உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.
கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.
பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.
மேலும் இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை. இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்றாகும்.
சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு ஒரு மகனும், 6 வயது தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், தன்னுடன் வேலை செய்து வந்த சீனிவாசன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக திவ்யா வீட்டில் சீனிவாசன் இருந்து வருகிறாராம். இந்நிலையில், திவ்யா நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். சீனிவாசன், 2 பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி தேஜஸ்வினியை மயங்கியநிலையில் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திவ்யாவின் மகன் புழல் போலீஸாரிடம் கூறியதாவது: தாயார் திவ்யா வேலைக்கு சென்ற பிறகு சீனிவாசன், சிறுமியை அடித்தாராம். பின்னர், சிறுமியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கதவை அடைத்து கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படவில்லை. ஆனால்,சிறுமி அழும் சத்தம் மட்டுமேகேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து குளியலறையிலிருந்து சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் என்று சிறுவன் தெரிவித்துள்ளார்.
எனவே, சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் சீனிவாசனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம், வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடி அலவி என்பவரின் மகள்களான முபாஷிரா ( 26) மற்றும் அஜ்மலா தஸ்னி (21) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரிவித்தனர்.
வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடியைச் சேர்ந்தவர் அலவி. இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மலப்புரத்தில் இருக்கும் திருமணமான தங்களது சகோதரியின் வீட்டிற்கு முபாஷிராவும், அஜ்மலா தஸ்னியும் சென்றுள்ளனர்.
தங்கள் மூத்த சகோதரியின் வீட்டிற்கு அருகில் உள்ள கடலுண்டி ஆற்றுக்கு குளிக்க இருவரும் சென்றிருந்த நிலையில், ஆற்றில் மூழ்கியுள்ளனர். இளம்பெண் இருவர் நீரில் மூழ்கி கூச்சலிடுவதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.
அவர்களது உடல்கள் மலப்புரம் அரசு தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சகோதரி வீட்டிற்கு வந்திருந்த அக்கா-தங்கை இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர்.
ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபகாலமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம் போல் நேற்றும் காலை ரேவதி வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.
ரேவதிக்குப் பின்புறமாக வந்த சதீஷ், ரேவதியைக் காலால் எட்டி உதைத்து, கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தலையில் தாக்கத் தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ரேவதி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதில் சதீஷ் தப்பி ஓடி விட்டார். அத்துடன் ரேவதியை மீட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ரேவதியின் பாட்டி சீத்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர். மனைவியை கணவன் சுத்தியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக இளம்பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது அண்ணன் மகன் சதீஷ்குமார் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு ரித்திக் ஸ்ரீ (10, தனிஷ்கா ஸ்ரீ (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளர். தந்தை வீட்டில் தங்கி இருந்த தமிழரசி அடிக்கடி பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். செல்வராஜ் தனது வீட்டில் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார்.
இவற்றை அடிக்கடி கழுகுகள் தூக்கிச் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்காக ஏர்கன் ஒன்றை சரத்குமாரும், சதீஷ்குமாரும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த சரத்குமாரின் நான்கு வயது மகன் அந்த துப்பாக்கியின் ட்ரிகரை தெரியாமல் அழுத்தி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளியேறிய குண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கிக் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழரசி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து தமிழரசியின் கணவர் முருகேசன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஏர்கன்னை குண்டுடன் வைத்து விட்டு சென்றது சரத்குமாரும், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்தே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், இன்று போலீஸார் கைது செய்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அதற்கு காரணம் என சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷர்மிளாவை பிரவீன் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இதனால் பிரவீன் மீது ஷர்மிளா வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரவு பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பே பார் என்ற மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தொடர் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14ம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை பிரவீன் குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷர்மிளா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மார்ச் 24ஆம் திகதி சிறுமி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, சிறுமியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஒன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
விநியோகிக்கப்பட்ட கேக்கை, சிறுமி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பொலிஸாரின் விசாரணையிலேயே இவ் விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது. மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கபில பொன்சேகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபரொருவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குத்தி குடும்பஸ்தரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் (Mannar) முதல் தனுஷ்கோடி (Dhanushkodi) அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை (Palk Strait) கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்தியா மற்றும் இலங்கை அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.
அங்கிருந்து இன்று அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கினர்.
அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து, கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது.
இதில் கண்ணகியம்மன், விநாயகர்,முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய எம் அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டடுள்ளது.
அதில் பக்தர் ஒருவர் அச் சேலையினை 16 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண் ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். உலகப்புகழ்பெற்ற த டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் இவர் தெரிவாகியுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்ணாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் த டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது
அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த உரையாடலின் பின்னர் டைம்ஸ் சஞ்சிகை ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டுள்ளது.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான
0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு – தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தேராவில் குளத்தின் மேலதிக நீரால் அப்பகுதி வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையினை அடுத்து இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் முன்னெடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 17.02.2024 அன்று குறித்த நீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஞானம் பவுண்டேசன் நிறுவனம் முன்வந்திருந்தது.
இருந்தும் குறித்த நிதியை கொண்டு வேலையை நிறைவு செய்ய வனவள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களால் விதிக்கப்பட்ட தடை காரணமாக இதுவரை குறித்த வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளரது மகன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகளை அவரது வீட்டில் வைத்தே செய்வதற்கு கூட முடியாத நிலையில் அந்த தாய் இருப்பதோடு, இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் அசமந்த போக்கு குறித்து கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார்.
இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார். அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கடன் அதிகரித்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மனமுடைந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விஜயகுமாரும், அவரது மனைவி சந்தியாவும் அறைக்கு சென்றனர்.
அதன் பின்னர் காலை நீண்ட நேரமாகியும் அறைகதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாய் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால், அவரது தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமாரும், சந்தியாவும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவரது அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கடன் பிரச்னையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் வாலிபர் கர்ப்பிணி மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர்.
லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வைகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரங்காடியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் – பிங்கி தம்பதி. இதில் பிங்கி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது.
இதனிடையே, கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு பிங்கி அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதெல்லாம் சுக்தேவ் அவரைச் சமாதானம் செய்து திரும்ப அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே நேற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுக்வேத், மனைவியை கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டினார்.
பின்னர் கட்டிலில் கிடந்த தலையணை, பெட்சீட் போன்றவற்றில் தீயை வைத்துவிட்டு தப்பித்துச் சென்றார். இந்த தீ கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிங்கி மீதும் பிடித்தது. தீயின் உக்ரம் தாங்கமுடியாமல் அலறித் துடித்த பிங்கி, சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், பிங்கியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுக்தேவ் மீது கொலை வழக்குப் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண்ணை, கணவனே கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.