பூச்சி மருந்து குடித்த கணவர்… காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (22). இவரும் மேகலா (21) என்ற பெண்ணும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

இதனை கவனித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கிய நிலையில் அவரின் மனைவி மேகலா மாயமானார்.

பல்வேறு இடங்களில் அவரை தேடிய உறவினர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே அதிர்ச்சி காட்சியை கண்டனர். அங்கு மேகலா தனது துப்பட்டாவினால் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேகலாவின் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் சிகிச்சை பெற்று வரும் பூபாலனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம் : அநாதரவாக உயிரிழந்த தாய்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி, திக்கம் பகுதியில் சில நாட்களின் முன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் வெளிநாடு சென்ற நிலையில் மகள் வெளிநாடு சென்றது தாயாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.

வெளிநாட்டிலுள்ள மகள் பற்றிய தகவல் இல்லாத நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக கடந்த 14ஆம் திகதி கொழும்பில் உள்ள தூதரகமொன்றுக்கு சென்ற தாயார் மகள் தொடர்பில் விசாரித்து விட்டு, 15ஆம் திகதி அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.

தனது வீடு திரும்பிய பெண்மணியின் சடலம் குளியலறை வாசலில் மீட்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், குளியலறைக்கு சென்ற போது விழுந்து உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பருத்தித்துறை பொலிசார் வீட்டுக்கு சென்றபோது, சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

அவரது பயணப்பொதியில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்தன. இந்நிலையில் பெண்னின் மரணத்தில் குற்றச்சம்பவம் இல்லையென கருதும் பொலிஸார், மேலதிக விசாரணைகளி முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரினை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்காக அமர்தப்பட்ட சாரதியால் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காரின் உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களை மோசடியான முறையில் சமர்ப்பிக்க முயற்சித்த வேளையில் சாரதி சிக்கியுள்ளார்.

குறித்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

நீதிமன்றில் குற்றத்தை சாரதி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

 

சோழன் உலக சாதனை புத்தகத்தில் சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை!!

பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான்.

அந்தவகையில், இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்,

புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.

இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது.

இதன் போது நடுவர்களாக இருந்து குழந்தையை முறையாகப் பரிசீலனை செய்து உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத்தின் துணைத் தலைவர் சந்திரமோகன் போன்றோர்.

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.

மேலும் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த குழந்தையின் பெற்றோரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

வெளிவரவுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சை ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்!!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த வாரத்துக்குள் முடியாவிட்டால், வாரம் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு பெறுபேறுகளை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிடவிருப்பது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

நாட்டில் தொடரும் மழைவீழ்ச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு காதலால் நேர்ந்த கதி!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற தகராற்றில் கை துண்டாடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம்

இந்த சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே மேற்படி துண்டாடப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தாய் கொடுமைப்படுத்துவதாக யாழ் பொலிஸரிடம் சிறுவன் தஞ்சம்!!

தாய் கொடுமைப்படுத்துவதாக கூறி கொழும்பில் இருந்து வந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.

சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் , இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதேவேளை, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளார்.

மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

 

யாழில் கடற்றொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்பு!!

யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலமானது, நேற்று (23.06.2024) கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த டிசாந்தன் பெர்னான்டோ (கண்ணம்மா) என்கின்ற 26 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலுக்காக சென்றிருந்த குறித்த கடற்றொழிலாளர் நேற்றுக் காலைவரை கரை திரும்பாத நிலையில் கடற்றொழிலாளர்களால் தேடுதல் பணி நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கற்பிட்டி பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த கடற்றொழிலாளர் தொழிலுக்கு சென்றிருந்த போது வீசிய கடுமையான காற்றின் காரணமாக ஏதாவது விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, கற்பிட்டியை சொந்த இடமாக கொண்டவரான குறித்த கடற்றொழிலாளர் மாமுனையில் திருமணமாகி வசித்து வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாமுனையிலிருந்து கற்பிட்டிக்கு கடற்றொழிலிற்காக சென்றிருந்தார் என கூறப்படுகின்றது.

