இலங்கை மக்களுக்கான ஓர் மகிழ்ச்சி செய்தி : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையின் இன்றைய (26) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, தங்க அவுன் விலை 722,082 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,360 ஆகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,300 அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது

 

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வழிப்பறி : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொண்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!!

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவா் மேலும் தெரிவித்தார்.

 

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. காதலனால் நடந்த விபரீதம்!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன். இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கிய கொப்பாவை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சௌமியாவுடன் ஸ்ருஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இருவரும் இரண்டரை ஆண்டுகள் காதலித்து வந்தனர் . வேற்று ஜாதி என்பதால் ஸ்ருஜனின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சவுமியாவிடம் பேசுவதை ஸ்ருஜன் தவிர்த்து வந்துள்ளார்.

இருப்பினும் சவுமியா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஸ்ருஜனை அடிக்கடி வலியுறுத்தினார். ஜூலை 2ம் தேதி சௌமியா தீர்த்தஹள்ளிக்கு சென்று ஸ்ருஜனை சந்தித்துள்ளார். அப்போது தன்னை இப்போதே திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன் என சவுமியா, ஸ்ருஜனிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு ஸ்ருஜன் நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீ உனது வீட்டுக்கு செல். எனது வீட்டுக்கு வர வேண்டாம் என கூறி சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது சவுமியா காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றுகிறாயா என கூறி தகராறு செய்தார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் ஸ்ருஜன், சவுமியாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருஜன், சவுமியாவின் உடலை சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆனந்தபுரம் அருகே மும்பாலு கிராமத்தில் குழி தோண்டி புதைத்து விட்டார்.

எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்றுள்ளார். இதற்கிடையே சவுமியா வீடு திரும்பாததால் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், சவுமியா, ஸ்ருஜனை காதலித்து வந்தது தெரியவந்தது. உடனே சாகருக்கு கொப்பா போலீசார் விரைந்து சென்று ஸ்ருஜனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தான், வீட்டை விட்டு வெளியேறி வந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சவுமியாவை, ஸ்ருஜன் கழுத்தை நெரித்து கொன்று, உடலை புதைத்த கொடூரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ருஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான்.

சென்னை பெரியமேட்டில் டியூஷன் செல்லும் போது கல்லூரி மாணவி ஒருவர் 17 வயது சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து விட்டனர்.

இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவியிடம் சிறுவன் பேச முயன்ற போது, அந்த மாணவி சிறுவனைக் காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மாணவன், காதலித்து விட்டு ஏமாற்றி சென்ற தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க முயன்றான்.

அதன்படி, கல்லூரி மாணவியை பழிவாங்க, அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட பல்வேறு டெலிவரி ஆப்ஸ் மூலம் கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்துள்ளார்.

இதனால், பல டெலிவரி ஊழியர்கள், கல்லூரி மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்தனர். குறிப்பாக கல்லூரி பெண்ணுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் சண்டை போடுவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களுக்கும் சிறுவன் பணம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்டர் செய்யவில்லை என்று டெலிவரி ஊழியர்களிடம் கூறிய போதும், டெலிவரி ஊழியர்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை செலுத்தாமல் கோபத்தில் சண்டையிட்டனர். மூன்று நாட்களாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து சிறுவன் மாணவியின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஆன்லைன் டெலிவரி மூலம் கஷ்டத்தில் இருந்த கல்லூரி மாணவியை மேலும் சித்ரவதை செய்ய ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார் புக்கிங் ஆப்ஸ் மூலம் 77 முறை வாகனங்களை புக் செய்து கல்லூரி மாணவியின் முகவரிக்கு அனுப்பி மன உளைச்சல் கொடுத்துள்ளார்.

மேலும், கல்லூரி மாணவியின் தந்தை இறந்ததாக புகைப்படங்களை சித்தரித்து டெலிகிராம் மூலம் பதிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைனில் ஆர்டர் செய்த விண்ணப்பங்களில் பயன்படுத்திய செல்போன் எண், மின்னஞ்சல் ஆகியவற்றைக் கண்டுபிடித்து ஐபி முகவரி மூலம் சிறுவனை கைது செய்தனர்.

போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தான், காதல் விவகாரத்தில் இவ்வளவு செயல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சிறுவனிடம் இருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு வைஃபை ரூட்டர்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தற்போது 18 வயதாகும் சிறுவன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். இருப்பினும், குற்றம் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால், போலீசார் சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அந்த சிறுவனுக்கு உளவியல் ஆலோசனை கொடுத்து தாயுடன் அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.

லொட்டரியில் 8 கோடி பரிசு வெற்றியாளரை ஏமாற்றி சீட்டை சொந்தமாக்கிய ஆசிய நாட்டவர்!!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற இந்தியர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் பொலிஸ் காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,

உள்ளூர் நபர் ஒருவர் படேல் பணியாற்றும் கடைக்கு சென்று 40 டொலருக்கு வாங்கிய இரு லொட்டரி சீட்டுகளைக் கொடுத்து பரிசு கிடைத்துள்ளதா என்பதை பரிசோதிக்க கூறியுள்ளார்.

அதில் ஒரு சீட்டுக்கு 40 டொலர் பரிசாக கிடைக்க, அதை படேல் அந்த வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இன்னொரு சீட்டுக்கு 1 மில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.37 கோடி தொகை பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் அதை அப்படியே மறைத்த படேல், வெற்றிபெற்ற சீட்டை குப்பையில் வீசிவிட்டு, பரிசு விழவில்லை என ஏமாற்றியுள்ளார். அதை நம்பி அந்த வாடிக்கையாளரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

டென்னசி மாகாணத்தைப் பொறுத்தமட்டில் 200,000 டொலர் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை பரிசாக பெறுபவர்கள் Nashville தலைமையகத்தில் சென்று தொகையை பெற வேண்டும்.

