உறவை துண்டித்த இன்ஸ்டா புகழ் ஆசிரியையின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்!!

கர்நாடகவில்..

கர்நாடக மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். 35 வயதான லோகேஷ், அவரது மனைவி தீபிகா, கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர், மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்.

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபிகா மேலுக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார், இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றார். இன்ஸ்டாகிராமில் அவரது ரீல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால், கடந்த 20ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் லோகேஷ் பல இடங்களில் தீபிகாவை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மேலுக்கோடு காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மேலுக்கோடு யோக நரசிம்ம சுவாமி கோவில் அடிவாரத்தில், சாக்கு மூட்டையில், இரண்டு நாட்களுக்கு முன், பாதி புதைக்கப்பட்ட நிலையில், சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதி அழுகிய நிலையில் உடலை தேடியபோது காணாமல் போனது தீபிகா என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் தீபிகா அந்த ரீல்களை வீடியோ எடுத்ததால் யாரோ அவரை கொன்று உடலை புதைத்துள்ளதாகவும்,

அதனால் தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தீபிகாவுக்கும், ஒரு வாலிபருக்கும் மலையடிவாரத்தில் சண்டை நடந்தது.

அந்த வீடியோவை போலீசில் கொடுத்தனர். அதை போலீசார் விசாரித்தபோது, ​​தீபிகாவுடன் சண்டை போட்டது மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிதிஷ் கவுடா என்பது தெரியவந்தது. தீபிகாவின் குடும்பத்தினரும் நிதிஷை கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.

தீபிகாவிடம் கடைசியாக செல்போனில் பேசியவர் இவர் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, விஜயநகர மருத்துவமனையில் நிதீஷை மேலுக்கோட்டை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தீபிகாவை கொல்லவில்லை என்று முதலில் கூறியவர், போலீஸ் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தீபிகாவும், நிதிஷும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்கா, தம்பி போல் பழகி வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே தகாத தொடர்பு இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். நிதிஷிடம் பேசுவதை தவிர்க்குமாறு தீபிகாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் நிதிஷிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதீஷ் கவுடா, தன்னிடம் பேசுமாறு அவரை வற்புறுத்தினார். இதற்கு சம்மதிக்காத தீபிகா மீது கடும் கோபத்தில் இருந்த நிதிஷ் கவுடா, தீபிகாவை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி நிதிஷின் பிறந்தநாள் என்பதால், தீபிகாவிடம் செல்போனில் பேசிய நபர்,

உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். நித்திஷின் பிறந்தநாள் என்பதால் அவரக்கு சட்டையை எடுத்துக்கொண்டு யோக நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அடிவாரத்தில் அவரை சந்திக்கச் சென்றுள்ளார் தீபிகா.

நிதிஷ், தீபிகா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீபிகாவை நித்தீஷ் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து ஏற்கனவே தோண்டிய குழியில் புதைத்துவிட்டு தப்பியோடினார்.

தீபிகாவை காணவில்லை என அவரது கணவரும், பெற்றோரும் தேடியபோது, ​​தீபிகாவின் தந்தைக்கு நிதிஷ் அடிக்கடி போன் செய்து, ‘‘அக்கா வந்தாரா?’’ என கேட்டது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நிதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமும் அம்மாவை தொல்லை செய்து வந்த தம்பி : ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!!

புதுச்சேரியில்..

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பி தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி வில்லயனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72).

இவரது மூத்த மகன் வெங்கடேசன் (54), கூலித்தொழிலாளி. திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கல்யாணசுந்தரம் (35). இன்னும் திருமணமாகாத அவர் தனது தாய் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்தார்.

கூலித்தொழிலாளியான கல்யாணசுந்தரம் மீது காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தாயாரை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் கல்யாணசுந்தரம், ஆதிலட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று காலை ஆதிலட்சுமி இது குறித்து மகன் வெங்கடேசனிடம் , கல்யாணசுந்தரம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

உடனே வெங்கடேசன் வீட்டில் இருந்த கல்யாணசுந்தரத்தை அழைத்து கண்டித்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அருகில் கிடந்த கட்டையால் கல்யாணசுந்தரத்தை தாக்கியதில், திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தம்பி இறந்ததால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நேராக மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று தம்பியை அடித்துக் கொன்றது குறித்து போலீசில் சரணடைந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். இதையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நுளம்பு வலை நூலால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

புத்தளத்தில்..

புத்தளம் – வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளான். புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்களிலிருந்த குறித்த சிறுவன் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது , அங்கு தொங்கிக் கொண்டிருந்த நுளம்பு வலையொன்றின் நூல் பகுதி சிறுவனின் கழுத்தில் இறுகியதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சத்தமில்லாததை அவதானித்த பெற்றோர்கள், வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சிறுவன் கழுத்து இறுகி கிடப்பதை பார்த்து உடனடியாக உறவினர்கள், அயலவர்களின் உதவியோடு புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹசாம், மரண விசாரணையை நடத்தினார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், கழுத்துப் பகுதி இறுகியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இலங்கையில்..

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கனமழையால் பாரிய அளவில் மரக்கறி பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும்.

சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. மொனராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம,

நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம். இதேவேளை அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த வருடத்தில் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு!!

காலியில்..

காலி – கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில் மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை உள்ளதாகவும், 18 சென்ட் மின்சாரம் துண்டிக்க மாட்டோம் என நிறுவனம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததாகவும் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவிக்கையில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர் மாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

இலங்கையில்..

