பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மனம்பிடிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்புவிழா பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09.07) திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் அரச காணியொன்றில் உரிய அனுமதிகளை பெற்று இரண்டு மாடிகளை கொண்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரிடம் வர்த்தகர் சங்கம் விடுத்த கோரிக்கையினை பிரகாரம் கட்டுமான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வட மாகாண ஆளுனர் மற்றும் இராணுவத்தினரின் வன்னி கட்டளை தளபதியின் பிரசன்னத்துடன் கட்டிடம் திறக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் வட மாகாண ஆளுனர் தன்னால் நிகழ்வில் பங்கேற்க முடியாதுள்ளமையை தெரிவித்திருந்தார். இந் நிலையில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியினூடாக குறித்த கட்டிடம் திறக்கப்பட்டிருந்தது.
இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் வருகைக்காக வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதி, கல்வித்திணைக்களம் அமைந்துள்ள பகுதி உட்பட சிந்தாமணி பிள்ளையார் கோவில் பகுதியெங்கும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தனியாரின் வீடுகளுக்கு மேற்பகுதியிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் தமிழர் சார்ந்த பிரச்சனைகளுக்கு வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மெளனம் காக்கும் வவுனியா வர்த்தகர் சங்கம் இராணுவத்தினருக்கு அதி முக்கியத்துவம் கொடுத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ஆளுனருக்கு அடுத்து இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வட மாகாண ஆளுனரின் பெயர் இரண்டாவதாகவும் இராணுவ தளபதியின் பெயர் முதலாவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுனர் நிகழ்வை நிராகரித்திருந்தாரா என்று சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அத்துடன், வடக்கு ஆளுனர் மட்டுமன்றி வவுனியா அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், முன்னாள் நகரசபை தலைவர்
உள்ளிட்ட வவுனியாவைச் சேர்ந்த பலரும் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
மேலும், வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் வர்த்தக சங்க கட்டிடம் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணத்திருந்தது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புணரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும் , வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்பட்டன.
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதமாக 80 KMPH தொடக்கம் 100 KMPH வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது. குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.
புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகளை இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.பாலமுனையில் இருந்து ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து அந்த முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கலவான – இரத்தினபுரி வீதியில் கஹரங்கல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த சிறுவர்கள் கலவான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
கலவான, ஹகரங்கல பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த 5 சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இரத்தினபுரியிலிருந்து வந்த கார் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கலவானை ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவில் கலவானை பொலிஸ் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (09.07.2023) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அதிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று பேர் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்களே இவ்வாறு பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்தில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது சுரேஷ். இவரது மனைவி 24 மனைவி காளீஸ்வரி . இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
காளீஸ்வரிக்கு பள்ளபட்டியில் வளைகாப்பு நிகழ்த்திவிட்டு சுரேஷும் – காளீஸ்வரியும் தங்களது பெண் குழந்தை அபித்ரா ஸ்ரீயுடன் பைக்கில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டி என்ற இடத்தில், திருச்செந்தூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் இவர்களது பைக்கில் அசுர வேகத்தில் மோதியது. அ. இந்த கோர விபத்தில் கணவன் , மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குழந்தை அபித்ரா ஸ்ரீ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாஸ்மின் கவுர் – தாரிக்ஜோத் சிங்ஜாஸ்மின் கவுர் – தாரிக்ஜோத் சிங்குற்றவாளி வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஜாஸ்மின் உடலை போலீசார் கண்டுபிடித்த சம்பவம், படத்தில் நடப்பதை போன்று இருந்தது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் என்ற 21 வயதாகும் நர்ஸிங் மாணவி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் படித்து வந்தார். அவருக்கும், தாரிக்ஜோத் சிங் என்பவருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னாளில் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் தாரிக்ஜோத்தை ஜாஸ்மீன் தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார்.
