வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழுாய் கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகின்றார். குறித்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் குறித்த இளைஞனின் வீடட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாதக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குழாய் கிணறு அமைத்தல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தொழில்சாலையில் பணிபுரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்து. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி (SMS) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த குழு, பல்வேறு வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த குழுவின் கூற்றுப்படி, “குறித்த மோசடிகள் நன்கொடைகள், பணப் பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல்கள் மற்றும் வேலைக் காப்பீடு போன்றவற்றில் சட்டபூர்வமான நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி ஈடுபடுகின்றன.
இந்நிலையில், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனிநபர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.
பாவனையாளர்கள் செய்தியில் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளை அணுகுவதன் மூலம், அவர்கள் கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளில் இருந்து தரவுகளை திருடலாம், இது பல்வேறு வகையான நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளது.
மேலும் அண்மைக் காலங்களில் குறிப்பாக தேசிய மற்றும் மத விழாக்களை மையமாக வைத்து இவ்வாறான மோசடிகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில், திருமணமாகி மூன்றே மாதத்தில், யூ-ட்யூப் பார்த்து மனைவியின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொலை செய்ததாக கணவன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தடுதூரி அனுஷா (22). இவருக்கும் ஜெகதீஷ் (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
ஜெகதீஷ் விசாகப்பட்டினத்தில் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மனைவி அனுஷா திருமணத்திற்கு செய்துக் கொள்வதற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவருடன் பழகி வந்தது ஜெகதீஷூக்கு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய மனைவி அனுஷாவைக் கொலைச் செய்ய ஜெகதீஷ் தீட்டம் தீட்டியுள்ளார். கடந்த ஜூன் 16ம் தேதி இரவு 11 மணியளவில் அனுஷாவை கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி ஜெகஷீஷ் கொலைச் செய்துள்ளார்.
அதன் பின்னர் மனைவி அனுஷாவின் செல்போனில் இருந்து அனுஷாவின் தந்தை, சகோதரர், அனுஷாவின் தோழி ஆகியோருக்கு, தன்னுடைய முன்னாள் காதலன் பிரசாத் தனக்கு தினமும் போன் செய்து தொல்லைத் தருவதாகவும், தனக்கு வாழப் பிடிக்காததால் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாகவும் அனுஷா அனுப்பியது போல மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
இதனால் மகளின் இறந்த செய்தி கேட்டு அனுஷா குடும்பத்தினர் பிரசாத்தின் வீட்டை தாக்க சென்றனர். விஷயம் விபரீதமானதை உணர்ந்த பிரசாத் குடும்பத்தினர், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற எஸ்.ஐ மகேஷ் மற்றும் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு விசாரணை நடத்த துவங்கினார்கள்.
ஜெகதீஷ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மாட்டு தொழுவம் அருகே அனுஷாவின் சடலம் கிடந்துள்ளது. போலீசார் பிரசாத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அனுஷாவுக்கும் பிரசாத்துக்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாகவே எந்தவிதமான உரையாடலும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்க துவங்கியதுமே அனுஷா பிரசாத்துடனான உறவை முறித்துக் கொண்டிருக்கிறார். பிரசாத்தும் அதன் பின்னர் அனுஷாவைத் தொந்தரவு செய்யவில்லை.
இந்நிலையில், அனுஷா அனுப்பிய மெசேஜ் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு சென்றது எப்படி என போலீசார் விசாரித்தனர். அனுஷாவின் கணவர் ஜெகதீஷிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் ஜெகதீஷ் கூறுகையில், “தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், வேறு வழியின்றி அனுஷாவை திருமணம் செய்துக் கொண்டு, அனுஷாவை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு சென்று விட்டேன்.
பிரசாத்துடன் காதலித்து அனுஷா ஊர் சுற்றி வந்தது தெரிந்ததால், இப்போதும் மனைவி பிரசாத்துடன் கள்ள உறவு வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ஏற்பட்டு, அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
ஒரு வாரத்திற்கு முன் வந்து, மனைவியை அழைத்துக்கொண்டு விஜயநகரம் மற்றும் பல இடங்களில் சுற்றினேன். பின்னர் வேலையில் இருந்து அழைப்பு வந்ததாக கூறி அனுஷாவை வீட்டிற்கு அனுப்பி விட்டேன்.
பின்னர் விசாகப்பட்டினம் சென்று 16ம் தேதி இரவு பங்காரம்மாபேட்டை கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்து வெளியே வருமாறு மனைவி அனுஷாவை அழைத்து அவரது நடத்தை குறித்து கேள்வி கேட்டேன்.
எனக்கு விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அனுஷா, அதன் பின்னர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் ஏற்கனவே யு-ட்யூப்பில் தடயம் இல்லாமல் கொலைச் செய்வது எப்படி என பார்த்து அதற்கேற்ப நைலான் கயிற்றை வாங்கி வைத்திருந்ததால், அனுஷாவின் கழுத்தில் நைலான் கயிற்றை இறுக்கி மூச்சு விடமுடியாமல் கொலைச் செய்தேன்.
