டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும். 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள்.

உலகில் வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்களது கல்வி தகைமையை மேம்படுத்த வேண்டும்.

அதேவேளை, ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும்.

இதற்கமைய, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என்பதற்கான நியாயமான காரணங்கள் இருந்தால், ​​வேறு ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

உரிய விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம், சரண மாவத்தை, ராஜகிரிய என்ற முகவரிக்கு ஒகஸ்ட் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட வேண்டும். கிராம அலுவலர் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான செல்லுபடியாகும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.election.lk என்ற இணையத்தளத்தில் பட்டியல் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருட சென்ற இடத்தில் ஏமாற்றம் : 20 ரூபா டிப்ஸ் வைத்து சென்ற கொள்ளையன்!!

திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு பிள்ளைகளை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய் : இலங்கையில் நடந்த சோகம்!!

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ள நிலையில் இவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தாயார் நேற்று (26) அதிகாலை ஒரு மணியளவில் தனது மகளிடம் குடிப்பதற்கு தேநீர் கேட்டுள்ளார். அதன் பின்னர், காலை 4 மணியளவில் தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார்.

இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வறக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா… கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்!!

ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஐபோன் தொடர்பாக இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கோபமடைந்த 12 வயது சிறுமி தனது 8 வயது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

அத்துடன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்தும் வைத்துள்ளார். ஆனால் அந்த அறையில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்ட இருந்த நிலையில் இந்த சம்பவம் முழுவதும் அதில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 12 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குழந்தையின் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள்.

அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளை கொண்டாடியது.

இந்த காதல் ஜோடி தங்கள் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதன் மூலம், 2024 Paris Olympic போட்டியில் நிச்சயம் செய்துகொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.

அர்ஜென்டினா அணியில் பாப்லோ சிமோனெட் (Pablo Simonet) மற்றும் பிலர் காம்போய் (Pilar Campoy). தாங்கள் திருமண நிச்சயம் செய்துகொள்ள இதை விட சிறந்த தருணம் இல்லை என்று இருவரும் நினைக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை, அவர்கள் தங்கள் நண்பர்கள் முன்னிலையில் அடக்கமாக நிச்சயதார்த்தம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

அர்ஜென்டினா ஹேண்ட்பால் மற்றும் ஹாக்கி வீரர்களின் முன்னிலையில் பாப்லோ சிமோனெட் மற்றும் பிலர் காம்போய் ஆகியோர் சிறப்பு தருணங்களை நினைவுகளாக மாற்றினர்.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து நல்வாழ்த்துக்களும், இன்ஸ்டா இடுகையில் தம்பதிகளாக வருவதற்கு ஒலிம்பிக் வாழ்த்துக்கள்.

பாப்லோவும் பிலரும் 2015 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். தங்களது 9 வருட காதல் பயணத்தை ஒலிம்பிக் மைதானத்தில் வெளிப்படுத்தி தம்பதிகளாக மாற விரும்பினர்.

முதலில், பாப்லோ மண்டியிட்டு பிலரிடம் முன்மொழிந்தார். பிலர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். உடனே பாப்லோ மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்தார். பின்னர் இருவரும் தங்களது குழு உறுப்பினர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

 

மகன் இறந்த தேதியில் தாயும் தற்கொலை.. தனியே தவிக்கும் கணவர், மகள்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

ஒரகடம், மீனாட்சிதாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலை பார்த்து வருகிறார். ஜெஸ்சி சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டோனி ஆதனஞ்சரியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், கடந்த ஜூன் மாதம் (25.06.2024) மாலை 3:50 மணியளவில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். ரிச்சர்ட், மீனாட்சி, ஜெஸ்ஸி ஆகியோர் டோனியின் மரணத்தைத் தாங்க முடியாமல் தவித்தனர்.

மேலும் மகன் இறந்த தேதியில் இருந்து மீனாட்சி வேலைக்கு செல்லாமல் வீட்டில் கதறி அழுதுள்ளார். மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவர் வேலைக்கு, மகள் பள்ளிக்கு சென்ற நிலையில், மகன் இறந்த அதே தேதியில் மீனாட்சி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகனுக்குப் பிடித்த வெஜ் பிரியாணி, பிஸ்கட், முட்டை, மீன் போன்றவற்றைச் செய்துவிட்டு 35 வயது தாய் தற்கொலை செய்துகொண்டார்.இறந்து போன மீனாட்சியின் மகன் பாசத்தை என்ன சொல்வான் என அப்பகுதி மக்கள் வேதனையில் புலம்பினர்.

