இலங்கையில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனைக்கு தயாராகும் முதுமையை தடுக்கும் மருந்து : இலங்கை மருத்துவ துறையின் சாதனை!!

முதுமையை தடுக்கும் மருந்து..

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆராய்ச்சி பீடத்தால், இலங்கையில் முதன்முறையாக முதுமையை தடுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரையானது, இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதகாகவும் தற்போது அந்த மூலப்பொருட்களை பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முதுமையை தடுக்கும் மாத்திரையானது நீண்ட கால ஆய்விற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் அது பாவனைக்கு வெளிவர தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த மாத்திரை இயற்கை ஆயுர்வேத முறைப்படி உருவாக்கப்பட்டிருப்பதால் இலங்கையின் ஆயுர்வேத திணைக்களத்திடம் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பீடத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து தற்போது சந்தையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம் : எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்!!

இலங்கையில்..

வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

200 கோடி ரூபா மோசடி : இலங்கை நடிகை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

இலங்கையில்..

200 கோடி ரூபா மோசடி வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ( Jacqueline Fernandez) அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் பாலிவுட் நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி 200 கோடி பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜெக்கலின் பெயர் இடம்பெற்றது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக ஜெக்கலின் மீது குற்றம்சாட்டப்படது.

வழக்கில் ஜெக்கலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார். ஆனால் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் பெற்றார்.

திரைப்பட நடிகையாக இருப்பதால், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அடிக்கடி வெளிநாடு செல்ல நேரிடும் என நீதிமன்றத்தில் ஜாக்குலின் தரப்பு கூறியது. இதனையடுத்து ஜெக்கலின் நீதிமன்ற நிபந்தனைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்ற அடிப்படையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.

அந்த வகையில், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அவர் செல்லும் நாடுகள், அவர் தங்கியிருக்கும் இடம், தொடர்பு எண்கள் போன்ற பிற விவரங்கள் உட்பட அவரது பயணத்தின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து, பணமோசடி வழக்கில் தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்தித்துள்லதாக தெரிவிக்கப்படுள்ளது.

வரும் 5ம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில்..

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

அதற்கு பதிலளித்தவர் ​​4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

டிக் டொக் மோகத்தால் ஏற்பட்ட விபத்து : இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

ஹொரணையில்..

மோட்டார் சைக்கிளிலை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துள்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்திச்செல்வதை காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டாள் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு அருகில் மீண்டும் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தீவின் ஏனைய பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது

சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த இளைஞன்!!

அநுராதபுரத்தில்..

22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைதுசெய்யப்பட்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் அநுராதபுரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சிறையில் இருந்து வந்தவர் திடீர் உயிரிழப்பு : உறவினர்கள் சந்தேகம்!!

யாழில்..

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி, விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் திடீர் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகின்றதுடன், இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்!!

மத்திய பிரதேசத்தில்..

103 வயது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் தனது வயதில் பாதிக்கு குறைவான பெண்ணை மணந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனிமையை தாங்க முடியாமல் 49 வயதான Firoz Jahan என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார். ஆனால் அந்த முதியவருக்கு இது மூன்றாவது திருமணம். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹானுடன் நாசரின் நிக்காஹ் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹபீப் நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்தது. முதல் மனைவி இறந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மூன்றாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. 49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

மறுபுறம், 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார். கணவர் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். தன்னை யாரும் நாசரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அம்மா, அப்பா என்னை மன்னிச்சிருங்க : விபரீத முடிவெடுத்த மாணவி!!

ராஜஸ்தானில்..

“அம்மா, அப்பா என்னால் JEE தேர்வுக்குத் தயாராகமுடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் மிக மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கள்.” தற்கொலை செய்துகொண்ட மாணவி. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி நிஹாரிகா (18).

இவர் மத்திய அரசின் Joint Entrance Examination (JEE) நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிஹாரிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில் நிஹாரிகா, “அம்மா, அப்பா என்னால் JEE தேர்வுக்குத் தயாராகமுடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் மிக மோசமான மகள். என்னை மன்னித்து விடுங்கள். தற்கொலைதான் எனக்கு இருக்கும் இறுதி வழி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். போட்டித் தேர்வால், கடுமையான மன அழுத்தத்துடன் பாடங்களைப் படித்து வந்தார்.

தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் படிப்பதற்காகச் செலவழித்திருக்கிறார். ஆனாலும், மாணவியின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு விசாரிக்கப்படும் எனக் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதே கோட்டாவில் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த, உத்தரப்பிரதேச மாணவர் முகமது ஜைத் தற்கொலை செய்துகொண்டார். ஒவ்வோர் ஆண்டும் JEE, NEET போன்ற தேர்வுகளுக்குத் தயாராவதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!

புனேயில்..

புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில் இருக்கும் நவிமும்பை போலீஸாருக்கு உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ரிஷப் நிகம்(27) என்பவரை பிடித்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் புனேயில் உள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்து பார்த்தபோது அங்கு பெண் ஒருவர் சுப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். போலீஸார் வரும் வரை ஹோட்டல் ஊழியர்களுக்கு கூட இக்கொலை குறித்து தெரியாமல் இருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் வந்தனா திவேதியாகும். அவர் புனேயில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் வந்தனாவும், ரிஷப் நிகமும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் சமீப காலமாக வந்தனா ரிஷப்பை உதாசீனப்படுத்த ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. ரிஷப் நிகம் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் வந்தனா இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஹோட்டலில் அவர்கள் இரண்டு பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

லக்னோவை சேர்ந்த வந்தனாவுடன் ஹோட்டல் அறையில் நிகம் தன்னை உதாசீனப்படுத்துவது குறித்தும், வந்தனாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபத்தில் வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ரிஷப் நிகம் தப்பிச்சென்றுவிட்டார்” என்று தெரிய வந்தது. நிகம் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டது கூட ஹோட்டல் ஊழியர்களுக்கு கேட்கவில்லை.

ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு அருகில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அந்த சத்தத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிகம், வந்தனாவை சந்திப்பதற்காகவே புனே வந்துள்ளார். இருவரும் 25ம் தேதியில் இருந்து புனே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நிகம் ஹோட்டல் அறையில் இருந்து சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக தான் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், வந்தனாவை சுட்ட துப்பாக்கியை புனேயில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்து கொலை செய்த கணவன்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் கடும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

பேருந்தில் பேசிக்கொண்டே வந்த தம்பதியரிடையே சற்று நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து அப்போது கணவாய்பட்டி ஒத்தக்கடைக்கு அருகே சென்று கொண்டிருந்தது அப்போது, பின் பக்க படிக்கட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துவிட்டார். வளர்மதி நிலை தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்று ஓட்டுனரிடம் “எனது மனைவியை நான் கீழே தள்ளிவிட்டேன், பேருந்தை நிறுத்துங்கள்” எனக் கூறிய பிறகு தான் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் விஷயம் புரிந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரை சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான விவேக் சைனி (25 வயது) என்பவரே இவ்வாறு சுத்தியலால் அடித்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்திய மாணவர் ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் வீதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான ஜூலியன் பால்க்னர் (53வயது) என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறியுள்ளார். இதன்பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை அவரிடம் கொடுத்துள்ளார். இதற்குள் இந்திய மாணவரிடம் சண்டையிட்ட ​​பால்க்னர், அவரை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் இந்திய மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த நிலையில் அதில், இந்திய மாணவரின் முகம் மற்றும் தலையில் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன் : பொலிஸாருக்கு உதவிய சிசிடிவி!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடியில் கருத்து வேறுபாட்டில் ஏற்பட்ட தகராறில் மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரும் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த ஜான்சிராணி கீதா என்ற பெண்ணும் சாத்தான்குளத்தில் உள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு அனன்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர்.

அந்தோணி ராஜ் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஜான்சிராணி கீதா மாயமானார். ஜான்சிராணி குறித்து கேட்டதற்கு அந்தோணிராஜ் சரியான பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜான்சிராணியின் உறவினர்கள் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதே தினத்தில் வீட்டிற்கு வந்த கணவர் அந்தோணிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தைலாபுரத்தில் உள்ள அந்தோணிராஜின் வீடு உள்ள பகுதியில் இருந்து,

சாத்தான்குளம் வரையுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். அதில், அந்தோணிராஜ், ஜான்சிராணி கீதா இருவரும் ஒரே பைக்கில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்துள்ளது தெரிய வந்தது.

சாத்தான்குளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தஞ்சைநகர் வழியாக திசையன்விளை நோக்கி சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் உள்ள இடைச்சிவிளையிலுள்ள தேரிக்காட்டுப் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அத்தேரிக்காட்டுப் பகுதியில் தனிப்படை போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர். அந்த பெண், மாயமான ஜான்சிராணி கீதாதான் என்பது உறுதி செய்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம்,

“கணவன், மனைவி இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். இருப்பினும் காதல் திருமண்ம செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர் என அக்கம் பக்கத்தினர் கூறினார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வருவதும் உறவினர்கள் சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 21-ம் தேதி வெளியே செல்லலாம் என்று தனது மனைவி ஜான்சிராணி கீதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அந்தோணிராஜ் திசையன்விளை நோக்கி சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக தனது குழந்தைகள் இருவரையும் மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின் திசையன்விளை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே தைல மரங்கள் மற்றும் கொல்லாம்பழ மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் துப்பட்டாவால் ஜான்சிராணி கீதாவின் கழுத்தில் இறுக்கி கொலை செய்திருக்கலாம். சி.சி.டி.வி காட்சி பதிவுகளில் இருவரும் சிரித்துப் பேசியபடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பின்னர் வீட்டிற்கு திரும்பும் போது அந்தோணிராஜ் பைக்கில் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. அதன் பின்னரே வீட்டிற்கு வந்து அந்தோணிராஜூம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சி பதிவுகளே உதவிகரமாக இருந்தது” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சி ராணி கீதா காணாமல் போனதாக நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஜான்சி ராணி உடல் கிடந்த பகுதியான இடைச்சிவிளை, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் மூன்று காவல் நிலையத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கையை காப்பாற்ற சென்ற அக்காவும் உயிரிழந்த சோகம்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர். டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மகள்கள் தர்ஷினி, இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

நேற்று இவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷனியும் ,வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அப்போது வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார்.தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி தங்கச்சியை மீட்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார் தங்கையை மீட்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்தண்ணீரில் மூழ்கி இறந்து போன சகோதரிகள் உடலை சடலமாக மீட்டனர். இதையடுத்து முசிறி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் கிணற்று நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் சகோதரிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது