கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என கூறியுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது உடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று (09.02.2024) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன், இதற்கு முன் அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவின் (189) சாதனையை பதும் நிஷங்க முறியடித்துள்ளார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, 139 பந்துகளை எதிர்கொண்ட இவர், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அதேவேளை, இன்றைய போட்டியில், இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.
வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின் உயிரை காப்பாற்றினார் சாவித்திரி என நாடு முழுவதும் ஏராளமான கதைகள் உள்ளன. பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த கதைகள் செவிவழிச் செய்தியாக பரப்பப்படுகின்றன.
பண்டைய தமிழ் நூல்களில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி எனவும் சுட்டிக்காட்டும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய வீரமான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் நுழைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
குறிப்பாக கால்நடைகளை குறிவைத்து அவ்வப்போது கழுதைப் புலிகளின் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கன்கேர் மாவட்டத்தின் இங்க்ரா கிராமத்தைச் சேர்ந்த நந்து ராம் யாதவ் (32), தனது மனைவி சுக்னி (28) என்பவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு சுக்னிக்கு குழந்தை பிறந்திருந்தது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் நந்து, சோளப்பயிரை விதைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று அதிகாலை தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு உரம் தெளிப்பதற்காக நந்து சென்றிருந்தார்.
வெளிச்சம் குறைவாக இருந்த சமயத்தில், திடீரென அவரை கழுதைப்புலி கூட்டம் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்து, அலறித் துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுக்னி, கணவனை மீட்பதற்காக தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் கனமான கட்டை ஒன்று கிடைத்ததால், அதைக் கொண்டு கழுதைப் புலிகளை விரட்ட முயற்சித்துள்ளார்.
அவர் அடித்ததில் கழுதைப்புலி ஒன்று சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து மற்ற கழுதைப்புலிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தன. சுக்னி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், படுகாயமடைந்த நந்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கைகள், முதுகு மற்றும் காலில் கடுமையான காயம் அடைந்திருந்த நந்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் உடல்நிலை தேறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து கழுதைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நந்து மற்றும் அவரது மனைவிக்கு இழப்பீடு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனது கணவனை காப்பதற்காக கழுதைப்புலிகளுடன் வீரத்துடன் சண்டையிட்ட சுக்னியை, நவீன சாவித்திரி என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் மாகனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பா (24). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவருக்கும், இவரது உறவினர் சசிகலாவுக்கும் (20) இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் அண்ணன் – தங்கை உறவு முறை என்பதால் இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் கொல்லப்பாவும், சசிகலாவும் பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், தகாத உறவு முறை குறித்து கூறி சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது குறித்து கொல்லப்பாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொல்லப்பா, சசிகலாவை சந்தித்து பேசி, இருவரும் வீட்டை விட்டு ஓடினார்.
அதன் பின்னர், கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியது பற்றி அறிந்தவுடன் இருவீட்டாரும் அவர்களை தேடினர்.
இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என நினைத்த கொல்லப்பா மற்றும் சசிகலா கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர்.
இதுகுறித்து அறிந்தவுடன் பதறிய குடும்பத்தினர் கிராமத்தின் புறநகர் பகுதிக்கு விரைந்தனர். அங்கு மரத்தில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யாத்ரமி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொல்லப்பா மற்றும் சசிகலா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் விற்பனை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆம்பரின் சந்தை மதிப்பு 3 கோடி ரூபாயாகும். ஆம்பர் என்பது திமிங்கலத்தின் உடலில் இருந்து இயற்கையாக வெளியாகும் (Sperm Whale) விந்து மற்றும் வாந்தியாகும்.
இது வாசனைத் திரவியங்களுக்கும், வாசனைத் திரவியங்களின் நறுமணத்தை நீண்ட காலம் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதிமா (45) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து வருகிறார்.
ஆனால் கடந்த நவம்பரில் யாரோ அவரை படுகொலை செய்து விட்டு வீட்டில் வைத்து கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்பட ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின் கிரண்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பிரதிமா பணிபுரிந்த அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த 31 வயதான இந்த கிரண் குமார் தான் பிரதிமாவை கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த கொலைக்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரண்குமார் ஏற்கனவே டிரைவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதனால், மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என பிரதிமாவிடம் கேட்டு வந்தார்.
