பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார்.

இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த Baxendale, தனது நடன வாழ்க்கையை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். Orla Baxendale-வுக்கு கடுமையான வேர்க்கடலை ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் உணவுப்பொருட்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையில் பிஸ்கட்ஸ் வாங்கியுள்ளார். அதன் package label-யில் வேர்க்கடலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அதில் வேர்க்கடலை கலந்திருந்ததால் Orla-வுக்கு உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவர் EpiPen எனும் ஊசியை செலுத்திக் கொண்டபோதிலும், Anaphylactic Shock ஏற்பட்டு 11ஆம் திகதி Orla Baxendale பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து Stew Leonard-யின் மாளிகைக் கடை, Orla Baxendale-வின் இறப்புக்கு காரணமான Vanilla Florentine Cookiesஐ திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், Orla Baxendaleவின் அதிர்ச்சி மரணத்தால் அவரது குடும்பத்தினர் கற்பனை செய்ய முடியாத பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடி முறை அழுது இருக்கிறேன் : கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

நடிகை..

“என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரின் புகைப்படத்தை பார்த்து பல முறை அழுது இருக்கிறேன் ” என நடிகை சண்முகப்பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 – 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். இதிலும் சண்முகப்பிரியாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதற்கடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் சண்முகப்பிரியா, அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்தனர். மாறாக திடீரென ஒரு நாள் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.இது சண்முகப்பிரியாவை போல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சண்முகப்பிரியா, “தவறான கருத்துக்களை பகிர வேண்டாம்.

குடும்பத்திலுள்ளவர்களுக்கு கவலையாக இருக்கின்றது..” என பேசி வீடியோவொன்றை பகிர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், “என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என என்னுடைய கணவரின் புகைப்படத்தை பார்த்து கோடி தடவைக்கு மேல் நான் அழுது இருக்கிறேன்.” என உருக்கமாக பேசியுள்ளார்.

குடி போதையில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை!!

கர்நாடகவில்..

குடிக்க பணம் தர மறுத்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், வீட்டில் தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.

நர்த்தனின் தந்தை சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. படுத்த படுக்கையான மனைவியையும் கவனிக்கப்படவில்லை. குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தனிடம் சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மது குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தன் போபண்ணாவிடம் சுரேஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் நர்த்தன் போபண்ணா அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். ஆனால் அறைக்குள் இருந்து சுரேஷ் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

பூட்டிய அறைக்கு வெளியே நர்த்தன் போபண்ணா அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கதவின் பூட்டை உடைக்க கதவின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார். நர்தனின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் தங்கையை அழைத்தார் நர்தன் போபண்ணா. தந்தை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.

அவரது சகோதரி சம்பவ இடத்திற்கு வந்தபோது நர்த்தன் போபண்ணா சுயநினைவின்றி இருந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நர்த்தன் போபண்ணா உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து காமக்ஷிபால்யா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் இருந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!!

சென்னையில்..

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 5ம் வகுப்பு மாணவன் காதை பிடித்து திருகி உள்ளார். இதில் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம் பள்ளிக்களில் குறும்புத்தனம் செய்யும் மாணவ, மாணவிகளை, கண்டிக்கிறார்கள். பள்ளிகளுகக்கு வீட்டுப்பாடம் செய்யாமல் வருவோர், படிக்காமல் வருவோரையும் கண்டிக்கிறார்கள்.

ஒழுங்கீனமாக நடக்கும் குழந்தையை சில ஆசிரியர்கள் பயமுறுத்தி சரி செய்யும் நோக்கில் அடிக்கவும் செய்கிறார்கள். அதிமுக – பாஜக ரகசிய டீலிங்.. அதிராம்பட்டினம் பள்ளி விவகாரத்தில் அவசரம் வேண்டாம்! பீட்டர் அல்போன்ஸ் அப்படி அடிக்கும் ஆசிரியர்கள், சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது விபரீதத்தில் முடிகிறது.

அப்படித்தான் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விபரீதமாக மாறி காவல்துறை வரை சென்றுள்ளார்கள். பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், எதற்காக கண்டிக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆசிரியர்கள் தவறான காரணங்களுக்காக கண்டித்தால் அவர்களை தட்டிக்கேட்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் இங்கும் தட்டிக்கேட்டுள்ளார்கள் பெற்றோர்கள்.

என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருக்கி உள்ளாராம் பள்ளி ஆசிரியை நாயகி. மாணவனின் காதை ஆசிரியை ஓங்கி திருகியதால், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மாணவர்.

இதனால் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னாடியே பள்ளிக்கு சென்று ஆத்திரத்துடன் ஆசிரியையையும் தாக்கி உள்ளனர்.

அப்போது தான் என்ன நடந்தது என்பது பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்த விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மாணவரின் காதை பிடித்து திருக்கி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஆசிரியை நாயகியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

இலங்கையில்..

இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் தனியார் பேருந்தொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் (27.01.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக்கொண்டு கால்வாயில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் : கடும் நெருக்கடியில் மக்கள்!!

இலங்கையில்..

இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லாததால், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்திலும் பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்பார்க்கும் வருவாய் இலக்குகளின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையினால் இதுவரையில் ஒருவர் ஒரு மாதத்தில் செலுத்திய மறைமுக வரியான 6330.00 ரூபா 3684 ரூபாயிலிருந்து 10,014.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.  இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர் மாதாந்தம் 14,737 ரூபா மறைமுக வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்த விடயங்களின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் தமது வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்வதில் கடும் நெருக்கடி உள்ளாகலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மற்றுமொரு விபத்து!!

மாத்தறையில்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொடகமையில் வௌியேறி கொக்மாதுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திடீரென மாயமான இளைஞன்!!

யாழில்..

யாழ். இணுவிலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்தில் இருந்து இளைஞன் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞன் மாயமான தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போன இளைஞனை பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (28.01.2024) காலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனடா ஆசையால் பெண்ணிடம் ஏமாந்த பலர்!!

கனடாவில்..

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 – 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார். இத்தகவலை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த சிலர், பெண்ணின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளது. சந்தேகநபரான பெண் , அவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துவழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குருணாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட பொத்துஹெர, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர்.

கைதான 37 வயதுடைய சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டியால் பரபரப்பு!!

கொழும்பில்..

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு பம்பலப்பிட்டி காலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

அவிசாவளையில்..

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுற்றுலாவை முடித்துக் கொண்டு அதே வேனில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறிமீது வேன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலையில் மற்றுமொரு கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி!!

குருணாகலில்..

குருணாகலில் இன்று காலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த மோசமான அனுபவம்!!

அங்குலானயில்..

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய மற்றுமொரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அங்குலான பொலிஸாரால் நேற்று(26.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் வேலை வாய்ப்பு : பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய பெண்!!

கனடாவில்..

கனடாவில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் 14 பேரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்ற 37 வயதுடைய சந்தேகநபர், சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், கனடாவில் வேலை வழங்குவதாக குருநாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 14 பேரை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் 20-75 இலட்சம் ரூபா தவணை முறையில் கிடைத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பலர் இவரின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைக் கொடுத்து வேலைகளை இழந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்களிடம் போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

மேலும் அவற்றில் தூதரகத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்கள் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.