பெண்களின் இரவு நேர பணி குறித்து அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு திருத்தப்பட்ட வரைவு மசோதாவின்படி, பெண்களின் நலன், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, ஓய்வு வசதி உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதை எட்டிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்திருத்தம் தொடர்பான விடயம் தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி : நகரசபை அதிரடி!!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த வீதி ஒன்று வவுனியா நகரசபையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, திருநாவற்குளம், கிராம அபிவிருத்திச் சங்க வீதியின் இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வழிமறிக்கப்பட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளரால் குறித்த தனிநபருக்கு அறிவித்தல் வழங்கியும் அந்நபரால் வீதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து நகரசபையினர் அதிரடியாக செயல்பட்டு பொலிசாரின் துணையுடன் குறித்த வீதியில் தனிநபரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையை அகற்றி அக்கொட்டகையினை நகரசபையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

அத்துடன் குறித்த தனிநபருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து,

குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில் வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை வழிமறித்து சோதனை செய்தபோது,

ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த பெண்ணிடம் இருந்து 920 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காடு பகுதியில் கிணற்றிலிருந்து 29 வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா குருமன்காடு கோவில் வீதி பகுதியில் கிணற்றிலிருந்து 29வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர். இம் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த, சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்களை ஏமாற்றி 500 கோடி சுருட்டிய ஆசிரியருக்கும் யுவதிக்கும் நடந்த பரிதாபம்!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரையும், அவரது கள்ளக்காதலியையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28.01) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் உத்தரவிட்டார்.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் , சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரசேகர முதியன்செலாகே தரிந்து இரோஷன் வீரசேகர என்பவரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான எகொட கெதரவைச் சேர்ந்த சமிலா பியதர்ஷனி ராஜரத்ன என்பவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், 2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இவர் மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்துள்ளார். அதோடு அந்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு, காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது காதலியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய தரிந்து ஈரோஸ் வீரசேகர பட்டதாரி ஆசிரியராவார். அதோடு அவர் விகாரையொன்றின் பஸ்நாயக்க நிலமேயாகவும் செயற்பட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துபோது,

சந்தேக நபர் இரண்டு வருடங்களாக பொலிஸ் விசாரணைகளுக்கு உதவாது தலைமறைவாக இருந்தவர் எனவும், சந்தேக நபர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு சொத்துக்களை வாங்கியவர் எனவும் சுட்டிக்காட்டினர்.

அதோ, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவ்வளவு பணத்தை பெறுவது சாத்தியமில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிகப்பட்ட 180க்கும் மேற்பட்ட விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், கடந்த ஜூலை மாதம் கஹடகஸ்டிஜிலிய பிரதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் , சந்தேகநபருக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் ,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் இயக்குனருக்கு கிடைக்கப்பெற்ற சர்வதேச விருது!!

இலங்கையில்..

இலங்கையின் பிரபல இயக்குனரான ஜகத் மனுவர்ணா 22 வது டாக்கா சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார்.

ering Mountains) படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. ரஹஷ் கியன கந்து (Whispering Mountains) படம் ஜகத் மனுவர்ணாவின் முதல் படம் என்பதும் சிறப்பு அம்சம்.

பிள்ளைகளால் விரக்தி : 23 கோடி ரூபாவை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி..!!!

சீனாவில்..

தனது பிள்ளைகளை கவனிக்காததால் 23 கோடி சொத்துகளை மூதாட்டி ஒருவர் பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சொத்துகளை கொடுப்பதாக உயில் எழுதி இருந்த நிலையில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார். இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், பல பயனர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசை காட்டிய சகோதரர்கள் : வெளியாகிய சிசிரிவி காணொளி!!

யாழில்..

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை நுாதனமான முறையில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்த குறித்த பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். திருநெல்வேலி சந்தைக்கு வந்த போது, அவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ மற்றும் 20, 000 இலங்கை ரூபா அடங்கிய கைப்பையை கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவர் நூதனமான முறையில் அபகரித்துள்ளார்.

இந்நிலையிலேயே, திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், திருடப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை பலியான சோகம்!!

கேகாலையில்..

கேகாலை – தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் நேற்றிரவு (28) சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்படி டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதன் பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரட்டைத் தொடர்ந்து தக்காளி விலை திடீரென அதிகரிப்பு!!

இலங்கையில்..

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது.

எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் (29) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கரட் 1350/=, சீமை தக்காளி 800/=, சுக்கினி 550/=, சிவப்பு ராபு 1100/=,புரகோலின் 4100/=, ரோஸ்மேரி 550/=, பாசலி 1500/=, மிஞ்சி இலை 800/=, சிவப்பு சலாது 1800/=, ஐஸ்பேக் 2600/=, சல்திரி 1200/=, பெஸில் இலை 3100/=, குடைமிளகாய் சிவப்பு 1900/=, குடைமிளகாய் மஞ்சல் 1900/=

குடைமிளகாய் பச்சை 1300/=, சிவப்பு கோவா 3700/= என விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லீக்ஸ் 460/=, கோவா 520/=, ராபு 170/=, இலையுடன் பீட் 470/=, இலை அகற்றிய பீட் 570/=, உருளைகிழங்கு 320/=, சிவப்பு உருளைகிழங்கு 340/=, நோக்கோல் 370/= என மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.