வவுனியாவில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற வாகனப் பேரணி!!

சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2024 ) காலை 09.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ் வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு 150க்கு மேற்பட்ட வாகனங்கள் பேரணியாக வவுனியா நகரை வலம் வந்திருந்திருந்தன. இப் பேரணியில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஆரம்பமான வாகனப்பேரணியானது ஏ9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக மணிக்கூட்டு கோபுர சந்திக்கு வந்து மீண்டும் ஏ9 வீதியூடாக பயணித்து குடியகல்வுத் திணைக்கள வீதியூடாக சென்று புகையிரத நிலைய வீதியினை சென்றடைந்து , வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக மீண்டும் பேரணி ஆரம்பித்த இடத்தினை சென்றடைந்திருந்தது.

வவுனியாவில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள்!!

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின விழா இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.

அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணித்தியாலமாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்ற சுதந்திர தின நிகழ்வின் போது வெப்பத்தின் தாக்கத்தினால் மாணவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மயங்கி விழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிவகுப்பு வகுப்பு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற அனுமதிப்பது அல்லது மாற்று வழிகளில் செல்வது நல்லது. இவை தொடர்பில் உரிய அதிகாரிகளை கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

வவுனியா நகர் முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள்!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் சுதந்திரதினமான இன்றையதினம் வடக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமையுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் அனுஸ்டிப்பு!!

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் இன்று (04.02) வவுனியா மாநகரசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பாடசாலை மாணவர்களின் பாண்ட் இன்னிசை, மாணவர் படையணி உட்பட முப்படை அணிவகுப்பும் இதன்போது இடம்பெற்றதுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கையடக்க தொலைபேசிக்காக உயிரை மாய்த்த மாணவன்!!

கண்டியில் பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொத்தபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரொனித் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் ரக்பி வீரர் எனவும் பெற்றோரிடம் கையடக்கத் தொலைபேசி கேட்டபோதும் பெற்றோர் தர மறுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த ரணசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு!!

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மூலம் அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க வேண்டியதன் தேவையை சபாநாயகர் சுட்டிக்காட்டினார். சபாநாயகருக்கும், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமெனவும், ஜேர்மன் தூதுவர் குறிப்பிட்டார்.

வீதியை கடக்க முயன்ற சிறுவனை மோதிய வாகனம் : சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார்.

குறித்த சிறுவன் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததார்.

இதன்போது சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் மரணமடைந்துள்ளதுடன் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு : பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (01.02) மாலை இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த துயரம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் , குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.

மாணவைன் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா நகர்ப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் இன்றைய தினம் (03.02.2024) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்குச் சூழல் காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.

அதே நேரம் வவுனியா வவுனியா நகர மத்திய பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டமையுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.

அத்துடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து பிரதேச செயலகத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மாணவர்கள், முப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தன. மேலும் ஏ9 வீதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத்சந்திர தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொள்ளவுள்ளார்.

வவுனியாவில் வடக்கு கிழக்கில் வசிக்கும் 51 பேருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமாணம்!!

வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (03.02) இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்த பிள்ளைகளுடன் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாடு திரும்பிய பலர் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற முடியாது பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடமாடும் வேலைத் திட்டமாக துரிதமாக பிறப்பு சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய வடக்கு – கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த,

51 பேருக்கு பிரஜாவுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதாற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாக இலங்கை பிரஜை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கையொப்பமிடும் நிழகழ்வு இடம்பெற்றது.

இதில் வவுனியா மாவட்ட அரச அதிபரி பீ.ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், ஒப்பர் சிலோன் அமைப்பின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சீனாவில் 15வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன.

சீனாவைச் சேர்ந்த ஜாங் போ – சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன.

இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும்,

2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், ஜாங் விசாரணையில்போது, “குழந்தைகள் விழுந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கீழே மக்கள் கூச்சலிட்டதைக் கண்டுதான் விழித்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சீனா உச்ச நீதிமன்றம், ஜாங் போ – யே செங்சென் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதனடிப்படையில், நேற்று இருவருக்கும் மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவர்களின் மரண தண்டனை செய்தி, பிரபல ஊடக தளமான வெய்போவில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தீ விபத்தில் பலியான இளம்பெண்கள் : புகைப்படங்கள் வெளியாகின!!

பிரித்தானியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலுள்ள அபர்தீன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், திங்கட்கிழமை, (ஜனவரி 29) மாலை 6.00 மணியளவில் தீப்பற்றியது.

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அந்த குடியிருப்பிலிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது. ஆனால், அதே தீயில் சிக்கி இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்துவிட்டார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் முதலான சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த பெண்களில் ஒருவர் பெயர் Shikshya, மற்றவர் பெயர் Aanchal Subedi. இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர். அவர்கள் அபர்தீனிலுள்ள Aberdeen Grammar School என்னும் பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.

இந்த விபத்தில் அந்த இளம்பெண்கள் வளர்த்த ஒரு பூனையும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுச்சிறை வைத்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 பூட்டுக்களைப் போட்டார். விளக்குகள் இல்லாத அந்த இருட்டறையில் சுமா தவித்து வந்தார்.

அத்துடன் தன் மனைவி யாரிடமும் பேசக்கூடாது என்பதற்காக வீட்டின் ஜன்னல்களையும் சுனலயா பூட்டி வைத்தார். மேலும் சுமா இருந்த அறையில் கழிப்பறை இல்லை.

இதனால் வாளியை வைத்து,அவர் மலம், சிறுநீர் கழிப்பது வழக்கம். அதைக் காலையில் சுனலயா எடுத்து வெளியேற்றியுள்ளார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சுமாவின் நடமாட்டம் இல்லாததால் சுனலயாவிடம் உறவினர்கள் விசாரித்தும் உள்ளனர். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருட்டறையில் கடந்த 12 ஆண்டுகளாக சுமா அடைத்து வைக்கப்பட்டதை அறிந்த வழக்கறிஞர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா என்பவர் போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து காவல் துறை அதிகாரி சுபான் தலைமையில் போலீஸார் சுனலயா வீட்டிற்கு நேற்று இரவு சென்று பூட்டுக்கள் மற்றும் கதவை உடைத்து சுமாவை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து எச்.டி.கோட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சுமாவையும், அவரது குழந்தைகளையும் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய சுனலயாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிக்கவேண்டாம் என கண்டித்த மனைவி அடித்துக் கொலை : கணவன் தலைமறைவு!!

கோயில் திருவிழா அன்று குடிபோதையில் வந்த கணவனைக் கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாவணகெரேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கிரமகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனமந்தா(28). இவரது மனைவி அர்பிதா(24). இவர்களின் கிராமத்தில் நேற்று இரவு கிராம தெய்வ வழிபாடு நடைபெற்றது.

இதனால் ஹனமந்தா வீட்டிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். குடிப்பழக்கம் உள்ள ஹனமந்தா நேற்றும் வழக்கம் போல மது குடித்து விட்டு வந்தார்.

இதனால் அவரது மனைவி அர்பிதா எரிச்சலடைந்தார்.தனது கணவனான ஹனமந்தாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

5 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சோகம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தோப்பிரம்குடியை சேர்ந்தவர் டீனு (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு டீனு தனது 5 மாத குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீட்டில் சத்தம் எதுவும் கேட்காததால், டீனுவின் வீட்டின் அருகே உள்ள அவரது உறவினர் கதவைத் தட்டியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ​​டீனு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்றொரு அறையில் டீனுவின் குழந்தை இறந்து கிடந்ததையும் கண்டார்.

சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்த டீனு மற்றும் அவரது 5 மாத குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 4 மாதங்களுக்கு முன்பு டீனுவின் கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அன்றிலிருந்து டீனு மனமுடைந்து காணப்பட்டதாக உறவினர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.