2 ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம்: விளையாடியபோது நேர்ந்த சோகம்!!

வேலூரில்..

சமீபகாலமாக இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி,கல்லூரி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்துபலி, நடனம் ஆடிய போதுசரிந்து பலி , நடந்து கொண்டிருந்த போதே கீழேவிழுந்து பலி, உடற்பயிற்சி செய்த போது பலி என தொடர்கதையாகி வருகிறது.

உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் முறை என எத்தனை காரணங்கள் கூறப்பட்ட போதிலும் இளவயதில் திடீர் மரணங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரும் கவலையையும், தீராத சோகத்தையும் தந்துவிடுகிறது.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர், இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய மகள் 7வயது யோகேஸ்வரி.

இவர் ர்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கலந்து கொள்வதற்காக யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் யோகேஸ்வரி கலந்து கொண்டார். அதில் விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுதாகர் மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையறிந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்ப நண்பர் கைது!!

கர்நாடகவில்..

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெட்டதாசன்பூர் சாய் சக்தி பேரங்காடி கங்கா பகுதியைச் சேர்ந்தவர் நீலம் (30). இவரது கணவர் பெயின்ட் வியாபாரி மற்றும் ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், ஜன., 4ல், வீட்டில் நீலம் தனியாக இருந்துள்ளார்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது, ​​நீலம் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்து பார்த்தபோது நீலம் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீலம் வீட்டுக்கு யார் வந்தனர் என விசாரணை நடத்தினர்.

அப்போது ரஜ்னீஷ்குமார் என்ற வாலிபர் வந்து சென்றது தெரிய வந்தது. நீலின் அண்ணன், நீலின் கணவரின் பெயிண்ட் டீலர் கடைக்கு அருகில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார்.

அப்போது ரஜ்னீஷ் குமார் அவர்களுடன் பழகினார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, ​​பெயின்ட் கடைக்கு உதவுகிறார் ரஜ்னீஷ். இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீலம் குடும்பத்தினருடன் ரஜ்னீஷ் குமார் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இதில் அவர் நீலம் வீட்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ரஜ்னீஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நீலமை கொன்றதை ஒப்புக்கொண்டான்.

கொலைக்கு முந்தைய நாள், நீலத்தின் கணவர் வியாபாரம் செய்த பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதை ரஜ்னீஷ் கவனித்தார். ரஜனீஷ் வீட்டில் இருக்கும் போது நீலத்தை கொன்று பணத்தை திருட திட்டமிட்டார்.அதன்படி வியாழக்கிழமை நீலம் வீட்டுக்குச் சென்றார்.

இரவு உணவு உண்டா என்று நீலம் கேட்டாள். அதன்படி உணவை பரிமாற முயன்றார். அப்போது ரஜனீஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த டவலால் நீலம் கழுத்தை நெரித்தார். இதையடுத்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக வீட்டை சோதனையிட்டார்.

அப்போது நீலின் கணவர் இரவில் எடுத்த பணத்தை வங்கியில் காலையில் டெபாசிட் செய்தது தெரிய வந்தது. வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஜ்னீஷ்குமார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவீதியில் துடிதுடித்து பலியான சகோதரிகள்!!

சென்னையில்..

சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் பவானியும், சுபாவும். இருவருக்கு 37 மற்றும் 38 வயது. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வந்த போதிலும் ஒன்றாக காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்களின் தாயை பார்ப்பதற்காக சுபாவும், பவானியும் வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்றனர். எண்ணூர் விரைவு சாலை அம்மன் கோயில் பெட்ரோல் பங்க்கிற்கு எதிரில் இருவரும் ஆட்டோ பிடிக்க சாலையைக் கடந்து செல்ல முயற்சித்தனர்.

அந்தவழியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் இருவர் மீதும் படுபயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுபா உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அந்த பக்கமாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சுபா உயிரிழந்ததாகத் தெரிகிறது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து அதிவேகமாக வந்த கல்லுரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டை பரத் மற்றும் ஏழுகிணறு பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதில் பரத் சத்தியபாமா கல்லூரியில் CSEAI 2 ம் ஆண்டும், பாலகிருஷ்ணன் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் 2 ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுமண காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பரிதாபம்!!

வேலூரில்..

பெற்றோர்கள், தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாலையும் கழுத்துமாக புதுமண ஜோடி, தங்களைக் காப்பாற்றக் கூறி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருபவர் ஜான்.

இவரது மகள் மேரி. தனியார் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் மேரி. மேரியின் தந்தை ஜான், நடத்தி வரும் நிறுவனத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த சுந்தரராஜபுரத்தில் வசித்து வரும் பேரின்பம் என்பவரது மகன் சூர்யா பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவும், மேரியும் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதலைத் தெரிந்து கொண்ட மேரியின் தந்தை, சூர்யாவை தனது நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்கி விட்டார். இந்நிலையில், மேரியும், சூர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மேரியின் தந்தை ஜான், சூர்யாவை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அச்சத்தில் புதுமணத் தம்பதியர் இருவரும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அத்துடன் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். பெற்றோர்களே எங்களை மிரட்டுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அத்துடன் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிகழ்வு நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 16.01.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11.01.2024 அன்று பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு , கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றும் கரையொதுங்கிய மர்மப்பொருள்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று ((13) சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையாக இருக்கின்றது. அந்தவகையில் யாழில் புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் , உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரையொதுங்கியுள்ளன.