இருப்பினும், ஜாஸ்மின் மீது வெறியாக இருந்த தாரிக்ஜோத் சிங், தன்னை வேண்டாம் என ஒதுக்கும் ஜாஸ்மினை பழிவாங்க கடந்த 2021 ஆம் ஆண்டு காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது 4 மணிநேரமாக காருக்குள்ளே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங், முடிவில் கேபிள் வயர்களால் ஜாஸ்மினை கட்டிப்போட்டு, அவரை குழி ஒன்றில் இறக்கி உயிருடன் புதைத்த விட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாரிக்ஜோத் சிங் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் குற்றவாளி தாரிக் ஜோத் சிங்கிற்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உயிரிழந்த ஜாஸ்மின் கவுரின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தாரிக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனக்கு முன்பாக திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் தானுசெல்வம். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணன் தாணு செல்வத்திற்கு திருமணம் நடக்கும் முன்பாகவே தம்பி அய்யப்பன் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு முன்பாக நீ எப்படி திருமணம் செய்யலாம் என அண்ணன் தாணு செல்வம் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது .
இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தாணு செல்வம், தம்பி அய்யப்பனை வெட்டி கொலை செய்தார். இது சம்மந்தமாக ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாணு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், தாணு செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நிலத்தகராறு காரணமாக பிரபல கன்னட நடிகை அனு கவுடாவை கடுமையாக தாக்கிய பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனு கவுடா.
42 வயதான இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது வரை நடித்து வருகிறார். சிஷ்யா, ஹுடுகரு, குரு, பஜ்ரங்கி, கெம்பேகவுடா என சில கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்த இவர், அவ்வப்போது சில சீரியல்களிலும் தோன்றியுள்ளார்.
இந்த சூழலில் தற்போது பெங்களுருவில் வசிக்கும் இவர்க்கு தனது சொந்த ஊரான ஷிவமொகாவின் ஒசநகரில் என்று சொந்தமாக நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. சாகர் தாலுகா கஸ்பாடி கிராமத்தில் இருக்கும் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை இவர் பெற்றோர் கவனித்து வருகின்றனர்.
இதனால் இவரும் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அனு கவுடாவின் பெற்றோருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் நீலம்மா, மோகன் ஆகியோருக்கும் இடையே இந்த நிலம் குறித்து பிரச்னை எழுந்துள்ளது.
தொடர்ந்து இந்த பிரச்சனை பெரிதாகவே, அனு கவுடா பெங்களுருவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது பெற்றோரிடம் தகராறு செய்த நீலம்மா, மோகனை சந்தித்து இவர் பேசியுள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறவே, நீலம்மாவும், மோகனும் சேர்ந்து அனுவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அனு சாகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அனு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நீலம்மா, மோகனை காவல் நிலையம் அழைத்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக பிரபல கன்னட நடிகை அனு கவுடா கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பை சேர்ந்த பிச்சைக்காரர் பாரத் ஜெயின் ₹7.5 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்புடன் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் நம்மில் உருவாகும் முதல் பிம்பம் அவர்கள் குறித்த உருவ தோற்றமும், அவர்களின் ஏழ்மையான பொருளாதார நிலையும் தான். ஆனால் மும்பை சேர்ந்த பாரத் ஜெயின்(Bharat Jain) என்ற பிச்சைக்காரர் ஒருவர் நம்முடைய இந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளார்.
மோசமான பொருளாதார நிலை காரணமாக பாரத் செயின் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். சத்ரபதி சிவாஜி டெர்மினல், ஆசாத் மைதானம் மற்றும் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுக்கும் பாரத் செயின் ஒரு நாளைக்கு மக்கள் தயவில் சுமார் 2000 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்கிறார்.
அதனடிப்படையில் மாதத்திற்கு 60,000 முதல் 75,000 வரை பிச்சை எடுப்பதன் மூலம் பாரத் செயின் வசூல் செய்கிறார். இவ்வாறு பிச்சை எடுத்து பிச்சை எடுத்து பாரத் ஜெயின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ 7.5 கோடியாகும்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் தகவல் படி, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என தெரியவந்துள்ளது. பாரத் ஜெயின் திருமணமானவர் இவரது குடும்பத்தில் மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதர் உள்ளனர்.
அவரது இரண்டு மகன்களும் கான்வென்ட்டில் பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அத்துடன் இவர்களுக்கு மும்பையில் 1.2 கோடி மதிப்புள்ள 2 படுக்கையறைகள் கொண்ட பிளாட் வீடு உள்ளது, மேலும் மாதம் 30 வருமானம் தரக்கூடிய இரண்டு கடைகள் மும்பை தானே பகுதியில் உள்ளது.