மேலும், இவர் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தின் உபதலைவராகவும் வடமராட்சி கிழக்கு இளைஞர் கழக சம்மேளன உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பூமிக்கு ஏற்படப் போகும் பாரிய ஆபத்து : நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை குறித்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

‘உலகுக்கு வருங்காலங்களில் சிறுகோள்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுகோளின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியில் திடீர் பழுதால் விபத்துக்குள்ளான கப்ரக வாகனம்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த விபத்தானது, நேற்று (22.06.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது (ஸ்ரேரிங் ரொட் உடைத்ததில்) காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.

இதன்போது, வாகனம் வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்பு தூண்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும், இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற மின் இணைப்பு வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

சகோதரன் அநாதை ஆகிவிடக்கூடாது.. அதற்காக கொலை செய்தேன்… இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் பரீட்சையில் தோல்வியடைந்த இளைஞன் ஒருவர் திட்டிய தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இரட்டைக் கொலை சம்பவம் திருவொற்றியூரில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் இளங்கலைப் பிரிவில் கல்வி பயிலும் 20 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த இளைஞன் தனது பாட்டிக்கு 2 நாட்களில் தனது வீட்டுக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும், 45 வயதுடைய பெண்ணும் அவருடைய 15 வயது மகனுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், தனது தந்தை ஓமானில் பணிபுரிவதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

மேலும், பரீட்சையில் தோல்வியடைந்த தன்னை திட்டியதால் தாயை கொன்றதோடு, தனது சகோதரன் அநாதை ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரையும் கொன்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஒருவர் கைது!!

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (23.06) தெரிவித்தனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார்.

தாயார் கூலி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளை அயலில் உள்ள வீட்டில் விட்டுச் செல்வது வழமை. இவ்வாறு விட்டுச் சென்ற நிலையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிசில் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் புலம்பெயர் தம்பதியின் செயலால் வியப்பு : 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் தானம்!!

அவுஸ்ரேலியாவில் வாழும் தம்பதியினர் , யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்காக சுமார் 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கிய சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர் மனோ மோகன் மற்றும் அவருடைய துணைவியார் கெளரி மனோ மோகன் ஆகியோரே இவ்வாறு தம்முடைய 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கியுள்ளனர்.

பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பட உதவி
தாம் அளித்த தங்கத்தை, பிள்ளைகள் வளர்ந்து தமக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது பகிர்ந்தளிக்குமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தம்பதிகளின் மனம் நிறைந்த நற்பணிக்காக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் நன்றி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளின் எதிகாலத்திற்காக குறித்த தம்பதியினர் தங்க நகைகளை வழங்கியுள்ளமை பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி!!

இலங்கையில் பிரபல பேஸ்பால் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க விளையாடி இருந்தார்.

இன்று (22.06) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த கேஷான் மதுஷங்க, கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.

இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை!!

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது, பின்னர் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது.

இன்ப்ளூயன்ஸா வைரஸின் பல திரிபுகள் மற்றும் துணை திரிபுகள் உள்ளன. சமீபத்தில், இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்தியாவில் அடையாளம் காணப்பட்டார்.

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்ப்ளூயன்ஸா ஏ (எச்.9.என்.2) வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அந்த சிறுமியாகும்.

இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்தும் விலங்குகளிடமிருந்து வந்தவையாகும், மேலும் பறவைக் காய்ச்சல் மனிதனிடம் இருந்து மற்றுமொரு மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், H5, H7 மற்றும் H9 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறன் இலங்கையில் உள்ளது.

பறவைக் காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் பறவைக் காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் சுற்றித் திரிபவர்கள் எப்போதும் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள் என மருத்துவர் ஜூட் ஜெயமஹா மேலும் தெரிவித்துள்ளார்.