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு!!

இலங்கையில்..

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

Liposuction என்ற சத்திரசிகிச்சை சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்ததாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஜயவர்தன தெரிவித்தார். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும், எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இவ்வகையான சத்திரசிகிச்சையில் 4-5 லீற்றர் வரை கொழுப்பு அகற்றப்படுவதாகவும், இந்த நாட்டில் மட்டுமின்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய அளவிலான கொழுப்பு அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், முதுகு வலி, நடப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் மன அழுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் சிறப்பு மருத்துவர் ஜயவர்த்தனவிடம் வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன்பிறகு, உடல் எடை வேகமாகக் குறைந்ததால், அவரால் எளிதாக நடக்க முடிந்தது என்று மருத்துவர் கூறினார். சத்திரசிகிச்சையின் பின்னர் வயிறு மேலும் நீண்டு விரிவடைந்து காணப்பட்டதால் நேற்று அது தொடர்பான சத்திரசிகிச்சை செய்து வயிற்றிலிருந்த கொழுப்பை அகற்றியதாகவும் அவர் கூறினார்.

தாயை கொடுமைப்படுத்திய மகனை கொலை செய்த தந்தை!!

அரநாயக்கவில்..

அரநாயக்க பொலிஸ் எல்லைக்குட்பட்ட புனாபொகுன, துல்தெனிய கிராமத்தில் தந்தையொருவர் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார். அமித் பிரசாத் ஹேமச்சந்திர என்ற 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

61 வயதான அவரது தந்தையே இந்த கொலையை செய்துள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனை மற்றும் திருட்டு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைஞன் பணத்திற்காக பெற்றோரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். அவர்களை தாக்க முயற்சிப்பதும், நீண்ட காலமாக இந்த பிரச்சனைகளை சகித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது தாயை துன்புறுத்தி சித்திரவதை செய்த கொடுமைகளை செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் இளைஞனை அவரது தந்தை கத்தியால் குத்தியுள்ளார். இளைஞனின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் மேலதிக பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழில் கோரவிபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருகும் வேளை இரவு 10.00மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் தகாத உறவால் பதின்ம வயது சிறுமிகள் சீரழிப்பு!!

களுத்துறையில்..

களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் பதின்ம வயது இரு மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்ற நிலையில், சிறுமிகளின் தாய் வேரொரு நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தாயுடன் தொடர்பை பேணிய நபரே இரு சிறுமிகளையும் அவர்களின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயிலுடன் விபத்தை தடுக்க வாகனத்தில் இருந்து பாய்ந்த சாரதி..!

வெலிகந்தையில்..

கெப் வண்டி ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த கெப் வண்டி சாரதி வெலிகந்தை – மொனராதென்ன பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார். மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கெப் வண்டி சாரதி தனது உயிரைக் காப்பாற்ற வண்டியிலிருந்து வெளியே குதித்த போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா – புளியங்குளத்தில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதி ஊடாக பொல்காவலை நோக்கி பயணித்த குடும்பஸ்தரை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் இருக்கைப் பகுதிக்குள் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 375 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன், குறித்த குடும்பஸ்தரும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொல்காவலைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும், கஞ்சாவையும் நீதிமன்றில் முற்படுத்த புளியங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளிநாட்டு பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம்!!

இலங்கையில்..

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறு பிள்ளைகளை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு விட்டு செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் ஆஜராகும்போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்!!

சவூதியில்..

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26 வயதான மதுபாஷினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டில் சில நாட்கள் கழித்து தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் வேலை செய்யும் வீட்டில் சாரதி பிரச்சினை செய்வதாக கூறியுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் அழைப்பதாகவும் வீட்டில் வேலை அதிகம் எனவும் அதிக நேரம் பேச முடியாது எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தங்கிய முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும் கூறினார். இரண்டாவது மாதத்தில் 53,000 மற்றும் பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டது.

ஒரேயடியாக பணம் தருவதில்லை என்று அந்த பெண் கணவரிடம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னரும் அவருக்கு அழைப்பு வராததால், உறவினர்கள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளனர். அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்தில் இலங்கை இளைஞன் மரணம்!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒக்லாந்தின் கரோட்டா கடற்கரையில் அலைகளில் சிக்கி அவர் காணாமல் போனார்.

தீவிரமாக தேடப்பட்ட வந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இடத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் சடலத்தை நியூசிலாந்து உயிர்காக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பெண்ணை எரிக்க முயற்சித்த நபர் : பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

கொழும்பில்..

கொழும்பு – ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு தேவைப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த (10.01.2024) ஆம் திகதி பெண்ணொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார். சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0717478912, 0718594423, 0112323356