ஆனால், தவறு செய்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளார் பிரதிமா. வேலை தர மறுத்த கோபத்தில் அவரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிரண்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது வெறும் 8 நிமிடத்தில் பிரதிமாவை கொன்றான் கிரண். இது தொடர்பாக பெங்களூரு போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 3 மாதங்கள் ஆகிறது.. இந்த 3 மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 70 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுடன் 600 பக்க ஆவணத்தையும் போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரதிமாவின் அதிகாரப்பூர்வ கார் டிரைவராக கிரண் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.பலமுறை கவனக்குறைவாக காரை ஓட்டியிருக்கிறார்.
இதற்கு பிரதிமா அவனை பலமுறை திட்டியிருக்கிறார். அதனால்தான் கிரணை இந்த வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார். “பிரதிமாவை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு கிரண் கேட்டுள்ளார். ஆனால் ப்ரதிமா சம்மதிக்கவில்லை. அதனால் தான் பிரதிமா மீது கோபம் கொண்டு அவரை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டான். குற்றப்பத்திரிகையில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் தம்பதிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 54 வயதுடைய தம்பதிகளாவர்.
மனைவி காசநோயினால் பாதிக்கப்பட்டு பல காலமாக சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் கணவர் மனைவிக்கு விஷம் பானத்தை அருந்த கொடுத்து தானும் அருந்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிற்சைக்கு பணமில்லாததால் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது.
திருப்பதிக்கு திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அடுத்தடுத்த தகராறு காரணமாக சிவலி தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனையடுத்து சிவலி கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் பிப்ரவரி 4ம் தேதி இரவு திருப்பதி மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி சிவலியிடம் குடும்பம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தார்.
சிவலி, சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்யும் உன்னுடன் வரமாட்டேன் எனக் கூறிவிட்டார். ஆத்திரத்தில் திருப்பதி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திற்கு புறப்பட்டார்.
ஆட்டோவில் வரும்போது மனைவியிடம் செல்போனில் பேச முயற்சித்தார். ஆனால் சிவலி போனை எடுக்கவே இல்லை எனத் தெரிகிறது. இதனால் திருப்பதி, பிஜினப்பள்ளி புறநகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலேயே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையறிந்த ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் திருப்பதி ஆட்டோவை காவல்நிலையத்துக்கு விடும்படிகூறினார். அதன்படி ஆட்டோவில் சென்று குழந்தையின் உயிரிழந்த சடலத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த பெண்ணை 2023 டிசம்பர் 10ம் தேதி திருமணம் செய்தார்.இந்நிலையில் அவரது மனைவி டிசம்பர் 31ம் தேதி வினோத்தை பிரிந்துள்ளார். இதனால் வினோத் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த சம்பவம் குறித்து மகிளா காவல் நிலையத்தில் டிச., 31ல் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் வினத் ராஜ் அரஸ் திருமணத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி பிரிந்த சோகத்தால் வினோத் ராஜ் அரஸ் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்ற தேசிய கபடி வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்களன்று கவுகாத்தியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அரை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறக்கும் முன் விரைவாக பிடிக்கப்பட்டார்.
சந்தீப் குமார் காம்ப்ளே (44) என்பவர் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள அசாரா ஹோட்டலில் நேற்று மதியம் இறந்து கிடந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் – அஞ்சலி ஷா, 25, மற்றும் அவரது காதலன் பிகாஷ் குமார் ஷா, 23 – இரவுக்குப் பிறகு கொல்கத்தாவிற்கு விமானத்தில் ஏற இருந்தனர், ஆனால் உடனடி பொலிசார் அவர்கள் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பே கைது செய்ய வழிவகுத்தது.