அமெரிக்க லொட்டரி அமைப்பு குறித்து புரிதல் இல்லாத படேல், வாடிக்கையாளரிடம் இருந்து ஏமாற்றிய லொட்டரியுடன் 1 மில்லியன் டொலர் தொகையை கைப்பற்ற Nashville சென்றுள்ளார்.

உண்மையில் அந்த லொட்டரியானது Murfreesboro பகுதியில் ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுவான விசாரணையில் படேல் முரணான பதில்களை கூற, சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக தரவுகளை சமர்ப்பிக்க அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அத்துடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த லொட்டரி சீட்டின் உண்மையான வெற்றியாளர் படேல் அல்ல என்பதும் கண்கானிப்பு கமெரா பதிவுகள் உட்பட அனைத்து தரவுகளில் இருந்தும் உறுதியானது.

இதனையடுத்து படேல் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி, பொலிசார் உடனடியாக அந்த சீட்டுக்கு உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடித்து, 1 மில்லியன் டொலர் தொகைக்கு உரிமைக்கோர பணிந்துள்ளனர்.

பொலிசார் அந்த நபரை தொடர்புகொள்ளும் வரையில், தாம் வெற்றியாளர், படேலால் ஏமாற்றப்பட்டொம் என்பது அவருக்கு தெரியவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை நெரிக்கும் கடன்.. ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளரான தொழிலாளி!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கடனில் தத்தளித்த சுரங்க தொழிலாளி ஒருவர், ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளராகியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து ஒரு பெரிய வைரம் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அந்த 19.22 காரட் வைரமானது அரசாங்கம் முன்னெடுக்கும் ஏலத்தில் சுமார் 8 மில்லியன் ரூபாய் அளவுக்கு விற்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

என்றாவது ஒருநாள் தமது கடனெல்லாம் மொத்தமாக திருப்பிச்செலுத்தும் வகையில் ஒரு வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் தெரிவித்துள்ளார்.

பன்னா பகுதியானது வைர இருப்புக்களுக்கு பிரபலமானது. மட்டுமின்றி வைரம் உட்பட விலைமதிப்பற்ற கற்களை நம்பி மக்கள் பெரும்பாலும் மலிவான, ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து வருகிறார்கள்.

தனி நபர்கள், குடுபங்கள் அல்லது குழுக்கள் என வைர வேட்டயில் பலர் தற்போதும் ஈடுபட்டு வருகிறனர். இதில் எவருக்கேனும் வைரம் கிடைத்தால், அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அதிகாரிகள் அந்த வைரத்தை உரிய முறைப்படி ஏலத்தில் விடுவார்கள். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், தமது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்த சுரத்தில் இருந்தே, தற்போது வைரம் கிடைத்துள்ளது என்றார்.

மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதுடன், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், மழைக்காலத்தில் மட்டும் சுரங்கத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை வாழ்க்கையை மாற்றிய அந்த வைரம் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வைரம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

ஏலத்தில் கிடைக்கும் தொகையில் அரசாங்க ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை குத்தகை தாரர்களுக்கு அளிக்கப்படும். ராஜு கவுண்ட் தெரிவிக்கையில், முதலில், தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க வேண்டும்.

நல்ல வீடு ஒன்று கட்ட வேண்டும் மட்டுமின்றி, பிள்ளைகளுக்கான கல்விக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டும் என்றார். அத்துடன் தம்முடன் இருக்கும் 19 குடும்பத்தினருக்கு அந்த தொகையில் பங்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய மாணவி மரணம்!!

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர், கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலதிக கல்விக்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளின் மனிதாபிமானமற்ற செயல் : வீதியில் தவிக்கும் தாய்!!

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தனது மகளால் கைவிடப்பட்ட இந்த தாய் தற்போது கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும், தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு பொலிஸ் மற்றும் சமூக சேவை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீதியில் இறக்கிவிட்டு சென்றதாகவும், கல்வி அறிவு இல்லாத காரணத்தினால் தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதை அறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது தனது கணவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் தானும் தனது மகளும் கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் வீடுகளில் கூலி வேலை செய்தும், விறகு விற்றும் மகளை உயர்கல்வி கற்பித்ததாகவும், திருமணமான பின்னர் தன்னை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் இறக்கும் வரை தங்கியிருக்க இடமொன்றினை பெற்றுத்தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்தது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா இரட்டைக் கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்த வவுனியா மேல் நீதிமன்றம்!!

இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390ஃ23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரச சட்டத்தரணி ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று, அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது. இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை வழங்கியதுடன், 7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.

காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து உயிரை மாய்த்த இளைஞனால் அதிர்ச்சி!!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்த இளைஞன் நேற்று (24) இந்த முடிவை எடுத்துள்ளார்.

காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தனது உயிரை விட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு!!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

அதேசமயம் மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றம் நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான சுற்றறிக்கை!!

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போராட்டங்களால் பணிக்கு சமூகம் அளிக்காத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

அந்த மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் போராட்டங்கள் காரணமாக பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞன் ரயிலில் மோதி பலியான சோகம்!!

பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக தந்தையுடன் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

பாணந்துறை. எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேர்முகப் பரீட்சை ஒன்றில் கலந்து கொள்வதாக வீட்டில் இருந்து சென்ற நிலையில், பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.