பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டியதால் பறிபோன 14 வயது சிறுவனின் உயிர் : ஐவர் கைது!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து!!

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (05.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, பரந்தன் A35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் சேதமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையில் மரம் விழுந்து 5 வயது மாணவன் பரிதாபமாக பலி!!

கம்பளையில் பாடசாலையொன்றில் மரம் சரிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்வத்தில் 5 வயது மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இந்த விபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர்.. தேடிச் சென்று பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் லட்சுமண ராவ் திடீரென மாயமானார்.இதுகுறித்து ஐசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் லக்ஷ்மண் ராவ் போன்று ஒரு திருநங்கையும் இருந்தார். லட்சுமண ராவின் குடும்பத்தினரும் இந்த வீடியோவை பார்த்து ஐசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார், ரீல்சில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்த லட்சுமண ராவ் மற்றும் திருநங்கை குறித்து விசாரித்து தகவல் பெற்றனர்.

அப்போது அந்த ரீலை பதிவு செய்த ராஷ்மிகா, லட்சுமண ராவ் தோற்றத்துடன் இருக்கும் திருநங்கையின் முகவரியை போலீசாரிடம் கொடுத்தார். அந்த முகவரிக்கு போலீசார் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த திருநங்கையின் பெயர் விஜயலட்சுமி என்றும், 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன லட்சுமணராவ் திருநங்கை என்றும் கண்டுபிடித்தனர். பின்னர், விஜயலட்சுமி (லட்சுமணராவ்) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜயலட்சுமியின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அதன்பின், திருநங்கை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் அவரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழச் சொன்னார்கள்,

ஆனால் அவர் காவல்துறையினரோ அல்லது அவரது குடும்பத்தினரோ சொல்வதை கேட்க மறுத்துவிட்டார். பெண்ணுக்குரிய குணங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்கு மனைவி, குழந்தைகள் வேண்டாம். அவர்களுடன் வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை.

திருநங்கையாக வாழ விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், குடும்பத்தினரும் மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர்.

காணாமல் போனவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவர் திருநங்கையாக மாறியதால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் வெளியேறினர்.

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளனர்.

இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானிக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உள்ளது.

ஏபி மற்றும் பிரிட்டானி இருவரும் தனித்தனியாகவே எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், உணவருந்துகிறார்கள், அதே போலவே இருவரும் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.

இருவரும் 2012ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லி கொடுக்கும் பணியை செய்து வருகின்றனர். பாடம் எடுப்பது, வகுப்பை கவனிப்பது என தனித்தனியாக செய்தாலும் இருவருக்கும் சேர்த்து ஒரே சம்பளம் தான் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானி வழங்கிய கருத்தில், நாங்கள் இணைந்து வகுப்புகளை எடுத்தாலும், தனித்தனியாக தனியாக தான் கல்வியை பயின்றோம்,

இருவருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன, தனிப்பட்ட வேறு வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் இருந்தும் ஒரே சம்பளம் என்பது எங்களுக்கு உரியது அல்ல என்று கூறுகின்றனர்.

சாப்பாடு செய்யாததால் ஆத்திரம்.. பெற்ற தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சிறுவன்!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே – அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் . இதில் மகனுக்கு 17 வயது.

இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நேத்ராவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இதனால் கோபத்தில் மகன், சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார். காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக பரபரப்பாக கிளம்பினார்.

நேத்ரா அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தார். எழுந்திருக்கவே இல்லை. அதனால் வீட்டில் டிபன் தயாராகவும் இல்லை. தான் காலேஜ் போவது தெரிந்தும்கூட, டிபன்கூட செய்யாமல் இன்னமும் அம்மா தூங்கி கொண்டிருந்ததை பார்த்ததும் மகனுக்கு கோபம் வந்துள்ளது.

இதனையடுத்து நேத்ராவை எழுப்பி டிபன் கேட்டார். ஆத்திரமடைந்த நேத்ரா, மகனை சத்தம் போடவும், மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் நேத்ரா நீ என் மகன் இல்லை. ஏன் உனக்காக சமைக்கணும் என கூறிவிட்டார்.

ஆவேசமடைந்த மகன், வீட்டிற்குள்ளிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, நேத்ராவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் நேத்ரா சுருண்டு விழுந்தார்.

துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், நேராக கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்துவிட்டார்.