புனேவைச் சேர்ந்த கார் டீலர் காம்ப்ளே, அவரது அறையின் தரையில் படுத்திருந்த ஹோட்டல் ஊழியர்களால் அவரது மூக்கிலிருந்து அதிக ரத்தம் வழிந்ததை முதலில் கண்டார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த அஞ்சலி, கடந்த ஆண்டு விமான நிலையத்தில் நட்பாக இருந்த காம்ப்ளே என்பவருடன் உறவில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அஞ்சலி ஏற்கனவே பிகாஷுடன் உறவில் இருந்ததால் இது சிக்கல்களுக்கு வழிவகுத்தது, அவர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வந்தார். பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண் தனது தொலைபேசியில் அவருடன் நெருக்கமான படங்களை வைத்திருந்தார், அஞ்சலி விசாரணையின் போது கூறினார்.
இது தம்பதியர் – அஞ்சலி மற்றும் பிகாஷ் – அந்த புகைப்படங்களில் காம்ப்ளேவை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்க தூண்டியது. அவர்கள் முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால் காம்ப்ளே அதை கவுகாத்திக்கு மாற்றினார், அங்கு அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையை பதிவு செய்தார்.
இருவரும் ஒன்றாக குவஹாத்திக்கு பறந்தனர் ஆனால் அங்கு சென்றதும் பிரிந்தனர். காம்ப்ளேவுக்குத் தெரியாமல் அதே ஹோட்டலில் தனக்கென ஒரு அறையை பிகாஷ் பதிவு செய்தான்.
அவர்களின் திட்டத்தின்படி, அஞ்சலியை காம்ப்ளே நகரத்தில் சந்தித்து, அவர்கள் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்றனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் பிகாஷ் தனியாக வந்தார்.
அவர்களது சந்திப்பின் போது, பிகாஷின் வருகை காம்ப்ளேவை ஆத்திரமடையச் செய்தது மற்றும் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். சண்டையில் காம்ப்ளே படுகாயமடைந்தார்.
அதைப் பார்த்த காதல் ஜோடி தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் காம்ப்ளேக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றனர் – அதில் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிகாஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஹோட்டல் அதிகாரிகளை எச்சரித்தது, அவர்கள் கவுகாத்தி நகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனடியாக ஹோட்டல் பதிவு, சிசிடிவி காட்சிகள் மற்றும் விமான நிலைய பயணிகளின் பட்டியல் மூலம் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை பூஜ்ஜியமாக்கினர்.
இரவு 9:15 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அஞ்சலியும் பிகாஷும் ஹோட்டலுக்கு அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் சண்டைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை ஒன்றாக இணைக்க போலீசார் முயற்சிப்பதால் வழக்கு விசாரணையில் உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
பார்த்திபன் குடியாத்தம் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமியின் சித்தப்பா மகளான தங்கை இறந்து இன்று காரியம் நடைபெற்றது.
இதில் பார்த்திபன் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று மனைவி தனலட்சுமிக்கும், பார்த்திபனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே திடீரென வீட்டில் இருந்து தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தனலட்சுமி தீக்காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனலட்சுமியின் பெற்றோருக்கு பார்த்திபன் போன் செய்து தங்கள் மகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளதாகவும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு கொண்டு வந்த தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், உறவினர்களும் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனே மனைவியை தீயிட்டுக் கொளுத்தி இருக்கலாம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தீயிட்டு கொளுத்தினாரா அல்லது மனைவியே தீயிட்டு கொளுத்திக் கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு மனைவி பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நேற்றைய தினம் (05-02-2024) இடம்பெற்றுள்ளது. வெடிப்பில் இருந்து மீட்கப்பட்டவர் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் ஆவர்.
இவர் தேன் எடுப்பதற்காக நேற்று காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். இதன்போது காட்டிற்குள் இருந்த சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வளர்ப்பு நாய் தனியாக வீடு திரும்பி தனது சோகத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
இதனை அவதானித்த உறவினர்கள் காட்டிற்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். இதன்போது, அவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் ஆசிரியர்கள், மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் அவர் பணித்துள்ளார்.
நேற்றையை தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை போக்குவரத்து விதி மீறியதாக வழிமறித்து வீதியில் வைத்து தாக்கியதுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் தாக்கினார்கள் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவன் முறைப்பாடு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.