அதன் பின்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த மெசேஜை அனுஷா செல்போனில் இருந்து ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு அனுப்பினேன்” என வாக்குமூலம் அளித்து அதிர வைத்திருக்கிறார். இதனையடுத்து ஜெகதீஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதலன் உயிரிழந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் வசித்து வருபவர் இளங்கோவன். இவருடைய மகள் விஜயலட்சுமி (20).
இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாரா மெடிக்கல் 2ம் ஆண்டு படித்து வந்த விஜயலட்சுமி, அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இவர் சேலம் மாவட்டம் வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வினோத் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கதறி அழுதார். மேலும் காதலன் இறந்த வேதனையால் கடந்த சில நாட்களாக விஜயலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இருந்த விஜயலட்சுமி, திடீரென விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
அவருடன் தங்கி இருந்த சக மாணவிகள் உடனே, அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் உயிரிழந்த துக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (22). இவரும் மேகலா (21) என்ற பெண்ணும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனை கவனித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கிய நிலையில் அவரின் மனைவி மேகலா மாயமானார்.
பல்வேறு இடங்களில் அவரை தேடிய உறவினர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே அதிர்ச்சி காட்சியை கண்டனர். அங்கு மேகலா தனது துப்பட்டாவினால் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேகலாவின் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் சிகிச்சை பெற்று வரும் பூபாலனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் வடமராட்சி, திக்கம் பகுதியில் சில நாட்களின் முன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் வெளிநாடு சென்ற நிலையில் மகள் வெளிநாடு சென்றது தாயாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.
வெளிநாட்டிலுள்ள மகள் பற்றிய தகவல் இல்லாத நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக கடந்த 14ஆம் திகதி கொழும்பில் உள்ள தூதரகமொன்றுக்கு சென்ற தாயார் மகள் தொடர்பில் விசாரித்து விட்டு, 15ஆம் திகதி அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.
தனது வீடு திரும்பிய பெண்மணியின் சடலம் குளியலறை வாசலில் மீட்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், குளியலறைக்கு சென்ற போது விழுந்து உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பருத்தித்துறை பொலிசார் வீட்டுக்கு சென்றபோது, சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
அவரது பயணப்பொதியில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்தன. இந்நிலையில் பெண்னின் மரணத்தில் குற்றச்சம்பவம் இல்லையென கருதும் பொலிஸார், மேலதிக விசாரணைகளி முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரினை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்காக அமர்தப்பட்ட சாரதியால் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி காரின் உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களை மோசடியான முறையில் சமர்ப்பிக்க முயற்சித்த வேளையில் சாரதி சிக்கியுள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றில் குற்றத்தை சாரதி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான்.
அந்தவகையில், இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்,
புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.
இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது.
இதன் போது நடுவர்களாக இருந்து குழந்தையை முறையாகப் பரிசீலனை செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத்தின் துணைத் தலைவர் சந்திரமோகன் போன்றோர்.
சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
மேலும் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த குழந்தையின் பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த வாரத்துக்குள் முடியாவிட்டால், வாரம் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு பெறுபேறுகளை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிடவிருப்பது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற தகராற்றில் கை துண்டாடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்
இந்த சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே மேற்படி துண்டாடப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் கொடுமைப்படுத்துவதாக கூறி கொழும்பில் இருந்து வந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.
சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் , இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதேவேளை, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளார்.
மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலமானது, நேற்று (23.06.2024) கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த டிசாந்தன் பெர்னான்டோ (கண்ணம்மா) என்கின்ற 26 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலுக்காக சென்றிருந்த குறித்த கடற்றொழிலாளர் நேற்றுக் காலைவரை கரை திரும்பாத நிலையில் கடற்றொழிலாளர்களால் தேடுதல் பணி நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கற்பிட்டி பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த கடற்றொழிலாளர் தொழிலுக்கு சென்றிருந்த போது வீசிய கடுமையான காற்றின் காரணமாக ஏதாவது விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, கற்பிட்டியை சொந்த இடமாக கொண்டவரான குறித்த கடற்றொழிலாளர் மாமுனையில் திருமணமாகி வசித்து வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாமுனையிலிருந்து கற்பிட்டிக்கு கடற்றொழிலிற்காக சென்றிருந்தார் என கூறப்படுகின்றது.
மேலும், இவர் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தின் உபதலைவராகவும் வடமராட்சி கிழக்கு இளைஞர் கழக சம்மேளன உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை குறித்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
‘உலகுக்கு வருங்காலங்களில் சிறுகோள்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறுகோளின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த விபத்தானது, நேற்று (22.06.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது (ஸ்ரேரிங் ரொட் உடைத்ததில்) காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.
இதன்போது, வாகனம் வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்பு தூண்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற மின் இணைப்பு வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.