இச்சம்பவம் நடந்தபோது, வீட்டில் இவர்கள் 2 பேரை தவிர வேறு யாருமில்லை. போலீசார் நேத்ராவின் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, தாயை கொன்ற மகனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் மகன் அம்மா தன்னை சரியாக கவனிக்கவில்லை, முறையாக சாப்பாடும் தருவதில்லை. காலேஜூக்கு கிளம்பும்போது தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

நேத்ராவுக்கு இன்னொரு மகள் ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த 30 வருடங்களாக கே.ஆர்.புரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் நேத்ரா. காலை 7.30 மணிக்கு தொடங்கிய தகராறு அரை மணி நேரத்திலேயே கொலையாக முடிந்து விட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவி திடீர் உயிரிழப்பு… சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பச்சூரில் உள்ள யோகேஸ்வரன் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த யோகேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மயங்கி விழுந்த மேடைப் பாடகி.. பிரேத பரிசோதனையால் சிக்கிய கணவன்!!

மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

மதுரை மாநகராட்சி மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த 37 வயதாகும் நாகராஜின் மனைவி கவிதா, இவருக்கு 34 வயது ஆகிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடி வரும் பாடகியான கவிதா, இசைக்குழு ஒன்றின் மூலம் மேடைகளில் பாடி சம்பாதித்து வந்தார்.

அந்த இசைக்குழுவில் தான் நாகராஜ் மைக்செட் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இ்ந்த நிலையில் சமீப காலமாக கவிதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்ததாம். அதற்காக கண் மருத்துவமனையில் பரிசோதித்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரத்தம் கக்கிய நிலையில் கவிதா இறந்து கிடந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது கவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். கவிதா உடலில் காயங்கள் இல்லை என்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதே நேரத்தில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது. அந்த அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் இறந்து இருப்பது உறுதியாகி உள்ளது.. இது குறித்து போலீசாருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே நாகராஜை போலீசார் அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கவிதாவை கொன்றதுடன், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக நாகராஜ் நாடகமாடியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

வானும் காரும் மோதி விபத்து : 7 பேர் படுகாயம்!!

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வானும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒன்றை வான் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வான் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வானில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் தங்காலை மற்றும் ஹூங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 30 நாட்களில் இரட்டைக் கொலையில் முடிந்த காதல் கதை!!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்த ஹீனாவிற்கு, அவரது கணவரின் நண்பரான யாசின்-பகோட்டின் நட்பு கிடைத்துள்ளது. யாசினின் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்த ஹீனா, அவரது கலர்ஃபுல் ரீல்ஸ்களை பார்த்து, அரட்டை அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது தெளஃபிக்கிற்கு தெரியாமல்போனது, நண்பனே தனது குடும்ப வாழ்க்கையில் கும்மி அடிக்க போகிறார் என்று. ஹீனாவும், யாசினும் செல்போன் எண்களை ஷேர் செய்து நண்பர்களாக பழக, நாளடைவில் அது தகாத உறவாக உருவெடுத்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, கதை பேசியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக தௌஃபிக்கிற்கு தெரியவர, மனைவியையும் – நண்பனையும் அழைத்து கண்டித்திருக்கிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், வீடும் 500 மீட்டர் தூரத்தில் இருந்ததால், ரகசிய ஜோடியின் சீக்ரெட் காதலுக்கு தடை போட முடியவில்லை.

புதுமோகம் கண்ணை மட்டுமல்லாது கண்டதையும் மறைக்க, வீட்டை விட்டு வெளியேறிய ஹீனா, புதுக்காதலன் யாசினும் சிட்டாக பறந்திருக்கிறார். 20 நாட்கள் தலைமறைவாக குடும்பம் நடத்தியவர்கள், ஊர் பெரியவர்களிடம் பேசி மீண்டும் திரும்பினர்.

ஜமாத்தில் மூன்று பேரை அழைத்து சமரசம் செய்தபோது ஹீனா, யாசினுடன் செல்வதாக திட்டவட்டமாக கூறினார். அப்போது மன உடைந்து போன தௌஃபிக், இருவரின் காதலுக்கும் தடையாக இருக்க மாட்டேன் எனக்கூறிய தலாக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் யாசின் மற்றும் ஹீனா இருவரும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இவர்களுக்கு தெரியாமல் போனது, இருவரின் உயிருக்கும் தௌஃபிக் எமனாக வரப்போகிறார் என்று.