வளர்ந்த மகளும், கணவரும் தனியே தவித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீசார், மீனாட்சியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தந்தையும் மகனும் உயிரிழப்பு : பெண்கள் இருவர் மருத்துவமனையில்!!

பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

பிடிகல – மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இரு பெண்கள் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காரில் பயணித்துள்ளதுடன், குடும்ப அங்கத்தவர் ஒருவரே காரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் பயணித்த அதிபர் ஒருவரும் சிறு காயங்களுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதியை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

5 பெண்கள் உட்பட 12 பேர் அதிரடியாக கைது!!

கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 5 நாட்களின் காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் இன்று (26 ஆம் திகதி) வரையான காலப்பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், அங்கு இருந்த 108 கோப்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் காதலியின் கண்முன்னே விபரீத முடிவெடுத்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார்.

இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞர் அதிக பணத்தை பெண் விரும்பும் தேவைகளையும் நிறைவு செய்து வந்துள்ளார். இறுதியாக ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணம் குறித்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.

அதனை பெற்றுக் கொண்ட பெண் தனது சகோதரியின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இவ்வாறு பல தேவைகளையும் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர்.

கடந்த 23-07-2024 அன்று இளைஞருக்கும் பெண்ணக்கும் இடையில் வீடியோ காலில் கருத்து முரண்பாடு வந்து காதலி கண்முன் இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் காதலியை காண சென்ற இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (26.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து தனது காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு கூடிய அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன்பின்னர், அந்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்தவற்றை தெரிவித்து விட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மற்றுமொரு பெருந்தொகை பணமோசடி : ஏமாற்றப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர்!!

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் நகரை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 15,000க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.  அவர்களில் பெரும்பாலானோர் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாமல் அநாதரவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தி, குறித்த பகுதியில் வல்லப்பட்டை செடி வளர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக விளம்பரம் செய்து இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வல்லப்பட்டை செடிக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து, பிரமிட் திட்டம் என்று தெரியாமல் பணத்தை முதலீடு செய்ததாகப் ஏமாற்றப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்தை முதலீடு செய்த 300 நாட்களில் முழுத்தொகை வழங்கப்படும் என்றும், குறைந்த தொகையாக முப்பதாயிரம் ரூபாய்க்கு நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் செலுத்துவதும் என்ற அடிப்படையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

குருநாகல் தலைமையக பொலிஸ், இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றிலும் இந்த மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சவப்பெட்டியுடன் வீட்டிற்கு சென்ற கணவர் : மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பலாங்கொடை பகுதியில் மனைவி இறந்துவிட்டதாக பொய் கூறி சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கு பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பலாங்கொடை நகரில் உள்ள மலர்சாலைக்கு சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அதிகாரியும் மற்ற அதிகாரிகளும் கூறியதாக அவர் மலர்சாலை உரிமையாளரிடம் பொய் கூறியுள்ளார்.

வெளியான தகவல்

இதனை நம்பிய மலர்சாலை ஊழியர்கள் அவருடன் சவப்பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை அவரது வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதன்போது ஏன் வீட்டிற்கு சவப்பெட்டி கொண்டு வந்தீர்கள் என்று பிள்ளைகள் வினவிய போது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தாய் இறக்கவில்லை என்றும், தாய் சமையல் அறையில் இருப்பதாகவும் குழந்தைகள் கூறியதையடுத்து, மலர்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை திரும்ப எடுக்க முயன்றுள்ளனர். இதன்போது அவர்களை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மகள் இது தொடர்பாக 119 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வழங்கிய நிலையில், மலர்சாலை உரிமையாளரும் பலாங்கொடை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குச் சென்று சவப்பெட்டியை மலர்சாலையில் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், சவப்பெட்டிக்காக கணவர் செலுத்திய 40000 ரூபா பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காக மலர்சாலைக்கு வருமாறு மனைவிக்கும், கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம்!!

தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ்ப் பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். “பதவியாவில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன்.

வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது.

பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

 

வெளிநாட்டு வாழ் தமிழ் பெண் திருகோணமலையில் மரணம்!!

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் திருகோணமலையில் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு நேற்றையதினம் பதிவாகி உள்ளது.

நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.