பாரத் ஜெயின் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் பரேலில் உள்ள ஒற்றை படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறிய பின்னும் மும்பை வீதிகளில் பாரத் செயின் பிச்சை எடுத்து வருகிறார்.
திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளான்.
சூரிய பிரகாஷுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் ஒரு மருத்துவ கிளினிக்கு சென்று உள்ளார். அங்கு மருத்துவராக கோபிநாத் என்பவர் இருந்து உள்ளார். சிறுவனுக்கு, கோபிநாத் தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டிற்கு சென்றதும் மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர்.
அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து உடனடியாக திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபிநாத் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிடித்து ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது தான் விஷயம் வெளியே வந்தது. கோபிநாத், லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து திம்மாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்தனர்.
சக்கரவர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். அதில் ஒரே மகனான சூரிய பிரகாஷ் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற போலி மருத்துவர்களை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21).
இவர் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ்மீன் கவுரின் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கடத்தப்பட்டு சுமார் 650 கி.மீ. காரில் கடத்தி செல்லப்பட்டு தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மலை பகுதியில் அழைத்து சென்று உயிருடன் புதைத்துள்ளார்.
இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அப்படி இருந்த போதிலும் காதலன் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த அவரை காரில் கடத்தி சுமார் 650 கி.மீ. தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கண்களை கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார். விசாரணையின் போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது.
தாரிக்ஜோத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா லேக் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விஷம் அருந்தியதன் காரணமாக ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு வீட்டில் உடைந்து காணப்பட்ட தொலைபேசியை பெற்றோருக்கு தெரியாமல் திருத்தி, சிம் அட்டையொன்றினையும் வாங்கி செலுத்தி இளைஞரொருவருக்கு பாடசாலையில் வைத்து கதைத்து வந்துள்ளார்.
இதனை அவதானித்த அதிபர் உடனடியாக மாணவியை எச்சரித்து தொலைபேசியை பறித்து, நாளைய தினம் பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தினை அருந்தி தவறான முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த மாணவியின் மரணம் தொடர்பில் தந்தையான எஸ்.ஜி.சிரிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதுடன், மாணவியின் தற்கொலைக்கு தொலைபேசி பாவனையே காரணம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை போன்று எதிர்காலத்தில் எந்தவொரு தந்தையும் பிள்ளையை இழக்கக்கூடாது எனவும், பிள்ளைகளிடமிருந்து தொலைபேசி பாவனையை முற்றான அகற்றுமாறும் ஏனைய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கற்பிட்டியில் வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது அங்கிருந்தவர்கள் அவ் இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இவ் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15, 2022 அன்று பணிக்கு அஞ்சு வரவில்லை.
தொலைபேசியிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால், அவர் வசித்த இல்லத்துக்குச் சென்று சக ஊழியர்கள் பார்த்தபோது அஞ்சுவும் அவரின் இரண்டு குழந்தைகளும் மூர்ச்சையற்று கிடந்திருக்கின்றனர். உடனே, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டு மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அஞ்சுவையும் அவரின் இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அப்போதுதான் அஞ்சுவின் கணவர் சாஜு அவரின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலைசெய்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகித்ததாகவும், குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நீங்கள் உங்கள் மனைவியின் உயிரைப் பறிக்கும்போது, உங்கள் சிறு குழந்தைகள் தங்கள் தாயிக்காக கதறினர். அவர்கள் நேரில் கண்ட சாட்சிகளா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால், அவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தவர்கள். அவர்களின் தாய் உங்களால் காயப்படுத்தப்படுகிறார் என்பதை பார்த்திருப்பார்கள்” என்றார். மேலும் இந்த வழக்கில் சாஜு, மனைவிமீது சுமத்திய குற்றங்கள் எங்கும் உறுதிசெய்யப்படவில்லை.
மாறாக, சாஜு போனை சோதனையிட்டபோது, மனைவி பணிக்குச் சென்ற பிறகு பல டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கில் சாஜுவுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.