விருப்பமில்லாத காதல்.. தங்கையின் காதலன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சகோதரர்கள்!!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் 24 வயது ஜீவா. இவர் கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் பணி செய்து வந்தார். இவர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர், வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இது குறித்து அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன்கள் ஜீவாவை கண்டித்தனர். இதன் பிறகும் அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே நின்று ஜீவா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் சகோதரர்கள் அந்த பெண்ணை திட்டி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து ஜீவா தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். மீண்டும் இரவு 11 மணிக்கு ஜீவா, நண்பர்களுடன் சேர்ந்து சென்று தகராறு செய்தார்.

பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவின் நண்பர்களை அடித்து விரட்டினர். ஜீவா மட்டும் அவர்களிடம்தனியாக சிக்கிக்கொண்டார்.

பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஜீவாவை சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்துள்ளனர்.

சுடுகாட்டில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் சகோதரர்களான விஜய், அஜித், அவர்களது நண்பர் அரவிந்தன் மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையின் காதலை சேர்த்து வைக்க விருப்பமில்லாத நிலையில் வீடு தேடி வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் ஜீவாவை கொலை செய்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் : புதிய கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய்!!

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார். அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமா? வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அதற்கு மறுதினம் திங்கட்கிழமை விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02.02.2024) வெளியிட்டுள்ளார்.

இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்ட மக்கள்!!

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் ஏற்பட்ட பதற்ற நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. திணைக்கள வாயிலின் முன்பாக இன்று (02.02.2024) காலை இடம்பெற்ற இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நேற்று (01.02.2024) இரவு முதல் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காரியாலயம் முன்பாக வரிசையில் காத்திருந்தமையுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கான வரிசை இலக்கம் பொலிஸாரினால் வழங்கப்பட்டு வரிசையில் நின்றவர்களின் பெயர்களையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் 85ம் இலக்கம் பெற்ற நபர் வாயிலின் வெளியே வரிசையில் நிற்கத்தக்கதாக இனி எவருக்கும் கடவுச்சீட்டு வழங்க முடியாது எனவும் 160 நபர்களை தாம் ஒருநாள் சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையுடன் 50 நபர்களை சாதாரண சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையினால் பிறிதொரு தினத்தில் வருமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வரிசையின் நின்ற பொதுமக்கள் 85ம் இலக்கம் பெற்ற நபர் வெளியே நிற்க எவ்வாறு 160ம்இலக்கம் பெற்ற நபர் உள்ளே செல்ல முடியும் என்பதுடன் அங்கு நின்ற பெண்கள் உள்ளடங்கலான மாபியா கும்பல் கடவுச்சிட்டு பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசைகளுக்கு இடையே அவர்களை உள்நுழைக்கின்றனர் என தெரிவித்தமையுடன்,

அங்கு சற்று குழப்பநிலமை ஏற்பட்டிருந்தமையுடன் பின்னர் திணைக்க பிரதான வாயிலினை வழிமறித்தமையுடன் தமது எதிர்ப்பினையும் பொதுமக்கள் வெளிப்படுத்திருந்தனர்.

அதனால் கடவுச்சீட்டு திணைக்களம் முன்பாக பதற்ற நிலமை நிலவியமையுடன் வவுனியா பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கே.கே.பியரத்தன தலமையிலான பொலிஸ் குழுவினர் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினுள் சென்று ஆணையாளருடன் கலந்துரையாடினார்.

இன்று மேலதிக நபர்களை உள்ளெடுக்க முடியாது எனவும் , பிரிதொரு தினத்தில் கடவுச்சீட்டினை பெருவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கான இலக்கம் வழங்குவதாக ஆணையாளர் உறுதிமொழி அளித்துள்ளதாகவும்,

கடவுச்சிட்டினை பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசையில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாக வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி,

ஆர்.கே.கே.பியரத்தன தெரிவித்தமையினையடுத்து சுமுகமான நிலமைக்கு பொதுமக்கள் வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பிரிதொரு தினத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சிட்டை பெறுவதற்கான இலக்கமும் வழங்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் இன்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் 02.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்தமையுடன் நேற்றையதினமும் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்.

எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகைதந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வவுனியாவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று 31.01.2024 காலை தப்பியோடியுள்ளமை தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 29.01.2024 அன்று சிறைச்சாலையில் சந்தேகநபரான 28வயதுடைய இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே 31.01.2024 அன்று காலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா புளியங்குளத்தில் பொலிசாரின் வாகனத்தின் மீது தாக்குதல் : ஒருவர் கைது!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை நேற்று (31.01.2024) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான வாகனத்தின் சென்ற பொலிஸாரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு செல்ல பணமில்லை : விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தனியார் வகுப்புக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத சோகத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (30.01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி கற்கும் ஆயிஷா பர்வீன் என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி இரத்த அழுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது தாயாரிடம் கணித வகுப்புகளுக்கு பணம் கேட்டுள்ள நிலையில்,அங்கு தனது தந்தை மற்றும் அவரது தாயாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.

அவரை உடனடியாக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

4 வயதுக் குழந்தை கொடூரக் கொலை.. சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த தாய்!!

குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். KTLA, KABC மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின்படி, குழந்தையைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த மரியா அவலோஸ், 38. இவரது மகள் மியா கோன்சலேஸ் (4) கொலை செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் காரில் குழந்தை மியாவின் உடலுடன் மரியா கைது செய்யப்பட்டார்.அப்போது குழந்தையால் பேசவோ, சுவாசிக்கவோ முடியவில்லை.

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. கொடூரமான குற்றத்தின் அடிப்படையில், மரியா உடனடியாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து குழந்தை மியாவின் தந்தை கூறும்போது, ​​“கடந்த சில வாரங்களாக மரியா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

விரக்தியில் சில வாரங்களுக்கு முன் மியாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்,” என்றார்.குழந்தையுடன் தனக்கு தொடர்பில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.குழந்தை மியா பற்றி குடும்பத்தினர் கூறுகையில், “மியா மிகவும் நல்ல குழந்தை.

அவள் எங்கள் வீட்டின் வெளிச்சம். இது அவளுக்கு நடந்திருக்கக் கூடாது; இப்படி ஒரு மரணம் அவளுக்கு நேர்ந்திருக்கக் கூடாது.உண்மையில் கடந்த சில நாட்களாக மரியாவை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். அவள் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி பேச மறுத்தாள்.

இப்போது சிறையில் இருந்து எங்களை அழைக்கிறார். அவளுக்கு இன்னும் என்ன வேண்டும்?” வேதனையுடன் பேசினார்கள். மேலும் குழந்தையின் இறப்புக்கான காரணத்தை பரிசோதித்த மருத்துவர், “குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு மணிக்கட்டில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அதில் அவர் இறந்தார்,” என்றார்.

மாப்பிள்ளை பிடிக்காமல் கிணற்றில் குதித்த தங்கையைக் காப்பாற்ற குதித்த அண்ணனும் பலியான பரிதாபம்!!

தனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியும், அதே நபருடன் திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால், எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து தங்கையைக் காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம், சிஞ்சோலுவைச் சேர்ந்தவர் சந்தீப்(23). இவரது தங்கை நந்தினி(19). நந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நந்தினிக்கு பிடிக்கவில்லை.

இதனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நந்தினியின் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த நந்தினி, நேற்று மாலை திடீரென கிணற்றில் குதித்தார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த நந்தினியின் சகோதரர் சந்தீப் தங்கையைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து சந்தீப், நந்தினி உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிஞ்சோலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம், படபள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி நான்கு மாதம்… மனைவி, காதலனை வெட்டிக் கொன்ற முன்னாள் கணவன்!!

திருமணமாகி நான்கே மாதங்களில், தன்னுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து சென்ற மனைவியையும், அவரது காதலனையும் முன்னாள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், பெல்காம் மாவட்டத்தில் கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தௌபிக் காடி(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹீனகௌசர் சுதரனே(19) எனும் இளம்பெண்ணுடன் தெளபிக் காடிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் தனது காதலன் யாசினுடன்(21) வீட்டை விட்டு வெளியே கணவரை பிரிந்து சென்றார் ஹீனகௌசர்.

இதுதொடர்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது தனது கணவருடன் வாழமாட்டேன் என்றும், காதலனுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று ஹீனகௌசர் சுதரனே திட்டவட்டமாக சொன்னார்.

இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், யாசினை ஹீனாகௌசருக்கு ஊர் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனால், தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது தௌபிக் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று இரவு யாசின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற தௌபிக், தன் முன்னாள் மனைவி ஹீனகௌசரை சரமாரியாக வெட்டி விட்டு, அவரது காதலன் யாசினையும் வெட்டினார். அவர்களைக் காப்பாற்ற வந்த அமினாபாய் பகுடா, மாமனார் முஸ்தபா முல்லா ஆகியோரையும் தௌபிக் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, யாசின், ஹீனாகௌசர் ஆகியோர உயிரிழந்து கிடந்தனர். படுகாயங்களுடன் இருந்த அமினாபாய், முஸ்தபா ஆகியோரை மீட்டு மிராஜில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தௌபிக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்ததில் மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்த சோகம்!!

காஜியாபாத்தின் ரூர்க்கியை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. இவர் சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது மனைவி தீபக். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வினோத்துக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக தொற்று இருந்தது. இதற்காக வினோத் மருத்துவ சிகிச்சை பெற்று வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், வினோத்துக்கு மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில், வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வினோத், கால்வாயில் விழுந்து இறக்க முயன்றார்.

வினோத்தின் நண்பர் ஒருவர் அவரைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கச் சொன்னார். ஆனால் வினோத் ஒத்துழைக்கவில்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறார்.

தான் தற்கொலை செய்ய போவதாக ஒருமுறை தன் தங்கையிடம் கூறியிருந்தார். இந்நிலையில், வினோத்துக்கு பினு என்ற நண்பர் இருந்துள்ளார், அவரிடம் இருந்து கடந்த வாரம் துப்பாக்கியை வாங்கி காரில் மறைத்து வைத்திருந்தார் வினோத்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மதுபன் பாபுதம் அருகே காரில் தம்பதியர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்கள் வினோத் மற்றும் அவரது மனைவி தீபக் என அடையாளம் கண்டனர்.

தீபக் காருக்கு வெளியேயும், வினோத் காருக்குள்ளும் இறந்து கிடந்தனர். வினோத் கையில் துப்பாக்கி இருந்ததால், வினோத் தனது மனைவி தீபக்கை கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வினோத்திடம் துப்பாக்கியை கொடுத்த பினுவை போலீசார் தேடி வருகின்றனர்.

நண்பரை நம்பிசென்ற 26 வயது யுவதிக்கு நேர்ந்த கொடுமை : நால்வர் கைது!!

கன்னந்தோட்டையில்..

26 வயது யுவதியை தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு தபால் நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதானவர்கள் ருவான்வெல்ல மற்றும் இம்புலான பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களாவர். பாதிக்கப்பட்டவர் கன்னந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியாவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாதிக்கப்பட்ட யுவதி கடந்த 26 ஆம் திகதி தனது தாயுடன் ருவான்வெல்ல பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்தியம் ஒன்றிற்கு சென்றிருந்துள்ளார். அங்கு தபால் நிலையத்தில் வைத்து அறிமுகமான இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்த நிலையில்,

இளைஞன் யுவதியை கன்னந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் தபால் நிலையங்களில் கடமையாற்றும் தனது 3 நண்பர்களையும் அழைத்து வந்த நிலையில் சந்தேக நபர்கள் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பில் குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காத நிலையில், தபால் நிலைய ஊழியர் வீட்டிற்கு யுவதி சென்றிருந்தமை தொடர்பில் யுவதியின் மூத்த சாகோதரிக்கு நபரொருவர் மூலம் தெரியவந்துள்ளது.

மூத்த சகோதரி இது தொடர்பில் தனது இளைய சகோதரியிடம் விசாரித்த போது அவர் சம்பவத்தன்று நடந்த விடயங்களை கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பவம் ட் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 01.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகைதந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்!!

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த (29.01.2024) ஆம் திகதி முதல் சற்று கனத்த மழை பெய்தது.
தற்போது இந்த காற்று சுழற்சி இலங்கையின் தெற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

காற்று சுழற்சி நகர்ந்து சென்ற பின் பெரும்பாலும் இன்று முதல் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இம்மாதம் எதிர்வரும் 13, 14, அல்லது 15ஆம் திகதியளவில் இலங்கைத் தீவுக்கு அண்மையாக வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.