தைகளில் என் மகன் பேசுவான். ஒரு குழந்தை மட்டுமே மருமகளிடம் இருக்கிறது.

மற்றொரு குழந்தையான என் பேத்தியை அடித்து, கையை ஒடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். என் மருமகள் வந்துகூட பார்ப்பதில்லை. இதற்காக, கோர்ட்டில் கேஸ் கூட போய் கொண்டிருக்கிறது.

என்னிடம் பணம் கிடையாது. ஆட்டோ ஸ்டாண்டு எனக்கு கிடையாது. ஒரு நாளில் 200 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாய் இருக்கிறது. எனக்கு பஸ் ஸ்டான்டில் ஏதோ ஒரு இடத்தில் அனுமதி கொடுத்தால் போதும்.

இதனை, நான் தமிழக முதல்வரிடம் உதவியாக கேட்கிறேன். ஆண்கள் தான் பெரிய ஆட்டோக்காரர்கள் மாதிரி எங்களை விடுவதில்லை. அண்மையில், கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அங்கு, பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து எனக்கும் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

ஆட்டோ ஓட்டி தான் பேத்தியை பார்த்துக் கொள்கிறேன். தற்போது, பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆட்டோ ஓட்டுகிறேன். என் பேத்திக்கு என்று ஆட்டோவில் சிறிய இடம் ரெடி பண்ணியிருக்கிறேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்ததுமே என் பேத்திக்கு உணவு செய்து வைத்துவிடுவேன். என் பேத்தி சிறிய குழந்தையாய் இருக்கும் போதே மடியில் வைத்து தான் ஆட்டோ ஓட்டுவேன்.

குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு இல்லை. நாங்கள் அனாதையா தான் இருக்கிறோம். இதை தமிழக முதலமைச்சர் பார்த்து உதவி செய்ய வேண்டும். முடியலன்னு எதுமே கிடையாது.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என பவானி கூறியது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ டிரைவர் பவானியில் முழு நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்.

மூளையை உண்ணும் அமீபா வைரஸ்.. பரிதாபமாக உயிரிழந்த 15 வயதுச் சிறுவன்!!

கேரளாவில்..

கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும், மத்திய நரம்பு மண்டலத்தின் அபாயகரமான தொற்று Naegleria fowleriயால் ஏற்படுகிறது.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 15 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவர் சில தினங்களுக்கு முன்பு நீரோடைக்கு குளிக்க சென்றுள்ளார்.

பின்பு, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஆலப்புழா மாவட்ட மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சில நாள்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் ஏற்பட்ட அரியவகை நோயால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள் தரப்பில், மூளையை உண்ணும் அமீபா ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட தேங்கி நிற்கும் நீரோடைகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாணவர் ஓடையில் குளிக்கும் போது அமீபா தொற்று ஏற்பட்டுள்ளது.ஓடையில் உள்ள Naegleria fowleri என்னும் அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து மூளையை சென்றடைகிறது எனக் கூறினர்.

அங்கு, மூளையில் உள்ள செல்களை அழிக்கிறது. இந்த அரியவகை நோயால் தான் மாணவர் உயிரிழந்துள்ளார். இது முதன் முதலில் 2017 ஆன் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பின்பு, இரண்டாவது முறையாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

மூளையை உண்ணும் அமீபா தாக்குதலால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது. அமீபா தாக்கி முதல் அல்லது இரண்டு வாரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.

பின்பு, தலைவலி அதிகமாதல், வாசனையில் மாற்றம் போன்றவை ஏற்படும். நீரின் மூலம் இந்த தொற்று ஏற்படுவதால் அசுத்தமான நீரில் குளிப்பது மற்றும் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

முல்லைத்தீவு இளைஞன் டிலக்சனுக்கு நடந்தது என்ன? பொலிஸார் சந்தேகம்!!

முல்லைத்தீவு மல்லாவி, பாலி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மல்லாவி, பாலி நகரைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் என்ற 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று பாலிநகர் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி நகர் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர விபத்து : சாரதி தொடர்பில் வெளியான தகவல்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தங்கத்தின் விலையில் மீண்டும் சடுதியான மாற்றம்!!

தங்கம்..

செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (10.07.2023) 150,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 148,000 ரூபா தொடக்கம் 149,000 ரூபா என்ற நிலையில் இருந்தது.இந்த நிலையிலேயே திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை உலகச் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையேற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

பொலன்னறுவையில்..

பொலன்னறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியா நகரசபை அதிரடி : 130 கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல்!!

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக 86 கடைகளும், இன்றையதினம் (10.07) 44 கடைகளுக்கும் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன், வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது.

மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றிய வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இந்நடவடிக்கையின் மூலமாக 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருள் அனுப்புவதாக மோசடி : விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஸ்வினி. இவர் BBA படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பியூட்டிசனுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை சமூக வலைதளங்களில் தேடி வாங்கி வந்துள்ளார். அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு நபர் அறிமுகமாகி நட்பாக பேசி வந்துள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நபர் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அஸ்வினியை மிகவும் பிடித்திருப்பதாக கூறியதுடன், தமிழ்நாடு திரும்பியவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது என நினைத்து அஸ்வினி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து அஸ்வினிக்கு வாட்ஸ் அப் காலில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அஸ்வினியை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு 15,000 அமெரிக்கா டாலர் பரிசாக அனுப்பி இருப்பதாகவும், சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருப்பதாக கூறியுள்ளார்.

பணம் செலுத்தினால் அந்த பார்சல் உங்கள் வீட்டுக்கு வந்து விடும் என ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். மேலும் பணம் செலுத்தவில்லை என்றால் பெறுநர் முகவரியில் உங்கள் பெயர், விவரம் உள்ளதால், வெளிநாட்டு போலீசார் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன், உங்களை கைது செய்து விடுவார்கள் என அஸ்வினியை அந்த நபர் மிரட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் மர்ம நபரே சுங்கத்துறை அதிகாரி போல வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினியிடம் பேசி கிப்ட் பார்சலுக்கு 45,000 ரூபாய் வரி செலுத்தவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் தெரிய வருகிறது.

இதனால் பயந்த அஸ்வினி 2 தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 25,000 ரூபாயை அனுப்பிய வைத்துள்ளார். மேலும் 45,000 ரூபாய் கேட்டு அந்த நபர் அஸ்வினிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்து வேறு வழியின்றி நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் உயிரிழந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இளம் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அஸ்வினி அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியுள்ளார். மேலும், ”ஐ மிஸ் யூ” அம்மா என அஸ்வினி தற்கொலைக்கு முன்பு கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்ய நடத்திய முதல் கட்ட விசாரணையில், இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படும் நைஜீரிய சைபர் கிரைம் கும்பலின் மோசடியில் ஒரு வகை என போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடி கும்பல், சமூக வலைதளங்களில் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி வேலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரா, வசதியான குடும்பத்தைச சேர்ந்தவரா என்பதை கண்டறிந்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, வெளிநாட்டில் இருந்து பரிசு அனுப்புவது போல் அனுப்பி அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விட்டார்கள் என போனில் கூறி, ஒரு வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் அனுப்ப சொல்லி மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் இளம் பெண்கள், இளைஞர்கள், விவாகரத்தான பெண்களை குறி வைத்து கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். அஸ்வினியை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

வவுனியாவில் மதுபோதையில் நண்பனை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த நபர்!!

வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10.07.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவனவர், இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

வவுனியாவில் பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு என தெரிவித்து விழிப்புணர்வு ஊர்வலம்!!

பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்தக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நேற்று (09.07) காலை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்து பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரிகள் பிரிவுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நகர்வழியாக ஆரம்ப இடத்தை சென்றடைந்தது.

இதன்போது வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் அகற்றப்பட்டிருந்தது. இதில் இந்து பெளத்த சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.