புதுஜோடி இருவரும் ஒரு மாதமாக, கொக்கடனூர் கிராமத்தின் புறநகரில் உள்ள ஜாதவ் பண்ணையில் வசித்து வந்தனர். அப்போதுதான் கிராமத்தில் யல்லம்மா தேவியின் திருவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் கணவர் தௌஃபிக்-கும், ஹீனாவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை சூடேற்றி இருக்கிறார்.

சும்மா இருந்த சங்கை ஊதியே உடைத்த புதுக்கதையாய், ஹுனாவின் வார்த்தைகள் தௌஃபிக்-கை ஆத்திரக்காரனாக மாற்றியது. கையில் அரிவாளுடன் புறப்பட்டு சென்றவர், ஹீனாவின் வீடு புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீனா, அவரது புது கணவன் யாசின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற யாசினின் தாய் அமினாபாய் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

குலை நடுங்க வைக்கும் இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும், உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யாசினின் தாய் மற்றும் உறவினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து, இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த தௌஃபிக்-கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமான 30 நாட்களில் புதுமோகத்தால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் அவரது காதலன் இருவரையும் முன்னாள் கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை மொட்டையடித்து வீதியில் இழுத்துச்சென்ற துணை நடிகர்!!

இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்த மனைவிக்கு மொட்டை அடித்து தெரு, தெருவாக இழுத்து சென்ற அவரது கணவரான சினிமா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33).

இவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (துணை நடிகர்) உள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றும் நெல்லூரை சேர்ந்த ஆஷாவை(26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பிறகு ராம்பாபு தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோகிறேன். அதற்கு நீ சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆஷாவை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசில் ஆஷா புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், ராம்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையறிந்த ராம்பாபுவின் பெற்றோர், மருமகள் ஆஷாவை சமாதானம் செய்து வழக்கை வாபஸ் பெறும்படி கூறினர்.

இதையடுத்து இருவரையும் பெடகொண்டேபுடிக்கு கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு வந்தபிறகு ராம்பாபு ஒரு அதிகாரியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், மீண்டும் ஆஷாவை கொடுமைபடுத்தினார்.

இதுகுறித்து பெடகொண்டேபுடி போலீசாரிடம் ஆஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆஷா, கணவரை பிரிந்து தனது மகனுடன் ஐதராபாத்திற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் ராம்பாபு 2வது திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து.

வருகிறது. இதையறிந்த ஆஷா, ராம்பாபுவிடம் சட்டப்படி விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் என் மகனுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றார். இதற்கு ராம்பாபு நான் இழப்பீடு தருகிறேன். ஆனால் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்ததால், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த ராம்பாபு, வீட்டிற்குள் இழுத்துச்சென்று ஆஷாவிற்கு மொட்டை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நேற்று தெரு, தெருவாக இழுத்து சென்றுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். தன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட ஆஷாவை மீட்டு ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்பாபுவை தேடி வருகின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள்!!

ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கர வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம கொஸ்வத்தபர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பெற்றோர்கள் இருவரும் தமது மகளின் தேவைக்காக ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகளால் தாய் மற்றும் தந்தை மற்றும் சிறுமியை ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது தாய் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

தந்தையின் வலது கை, கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

காணாமல்போயுள்ள தமிழ்ச் சிறுவன் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

வத்தளை பகுதியை சேர்ந்த ரமேஷ் தனுஜன் என்ற சிறுவனை ஜனவரி 31ம் திகதி மாலை 6 மணியிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடையவர் ஆவார்.

இந்நிலையில், அச்சிறுவன் பாடசாலை விடுமுறையை கழிப்பதற்காக ஹட்டன் பிரதேசத்தில் இருக்கும் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார்.

இவர் சம்பந்தமாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கருமை நிறம், நான்கரை அடி உயரம் கொண்ட தோற்றத்தை உடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரைக் கண்டால் கீழ் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு சிறுவனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0777747157

மோட்டார் சைக்கிள் விபத்து : இரு இளைஞர்கள் தீவிர சிகிச்சையில்!!

அம்பாறை-நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்களும் மேலும் இருவருடன் நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி மோட்டார் சைக்கிள-ஓட்டப்பந்தயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது,மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதி இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 கைதிகள் விடுதலை!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

76 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 600 சிறைக் கைதிகள் இன்று (04.02) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 12 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.